Everything posted by island
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அவ்வாறு எதிர்பார்ததிலும் தவறு இல்லை. அவரை தூற்றியதிலும் தவறில்லை. அது கோபத்தில் இயல்பானது. ஆனால் அழிவுக்கு எமது பக்கம் உள்ள பாரிய பொறுப்பை, அரசியல் தீர்மானங்களை மறைத்து, அவர்கள் மட்டுமே முழுமையான காரணம் என்று முழு பழியையும் காலா காலமாக சுமத்துவதும் அவர்களின் நாட்டின் அரசியலில் தலையிட்டு அங்கு இன வெறிக்கு தூபம் போடும் செயலில் ஈடுபடுவது நேர்மையானது அல்ல. அது எமது மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்கவும் இல்லை போவதில்லை. யுத்தம் என்றாலும், சமாதானம் என்றாலும் எல்லா தீர்மானங்களையும் நாமே எடுத்தோம். அதன் விளைவுகளுக்கும் நாமே முதன்மைப் பொறுப்பை ஏற்கவேண்டும். தனது தீர்மானங்களின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாதவர்கள் மற்றயவர்களிடம் இருந்து அதை எதிர்பார்கக முடியாது. அது தனிப்பட்ட வாழ்வுக்கும் பொருந்தும், கூட்டிணைந்து குழுவாக எடுக்கும் பொதுத் தீர்மானங்களுக்கும் பொருந்தும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்றே இருந்திருக்கும் என்பதை கூற பெரிய அரசியல் விற்பன்னராக இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. சாதாரண உலக அரசியலை அவதானிக்கும் ஒரு சாதாரண அவதானிப்பளரக இருந்தாலே போதும். சர்வதேச நாடுகள் அனைத்தையும் புறக்கணித்து எந்த பொறுப்புணர்சியும் இல்லாமல் தொடர்சசியாக தவறன அரசியல் தீர்மானங்களை எடுத்து இறுதி நிமிடம் வரை சென்றுவிட்டு அடுத்தவரை குற்றம் சாட்டுவதற்கு எமக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. தோல்வியால் ஏற்பட்ட கோபத்திலும் விரக்தியிலும் அவ்வாறு உடனடிக் கோபம் வந்ததில் தவறில்லை. அது இயல்பானது ஆனால் தொடர்சியாக எமது அரசியல் தவறுகளை மறைக்கும் நோக்கிலும், புலம் பெயர் நாடுகளில் இறுதி போருக்கு பணம் சேர்த்து அதை கொள்ளையிட்டதை மறைக்கும் நோக்கிலும், தமது பொறுப்பை முற்றாக தட்டிக்கழித்து தொடர்ச்யாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது தவறானது மட்டுமல்ல நேர்மையற்ற அயோக்கியத்தனமான செயலும் செயலும் ஆகும். இதனால் சம்பந்த பட்ட ஒரு சிலர் பலனடையலாம். ஆனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதையே தாயகத்தின் இன்றைய அரசியல் நிலை உணர்ததி நிற்கின்றது. பிச்சை வேண்டாம் தாயை பிடி என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். எமக்கு தேவை வரும் போதெல்லாம் போராட்ட ஆரம்பத்தில் இருந்தே தம்மாலான எல்லா உதவிகளையும் கட்சி பேதமின்றி செய்தவர்கள் அவர்கள். சமீபத்தில் கூட நாட்டில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்ட போது தமிழ் நாடு அரசின் சார்பில் தம்மால் ஆன உதவிகளை செய்திருந்தார்கள். ஆனால், தமிழ் நாட்டில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி இயற்கை பேரிடர் ஏற்பட்ட ஒரு முறையாவது புலம் பெயர் தமிழரிடம் இருந்து தமிழ் நாடு மக்களுக்கு ஒரு சிறிய உதவியை தானும் வழங்கியுள்ளார்களா இந்த சுயநலவாதிகள்? மலையக தமிழர்களை கூட அரவணைக்காமல் தோட்டக்காட்டான் என று ஒதுக்கிய சுயநலக் கூட்டம் பேச்சுவழக்கில் சற்றே மலையக தமிழ் கொழும்பு தமிழ் வாடை இருந்தால் கூட மாற்றாந்தாய் மனப்பாங்கில் பார்ககும் கூட்டம் தனக்கு பிரச்சனை என்றால் மட்டும் அடுத்தவன் எல்லோரும் தனது வேலைகளை விட்டுவிட்டு தன்னை தூக்கி சுமக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கை தவறானது. நமது அரசியல் தவறுகளின் விளைவுகளை அனுபவித்தே தீரவேண்டும். அதனை நாமே திருத்தி முன்னேற வேண்டும். ( நான் கூறிய இந்த உண்மை உறைப்பதால் ஒருவர் சிறிது நேரத்தில் வந்து guilty கோபக் குறி இட்டு எனது கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திச் செல்வார், பொறுத்திருங்கள்😂)
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
தமிழர் அரசியலில் தகுதி இல்லாதவர்களில் இந்த ஶ்ரீதரனும் ஒருவர்.
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
குமார் பொன்னம்பலம் அன்று புலிகள் பற்றி தெரிவித்த கூற்று.
- IMG_7809.jpeg
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இணைப்பு தற்சமயம் இல்லை. கிடைத்தால் இணைக்கிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
1978 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கியூபாவுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பிய போது அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இது. இதில் தமிழர் என்பதற்கும் திராவிடர் என்பதற்கும் எந்த வேறுபாட்டையும் அவர்கள் காணவில்லை. விடுதலைப்புலிகள் இருக்கும் வரை அவர்கள் எப்போதும் தமிழையும் திராவிடத்தையும் ஒன்றாகவே பார்ததார்கள். இது சம்பந்தமாக திரு அன்ரன பாலசிங்கம் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலில் அவர் தமிழர்களை திராவிடர்கள் என்று குறிப்பிட்டதை முன்னரே இணைத்திருந்தேன்.
- IMG_7905.jpeg
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
இந்த கஜே.- கஜே கோஷ்டியை த. தே. கூ இல் இருந்து 2010 ல் பிரித்தெடுத்தலில் இருந்து இவர்களை இயக்குபவர்கள் தொடர்புசசியாக தொடர்பில் இருப்பவர்கள் புலம்பெயர் தேசிக்காய் அமைப்புகள் தானே! புலம் பெயர் தேசிக்காய் அமைப்புகள் என்றால் “கொள்ளை” என்ற வார்ததை கச்சிதமாக பொருந்தும் தானே! 😂
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
நான் நினைக்கிறேன் அவசர பதட்டத்தில் முருகன் இவரைச் சூரன் எனத் தவறுதலாக நினைத்து ஆள்மாறாட்டத்தில் தாக்கிவிட்டார் போலும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
சொந்த அடையாளங்களை மறுப்பது மட்டுமல்ல இனதூய்மைவாதம், இனவெறி என்ற நச்சு விதையை தமிழ்நாட்டில் தனது மலிவான அரசியலுக்காக விதைக்க முற்படும் கேவலமான மனிதர். ஏற்கனவே இனவாதத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரின் பிணங்களை பயன்படுத்தி இனவாதத்தை தூண்டிவருவது எவ்வளவு கேவலமான செயல். சுயநலத்திற்காக எந்த கீழ்நிலைக்கும் இறங்க கூடியவர் என்பதை புரிந்து கொண்ட தமிழ் நாட்டு மக்கள் இவரைத் தோற்கடித்தே வருகின்றனர். ந
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
தப்பு தப்பு! யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல. பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன். என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம் வ உ சி வரை இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர் தனது சொந்த பாட்டன் யக்கோப்பு பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள் தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை. எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மீண்டும்… பொதுமக்களின் அரசியலை பாதிக்கும் தலைமைகளின் அரசியலை விமர்சிப்பதுக்கு அந்த நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. அதை மறுக்க எவருக்கும் அதிகாரம்இல்லை. இது உலக வழமை. அரசியல் விமர்சனத்தை கண்டு பயந்து அதை ஒடுக்குபவர்கள் கோழைகள். அரசியல் விமர்சனத்துக்கு பதில் கூற தகுதியற்ற அதற்கான அறிவற்ற தற்குறிகளே இப்படியான, “காலைக்கழுவுதல், நக்குதல்” போன்ற வசவுகளை பயன்படுத்துவார்கள். எனவே தான் உங்களுக்கும் இந்த வசனங்களை அடிக்கடி பாவிக்கும் உரிமை யாழ்களத்தில் வழங்கப்பட்டிருக்கிறது போலும். ஆதலால், பரவாயில்லை, புரிந்து கொள்ளக்கூடிய விடயம் தான்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல்.
இந்த சசிகலாதானே போன முறை தேர்தலில் தோற்றதும் மூக்கு சிந்தி அழுது ஒப்பாரி வைக்க, இவாவோட சேர்ந்து புலம்பெயர் எல்லாம் சேர்ந்து ஒப்பாரி வைச்சு ட்ராமா போட்டவையள். 😂
-
அரசியல் சதிகள் அம்பலம்
ஏராளன், பராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதியவர்கள் வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதுவல்ல இங்கு பிரச்சசனை. இந்த தமிழ் நெற் ஜெயா கூறுவதை போன்ற பிரிந்து போகக்கூடிய இணைப்பாட்சியை ( Confederation) அரசியலமைப்பை உருவாக்கக் கூடிய வலு இப்போது தமிழர் தரப்பில் உள்ளதா? பாரிய அரசியல் பலமும் சக்திவாய்ந்த உலக நாடுகளின் அபரிமிதமான ஆதரவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதல பாதாளத்தில் இருக்கும் தமிழர் அரசியல் பலத்தையும் ஏறெடுத்து கூட பார்ககாத உலநாடுகளின் தற்போதைய நிலையில் இது சாத்தியமா? சாத்தியமான சந்தர்ப்பங்களைப் பாவித்து இன்றைய நிலையை விட மேம்பட்ட அதிகார பரவலாக்கத்துடன் கூடிய அரசியலமைப்பை உருவாக்க முற்படுவதே புத்திசாலித்தனமான செயல் என்பது எனது கருத்து.
-
அரசியல் சதிகள் அம்பலம்
காணொளியை முழுமையாகப் பார்த்தேன். இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல. நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர் அரசியல் அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர். ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும், இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக தாயகம் சென்று, இதை மக்களுக்கு புரியவைத்து மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால் இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம். அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால், அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை. சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும் இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எல்லாரையும் சேர்த்து தானே சொன்னேனுங்க. இனி புலம்பி என்ன பிரயோசனம். ரூ லேற் சார்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நீங்கள் அப்படி கற்பனையில் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளாமல், எல்லாவற்றையும் நிராகரித்து பலமிழந்தால் எந்த பேரினவாதமும் இப்படி தான் நடந்து கொள்ளும். அதற்கான விளைவை அனுபவிக்க தான் வேண்டும். மற்றயவர்கள் மீது பழி போட்டு எம்மை நாமே ஏமாற்றி சுய திருப்தி அடைவதில் எந்த பயனும் எமக்கு ஏற்படப்போவதில்லை. எவரும் எம்மை திரும்பி கூட பார்க்கப்போவதில்லை. மேலும் இதற்கான விரிவான பதிலை பல திரிகளில் கூறிவிட்டேன். இனி கேட்டது எப்படியும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே கிடைத்ததை வைத்து எமது இருப்பை காப்பாற்ற வேண்டும் எம்மை பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழர் மேலும் பலமிழந்து பெரும் பாலான இளையோர் வெளியேறி எண்ணிக்கை குறைந்து இலங்கையின் மூன்றாவது சிறுபான்மை இனம் என்ற நிலையை அடையவேண்டியது தான்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரி அப்படி சொல்லி நீங்கள. மனதை தேற்றிக் கொள்வதை பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. சேகுவரா கியூபாவில் மரபுவழி யுத்தம் செய்யும் போது பிடிபட வில்லை. சிறிய கெரில்லா குழுவாக பயணம் செய்யும் போது பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். மரபு வழி யுத்தத்தில் எதிரியின் நிலைகளை உளவறிவது இரு பகுதிக்கும் பொதுவானது. அதை திறமையுடன் எதிர்கொண்டு போராடுவது தான் போர் முறை. தென்னிலங்கை தாக்குதல்கள் எல்லாம் எதிரியின் நிலைகளை உளவறிய எதிர் முகாமில் இருந்தும் ஆட்கள் பாவிக்கப்பட்டனர். அதற்காக அந்த தாக்குதலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் ஶ்ரீலங்கா அரசு கூற முடியாது காட்டிக் கொடுப்பால் நாம் தோற்றோம் என்று. அது இரு பகுதிக்கும் பொருந்தும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரி, உங்களுக்கு தெரியாட்டி விடுங்கோ. இப்ப விசுகு பழக்க தோஷத்தில் தன்னிலை மறந்து உளறியதைப் பார்ததாவது அதைத் தெரிஞ்சு கொள்ளுங்கோ ப்ரோ.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வெளி நாடுகளில் மக்கள் மிரட்டப்பட்டது அந்த காலம் என்று தெரிவித்தேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விசுகுவின் மிரட்டலுக்கு பதில் வழங்கப்பட்டது. இதற்கும் மாவீரர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மாவீரர்களை தேவையில்லாமல் இழுத்து அவர்கள் பின்னால் ஒளிந்து கொள்வது அவர்களை கொச்சைப்படுத்துவது ஆகாதா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அது அந்த காலம் ஐயா. பாவம் மறந்து போச்சா. 😂😂 ஐயோ பாவம் நடப்பு ஆண்டு கூட மறந்து போச்சு. இப்படியான உங்கள் காலித்தனத்தை உங்களுக்குள் மட்டும் வைத்திருக்க வேண்டிய பரிதாப நிலை உங்களுக்கு.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இந்திய மொழிகள் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுகளை செய்த கார்டுவேலின் ஆய்வுகள் பொய் என புதிய ஆய்வாளரால் நிரூபிக்கப்பட்டதாக புலவர் கூறியபோது மேற்கண்ட கேள்வியை கேட்டிருந்தேன். இக் கேள்விக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை.