Everything posted by தமிழ் சிறி
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
மாவைக்கு ஏதாவது நடந்தால்... சுமந்திரனின் கொடும்பாவி கட்டி எரிக்கப்படும். -மாவை ரசிகர் மன்றம்.- ஜேர்மன் கிளை. 😂 @Kandiah57, @குமாரசாமி, @nochchi, @Paanch. 🤣
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
நல்லாய் இருந்த மனுசனை, ஆஸ்பத்திரியில் போய் படுக்க வைத்த பெருமை சுமந்திரனையே சேரும்... Prashanthan Navaratnam
-
கருத்து படங்கள்
- விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.
விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். விமல் வீரவன்ச அறிவித்திருக்கிறார்,தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று.ஏனென்றால்,நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெறக்கூடிய பெரும்பான்மையை பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க அவர் விரும்பவில்லையாம். அவர் ஜேவிபியில் இருந்தவர். அதன் தீவிர இனவாத முகம். தனது தோழர்களின் வெற்றிக்காக வழிவிடும் அவருடைய மேற்படி அறிவிப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களில் வேறு ஒரு விளக்கம் உண்டு.அவனுடைய மனைவி ஒரு வழக்கில் மாட்டுப்பட்டு இருக்கிறார்.அந்த விவகாரத்தை மீண்டும் ஜேவிபியின் அரசாங்கம் கிளறி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதனால்தான் ஜேவிபியை சந்தோஷப்படுத்த விமல் அவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது ஒரு விளக்கம். எனினும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் விமல் வீரவன்சவின் அறிவிப்பை ஆர்வத்தோடு பார்க்கின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் எப்படியெல்லாம் ஐக்கியப்படலாம் என்று அவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள்.ஆனால் தமிழ் கட்சிகளின் நிலை இம்முறை எவ்வாறு காணப்படுகிறது என்றும் அவர்கள் ஒப்பிட்டுக் கவலைப்படுகிறார்கள். இம்முறை,யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனங்களுக்கு 396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.வன்னியில் ஆறு ஆசனங்களுக்கு 459 வேட்பாளர்கள். மட்டக்களப்பில் ஐந்து ஆசனங்களுக்கு 392 வேட்பாளர்கள். திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்கு 217 வேட்பாளர்கள். அம்பாறையில் ஏழு ஆசனங்களுக்கு 640 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இது வடக்கு கிழக்கில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் தொக குறித்த ஒரு புள்ளிவிபரம். இந்தப் புள்ளிவிபரம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.தமிழ் மக்கள் ஒற்றுமை இல்லாதவர்கள், தங்களுக்குள் அடிபடுகிறார்கள், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளும் சுயேட்சைகளும் தமிழ் வாக்குகளை சிதறடிக்கப் போகின்றன… என்றெல்லாம் எழுதப்படுகின்றது. உண்மை. தமிழ் வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலில் சிதறடிக்கப்பட போவது உண்மை. ஆனால் அது இந்த முறை மட்டும் நிகழவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த பெரும்பாலான நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் கூட்டமைப்பு உடைந்துடைந்து தமிழரசுக் கட்சியாகிவிட்டது. தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய பங்காளி கட்சிகள் தங்களுக்கு இடையே குத்துவிளக்கு கூட்டணி ஒன்றை உருவாக்கின.அது ஒரு பலமான கூட்டணி என்ற நம்பிக்கை இனிமேல்தான் ஏற்பட வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் உடைவு ஏற்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குள் உடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த உடைவுகளின் விளைவாகவும் அதிகரித்த தொகை கட்சிகளும் சுயேச்சைகளும் அரங்கில் காணப்படுகின்றன. ஒரு சிறிய அரசற்ற மக்கள் கூட்டத்தின் மத்தியில் இவ்வளவு தொகை கட்சிகளும் சுயேச்சைகளும் காணப்படுவது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவைக் காட்டுகின்றது.இந்த சீரழிவில் இருந்து தமிழ் அரசியலை மீட்பதற்காகத்தான் ஒரு பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார். ஆனால் பொது வேட்பாளரை நிறுத்திய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலோடு செயலிழந்து விட்டது. அது நாடாளுமன்ற தேர்தலில் செயற்படவில்லை. அது போன்ற ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பரவலான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் உண்டு. அந்த எதிர்பார்ப்பை மேலும் சரியான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் தேசிய அரங்கில் காணப்படும் எல்லாத் தரப்புகளையும் ஆகக்கூடிய பட்ஷம் ஓரணியாகத் திரட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அவ்வாறு திரட்டுவதற்கான முயற்சிகள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவில் சமூகங்கள், மக்கள் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பல தரப்புக்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டு தற்காலிக வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். அவை நிரந்தர வெற்றிகளாக அமையவில்லை. ஒரு பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பும் இப்பொழுது செயலிழந்து விட்டது.பொதுக்கட்டமைப்பு எனப்படுவது மக்கள் அமைப்பும் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.அது கடந்த நான்கு தசாப்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஆகப்பிந்திய,சாத்தியமான ஒற்றுமைக்கான ஒரு இடையூடாட்டத் தளம் ஆகும். அதை நிரந்தரமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு கட்சிகளிடமும் இருந்தது தமிழ் மக்கள் பொதுச்சபையிடமும் இருந்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் பங்குபற்றாமல் விட்டதால் அது செயலிழந்தது என்று கூற முடியாது.சங்குச் சின்னத்தை குத்துவிளக்குக் கூட்டணி வசப்படுத்தியது அதற்கு ஒரு முக்கிய காரணம். ஐக்கியத்திற்கான எழுதப்பட்ட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை கட்சிகள் தமக்கு வசதியாக வியாக்கியானம் செய்த பொழுது, தமிழ் மக்கள் பொதுச்சபையானது கட்சிகளிடமிருந்து விலகத் தொடங்கியது. பொதுக் கட்டமைப்பாக தேர்தலை எதிர்கொண்டால், தாங்களும் இணைந்து செயல்படுவோம் என்று பசுமை இயக்க கட்சியும் மான் கட்சியும் ஏற்கனவே தெரிவித்திருந்தன.தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் நேரடியாக பங்கேற்கவிட்டாலும் ஐக்கியத்திற்கான அந்த கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாப்பதற்கு அந்த மக்கள் அமைப்பு தயாராக இருந்திருந்தால், பசுமை இயக்கமும் மான் கட்சியும் தொடர்ந்து அந்த கட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்து தேர்தலை எதிர்கொண்டு இருந்திருக்கும். ஆனால் சங்குச் சின்னம் விவகாரமாகிய பின் ஐக்கியத்துக்கான தார்மீகத் தளம் ஆட்டம் கண்டது. அதன் விளைவாக பொதுக் கட்டமைப்பு செயலிழந்தது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டிருந்தால் இப்பொழுது அரங்கில் காணப்படும் ஆகக்குறைந்தது மூன்று சுயேட்சைகள் அந்தக் கட்டமைப்புக்குள் நின்று போட்டியிட்டிருந்திருக்கும்.எனைய சுயேச்சைகளையும் தமிழ் மக்கள் பொதுச்சபை அந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்திருக்கும். அந்தக் கூட்டு ஒப்பீட்டளவில் பெரியதாகவும் எனைய இரண்டு கட்சிகளுக்கும் சவால்கள் மிகுந்ததாகவும் அமைந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளருக்காக மக்கள் அமைப்பு கட்சிகளை சந்தித்தது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒரு பிரமுகர் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளிடம் பின்வருமாறு சொன்னார் “இந்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றால் இப்பொழுது எங்களிடம் இருக்கும் இரண்டு ஆசனங்களையும் நாங்கள் இழந்து விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று. பொதுக் கட்டமைப்பை பகைநிலையில் வைத்து பார்த்து கூறப்பட்ட வாக்கியம் அது. ஆனால் பொதுக் கட்டமைப்பு எல்லா கட்சிகளுக்குமான திறந்த, நெகிழ்ச்சியான ஒரு கட்டமைப்பாகக் காணப்பட்டது. அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்றிருந்தால் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறுவதை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். உதாரணமாக, திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய மறை மாவட்ட ஆயர் தலைமையில் கட்சிகளுக்கு இடையே பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது ஒரு வித்தியாசமான கூட்டு. அங்கே சங்கும் வீடும் ஒன்றாக நிற்கின்றன. ஆனால் வீட்டுச் சின்னத்தின் கீழ் நிற்கின்றன. அது போன்ற ஒரு முயற்சி அம்பாறையிலும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு தமிழரசுக் கட்சிதான் காரணம் என்று ஒரு கருத்து உண்டு.அங்கு தமிழரசுக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் குறையுமாக இருந்தால் தேசியப் பட்டியல் மூலம் அந்த மாவட்டத்திற்குரிய பிரதிநிதித்துவம் தரப்படும் என்று எதிர்பார்ப்பு உண்டு. அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் பொழுது சங்கோடு கூட்டை வைத்துக் கொள்வது வசதியாக இருக்காது என்று தமிழரசுக் கட்சி கருதியதாகத் தெரிகிறது. அதனால் அம்பாறை மாவட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைப் போல ஒரு பகை தவிர்ப்பு உடன்படிக்கையைச் செய்ய முடியவில்லை. எனினும்,திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முன்னுதாரணம் எதை உணர்த்துகிறது என்றால், மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூகங்களும் இணைந்து கட்சிகளை ஏதோ ஓர் ஒருங்கிணைப்புக்குள் கொண்டு வரலாம் என்பதைத்தான். ஜனாதிபதித் தேர்தலில் பலமாகக் காணப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு அதை இலகுவாக செய்திருந்திருக்க முடியும். ஆனால் அந்த ஐக்கியத்தை விடவும் பொதுச் சின்னத்தை வசப்படுத்துவதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை உறுதிப்படுத்தலாம் என்று ஒரு தொகுதி கட்சிகள் சிந்தித்ததன் விளைவாக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஒரு கட்டத்துக்கு மேல் செயல்பட முடியாது போய்விட்டது.அதனால் தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகக் களம் இறங்கின. ஒருங்கிணைக்க அமைப்பு இல்லாத ஒரு பின்னணியில், சுயேச்சைகளும் களம் இறங்கின.இது தமிழ் வாக்குகளை எந்தளவுக்குச் சிதறடிக்க போகின்றது? https://athavannews.com/2024/1404844- ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
ஜனாதிபதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு – உதய கம்மன்பில! உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளை (21) காலை 10.00 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பகிரங்கப்படுத்தத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நான் வழங்கிய கால அவகாசம் நாளை காலை 10.00 மணியுடன் முடிவடைகிறது. அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு நாளை காலை வரை அவகாசம் உள்ளது. எனவே, அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை ஜனாதிபதி மீறினாலோ நாளை அறிக்கைகளை வெளியிடத் தவறினாலோ, நான் நிச்சயமாக அவற்றை பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1404883- மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
மாவைக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காததால்.. ஏற்பட்ட மன உழைச்சலால் சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம்.- தனது ஆன்லைன் மனுவில் கையெழுத்திடுவோருக்கு அன்றாடம் $1 மில்லியன் டொலர்கள் பரிசு – எலோன் மாஸ்க் அதிரடி!
தனது ஆன்லைன் மனுவில் கையெழுத்திடுவோருக்கு அன்றாடம் $1 மில்லியன் டொலர்கள் பரிசு – எலோன் மாஸ்க் அதிரடி! பில்லியனர் எலோன் மாஸ்க், அமெரிக்க அரசியலமைப்பை ஆதரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்ட தனது மனுவில் கையெழுத்திடும் நபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் ஜனாதிபதி தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக சனிக்கிழமை (19) உறுதியளித்தார். பேச்சுரிமை மற்றும் ஆயுதம் தாங்கும் உரிமையை ஆதரிக்கும் நோக்கில் இந்த மனு வெளியிடப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களை அணி திரட்டும் நோக்கில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை அறிவித்தார். அத்துடன் இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட வெற்றியாளர் ஒருவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையை வழங்கினார். அமெரிக்கா பி.ஏ.சி.யின் இணையதளத்தில் தொடங்கப்பட்ட இந்த மனு, அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் இரண்டாவது திருத்தங்களுக்கு ஆதரவாக ஸ்விங் மாநில வாக்காளர்களிடமிருந்து 1 மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் துப்பாக்கி உரிமைகள் ஒரு பிளவுபடுத்தும் பிரச்சினையாகவே இருக்கின்றன, சிலர் துப்பாக்கிகளை எளிதாக அணுகுவதை ஆதரிக்கிறார்கள், மற்றவர்கள் துப்பாக்கிகள் பொது மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வாதிடுகின்றனர். https://athavannews.com/2024/1404895- ரணில் விக்கிரமசிங்க பல சலுகைகளை கோரினார்; அவற்றை நிராகரித்துவிட்டேன் - அனுர
163 பாதுகாப்பு உத்தியோகத்தர், 20 வாகனம், 16 சமையல் காரர், தோட்டக்காரர், எந்த நேரமும் அம்புலன்ஸ் என்று மகாராஜாக்கள் போன்ற வாழ்க்கையை பதவி இழந்த பின் வாழ நினைக்கும் இவர்களின் செயல் வெட்கப் பட வேண்டியது. ஏழை மக்கள் வாழும் நாட்டிற்கு இது அளவுக்கு மீறிய செயல் என்று உணராத ஜென்மங்கள். இதற்கான செலவுகள் எல்லாம்… ஏழை மக்களின் வயிற்றை அடித்துத் தானே கொடுக்க வேண்டி உள்ளது. தங்களின் சுக போக வாழ்க்கைக்கு அரசியலை பயன் படுத்தும் கிரிமினல்கள்.- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியக் கடற்படை கப்பல்
எப்படியும் அடுத்த வாரம் சீன போர்க் கப்பலும், அதற்கு அடுத்த வாரம் அமெரிக்க போர்க் கப்பலும் வரும்.- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவரை பார்க்க, பேரப் பிள்ளை உள்ள தாத்தா மாதிரி இருக்கு. இன்னும் இவரின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது ஆச்சரியம் தான். 😂- ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்…. இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1404815- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவர் என்ன வழி விடுகிறது. 😃 இந்தத் தேர்தலுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளப் படுவார். 😂 எல்லாம்... பட்டுத்தான் தெளிய வேண்டும் என்று விதி இருந்தால், நாம் ஒன்றும் செய்ய முடியாது. 🤣- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவர்களுக்கு இந்தியா நல்ல கொழுத்த சம்பளம் கொடுத்து வைத்திருக்குது போலை. அதுதான்... இந்தியாவின் சீலைத்தலைப்பில் தொங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவோடு இவர்கள் மினக்கெடுகின்ற நேரம், சீனாக்காரனுடன் சேர்ந்து அரசியல் செய்து இருந்தாலும்... பிரயோசனமாக இருந்திருக்கும்.- கருத்து படங்கள்
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.- ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
- 400 பில்லியனுக்கும் மேல் கடன் பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் – நாடு மீண்டும் அதள பாதாளத்துக்கு செல்லுமா?
400 பில்லியனுக்கும் மேல் கடன் பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் – நாடு மீண்டும் அதள பாதாளத்துக்கு செல்லுமா? தற்போதைய அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். நிதி அதிகாரம் ஜனாதிபதியிடம் அல்ல. நாடாளுமன்றத்திடம் உள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது, அது எவ்வாறு செய்யப்பட வேண்டும், சரியானதா? அல்லது தவறானதா? எனக் கணக்கிடுவது அவசியம். நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் நாடாளுமன்றத்திடம் உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதற்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாடு மீண்டும் அதள பாதாளத்திற்குச் செல்லும். முன்னைய அரசாங்கம் கடன் பெற்று, மக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த பணம் முன்னனைய அரசாங்கத்தால் திருடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது. அதேபோலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1404776- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
அநுரவின் கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதா? – செல்வம் அடைக்கலநாதன் சாடல். அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார். அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது, ”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது. வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும். 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது. இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார். https://athavannews.com/2024/1404797- தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
போருக்குப் பின்.... தமிழ் அரசியல் கட்சிகள் விட்ட பிழைகளால் தானே... மக்கள் தென்னிலங்கை அரசியலை நாட வேண்டி வந்தது. மக்கள் அதனை விரும்பி ஏற்கவில்லை, மாறாக…. தென்னிலங்கை அரசியலை நோக்கி தள்ளப் பட்டார்கள் என்பதே உண்மை. நிலைமை கட்டுமீறி போனபின்பும்... தம்மை சுய பரிசோதனை செய்யத் தயார் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளை என்ன வென்று சொல்வது. தாமாக திருந்த மாட்டார்கள் எனும் போது... முதலில் பதவி ஆசை, கதிரை ஆசை பிடித்த சுயநல கும்பல்களை துடைத்து எறிய வேண்டும்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஈழப்பிரியன்... நிச்சயம் வைத்தியசாலையில் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் ஒருவர் அரசியல் செல்வாக்குடன் இருந்திருப்பார். அவர்களை மாற்றல் செய்வித்து... தனது நலனை செழுமை ஆக்கியிருப்பார் என நினைக்கின்றேன். இவர், மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராம்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி ஆரம்பித்து விட்டது. எமது விளம்பர அனுசரணையாளர் @வீரப் பையன்26 அவர்களை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
முருகேசு சந்திரகுமார்... சஜித் பிரேமதாசவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். சின்னம்: தொலைபேசி. (கல்குலேட்டர் அல்ல) 😂- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
விசுகர், கனவு காண்பதற்கும் ஒரு நியாயம் வேண்டாமோ.... சுமந்திரன் பாரளுமன்றம் போறதுக்கே பெரிய இழுபறியாய் கிடக்கு, இதுக்குள்ளை... 15 விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போற பிளான் இருக்குதாம். - விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.