Everything posted by island
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்!
வழமையான கஜே கோஷ்டியின் ஆதரவாளர்கள் கூட இந்த திரிப்பக்கமே வரவில்லை. அவ்வளவுக்கு அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளனர் கஜே கோஷ்டி. எல்லா கஜே கோஷ்டி ஆதரவாளர்களும் ( அவர்கள் மொழியில் சொம்புகளும்) சுமந்திரனுக்கு பின்னால் பிஸி.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
2001, 2002 காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த தமிழ், சிங்கள மக்கள் பெரும்பாலும் சமாதானத்தில் ஆர்வம் உடையவர்களாக இருந்தனர். சமாதானத்துக்கு ஆதரவான பல தென்னிலங்கை அமைப்புகள் தமிழ் பிரதேசங்களுக்கு முக்கியமாக புலிகளின் பிரதேசங்களுக்கு வந்திருந்தனர். பெருமளவிலான சாமான்ய மக்கள் சமாதானத்துக்கு ஆதரவாக இருந்தனர். ரணில் வெற்றி பெறக்கூடிய அரசியல் சூழ்நிலை தென்னிலங்கையில் ஏற்பட்டதற்கு காரணம் அவர் சமாதான பேச்சுவார்ததைகளை சிறப்பாக கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பிலேயே. புலிகள் மீதான தடை விலக்கப்பட்டதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை. இவ்வாறாக பல நேர்மறையான விடயங்கள் இருக்க அன்று சிங்கள மக்கள் மத்தியில் மிக குறைந்த ஆதரவு இருந்த ஜேவிபி யின் செயற்பாடுகளை இவ்வாறு பூதாகரப்படுத்தி எழுதியதில் இருந்து சமாதானத்துக்கு எதிரான தமிழ் நெற்றின் உண்மை முகம் தெரிகிறது. ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜேவிபி எதிர்ததது, என்று அன்று நீலிக்கணீர் வடித்த தமிழ் நெற், ரணிலை தோற்கடித்து அந்த ஒப்பந்தத்துக்கே வேட்டு வைத்த தமிழர் தரப்பின் செயல்களை ஆதரித்தது. சமாதான பேச்சுவார்ததைகள் யுத்த சூழலை நோக்கி மெல்ல மெல்ல இரண்டு தரப்பாலும் இழுத்து செல்லப்பட்டதை எதிர்தது ஒரு கட்டுரை கூட தமிழ் நெற் எழுதவில்லை. பொதுவாகவே சமாதான காலங்களில் நேர்மறையான விடயங்களை பெரிது படுத்தாமல் அஒற்றை அமுக்கி விட்டு சிங்கள தரப்பில் மக்கள் ஆதரவு அற்ற இனவாதிகளின் செயல்களை, பேச்சுக்களை தமிழர் மத்தியில் பிரபலப்படுத்தி உசுப்பேற்றுவது தீவிர தமிழ்தேசியர்களின் வழமையான செயல்கள். அந்த வகையிலேயே தமிழ்நெற் தனது சமாதானத்துக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டு அஜன்டவை அன்று செய்தது. வருகின்ற ஜனாதிபதிகளை எல்லாம் விரோதிகளாக்கி அவர்களை தீவிர நிலைப்பாடு எடுக்கும் அரசியல் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு உலக நாடுகளையும் பகைத்து அரசியல் செய்து தமிழ் மக்களை இன்றைய சூழ் நிலைக்கு தள்ளியதில் இவ்வாறான ஊடகங்களுக்கும் அதை பரப்பும் இனவாதிகளுக்கும் பங்கு உள்ளது.
-
தேர்தலில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்!
படு மோசமான ஒடுக்குமுறையாளன் கோட்டபாயவை கூட ஆதரித்த இவர் நிச்சயமாக ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் நேர்மையாளன் இல்ல. தனது சமூகத்துக்கு யாழ்ப்பாண வெள்ளாளிய ஆதிக்க வாதிகள் மேற்கொண்ட சமூக அடக்குமுறைகள் குறித்த இவரது கருத்துகளில் பல நியாயங்கள் உண்டு. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக பழிவாங்கும் அரசியலாக மகிந்த, கோட்டபாய போன்ற பல இனவாதிகளுடன் இணைந்து வேலை செய்தது, அவர்களின் இனவாத செயற்பாடுகளை ஆதரித்தது இவர் நேர்மையற்ற நபர் என்பதை பறை சாற்றுகிறது.
-
தேர்தலில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்!
அந்த இரண்டு ஆசனங்களும் இருவரும் தற்போது இருந்து பேட்டியளிக்கும் அந்த இரு ஆசனங்களாகும். 😂
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
தன்னை ஜனாதிபதியாகி அழகு பார்க்க செய்து பேருதவி புரிந்தவர்களையும் தனது வாழ் நாள்முழுவதும் மகிந்த மறக்கக்கூடாது. 😂
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
வீரப்பையன், உலகம், அதாவது பூமி தோன்றி 450 கோடி வருடங்கள். ஹோமோ சேப்பியன் மனித இனம் உருவாகி 2 லட்சம் வருடங்கள்.
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்!
ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் நடைபெறும் பாரளுமன்ற தேர்தலை இவர்கள் பகிஷ்கரிக்கவில்லையா?
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
இது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விடயம் அல்ல. இதுவே உலக ஜதார்த்தம் தமிழீழம் உருவாகி இருந்தால் தமிழீழ ஜனாதிபதியும் இந்தியாவை அனுசரித்தே நடக்க முயற்சிப்பார். ஆரம்பத்தில் இந்தியாவை ஆக்ரோஷமாக எதிர்த்த புலிகள் கூட உலக அரசியல் சற்றே புரிய தொடங்கிய பின்னர் தமது தவறை உணர்ந்து இந்தியாவுடன் அனுசரித்து போக பல தடவைகள் முயன்றனர். துன்பியல் சம்பவம், அன்ரன் பாலசிங்கத்தின் இந்திய ஊடகத்திற்கான பேட்டி 2002 பேச்சுவவர்த்தையை முழுமையாக இந்தியாவில் நடத்த புலிகளின் முன்மொழிவு என்று பல தடவை இந்தியாவை அனுசரித்து போகவே விரும்பினர். ஆனால் புலிகளில் கடும் போபமுற்றிருந்த இந்தியாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அனுராவினால் இந்தியாவை அனுசரித்து போவதை தவிர்கக முடியாது. ஆனால் இந்தி யாவை அனுசரிக்கும் அதே வேளை தனது நாட்டின் நலன்களை பேணிக் கொள்வதிலேயே அனுராவின் சாமர்த்தியமும் வெற்றியும் தங்கியுள்ளது.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
என்னை மண்டையன் குழு என ஒரு தேசியர் அவதூறு பொழிந்தார். மண்டையன் குழு தமிழர் என்பதால் அவருக்கு சார்பாக அவரை ஆதரித்து பேசுகிறார் இன்னொரு தேசியர். 😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நான் உங்களை பற்றி பேசவில்லை. தமிழர் அரசியலை பற்றி மட்டுமே பேசுகிறேன். டக்கியை பற்றியும் மண்டையனைப் பற்றியும் கூட என்னால் பேச முடியும். நேர்மையான அரசியலை பேசும் நேர்மையற்று உடனடியாகவே அவதூறை கையில் எடுத்த போதே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது தெரிகிறது. கண்ணை இறுக மூடிக்கொண்டு பாலை குடியுங்கள்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கொலைகளை செய்ததில் தமிழ் அரசியலில் ஈடுபட்டவர்கள் ஶ்ரீலங்கா அரசபீடத்தில் இருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதையே வரலாறு கூறுகிறது. எதிர் காலத்திலாவது இரு தரப்பும் திருந்த வேண்டும். பழைய தவறான அரசியல் பாரம்பரியத்தில் இருந்து விடுபட்டு இலங்கையில் புதிய வார்ப்புகளாக தமிழ் இளையோர் அரசியல் மிளிர வேண்டும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இதிலே என்ன புலிக்காய்சல். தமிழர் அரசியலில் செய்தவர் விட்ட அரசியல் பிழைகளை பற்றி கதைத்தால் உங்களுக்கு புலிக்காய்சல் வருவதேன்? பேச்சுவார்தையை அனுரா அல்ல அன்றைய ஜேவிபி குழப்பியது என்று தமிழ் நெற் கூறினால் அதை குழப்பியடித்த மற்றவர்களை பற்றி பேசலாம் தானே. இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அதில் என்ன புலிக்காய்சல், கொண்டையை மறைப்பது என்று கீறு விழுந்த பழைய ரெக்கோட் போல எழுதுவது. அரசியலில் காய்தல் உவத்தல் இல்லாமல் வெளிப்படையாக எந்த அரசியல கட்சிக்கோ இயக்கத்துக்கோவிசுவாசம் இல்லாமல் உரையாட வேண்டும் என்பதையே நான் எப்போதும் கூறிவருகிறேன். அது உங்களால் முடியாது. உங்கள் தவறுகளை மூடி மறைக்கும் எவருக்கும் அடுத்தவர் தவறுகளை கூறும் அருகதை இல்லை. இங்கு ஒளித்து மறைத்து பேசுபவர் நீங்கள் தான். அரசியலை நேர்மையற்று பேசுபவர் நீங்கள் தான். நானல்ல.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
2002 ல் ரணிலைடனான பேச்சுவார்த்தைகளை அன்றைய ஜேவிபி எதிர்ததத்தை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ் தெற் செய்திகள் மட்டுமல்ல அந்த பேச்சுவார்ததைகள் குழம்பியதற்கும் அதிலிருந்து வெளியேறி யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு புலிகள் தரப்பும் மகிந்த தரப்பும் எப்படியெல்லாம் அன்று முனைப்பு கட்டியது என்பதையும் அன்று ஐரோப்பிய யூனியன் தொடக்கம் நோர்வே, இணைத்தலைமை நாடுகள் பேச்சுவார்ததையில் ஈடுபட்ட இருதரப்பினரையும் பற்றிய அறிக்கையிடலையும் அனைத்துலக மனித உரிமைகள் சபை இருபகுதி மனித உரிமை மீறல்களைப்பற்றி வெளியிட்ட அறிக்கைகளையும் இங்கு சேர்தது பதிந்தால் அதுவே உண்மையான வரலாறு. ஒரு பக்க தாம் சார்ந்த அமைப்பு செய்திகளை வெளியிடும் தமிழ் நெற்றிறின் செய்திகளையும் வியாக்கியானங்களையும் பரப்புரைகளையும் தருவது வரலாறு அல்ல என்பதை மக்கள் அறிவார்ரகள்.
-
எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி
எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி அவர்களின் செவ்வி. 2009 வரை போராட்டத்திற்க்காக தன்னை முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஒருதரப்பின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உணர்ச்சிகரமான செய்திகள் முழுமையான வரலாறு ஆக முடியாது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன: 1. ஒரு நிலைசார்ந்த பார்வை: மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பெரும்பாலும் ஒரு தரப்பின் பார்வையை மட்டுமே பிரதிபலிக்கின்றன. இதனால், பல்வேறு சம்பவங்கள் ஒருவகையான சாயலோடு விவரிக்கப்படுகின்றன, மற்ற தரப்புகளின் அனுபவங்கள் மற்றும் கருத்துகள் முழுமையாகப் பிரதிபலிக்கப்படுவதில்லை. 2. உண்மையின் சிக்கலான பரிமாணங்கள் மறைக்கப்படுகின்றன: உணர்ச்சிகரமான செய்திகளில் உண்மைகளை மிகைப்படுத்தியவாறு அல்லது ஒரு மையத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறப்படுவதால், வரலாற்றின் முழுமையான, சிக்கலான நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியாது. 3. மோசமான முன்னோக்குச் சித்திரம்: உணர்ச்சி சார்ந்த செய்திகளை முன்னிறுத்துவது நிகழ்வுகளை சரியான கோணத்தில் உணர வைக்காமல், பயம், கோபம் அல்லது துன்பம் போன்ற உணர்ச்சிகளை உண்டாக்கி, சமூகத்தில் தவறான புரிதல்களையும் பிரிவினையும் ஏற்படுத்தும். 4. முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை: மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் சில நேரங்களில் உண்மைகளையும் தவறாக வடிவமைக்கின்றன. இதனால் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு, புதிய தலைமுறைகள் அவை பற்றி தவறான எண்ணங்களுடன் வளர வாய்ப்பு அதிகரிக்கிறது. 5. நுணுக்கமான விவாதங்கள் இல்லாதது: உணர்ச்சிகரமான செய்திகளில் சரியான ஆராய்ச்சி, விவாதங்கள், மற்றும் பல்வேறு தரப்புகளின் குரல்கள் அரிதாக இடம் பெறுகின்றன. இது வரலாற்றின் முழுமையான புரிதலை இழக்கச் செய்யும். சமீப கால வரலாற்றை முழுமையாக உணர்வதற்கும் நியாயமாகப் புரிந்துகொள்வதற்கும், அனைவரின் குரல்களையும், உண்மையைச் சீரியமாயும் ஆழமாகவும் ஆய்வு செய்வது அவசியம்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இதை தான் முதலே குறிப்பிட்டேன். இதற்கு என்ன தீர்வு இப்படியே தொடர்ந்து விரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைப்பது தீர்வாகுமா? கடந்த காலத்தில் இந்த அணுகுமுறை பலன் தந்ததா?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கருத்துக்கு நன்றி கொழும்பன். அதற்கு காரணம் பரஸ்பர அச்ச நிலையும் சந்தேக பார்வையும் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டதே. அதை ஒழிப்பதற் மூலமும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற் மூலமுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாமேயொழிய பழைய சம்பவங்களை கிளறி இருபகுதியும் வெறுப்பை வளர்தது கொள்வதால் மேலும் பாதக நிலையை நோக்கியே செல்வோம். முஸ்லீம. தரப்பு தனி அலகு கேட்டபோது நாம் அதை முற்றாக நிராகரித்ததும் இதே அச்சநிலையே.
-
யாழில் கன்றுத்தாச்சி பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்!
கோழியையும் அதன் கருவாக உள்ள முட்டையையும் சேர்தது உணவாக்கும் போது இந்த விலங்கு அபிமானம் தெரிவதில்லை. மீன்களை பிடித்து உணவாக்கும் போது அதில் எத்தனை மீன்கள் கருவுற்றிருக்கின்றன என்பதை எவரும் சிந்திப்பதில்லை. 😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உங்களது இந்த கருத்து தவறானது. இதுவும் ஒரு வகையில் இனவெறியை தூண்டும் கருத்தே. எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள். சிங்கள இனவாதம் என்பது அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்டது. வரலாற்று தென்னிந்திய தமிழர்களின் படையெடுப்புகளையும் இந்தியாவில் தம்மை விட பெரும் எண்ணிக்கையில் உள்ள தமிழர்களையும் காட்டி அச்சமூட்டி எப்படி ஶ்ரீலங்காவில் சிங்கள இனவாதம் உருவாக்கப்பட்டதோ அதே போல் சிங்கள இனவாதத்தை காட்டி அச்சமூட்டி சிங்களவருக்கு எதிரான இனவாதமும் மனநிலையும் தமிழர் மத்தியில் தமிழர் தரப்புக்களால் கட்டமைக்கப்பட்டு வளர்ததெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் சிங்களவர்களோ, தமிழர்களோ இனவாதிகள் அல்ல என்பதை, சிங்கள பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் செய்யும் ஒரு தமிழரோ, தமிழர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் ஒரு சிங்களவரோ இதயபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அரசியலில் பழைய பகைமைகளை மறந்து, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் பலவகையான பலன்களை பெறலாம். ஒருவரின் பழைய எதிர்ப்புகளைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்டிருக்கும் போது, சமூக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், பழைய பகைமைகளைப் புறக்கணித்து, மாற்றங்களை வரவேற்பது, சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதொடு பகைமை, பரஸ்பர சந்தேகம் காரணமாக காரணமாக ஏற்பட்ட பல பிரச்சனகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும். இனக்குரோதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை உருவாக்கி, அவற்றின் ஒற்றுமையை நசுக்கக் கூடியது. இதனால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியமாக மாறுகிறது, ஏனெனில் மாற்றங்களே நமது மொத்த சமூகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசியல் தலைவர்கள் பழைய பகைமைகளை மறந்து, இனத்துவேஷத்துக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும், இது சமுதாயத்தில் பொது நலனையும், நீண்டகால முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். இதுவே நாகரீகம் அடைந்த மனிதர்கள் செய்வது. இனக்குரோதத்தை வளர்ககும் அற்ப மனிதர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்தி பதவிகளை பெறுவதை மட்டுமே செய்தது. அதன் விளைவான ஆயிதப்போரட்டம். ஆயுதப்போரளிகளும் மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை . உணர்சிவசப்படுத்தி தாயகத்தில் ஆட்சேர்ப்பதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேர்ப்பதுமே அரசியல் என்றே தமது ஆயுதப் போரை தொடர்ந்தனர். முன்னைய இரண்டு பகுதியினரின் அரசியல் அறிவற்ற தவறுகளின் விளைவே தற்போதைய சுயநல அரசியல். தற்போதும் பழைய தவறான அரசியலின் தொடர்ச்சியே நடக்கிறது. அதை மாற்றாதவரை இப்படி ஆளையாள் திட்டும் அரசியலே தொடரும். 75 வருட அரசியல் சூனியநிலைமை தொடர்கிறது. உண்மையில் இந்தியாவை எமது மக்களோ அரசியல்வாதிகளோ நம்பவில்லை. இந்தியாவைக் கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதே உண்மை. ஶ்ரீலங்கா அரசு மிகச் சிறப்பாக கையாளுகிறது என்பதை மறுக்க முடியாது. மூர்ககமாக எதிர்ப்பது அல்லது அப்படியே அவர்கள் சொன்னதை கேட்பது தான் எம்மவரின் தற்கொலை அரசியல். இரண்டுமே எம்மை அழித்தது.
-
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
தூய தமிழ் தேசிய முகங்கள் என்றால் அவயள் என்ன சோப் போட்டு குளிப்பினம்? Hamam Soap? Rexona? Lux?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
எப்படி தேடினாலும் கிடைக்காது. சல்லடை போட்டு தேடிப்பாருங்க அப்பவும் கிடைக்காது. வசை பாடுதல் என்பதன் அர்ததமாவது தெரியுமா? அட உங்களிடம் போய் இப்படியான தர்ககரீதியான கேள்விகளை கேட்கலாமா? அது என்ன முக மூடியா? எனது Island என்ற Profile ஐ தானே கூறுகிறீர்கள் அப்ப பெருமாள் என்பது உங்க ஆத்தா வைச்ச பெயரா? 😂 birth certificate, passport எல்லாம் ஐயா இந்த பெயரில் தானே வைச்சிருகிறார். 😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
விமர்சனம், வசைபாடல் இரண்டுக்கும் நிறைந வேறுபாடுகள் உள்ளன. ஒரு இனத்தின் அல்லது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்ககதை ஏற்படுத்தும் எந்த அரசியல் செயற்பாடுகளையும் விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசியல் செயற்பாடுகளின் மீது விமர்சனம் வைத்ததை தவிர நான் புலிகளை தனிப்பட்ட ரீதியில் வசைபாடிய ஒரு இடத்தையேனும் இங்கு காட்ட முடியுமா?