Everything posted by island
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
@goshan_che ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா?
-
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும்
எப்படி அரசியலில் பொறுப்பாக நடப்பது என்று இன்று தினசரி எழுதும் பத்தி எழுத்தாளர்கள் இவ்வாறான அறிவுரைகளை 2009 முதல் செய்திருக்கலாம். தொடர்சசியாக பல பொறுப்பற்ற அரசியலை செய்தவர்களுக்கு இன்றைய இவர்களது அறிவுரைகளை வழங்கியிருந்தால் மக்கள் என்றோ நிம்மதியாக வாழ்திருப்பார்கள். இன்று சுமந்திரனோ, ஶ்ரீதரனோ யாரென்றும் எவருக்கும் தெரிந்திருக்காது. இன்று புலம்பும் நிலையும் வந்திருக்காது. 😂 அன்று உயிர்ப்பயத்தில் கம்மென்று இருந்துவிட்டு இன்று காலம் கடந்த பின் அழுவதில் பயனில்லை.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
👍👍👍👍👍 சிரிப்பை அடக்க முடியவில்லை. Fitting room போகாமலே இங்கு பலருக்கு கச்சிதமாக பொருந்தும் ஆடையை தயாரித்த Designer போல இந்த வசனத்தை உருவாக்கிய உங்களுக்கு வாழ்ததுக்கள்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆனால் அதை செய்ததில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இணையாக நம்மவர்களும் செய்தார்கள் என்பதே உண்மை. உங்களை போல் நியாயமாக ஆதங்கப்படுவோர் ஒரு சிலரே. தமது தேசிய வியாபாரம் படுத்துவிடும் என்றே பல தேசிய வீரர்கள் பதட்டப்படுவதை ஆத்திரப்படுவதையும் முக நூல்களிலும் யூருயூப் காணொளிகளிலும் சமீப காலமாக காண முடிகிறது. இந்த ஆத்திரத்தை தீர்கக கிடைத்த வடிகால் தான் சுமந்திரன். சுமந்திரன் என்பவர் தமிழ் தேசிய போராட்ட நீண்ட வரலாற்றில் அனைத்தும் கிட்டைத்தட்ட (😂) இல்லை இல்லை கிட்டத்தட்ட பாழாகிய பின்னர் வந்த ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தேசியம் தேசியம் என்று கூறி மக்களின் வாழ்வை சிதைப்பவர்களை விட இது பரவாயில்லை. மனிதர்களின் வாழ்க்கை காலம் குறுகியது. தேசியம் பேசும் சுயநலமிகள் வாழ்வதற்காக இளையோர் தலைமுறை தலைமுறையாக தமது மகிழ்சசியான வாழ்வை இழக்க முடியாது. ஏற்கனவே அப்படி இழந்த பல ஆயிரக்கணக்கானவர்களின் தியாகங்களை விலை பேசி விற்கப்டும் நிலையில் மக்கள் சற்றேனும் விழிப்புணர்வு அடைந்தது நியாயமானதே.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஏன்? லண்டனில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதா? ஆனால் இந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பாக அநுர ஆட்சியில் விடுமுறையில் நாடு சென்று விடுமுறையை அனுபவித்து திரும்ப முடியும். அங்கு வாலாட்டினால் மட்டுமே அவர்களது வாலை அநுர ஒட்ட நறுக்குவார். 😂 அந்த வாலுகளுக்கும் அது தெரியும். அங்கு சென்றால் கம்மென்று இருந்துவிட்டு இங்கு திரும்பியதும் வடிவேல் பாணியில் துள்ளுவர்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நன்றி கோஷான். மக்களின் மகிழ்சசியாக வாழ்வதற்கு உதவ தான் இந்த தேசியம் எல்லாம். மக்களின் வாழ்வையே தலைமுறை தலைமுறையாக அழித்து ஒரு சிலர் மட்டும் வாழ தான் தேசியம் என்றால், மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பது தான் தேசியம் என றால் அந்த தேசியத்தை கடாசி விட்டு நடையை கட்ட வேண்டியது தான். இதுவே எனது கொள்கை. அநுர ஒன்றும் பெரிசாக வெட்டி புடுங்கமல் விட்டாலும் மக்களின் வாழ்வை முன்னைய விட முன்னேற்றி ஒப்பீட்டளவில் இன, மத பேதங்களை களையும் அரசியலை மேற்கொண்டால் அதுவே இப்போதைக்கு போதும்.
-
ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்கமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கஜேந்திரகுமரின் மைன்ட வொய்ஸ். சாத்தியமான விடயங்களை பேசினால் இணைந்து செயற்பட வேண்டும். அரசியலமைப்பு வரைவு என்று அழைப்பார்கள். மிகுந்த வேலைப்பழு இருக்கும். அதை விட சாத்தியமற்ற வரட்டு தேசியம் பேசினால் ஒரு வேலையும் இருக்காது. பாராளுமன்றம் சென்று வந்து ஜாலியாக உறங்கலாம். நான் என்று யார் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்த பொன்னற்ற பேரன் எல்லோ.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமா? இரண்டு தலைமுறையை பலியாடுகள் ஆக்கி தின்று கொழுத்த தமிழ் தேசியத்தை முழுமையாக குத்தகைக்கு எடுத்தவர்களே அதனை அம்போ என்று போட்டு உடைத்துவிட்டு போன பின் எந்த தமிழ் கட்சியாலும் தலைவர்களாலும் அதை காப்பாற்ற முடியாது. அதை அப்படியே போகிற போக்கில் காலாவதியாக விட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழட்டும். புலம் பெயர் தேசிக்காய்கள் தேசியம் என்று மக்களை முறுக்கேற்றி வைத்து உழைத்தது போதும். உழைத்த பணத்தை வைத்து அவர்களும் நிம்மதியாக வாழட்டும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து முடிஞ்சுது. தமிழ் தேசியத்தை காப்பாற்ற புலம் பெயர் தேசிக்காய்கள் புதிய வில்லனை தேட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும் அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை. வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் பிரதிநிகள் குறையவில்லை. புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் 4 தமிழ் பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுள்ளார்கள். முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில் தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம் அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ எவரும் கேட்கப்போவதில்லை தானே.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
புலம் பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள் என்ற லேபலை ஒட்டிக் கொண்டு இந்த தேசிக்காய்கள் மக்களிடம் திருடிய பணத்தை வைத்து தாயக அரசியலில் தலையிட்டு குழப்பங்களை விளைவித்தால் அவர்களில் வாலை ஒட்ட நறுக்குமாறு ஜனாதிபதி அநுராவிடம் அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
படித்தவுடன் கிழித்துவிடவும் எண்ட கணக்கா படிச்சாச்சு கிழிச்சசாச்சு என்று போகாம படிச்சத தமிழ்ள எமக்கெல்லாம் புரியும் படி சொல்லிற்று போறது. 😂😂😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் வரட்டு தேசியம் என்று கூறியதில் பல கூறுகள் இருந்தாலும் உதாரணத்துக்கு ஒன்று, எமக்கு சாதகம் இல்லாத ஒரு அரசியல் சூழ்நிலையில் எமக்கு நன்மை பயக்கும் அரசியல் விடயங்களை எதிர்த்தரப்பிடம் பேசிப் பெறுவதற்கு சாதுரியமான மென் அணுகுமுறையை பயன் படுத்தாமல், வாசலில் நின்று, தா என்று கேட்டுவிட்டு, தாற எண்ட இப்ப தா இல்லை எண்டா போயிருவன் என்று உணர்சசிவசப்பட்டு கோபத்துடன் உடனடியாக திரும்பிவந்து கிடைக்காத அந்த விடயத்துக்காக காலமெல்லாம் புலம்பும் நடைமுறை என்பதும் இதற்குள் அடங்கும். இதை மேலும் ஒரு இலங்கை வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறிப் புரிய வைக்க முயற்சிக்கிறேன். முன்பு இலங்கை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கான வெட்டுப்புள்ளி 12.5 வீதமாக இருந்தது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு கட்சி அல்லது சுயேட்சைக்குழு ஒரு உறுப்பினரை பெறுவதற்கு குறைந்தது 12.5 வீத வாக்குகளை பெற வேண்டும். அதை பெறாத குழுக்கள்/ கட்சிகள் போட்டியில் இருந்து நீக்கப்படும். இதனால் சிறுபான்மைக்கட்சிகள் குறிப்பாக முஸ்லீம் கட்சி பாதிக்கப்படுவதைக் கண்ட மறைந்த அஸ்ரப் 1988 ல் பிரேமதாசவுடன் இணக்கமாக பேசி குழையடித்து அதை 5 வீதமாக குறைப்பதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை பிரேமதாசவை கொண்டு செய்வித்தார். அதனால் அவரது கட்சி உட்பட சிறிய கட்சிகள் பலனடைந்தன. இப்போது கூட பல சிறிய கட்சிகள் பலனடைவது அந்த சட்ட மாற்றத்தால் தான். கஜே கட்சியும் அர்சசனாவும் இத்தேர்தலில் பலனடைந்ததும் இதனால் தான். தமிழ் தரப்புகளுக்கு இவ்வாறாக சிறுக சிறுகப் பேசி எமக்கு சாதகமான விடயங்களை பெற்றுக்கொள்ளும் திறமை உள்ளதா? இதையே தமிழ் தரப்பு என்றால் அதை வைத்து மக்களிடையே உசுப்பேற்றி பிரச்சாரம் செய்து அதற்கெதிராக போராட்டம் என்று வாய் கிழிய கத்தி நாடகம் போட்டு சும்மா இருந்த இனவாதிகளை தூண்டி அதை எதிர்க்கப்பண்ணி, அதை செய்ய விரும்பும் சிங்கள தலைவர்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுத்து செய்ய விடாமல் பண்ணி விட்டு பின்பு அன்றாடம் அதைக் கூறிக் கூறி புலம்பிக்கொண்டிருப்பர்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் கூறியது போல் நடை பெறாது என்று உங்களுடன் நான் பந்தயம் கட்ட போவதில்லை. நான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறினேன். காற்றுள்ள போதே தூற்றி கொள் என்று. Recruit பண்ணிய ஒரு தலைமுறையினரின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு பயன்பெற செய்ய வேண்டிய அரசியல் தீர்மானங்களை உரிய வேளையில் எடுத்து செயற்படாமல் விட்டுவிட்டு இப்போது மீண்டும், உயிர் தமிழுக்கு, உடல் மண்ணிற்கு என்று அடுத்த தலைமுறையையும் நாசம் செய்ய முனையும் வரட்டு தேசியம் எமக்கு உதவப் போவதில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்றைய ஊடக சந்திப்பில் தான் தேசியப்பட்டியல் மூலம் வரமாட்டேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வாறு செய்வது தான் நல்லது. தமிழரசுக்கட்சி இனி கிழக்கு dominant உடன் பயணிக்கட்டும். புலிகளாலே அசைக்கமுடியாதவராக நீண்டகாலம் வலம் வந்த டக்லஸை அநுர வீழ்ததியுள்ளார்- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கஜேந்திர குமார் பொன்னம்பலம் யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகி உள்ளார். சட்ட அறிஞரான அவர் தெரிவு செய்யப்பட்டது நல்லது. வாழ்ததுக்கள். அநுர அரசு அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்யும் போது அதில் தனது சட்ட புலமைசார் உதவிகளை வழங்கி உருவாகப்போகும் அந்த அரசியலமைப்பு இன மத பேதங்களற்ற முறையில் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் அமைய தனது சட்ட உதவிகளை, பங்களிப்புக்களை வழங்க வேண்டும். அதை விடுத்து குதிரை கஜே, சுகாஸ் போன்ற களிமண் மண்டைகள், புலம் பெயர் தேசிக்காய் மாபியக்களின் பேச்சை கேட்டு ஒரு சயிக்கிள் இரு சில்லு என்ற வரட்டு நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளை வைத்து குழப்பியடித்து அரசியலமைப்பு உருவாக்கதில் இருந்து பகிஷகரித்து அரசியல் சுத்துமாத்து விடக்கூடாது. ஏனென்றால் நாம் விரும்புகிறோமோ இல்லையோ உருவாகப்போகும் அரசியலமைப்பு தமிழ் மக்களின் வாழ்விலும் தாக்கம் செலுத்தும். புலம் பெயர் மாபியாகளும் தேசியம் பேசி இதுவரை உழைத்தது போதும். உழைத்த பணத்தை ஜாலியாக உங்கள் குடும்பத்துடன் அனுபவியுங்கள், பரவாயில்லை. ஆனால், இனியும் தாயகத்தில் குழப்பத்தை உருவாக்கி மேலும் உழைக்க முயற்சிக்காதீர்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதில் நான்கு பெண்கள் தமிழ் பெண்கள். வரட்டு தீவிர தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து இவ்வாறான நல்ல செயல்களை எதிர்பார்கக முடியாது.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
75 வருடங்களாக அறிவு பூர்வமாக அரசியல் செய்யாமல் மக்களை உசுப்பேற்றி வெறும் கோஷங்களை மட்டும் கூறி உணர்சசி வசப்படுத்தி அரசியல் செய்ததும் இன்றைய விளைவை கொடுத்துள்ளது. இனி புலம்பி எந்த பிரயோசனமும் இல்லை.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கோப்பாய் தேசிய மக்கள் சக்திக்கு.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழர்களும் இதை தான் செய்தார்கள். ஆனால் கடைசிவரை அதை ஒப்பு கொள்ள மாட்டார்கள். 😂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேசியம் தீவிர தேசியம் என்று என்றும் தீர்வுக்காக கிடைத்த சந்தர்பங்களை புறக்கணித்து, தொடர்ந்து போராடுவோம் என்று தசாப்தக்கணக்காக இழுத்து வந்ததன் விளைவே இது. - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.