Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. இந்த காணி , பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம். காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர். தமிழ் தலைவர்களை சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத் தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து தமிழர்கள் சமஸ்டியை கேட்கிறார்கள். 2002 ல் பேச்சுவார்தை தொடங்கிய பின்னர் நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர் தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது. இன்று அதை வேண்டிப் போராட்டம். இதற்கு தான் கூறுவது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று. இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும் நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும். தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும்.
  2. இலங்கை தமிழர்கள் பேச்சுவார்ததைகளை என்றுமே குழப்பவில்லை. தமிழீழ தமிழர்களும் ஐரோப்பிய தமிழர்களும் இலங்கை சிங்கள அரசியல்வாதிகளும் தான் தான் குழப்பினார்கள். 😂😂😂
  3. சுமந்திரனை துரத்தினால் தமிழ் தேசியத்தை காக்க யாரை திட்டுவது? பிறகு தமிழ் தேசியவாதிகளுக்கு போர் அடிக்காதா? 😂
  4. இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அரசியல் ஜனநாயக வழி முறையிலான ரீதியில் ஒரு வழி முறையில் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக வேண்டுமென்றால் அந்த இரு இனங்களுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையும் ஒரளவாவது நல்லுறவு அவசியம். அது இல்லாமல் சமஷ்டி அரசியலமைப்பு உருவாகுவது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் அதன் வழிமுறை என்ன? இன்றைய நிலையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யபடுபவர் நினைத்தாலும் சமஷடி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பது எனது கருத்து.
  5. நீங்கள் உங்களது வழமையான காணியான சுற்றிவளைத்து பேசும் முறையை கைவிட்டு நேரடியாக பேச வேண்டும் நேரடியாக பேசுவதே முறையானது. இப்போதுள்ள நிலையில் தூண்டிலை பெறுவது என்று நீங்கள் குறிப்பிட்டது தமிழீழத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்பதையே. அதை நீங்கள் வெளிப்படையாக கூறினால் நாங்கள் உங்களுடன் வாதாடாமல் எங்களுடைய வேலைகளை பார்கக போவமில்ல.
  6. நீங்கள் தீர்ககதரிசி விசுகு. ஆயுத போராட்டம் தொடங்கிய உடனேயே எப்படியும் இவனுகள் போராட்டம் எப்படியும் சரிவரப்போவதுல்லை இனி என்னை தூங்க விடமாட்டாங்கள் இவங்கள் என்பதை துல்லியமாக கணித்து பெட்டி படுக்கைகளுடன் லாச்சப்பலுக்கு வந்து விட்டீர்கள் தனியே படுக்க. 😂 குட் நைற. மிஸ்ரர் விசுகு.
  7. தற்போதைய நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசுவதன் மூலம் ஒரு சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் நடக்காது என்பது சாதாரண மக்களாகிய எமக்கே தெரிந்த உண்மை. இனரீதியாக பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் பாரிய சந்தேக பார்வையுடன் இருக்கும் இரு இனங்கள் ஒரு சமஷடி தீர்வை நோக்கி செல்வது சுலபமல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டி எழுப்பாமல் இது சாத்தியமே இல்லை. அதற்கான சாத்தியங்களை உருவாக்கும் அரசியலை செய்யாமல் வெற்று கோஷங்களுடனும் வீர வசனங்கள், வெறுப்பு பேச்சுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை. நாம் உலகிற்கு என்ன செய்தியை சொன்னாலும் உலகம் இருவரும் பரஸ்பரம் பேசி இதை தீர்குமாறே வற்புறுத்தும். இதுவே உலக நடைமுறை. இன்றைய நிலையில் நடைமுறை பிரச்சனைகள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய பிரச்சனைகள் பலவற்றை வைத்து பேரம் பேசி வட கிழக்கில் எமது இனத்தின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய அவசர தேவை. அதை விடுத்து சுய நலத்துக்காக வெறித்தனமான தேசியவாதம் பேசுவது, அப்பி பேசி தேர்தல் அரசியலில் எம்மால் தீர்வு பெற்று விட முடியும் என்று பம்மாத்து காட்டுவது எமது இருப்பை தமிழ் பிரதேசங்களில் இன்னும் பலவீனப்படுத்தும். அவ்வாறு பலவீனப்பட்ட பின்னர் உலகில் எவரும் எம்மை திரும்பி கூட பார்கக போவதில்லை.
  8. தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா என்ற கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது. படிப்படியாக அங்குலம் அங்குலமாக தமது அரசியல் தந்திரோயபம் மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/ புலம் பெயர் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை. இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில் பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம். அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன். தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள்.
  9. ஈழப்பிரியன் அரிநேந்திரன் ஒன றில் ஜனாதிபதியாக வர வேண்டும். இல்லை வட கிழக்கில், நாம் சமஸ்டி கேட்கும் பிரதேசத்தில் 50 வீதத்துக்கு மேல் எடுத்து சர்வதேசத்துக்கு அதை காட்டி உலகநாடுகள் அதை அங்கீகரிக்க வேண டும். இரண்டுல் எது நடந்தாலும் அவருக்கு வெற்றி. இரண்டிலும் அவர் தோற்றால் அவரை நிறுத்திய எல்லோருக்கும் சங்குதான். இறுதியில் அது தான் நடக்கப்போகிறது.
  10. ரஞ்சித், @ரஞ்சித் இந்த புள்ளிவிபரங்களை நீங்கள் சுயமாக தயாரித்தீர்களா? ஏனென்றால், தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களுக்கும் உங்களால் தயாரித்து இங்கு பிரசுரிக்கப்பட்ட போலி புள்ளிவிபரங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. கண் முன்னே ஆதாரங்கள் இருந்தும் இப்படி புள்ளிவிபரங்களை திரிக்கின்றீர்கள் என்றால் ஆதாரங்களை தேடுவது கடினமாக இருந்திருந்தால் என்ன எல்லாம் செய்திருப்பீர்கள். தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட உண்மை புள்ளிவிபரங்களை இங்கு இணைத்துள்ளேன். அதை இணையத்தளத்திற்கு சென்று சரி பாருங்கள். அது சரி, தோல்வியடைந்த தொகுதகளின் வாக்குகளை ஏன் கழிக்க வேண்டும். அந்த தொகுகுதிகளின் பிரதேசங்களை தமிழீழ வரைபடத்தில் இருந்து எடுத்துவிட்டீர்களா? இப்படியான வினோதமான ஒரு தலை பட்சமான வாக்களிப்பு முறையை எங்கு கற்றீர்ர்கள்? ஒரு குறிப்பிட்ட பிரதேசம் தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு என்றால் அப்பிரதேசத்தில் வாழும் மக்களால் அளிக்கப்பட்ட மொத்தவாக்குகளில் அப்பிரேரணைக்கு அல்லது சட்டமூலதிற்கு ஆதரவாக எத்தனை வாக்குகள் விழுந்துள்ளன என்பதை வைத்தே பிரேரணைக்கு ஆதரவான வாக்கு வீதத்தினைக் கணக்கிடுவது உலக நடைமுறை. உண்மையை சுட்டிக்காட்டினால் அதை ஜீரணிக்க முடியாமல் கோடரிக்காம்பு, துரோகி என்று திட்டித் தீர்ப்பது உங்கள் வழமையான நடைமுறை. இருப்பினும், உண்மை புள்ளிவிபரங்களை கீழே தந்துள்ளேன். உங்களுக்காக அல்ல. உங்களால் பிரசுரிக்கப்பட்ட பொய்யான போலி புள்ளிவிபரங்களை நம்பிவிடாமல் இருக்க யாழ் இணைய வாசகர்களுக்காக தருகிறேன். Electorate Poll Rejected Valid Votes TULF Percentage Keyts 27’673.00 132 27’541.00 17’640.00 64.05% Vaddu 33’456.00 135 33’321.00 23’384.00 70.18% KKS 36’695.00 218 36’477.00 31’155.00 85.41% Manipay 33’001.00 199 32’802.00 27’550.00 83.99% Kopay 33’619.00 149 33’470.00 25’840.00 77.20% Uduppidi 29’706.00 123 29’583.00 18’876.00 63.81% Point Petro 23’306.00 75 23’231.00 12’989.00 55.91% Chavakacheri 31’748.00 91 31’657.00 20’028.00 63.27% Nallur 33’529.00 137 33’392.00 29’858.00 89.42% Jaffna 28’779.00 78 28’701.00 16’251.00 56.62% Kilinochi 21’314.00 56 21’258.00 15’607.00 73.42% Mannar 29’436.00 84 29’352.00 15’141.00 51.58% Mullaitivu 19’672.00 76 19’596.00 10’261.00 52.36% Vavuniya 23’496.00 80 23’416.00 13’821.00 59.02% Trinco 29’379.00 119 29’260.00 15’144.00 51.76% Muhur 27’965.00 115 27’850.00 7’520.00 27.00% Kalkuda 29’459.00 217 29’242.00 12’595.00 43.07% Batticaloa Double 109’509.00 1618 107’891.00 49’091.00 45.50% Paddiruppu 32’532.00 243 32’289.00 15’877.00 49.17% Samanthurai 24’944.00 82 24’862.00 8’615.00 34.65% Kalmunai 26’005.00 101 25’904.00 7’093.00 27.38% Pouvil Double 89’871.00 912 88’959.00 23’990.00 26.97% Puttalam 31’205.00 134 31’071.00 3’268.00 10.52% Total 806’299.00 5174 801’125.00 421’594.00 52.63% Results_1977.PDF (elections.gov.lk)
  11. வாதவூரான், நீங்கள் தலைப்பை விட்டு வேறு விடயங்ங்களைப் பேசுகின்றீர்கள். பொது வேட்பாளர் என்பது சர்வதேச நாடுகளுக்கு எமது அரசியல் கோரிக்கையின் ஆதரவை காட்ட என்றால் சர்வதேச நாடுகள் உலக நடைமுறையின் பிரகாரமே அதை அங்கீகரிக்கும். எமது விருப்படி தமிழ்வாக்குகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று சர்வதேச நாடுகளுக்கு கூற முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா? உங்களது பொது வேட்பாளர் அரியநேந்திரனால் இப்படியான கோரிக்கையை இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுக்க முடியுமா?
  12. இதை ஒரு போதும் நிரூபிக்க உங்களால் முடியாது. இப்படி தமிழருக்குள் மட்டும் கூறி அவர்களை உசுப்பேற்றி உசுபேற்றி ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளால் சிதைக்கப்பட்ட தமிழரின் அரசியல் பலத்தை மேலும் சிதைக்க மட்டுமே முடியும் சர்வதேசத்துக்கு காட்டுவதானால் அவர்கள் உலக நடைமுறையையே வலியுறுத்துவார்கள். இதுவரை 70 வருடங்களாக நடந்தது அதுதான். அந்த பட்டறிவை பட்டும் கூட தெளிய முடியவில்லை.
  13. அப்படியானால் சர்வதேசத்துக்கு பெரும்பான்மையை காட்ட போகிறோம் என்று ஏன் பொது வேட்பாளரை நிறுத்தினார்கள்? சிங்கள, முஸ்லீம. மக்களின் வாக்குகளை கணக்கில் எடுக்க கூடாது என்று சர்வதேச நாடுகளுக்கோ ஜநா மன்றத்துக்கோ தமிழர் தரப்பால் உத்தியோகபூர்வமாக கூற முடியுமா? அப்படிக் கூற முடியாது என்றால் சர்வதேசத்துக்கு காட்ட போகிறோம் என்று கூறுவது முட்டாள்தனம் தானே!
  14. ஒரு பிரதேசத்தை தனி நாடாக அல்லது சமஸ்டி பிரதேசமாக அறிவிப்பதானால் அந்த பிரதேச மக்களின் ஒப்புல் வேண்டும் என்பது தான் சர்வதேச சட்டம். அப்படியானால் அந்த பிரதேசத்தில் உள்ள சிங்கள முஸ்லீம் வாக்காளரது வாக்கு செல்லாது என்று சர்வதேச நாடுகளுக்கு கூறு ஒரு நாட்டை உங்களால் உருவாக்க முடியுமா? அதாவது தூய தமிழனுன் வாக்கு மட்டுமே செல்லுபடியானது என்று ஐநா மன்றத்துக்கு கூறி அங்கீகரிக்கும் படி கேட்பது சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதா?
  15. இந்த ஶ்ரீலங்கா தேர்தல. திணைக்கள புள்ளிவிபரங்களில் இருந்தே ரஞ்சித்திற்கு பதிலளித்திருந்தேன். 72 வீதம் என்று பொய்யான தகவலை அவர் தந்திருந்தார்.
  16. பாடகர் ஶ்ரீநிவாஸ் மீது முட்டை வீசியதை விடுங்கள். அதை விட மோசமாக அவரை மிகவும் மோசமான வசை சொற்கால் ஏசி உள்ளது வீடியோக்களில் பதிவாகி உள்ளது. போடா துரோகி, வடக்கத்தையன் இது விட தூஷண வார்ததைகளை அவருக்கு கூறி உள்ளார்கள். மேடையில் இருந்து அந்த ஆர்பாட்டம் செய்த கொடிகளை கையில் வைத்திருந்த காடையர்களை நோக்கி மிகவும் பண்பான முறையில் அவர் உரையாடினார். கனிவாக பேசினார். ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத அந்த காடையர்கள் அதை மீறி வடக்கத்தையான் போடா என்று பல தூஷண வார்ததைகளை வார்ததைகளை உபயோகித்தார்கள். இது நிச்சயம் தமிழக மக்களை சென்றடையும்.
  17. 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கொள்கையை முன்வைத்து வட கிழக்கில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்ட 23 தொகுதிகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 806299 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5174 செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 801125 தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 421594 (இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் காசிஆனந்தனுக்கும் கிடைத்த வாக்குகள் உள்ளடங்கலாக) 100/801125* 421594 = 52.62 வாக்களிப்பு புள்ளி விபர ஆதாரம் தேர்தல் திணைக்களம், ஶ்ரீலங்கா. உங்களுக்கு எப்படி 72 வீதம் வந்தது? ஒருதலை பட்சமாக வரலாறு என்ற பெயரில் எதைக் கூறினாலும் லைக் போட்டு வரவேற்பார்கள் என்ற உங்கள் அனுபவத்தின் மூலம் வந்த துணிச்சல் தான் இவ்வாறு பொய்யான தகவலை கொடுக்க உங்களை தூண்டியதோ?
  18. ஏற்கனவே எமது இடுப்பு உடைந்ததை போல், அடுத்தடுத்த தலைமுறைகளினதும் இடுப்பு உடைந்து நாசமாக போகவேண்டும, இலங்கை தீவில் தமிழர் இனம் சுவடு தெரியமல் அழிந்து போனாலும் பரவாயில்லை என்பதே, தமிழர் தரப்பில் அரசியல் செய்வோரின் இன்றைய நிலைப்பாடு. அதாவது, “ நாம் சொல்வதை செய், நாம் சொல்வதை மட்டும் செய் இல்லையெனில் செத்து மடி”, என்பதே தமிழர் தரப்பின் சித்தாந்தம். அந்த முட்டாள் சித்தாந்தத்தை உருவாக்கி ஆயுத போராளிகளிடம் கடத்தியதும் தமிழரசு கட்சிதான். அறிவுக்கு இடம் கொடாதே அதி தீவிர உணர்ச்சிக்கே முன்னுரிமை கொடு என்ற, தமிழரசு கட்சி உருவாக்கிய முட்டாள் சித்தாந்தம் ஆயுத போராளிகளிடம் கையளிக்கப்பட்டு, தமிழரின் பேரழிவுக்கு காரணமாகி, இன்றும் தமிழர் தரப்பு அரசியல் செய்வோர் அனைவரிடமும் வியாபித்த இந்த தற்கொலை அரசியல் தமிழரின் அழிவு வரை தொடரும் போல உள்ளது வேதனை தான்.
  19. ஒரு சுதந்திர நாட்டை நிர்வகிக்கும் எந்த தகுதியும் இவர்களுக்கு இல்லை என்பதை இயற்கை உணர்த்தியதை புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள்கள் மீண்டும் மீண்டும் அதை நிரூபிக்கின்றார்கள். இந்த தலைமுறையில் உள்ள இந்த கழிசடைகள் மரித்த பின்னர், புதிய தலைமுறை புதிய வார்ப்புகளாக வடிவம் பெறும் போதே தமிழருக்கு ஒரு விடியல் பிறக்கும்.
  20. மக்கள் மிகவும் எழுச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்த 1977 ம் ஆண்டு தேர்தலிலேயே தமிழீழம் என்ற கொள்கைக்கு கிடைத்த வாக்கு 52 வீதம் மட்டுமே என்ற நிலையில் இன்றைய நிலையில் 50 வீதம் கிடைக்காது என்ற ஜதார்த்தத்தை புறக்கணித்து முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட தீர்மானமே பொது வேட்பாளர் என்பது.
  21. இதே கருத்தை நான் எழுத நினைத்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள். சமாதான காலத்தில் வன்னியில் புலிகளுடன் வாழ்ந்த நிலாந்தன் வெறும் போர்பரணி பத்திகளையே எழுதினார். முள்ளிவாய்கால் அழிவிற்கு இவரும் பொறுப்பு கூறவேண்டும்.
  22. ஐபிசி தமிழின் வாக்கெடுப்பில் தமிழர்கள் மட்டுமே வாக்களித்திருப்பார்கள் என்பது சொல்லி தெரியவேண்டிய விடயம் அல்ல. தமிழர்களுக்குள் நடந்த வாக்கெடுப்பிலே பொது வேட்பாளர் 23 வீதத்தை மட்டுமே பெற மற்றைய வேட்பாளர்கள் அனைவரும் 77 வீதத்தை இதுவரை பெற்றுள்ளார்கள். தமிழர்களுக்குள்ளேயே ரணிலை வெல்ல தமிழ்ப் பொது வேட்பாளரால் முடியவில்லை.
  23. அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற உங்களல் முடியாது. நாட்டை இனத்தை மக்களின் உயிர்களை நாசமாக்கும் அரசியல் கொள்கைகளே உங்களிடம் உள்ளது. குற்றவாளிகளை பற்றியும் குற்றங்களை பற்றியும் கேள்வி கேட்டால் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கவும் மட்டும் தான் உங்களால் முடியும். தமிழர் அரசியலை மீள முடியாத முட்டு சத்தியில் கொண்டுவந்து நிறுத்தி, மக்களின் அழிவை இளைஞர்களின் உயிரை விற்று பணம் சம்பாதித்ததே, அன்றைய இன்றைய செயற்பாட்டாளர்கள் என்று நீங்கள் அழைக்கும் மாபியாக்களின் சாதனை. அரசியல் என்றால், மக்களின் அழிவை வைத்து நிதி சேகரிப்பதும் வியாபாரம் செய்வதும் என்று புரிந்து வைத்திருப்பவர்களால் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
  24. நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் உங்களால் பதிலளிக்க கூட முடியவில்லை. என்பதால் நீங்களும் இங்கு வகுப்பைடுப்பதை நிறுத்துவீர்களா? உங்களிடமும் வெறும் உசுபேற்றலை தவிர எந்த தீர்வும் இல்லை.
  25. வாக்கு போடுவது வாக்காளரது தனிப்பட்ட உரிமை. இந்த கேள்வியை இலங்கை நாட்டில் வாக்களிக்க இருக்கும் வாக்காளரிடம் கேளுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.