Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. இந்தியாவில் சாதி வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர்களும் ஆங்கிலேயர்களே. கல்வியை தாழ்த்தப்பட்டவர்களுகெஉ மறுத்த, அவர்கள் அவரவர் தத்தமது குலத்தொழிலை செய்தால் போதும் என்ற இந்திய பாரம்பரியத்தை கொண்டு வருவார்களா?
  2. எத்தனை தரம் இதையே திருப்பி திருப்பி கேட்பீர்கள்? தமிழர்கள்களிலையே அரைவாசிக்கு மேற்பட்டோர் ஆதரவு தரப்போவதில்லை. இதில் சிங்கள மக்கள் ஆதரவாம். 😂😂
  3. கடைசிவரை 50 வீதத்தை நெருங்கப் போவதில்லை என்பது மூளை உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும். நடக்காத ஒன்று நடக்கும் என்று லூசுத்தனமாக கூற நான் என்ன தீவிர தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதியா? வட கிழக்கு இணைந்த சமஷ்டி என்பதை கொள்கையாக அறிவித்து, அதை உலகிற்கு/ சர்வதேசத்திற்கு செய்தி சொல்லப் போவதாக அறிவித்த பொது வேட்பாளர், வட கிழக்கு மாகணங்களில் அளிக்கப்பட்ட வாக்கில் 50 வீதத்துக்கு குறைவாக பெறுவதன் மூலம் அதை வலியுறுத்தும் தார்மீக உரிமையை தமிழர் தரப்பு உத்தியோகபூர்வமாக இழப்பது என்பது, உரோமம் உதிர்வதற்கு ஈடான ஒன்றா?
  4. யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் விருப்பம். தமிழர் இனப்பிரச்சனையை பொறுத்தவரை, தனியே ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மூலம் ஶ்ரீலங்கா அரசியலைப்பு மாற்றத்தை கொண்டு வர முடியாது என்பது வெள்ளிடை மலை. இந்த திரியில் எனது முன்னைய கருத்தில் இதைப்பற்றி கூறியுள்ளேன். இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களுல் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெறாவிட்டால் வட கிழக்கு இணைந்த சுயாட்சி எனபது வெற்று கோஷமாகவே அமையும்.
  5. எனது எந்த கருத்துலும் யாரிலும் வன்மத்தை கொட்டவுமில்லை யாரையும் நான் திட்டவும் இல்லை. தாயக/ புலம் பெயர் அரசியல்வாதிகளின் தமிழ் தேசிய அரசியல் என்ற பெயரில் செய்யும் அரசியலின் பாரிய முரண்பாட்டையும் தமிழர் அரசியலை பின்னோக்கி செலுத்தும் செயலையுமே சுட்டிக்காட்டினேன். தமிழர் அரசியல்வாதிகள் அன்றில் இருந்து தொடர்சசியாக செய்துவரும், தமிழரை மட்டும் மையப்படுத்தும் உசுப்பேற்றல் அரசியல் மூலம், எப்படி ஶ்ரீலங்கா அரசியலமைப்பை மாற்ற முடியும் என்று உங்களால் பதில் கூற முடியுமா? ஶ்ரீலங்கா அரசியலமைப்பை மாற்ற ஶ்ரீலங்கா மக்களில் பெரும்பான்மை மக்கள் சாதகமாக வாக்களித்தால் மட்டுமே முடியும் என்ற ஜதார்த்தத்தை, உங்களால் அல்லது உங்களை போலவே தாயகத்திலும் உதவாக்கரை தீவிர தமிழ் தேசியம் பேசும் அரசியல் கோமாளிகளால் புறந்தள்ள முடியுமா?
  6. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் உங்களுடையதோ உங்களுக்கு நன்றி சொன்னவரதோ வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, உங்கள் இருவரதும் அடுத்த vacation ஐ கூட பாதிக்கப்போவதில்லை. ஆனால் அது தனது வாழ்வாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் ஒரு பொது மகனான சிந்தித்து வாக்களிக்க வேண்டும், உங்களைப் போல் பொறுப்பற்று பொழுது போக்குக்காக டம்பி பீஸுகளுக்கு வாக்களிக்க தன்னால் முடியாது என்கிறார். @பாலபத்ர ஓணாண்டி.
  7. தமிழக வெற்றுக் கழகத்தின் கொடி ஸ்பெயின் தொடக்கம் பல இடங்களில் இருந்து கொப்பியடிக்கப்பட்டது போல் உள்ளது.
  8. எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட) எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே எனலாம். விடுதலை புலிகளை பொறுத்தவரை அவர்கள் சுதந்திர தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சர்வதேச அரசியலில் அதன் சாத்திய தன்மை குறித்த சந்தேகங்கள் விவாதங்கள் இருந்த போதும் அதைத் தாண்டி அவர்களது அரசியல் தனி நாட்டை நோக்கியதாகவே இருந்தது. ஆயுத வழியில் தனிநாட்டை அடையலாம் என்ற ஒர்மத்துடன் அதை நோக்கிய பாதையில் போராடினார்கள். ஆகவே சர்வ தேசத்தை புறக்கணித்து தமிழரை மட்டும் மையமாக கொண்ட அவர்களது அரசியலில் நியாயம் இருந்தது. ஆனால் இன்றய நிலையில் தமிழரின் சார்பில் செயற்படும் எந்த தரப்பும் தனி நாட்டிற்காக போராடவில்லை. ஶ்ரீ லங்கா என்ற நாட்டிற்குள் அதன் அரசியலமைப்பை கூட்டாட்சி அரசியலமைப்பாக மாற்றவே போராடுகின்றார்கள். ஆகவே தமிழருக்குள் மட்டும் உசுப்பேற்றும் குண்டு சட்டி அரசியலின் மூலம் ஶ்ரீலங்காவில் அரசியலமைப்பை மாற்ற முடியுமா? அரசியலமைப்பை மாற்றுவதென்றால் நாட்டில் வாழும்அனைத்து இன மக்களிடமும் அரசியல் செய்யாமல் சாத்தியமா? உலகில் எந்த நாட்டிலாவது வரலாற்றில் அப்படி நடந்ததுண்டா? வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி என்றால் ஆக குறைந்தது அந்த இரு மாவட்டங்களிலும் வாழும் ஏனைய இன மக்களின் ஆதரவை பெறாவிட்டால் அதை பற்றி உலக நாடுகளிடம் வலியுறுத்த முடியுமா? தமிழ் மக்களிடம் அரசியல் செய்யும் அதே வேளை அதற்கு இணையாக சிங்கள மக்களிடமும் அரசியல் செய்து சமஸ்டிஅரசியலமைப்பின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கான் ஆதரவு தளத்தை ஏற்படுத்த வில்லை என்றால் இந்த தமிழ் தேசியவாதிகளது கோஷம் வெறும் வெற்றுக் கோஷமாகவே இருக்கும். அவர்களது பொழுது போக்கு மற்றும் பதவிகளை பெறும் சுயநல அரசியலாகவும. வெற்று வீரம் பேசும் புலம்பெயர் தேசியவாதிகளின் பண திருட்டு அரசியலாக மட்டும் அமைந்து அவர்களுக்கு மட்டும் பயன்தரும் அரசியலாக மட்டுமே அமையும் என்பது எனது கருத்து. தமிழ தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு செயற்படுவோர் மத்தியில் பல சட்டவாளர்கள், அரசியல் விற்பன்னர்கள், பத்தி எழுத்தாளர்கள், புலம் பெயர் இணையத்தள அரசியல் ஆய்வாளரகள், அதி தீவிர தேசியவாதிகள் என்று பலர் இருந்தும் இதை கணக்கில் எடுக்காதது ஏன்? நாம் இந்த உலகில் வாழும் வரை தமிழ் தேசியத்தை பொழுது போக்காக அல்லது வருமானத்தை பெருக்க, நிதி சேகரிக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை உபயோகிப்போம் என்ற அவர்களது எண்ணமே இதற்கு காரணம்.
  9. தமிழர் சார்பில் தலைமை தாங்குபவர்கள் அன்றில் இருந்து இன்றுவரை பேசும் ஒற்றுமை என்பது ஆட்டு மந்தைகள் போன்ற ஒற்றுமை. எந்த பிரயோசனமும் அற்ற சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒற்றுமை. உண்மையில் ஒற்றுமை என்பது அதுவல்ல.
  10. மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறிய வளவில் அமைந்த சிறிய பந்தலுக்குள் மக்களை இருத்தி நடத்தி முடித்த அரியநேந்திரனுக்கு பாராட்டுகள்.
  11. கந்தையா, பணத்தை பாதுகாக்கும் கட்டமைப்பு தேவையல்லை. பொறிமுறையும் தேவையில்லை. பணத்தை இவர்கள் பாதுகாக்கவும தேவையில்லை. பணத்தை யாரிடம் இருந்து பெற்றார்கள், யாருடைய பெயரில் பெருந்தொகை பணத்தை எடுத்து அதை அபகரித்து அவர்களை வாழ்நாள் கடனாளியாக்கி னர்களோ அவர்களின் பெயர், முகவரி விபரம் எல்லாம் நீங்கள் கூறிய செயற்பாட்டாளர்களிடம் உண்டு. பணத்தை மனம் இருந்தால் திருடிய இடத்தில் காதும் காதும் வைத்த மாதிரி திருப்பி கொடுத்திருக்கலாம். அதற்கு எந்த தடையும் சட்ட சிக்கலும் இல்லை. பணத்தை இழந்தவர்கள் இப்போதும் உள்ளார்கள். அவர்கள் இவர்களை காட்டிக் கொடுக்கப்போவதில்லை. தமது பணம் திரும்பி வந்ததையிட்டு மகிழ்சசியடையவே செய்வர். பணத்தை பெறும் போதும் இல்லாத சட்ட சிக்கல் உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கும் போது வரப் போவதில்லை. பணத்தை தாம் அனுபவிப்பதற்தை நியாயப்படுத்த இவ்வறான ஆயிரம் காரணங்களை அவர்கள் கூறலாம். அவர்களுக்கு வேண்டியவர்கள் ஆயிரம் முட்டு கொடுப்புகளைச் செய்யலாம். அவை எதுவும் நியாயமானதல்ல.
  12. கந்தையர் நீங்கள் நீட்டி முழக்கி பல பந்திகளில் சொன்ன விடயத்தை , அந்த பணத்தை அபகரித்த கொள்ளையர்கள் பல வருடங்களுக்கு முதலே ஒரே வசனத்தில் கூறிவிட்டார்கள். “தலைவர் வந்தால் கணக்கு காட்டுவொம்” என்று. அவர்கள் கில்லாடிகள் அல்லவா…. 😂
  13. அவர்களெல்லாம் அவர்களின் நடிப்பில், பாசாங்கு தனத்தில் நீங்கள் கூறிய தோற்றவர்களே. ஆனால் பின்னணியில் பினாமி பண முதலைகள். கில்லாடிகளிடம் பணம்பெறுவதா? அது முடியவே முடியாது. எனவே அவர்களின் பழைய நாடகங்களை வெளிச்சம் போட்டு காட்டி எதிர்காலத்தில் அவர்களால் ஏமாற்றுபட இருப்பவர்களுக்கு அவதானமாக இருக்குமாறு விழிப்புணர்வு செய்ய மட்டுமே என்னால் முடியும். உங்களை போல் அவர்களை அப்பாவிகளாக சித்தரித்து அவர்களின் ஏமாற்றுவித்தை தொடர இடமளிப்பதை அனுமதிக்க கூடாது. துவாரகா குழுவினின் கூற்றில் உண்மை உள்ளது என்று நீங்கள் எழுதிய பதிவு இன்றும் யாழ் இணையத்தில் உள்ளது.
  14. ஏற்கனவே திட்டமிட்டு அப்பாவி மக்களின் பணத்தை அதுவும் தமிழ் தேசியத்தில் அதீத பற்று வைத்திருந்த உணர்வு மனோநிலையில் இருந்த மக்களைக் குறிவைத்து, தேசிய செயற்பாளர்களாக பலகாலம் இயங்கியவர்களால் நடத்தப்பட்ட பாரிய பண கொள்ளையை பற்றியே பேசுகிறோம். நீங்கள் யாரோ சில அப்பாவிகளை கைக்காட்டி பண கொள்ளையர்களில் மீது அனுதாபம் தேட விழைகின்றீர்கள். விரும்பிய கொள்கைக்காக, வேண்டுதலுக்காக கொடுத்தோம் தோற்றுவிட்டோம் அதை மறந்துவிடுவோம் என்று கூறுகின்றீர்கள். யாரிடம் தோற்றீர்கள்? யார் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வென்றது? என்பவையே இங்கு கேள்வி. இங்கே தோற்றது சக தேசிய செயற்பாட்டாளரிடமே என்பதை மறைக்க படாது பாடுபட்டு ஏதே இனத்தெரியாத நபர களிடம் தோற்றது போல் பாவனை செய்ய முயல்கின்றீர்கள். ஏனெனில் மக்கள் ஏமாந்தது (தோற்றது) புதிதாக வந்த நபர்களிடம் அல்ல. நீண்ட காலமாக செயற்பட்டு கொண்டிருந்த செயற்பாட்டாளரிடமே உங்கள் மொழியில் சேவையாளர்களிடமே. எல்லோருமே தோற்றுவிட்டோம் என்று அனுதாபம் தேட முயற்சிப்பது கிட்டத்தட அந்த டெலிபோன் உரையாடல் பாணியிலான நாடகமே.
  15. சற்றும் மனம் தளராத விக்கிரமனாக நீங்கள் கேள்வி கேட்டாலும், இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் அதை கூறாமல் விட்டால் உன் தலை வெடித்து சிதறிவிடும் என்று அம்புலிமாமாவில் வரும் வேதாளம் கேட்டால் பதில் வரலாம். 😂 எப்படியும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். 😂
  16. இதனால் பிரிந்த குடும்பங்கள் பல. தாயகத்தில் முள்ளிவாய்கால் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொள்ள ஐரோப்பாவில் மக்களை இலக்குவைத்து ஒரு இவ்வாறான தாக்குதலை தேசிய செயப்பாட்டாளர்களாக வலம் வந்த மாபியா குறூப் செய்து அதில் வெற்றியும் கண்டது.
  17. @Kapithan அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள் பயன்படுத்திய உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில் தமிழரின் அரசியல் பலம் உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்காக இருந்தது. மக்களின் வீடுகளுக்கு சென ற இவர்களுக்கு அந்த வீட்டுகாரர் பணம் வழங்கக்கூடிய நிதி நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தும் கடன்வாங்கி தருமாறு வற்புறுத்துவார்கள். உங்கள் வீட்டுக்கு ஒரு பிரச்சனை வந்தால் கடன் வாங்கி அந்த பிரச்சனையை தீர்ப்பதில்லையா, அது போல் இப்போது உங்கள் நாட்டிற்கு கஷ்ரம் வந்துள்ளது என்றெல்லாம் சென்றிமென்ற் கதையளந்து அவரின் மனத்தை இளகப்பண்ணி அந்த பலவீனமான நேரத்தில் கடன் பத்திரத்தில் கையொப்பமிடப்பண்ணி அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுவிடுவார்கள். அதைவிட இன்னொரு தந்திரம் நாடகம் அரங்கேற்றப்பட்டது. வீடுகளுக்கு சென்று மக்களிடம் பணத்தை பிடுங்கும் அன்பான வற்புறுத்தலை செய்து கொண்டிருக்கும் போது அந்த விவாதம்தே நடைபெறும் போது அந்த தேசிய செயற்பாட்டாளருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வரும். அவர் தொலை பேசியை ஸபீக்கரை ஓன் செய்து பேசுவார். மறுமுனையில் ஒருவர் மிகுந்த கோபத்துடன், என்ன அவசரகால நிதி சேகரிக்கின்றீர்களாம் ஏன் என்னிடம் வரவில்லை என்று சத்தமிடுவார். உடனே இவர் பம்மிக்கொண்டு இல்லை அண்ணை நீங்கள் இப்ப முன்று மாதத்துக்கு முதல் தானே பத்தாயிரம் தந்தனீங்கள் அது தான் உங்களிடம் வரவில்லை என்று கூற மறு முனையில் இருப்பவர் இன்னும் கோபத்துடன் அதை விடுங்கோ. இப்ப நாடு இருக்கிற நிலைக்கு அந்த பத்தாயிரம் எந்த மூலைக்கு காணும் இந்த நேரம் நான் உதவி செய்யாமல் விட்டால் நான் தமிழனாய் இருக்க என்ன தகுதி இருக்கு, எனது காரை நேற்றே விற்று பணத்தை வீட்டில் வைத்துள்ளேன் வாங்கோ வந்து பெற்றுகொள்ளுங்கோ கொஞ்ச நாளைக்கு கார் இல்லாமல் இருந்தால் நான் குறைஞ்சா போயிடுவன் இண்டைக்கு எமது இறுதி யுத்தத்திற்கு நிதி தராமல் விட்டால் இன்று என்னால் இரவு நித்திரை கொள்ளமுடியாது உடனே வாங்கோ என்று கூறுவார். இந்த உரையாடல் அந்த செயற்பாட்டாளரால் ஏற்கனவே திட்டமிட்ட நாடக உரையாடல் என்பதை அறியாத அந்த வீட்டுகாரர் குற்ற உணர்சியில் பலவீனமாகி தனது பொருளாதார நிலைக்கு பன்மடங்கு மேல் வங்கியின் தனது பெயரில் கடன் பெற கையொப்பமிடுவார். இவ்வாறாக பல சம்பவங்கள் 2009 இன் கடைசி ஆறு மாத காலத்தில் நடந்தன. இவ்வாறான படு மோசமான செயற்பாடுகளே இன று மக்களின் நம்பிக்கையை இழக்கவைத்தது. இந்த மாபியாக்கள் சுயநலத்தால் பல துண்டுகளாக உடைந்து அது தொடர்கிறது. மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கி பல காலம் வாழ்ந்து ருசிப்பட்ட இந்த கும்பல்களில் ஒரு பிரிவே துவாரகா நாடகத்தையும் நடத்தியது.
  18. கடைசி ஆறு மாதங்களும் இன்னும் சிறிது காலங்கள் தான் உள்ளது அதற்குள் சுருட்டுவதை சுருட்டிவிட வேண்டும் என்ற அவசரத்தில் தான் நிதி திரட்டல் வேகப்படுத்தப்பட்டது. மக்களுக்கு திட்டமிட்டு உணர்சசி உருவேற்றி பல நாடகங்களை நடத்தி மின்னல் வேகத்தில் பணதிரட்டல் நடந்தது. கடைசி நேரத்தில் பணம் திரட்டிய முக்கியமான நபர்கள் பலருக்கு இனி அங்கு எல்லாம் முடியபோகிறது என்பது தெளிவாக தெரிந்தே இருந்தது. அதனால் ஏற்பட்ட மனஸ்தாபங்களே இன்றைய குழப்பத்திற்கு அத்திவாரம்.
  19. எல்லாம் பங்கு பிரிப்பு தகராறு தான். பொது மக்களிடம. கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கும் போதாவது நியாயமாக நடந்து கொண்டிருக்கலாம். அவங்களுக்குள் அது சகஜமப்பா. 😂
  20. தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு சின்னம் நல்ல பொருத்தமாக உள்ளது. 😂. Super
  21. நான் பேசியது தமிழ் தேசியர்களின் உதவாக்கரை அரசியலையும் அவர்களால் தமிழினம் கேடுகைட்டு போவதைப் பற்றி மட்டுமே. மற்றப்படி தீவிர தமிழ் தேசிய வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககை மிகவும் முன்னேறியே உள்ளது என்பதை கண்கூடாகவ பார்கிறோம். ஏனென்றால் தீவிர தமிழ் தேசியவாதிகள் நாட்டை தமது இனத்தை மட்டும் தான் நாசப்படுத்துவார்கள். பொறுப்பில்லாமல் உளறுவார்கள். அவர்களது குடும்ப விடயத்தில் பொறுப்புடனும் விவேகத்துடனும் நடந்து தமது பிள்ளைகள் இந்த தமிழ்தேசிய சகதிக்குள் விழாமல் பாதுகாத்து அவர்களை முன்னேற்றுவார்கள். தனிப்பட்ட ரீதியில் தீவிர தமிழ் தேசியவாதிகள் என்னைவிட முன்னேறியே உள்ளர்கள்.
  22. தமிழ் தேசியம் பேசுவோர் எல்லோருமே இப்படி லூசுகள் மாதிரி (அது என்ன மாதிரி லூசுகளே தான்) செக்கு மாடுகளை போல் இருந்த இடத்தையே சுற்றி வத்து உளறிக்கொண்டிருப்பர்.
  23. பொது வேட்பாளரை நிறுத்துவதற்துவது ஏன் என்று தமிழ் தேசியவாதிகள் எனப்படுவோர் கூறும் காரணம் சர்வதேச நாடுகளுக்கு எமது மக்களின் கோரிக்கையை எடுத்து கூறுவது என்பதே. சர்வதேச நாடுகள் இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்குமா என்பது வேறு விடயம். ஆனால், கோரிக்கை என்பது வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதையும் இணைத்த பிரதேசத்தில் ஒரு தன்னாட்சி சமஸ்டி. அதாவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அனைத்து பிரதேசங்களையும் இணைத்த தன்னாட்சி அரசு. ஒரு பேச்சுக்கு சர்வதேசம் இதை கணக்கில் எடுக்கிறது என்றால் இப்போது பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் உத்தியோகபூர்வ வாக்களிப்பில் 50 வீதத்திற்கு குறைவாக பெற்றால் தன்னாட்சி கோரிக்கையை வட கிழக்கு மக்கள் நிராகரித்தை விட்டார்கள் என்றே சர்வதேசம் எடுக்கும். ஏனென்றால் மாபெரும் எழுச்சியுடன் 1977 ல் நடைபெற்ற தமிழீழ கோரிக்கைக்கான வாக்கெடுப்பிறகே வடகிழக்கில் உத்தியோகபூர்வமாக கிட்டத்தட்ட 52 வீத வாக்குகளே கிடைத்தன. ஏறத்தாள அரைவாசி வடகிழக்கு வாக்காளர்களால் அன்றே தமிழீழ கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலையில் 50 வீதம் சாத்தியமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.