Everything posted by island
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
அதி உத்தம ஜனாதிபதி பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார். இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார்.
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
சனாதிபதித் தேர்தலும் தமிழ் பொதுவேட்பாளர் நாட்டியமும்…! சனாதிபதித் தேர்தல் அறிவிக்க முன்னாடியே தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் என தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பாட ஆரம்பித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் தரப்பினர் சந்தித்தவேளையிலேயே, தமிழ் வேட்பாளரை நிறுத்தப்போகிறோம் என ஶ்ரீதரன்- விக்கினேஸ்வரன் தரப்பும், புறக்கணிக்கப்போகிறோம் என முன்னணி தரப்பும், இல்லை யாரேனும் ஒருவரை ஆதரிப்போம் என சுமந்திரன் தரப்பும் கைகலத்ததாக தெரியவந்திருந்தது. விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் - ஶ்ரீதரன் : தவராசா : அரியம் -செல்வம் அடைக்கலனாதன் -தர்மலிங்கம் சித்தார்த்தன் - ஶ்ரீகாந்தா -சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட நிலாந்தன் போன்ற தமிழ்தேசிய பத்தி எழுத்தாளர்களும் வேலைசெய்ய ஆரம்பித்திருந்தனர். அச்சமயம் வெளிநாடொன்றில் தமிழர்களைச் சந்தித்த ஶ்ரீதரன், “சிங்கள ஓட்டுகள் மூன்று நான்காக சிதறப்போகிறது பொதுவேட்பாளரை நிறுத்த இதுதான் சிறந்த சந்தர்ப்பம். நம்மை தேடி அவர்கள் வருவார்கள். எங்கள் கோரிக்கையை முன்வைத்து அதை ஏற்பவர்களை ஆதரிப்போம், இரு வெளி நாட்டு தூதர்கள் முன்னிலையில் கையெழுத்து வாங்குவோம்” என அவரைப் பொறுத்தவரையிலான தமிழருக்கு மிகவும் உகந்த - எதிர்கால தந்திரோபாய நகர்வை விளக்கி உரையாற்றியிருந்தார். சனாதிபதித் தேர்தல் வேண்டாம்; ஆனால் பொதுவேட்பாளரை தெரிவு செய்வோம் என இன்னொரு தலைவர் விக்கினேஸ்வரன் அறிக்கை விட்டார். கூடவே சுமந்திரன் மூளையால் யோசித்து முடிவெடுப்பவர், நான் அப்படியல்ல என்று சுயதம்பட்டம்வேறு அடித்திருந்தார். புறக்கணிக்கும் முன்னணியை தவிர்த்து கவனியுங்கள், இதில் பொதுவேட்பாளர் தேவை - அதுதான் சரியான தீர்வு என ஈடுபாட்டுடன் களமிறங்கிய ஶ்ரீதரன்- சித்தார்த்தன்- செல்வம்- விக்கி என அனைவரும் தீவிர தமிழ்தேசிய அரசியல்வாதிகள். பொதுவேட்பாளரே ஒரே திர்வு- இதோ மக்கள் தீர்மானிக்கப்போகிறார்கள் என எழுதித் தள்ளியவர் தமிழ்தேசிய பத்தியாளர் நிலாந்தன். இப்போது என்னவாகிற்று? - மெல்ல மெல்ல பொதுவேட்பாளருக்கான தெரிவு விமர்சிக்கப்பட, ஒருசில கிழமைகள் முன்பு பொதுவேட்பாளர்தான் தேவை என மக்களிடம் உணர்ச்சிகர உரையாற்றிய ஶ்ரீதரன் இருக்கும் இடம் தெரியாமல் சைலெண்ட் மோட்க்கு போய்விட்டார். முன்னால் நின்று நடத்திக்காட்டுவதுதானே தலைவருக்கு அழகு? ஒருமாதம் கூட தாக்குப்பிடிக்கமுடியாத தந்திரோபாயங்களை மக்களிடம் முன்வைக்க வெட்கமாக இல்லை? -பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் இழுபறியில் ஶ்ரீகாந்தா பக்கம் பொறுப்பை தட்டிவிட்டு விக்கினேஸ்வரன் நழுவிக்கொண்டார். தமிழ்தேசிய godfather. - இறுதியில் பொதுவேட்பாளராக எஞ்சியிருப்பது தவராசாவும் அரியநேந்திரனும் தானாம். அதிலும் அரியம் தான் தெரிவு என்கிறார்கள். இவர்கள் இருவரும் தமிழரசு மத்திய குழுவைச் சார்ந்தவர்கள். ஶ்ரீதரன் அபினானிகள். தமிழரசுக் கட்சி ஒரு முடிவு எடுத்திருக்காத நிலையில் இவர்கள் கையைத் தூக்கியதற்காக உருப்படியான தமிழரசுத் தலைவர் கட்சியை விட்டு விலத்தவேண்டும். ஆனால் நடக்காது. -பெண் வேட்பாளர் தான் வேண்டுமென பத்மினி சிதம்பரநாதன் முதற்கொண்டு பலரையும் முயற்சித்து பலனில்லை. - பொதுவேட்பாளர் ஐடியாவை ஆரம்பித்துவைத்த ஶ்ரீதரனோ விக்கினேஸ்வரனோ இதில் தாமே முன்வந்து தேர்தலை எதிர்கொண்டிருக்கவேண்டும். இருவரும் எஸ்கேப். இனித் தெரிவாகுபவர்கள் வேலைக்காகமாட்டார்கள் என செல்வமும் சித்தார்த்தனும் விலகிக்கொள்வார்கள். -பொதுவேட்பாளராக நியமனம்பெறுபவர் ஒரு சில ஆயிரம் ஓட்டுகளை, கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் வாங்கியதைப் போல் வாங்கி சந்தி சிரிப்பார்கள். இவர்கள் தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தருவார்களென மக்கள் காத்திருக்கவேண்டுமா? இவர்கள் தான் எம் இனத்தின் காவலர்கள்- எதிர்கால தூண்கள்-, அரசியல் சாணக்கியர்கள் என இளம் அரசியல்வாதிகள் பின்பற்றவேண்டுமா? —— மன்னாரிலோ எங்கேயோ நடந்த சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கூட்டமொன்றில் சுமந்திரனின் பேசிய பேச்சு முக்கியமானது. 1940 களில் இருந்து தமிழர்களின் தீர்க்கமற்ற / எதிர்காலத்தை நோக்கியதற்ற ஆனால் கடந்த காலங்களில் தேங்கி நின்று அரசியல் செய்த- செய்யும் வரலாற்றை படிப்படியாக விளக்கியிருப்ப்பார். அதன்வழியிலான அடுத்த நகர்வாகத்தான் இந்த பொதுவேட்பாளர் விடயமும் என்று முடித்திருப்பார். சுமந்திரனோடு பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இருக்கும் அரசியல்வாதிகளில் உண்மையை அரசியல் பூச்சுகள் இல்லாமல் செவிட்டில் அறைந்து சொல்லும் திறமை இங்கு வேறு எவருக்கும் இல்லை. Day 1 இல் இருந்தே பொதுவேட்பாளர் விடயத்தை முழுதாக கடுமையாக எதிர்த்துவந்தது சுமந்திரன் மட்டும்தான். இருக்கலாம், விக்கி சொன்னதுபோல இப்போதிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகளில் மூளையை பாவித்து முடிவெடுக்கும் ஒருவர் சுமந்திரனாக இருக்கலாம். தேசியத்தின் பெயரில் - போர்வையில் தங்கள் இயலாமைகளையும் குறைகளையும் மறைத்து, மக்களை பேய்க்காட்டாமல், மூளையை பாவித்து அரசியல் செய்ய இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். த்தூ..! வெட்கங்கெட்ட தமிழரசியல். நன்றி முகநூல் பதிவு
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
பொது வேட்பாளருக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுகிறார கள் போல இருக்கு. 😂
- தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள் தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது. தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம். ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும். இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட) ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு கேட்பது ஒன்றே ஜதார்தத பூர்வமானது. எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும் அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை. இப்போது இதை செய்ய தவறினால், முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
உண்மையில் சிறப்பான கருத்து இது. ஆனால், ஈழத்தமிழரின் வரலாற்றில் உரிய நேரத்தில் பெறக்கூடியதை பெற முயற்சிக்காமல் வெற்று வீராப்புடன் தவறான கோலங்களை போட்டு காலத்தை கடத்தி பெறக்கூடியதை இழந்த பின் புலம்புவது ஈழத்தமிழரின் வாடிக்கை. சமஸ்டியை கண்டி சிங்களவர்கள் வலியுறுத்திய போது அதை நிராகரித்து காலங்கடத்தி, பின்னர் காலங்கடந்த பின் சமஸ்டி கட்சி( தமிழரசுக்கட்சி) ஆரம்பித்து சமஸ்டி கேட்டதை போல அந்த நிலையே ஆயுதப்போரளிகள் காலத்திலும் தொடர்ந்தது.
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
இந்த உலகத்தில் வாழும் அனைவருமே அவரவர் கதாநாயகிகளுடன் வழிவது இயற்கை தானே! நீங்களும் நானும் கூட இதற்கு விதிவிலக்கல்லவே! கதாநாயகியுடன் வழியாதவன் எல்லாம் ஒரு மனிசனா?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஐரோப்பாவில் எந்த மன்னர் கால வரலாற்றை எழுதும் போதும் அவர்களின் எதிர்மறை அம்சங்களை தவறுகளை மறைக்காமல் எழுதியே உள்ளார்கள். ஏனென்றால், அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு தத்தமது சமூகங்களை முன்னேற்றிய அவர்களுக்கு இத்தகைய சாகஸ கதையாடல்களில் தங்கி இருக்க வேண்டுய அவசியமில்லை. காலத்துக்கேற்ப தம்மை தகவமைத்து கொள்ளாத பத்தாம்பசலி இனங்களுக்கே தாழ்வு மனப்பான்மையை போக்க இவ்வாறான சாகாச கதையாடல்கள் புராணங்களில் தங்கி இருக்க வேண்டிய தேவை உள்ளது.
-
ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் ; சிறிதரன்
அறகலய மக்கள் போராட்ட குழு வேட்பாளருக்கு தமது வாக்கை அளிப்பதும் சரியான தேர்வாக அமையலாம்.
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
சாக்கடையை சாக்கடை என்று தான் கூற முடியும். வேறு பெயர் கொண்டு அழைக்க முடியாது. சாக்கடையை புனிதமானது என்று நாலு முட்டாள்கள் தூக்கி கொண்டாடுவது பற்றி எனக்கு அக்கறை இல்லை.
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
காசி சாக்கடை தண்ணீரை யாழ்பாணம் கொண்டு வந்ததே தவறு. அதை வேறு எமது மண்ணில் உள்ள தண்ணீருடன் கலந்தது அடுத்த தவறு.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வைகோ, வை.கோபாலசாமியாக எம்பியாக அதாவது பாராளுமன்ற மேலவை திமுக உறுப்பினராக இருந்த போது தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்த நன்மைகள் எண்ணிலடங்காதது. குறிப்பாக 1981 ல் இருந்து அவரின் ஈழ பங்களிப்பு ஆரம்பமாகி விட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் அடாவடிகளை தமிழ் நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் அவரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அத்துடன் ஜோர்ச் பெர்ணாண்டஸ் போன்ற வட இந்திய தலைவர்களுக்கு ஈழப்போராட்ட நியாயங்களை எடுத்து கூறி அவர்களை எமது பக்கத்திற்கு இழுக்க அவர்மேற்கொண்ட பங்கும் குறிப்பிடத்தக்கது. ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தனது வாழ் தாள் முழுவதும் ஈழ போராட்ட அனுதாபியாக இருந்ததற்கு அடித்தளம் இட்டவர்களில் முதன்மையானவர் வை. கோபாலசாமி ஆகும். அவர் இந்திய பாது காப்பு அமைச்சராக இருந்த போது எமக்கு சில சலுகைகளை செய்ததாக கேள்விப்பட்டேன். ஆனால், வை கோவின் மாபெரும் பலவீனம் எளிதில் உண்ர்சிவசப்பட்டு கோபப்படும் அவரின் மனப்பாங்கு. அந்த கோபத்தில் குறுகிய நொக்கிலான தீர்மானங்களை மேற்கொள்ளுதல். ஒரு அரசியல் தலைவரின் மீது உள்ள கோபத்தினால் அவரை வஞ்சம் தீர்க்க அவரின் எதிரளியுடன் கொள்கைக்கு முரணான கூட்டணி அமைக்க அவரது மனநிலை தூண்டியது. பல தொலைக்காட்சி பேட்டிகளில் ஒலிவாங்கியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார். இவை எல்லாம் சேர்ந்து அவரின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கியது.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
தங்கள் நிலைப்பாட்டில் முழுமையாக உடன்படவில்லையாயினும் உங்கள் விருப்பத்தின் நியாயத்தை புரிந்து கொள்கிறேன். இவ்வாறான விருப்பத்திலேயே அனைத்து தமிழ் மக்களும் இருந்தனர். அதனை துஷபிரயோகம் செய்தவர்கள் மக்கள் நம்பிக்கை வைத்த புலம் பெயர் பொறுப்பாளர்களே. இன்று அவர்களில் பலரின் நடவடிக்கைகளை பார்ககும் போது இவர்களா அப்பழுக்கற்றவர்கள் என்று ஒரு காலத்தில் நம்பியிருந்தோம் என்றே விரக்தியே மிஞ்சுகிறது. உங்கள் விருப்பம் தவறல்ல. ஆனால் நடைமுறையில் அப்படியல்ல என்ற விரக்தியே எனது கருத்தின் சாராம்சம். புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக செயற்பட்டு மத்திய அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து தடை கொண்டுவரை ஓயமாட்டேன் என்று தடை வாங்கி தந்தவர் ஈழத்தாய் என்று தமிழ் தேசியவாதிகளால் கொண்டாடப்படும் ஜெயலலிதாவே ஆகும்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
விடுதலைப்புலிகள் இயக்கமானது அவர்களது அரசியல் தவறுகளுக்கு அப்பால், போராட்டத்துக்கு கோட்பாட்டு ரீதியில் நேர்மையாக போராடிய இயக்கம். அதில் இருந்த உயர்மட்ட அரசியல் தலைவர்கள் உயிரோடு இருந்திருந்தாலாவது தடை நீக்கத்தை பயன்படுத்தி பழைய தவறுகளை களைந்து விடுதலைப்புலிகளை மீள அரசியல் அமைப்பாக உருவாக்கி பழைய அனுபவங்களுடனும் புதிய தந்திரோபாயங்களுடன் கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படியான நேர்மையான அரசியல் போராளித் தலைவர்கள் எவரும் இன்று இல்லை. அதுவே வெளி நாடுகளில் அமைப்பில் இருந்த சுயநலமிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. வெளிநாடுகளில் புலிகளை தமது சுய லாபத்துக்கு பயன்படுத்துயவர்களே இன்று எஞ்சி உள்ள நிலையில் தடை நீக்கம் எதிர்மறை விளைவுகளையே ஈழத்தமிழருக்கு செய்யும். தவறானவர்கள் கையில் இயக்கத்தின் பெயர் செல்ல வழி வகுக்கும். எஞ்சியுள்ள மாபியாக்கள் எப்படியும் அந்த இயக்கத்தின் பெயரை கைப்பற்றி அதனைப் பயன்படுத்தி தமது கொள்ளையை தொடர முயல்வார்கள் என்பதற்கு துவாரகா விடயம் உட்பட மேலும் பல சம்பவங்கள் சாட்சியம் ஆகவே தடை தொடர்வதே ஈழத்தமிழருக்கு நன்மை பயக்கும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அர்சுனா ராமநாதன் என்பதால் அந்த டொக்ரருக்கு சேர் பொன் ராமநாதன் ஞாபகம் வந்திருக்கும். அதனால் அப்படி கூறினாரோ! 😂 மற்றபடி சேர் என்று அரச அலுவலகங்களில் தமது மேல்நிலை அதிகாரிகளை அழைப்பது இலங்கையில் மிக நீண்ட கால நடைமுறை. தமிழ் நாட்டை பார்த்து புதிதாக வந்ததல்ல. கொழும்பு விமான நிலையத்தில் பயணிகளுடன் பேசும் விமான நிலைய ஊழியர்களே சேர் என று அழைத்து உரையாடுவதை பார்ததிருக்கிறேன்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
பையன் தவறான தகவல். டாஸ்மார்க் மது உற்பத்தி நிறுவனம் திறந்தது எம். ஜி. ஆர் ஆட்சி காலத்தில். அதனை தனியாரின் சில்லறை விற்பனை நிலையங்களூடாக டாஸ்மார்க் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மதுவை விற்க ஏற்பாடு செய்தார். பின்னர் அரசு சார்பில் டாஸ்மார்க் கடைகளை திறந்தது ஜெயலலிதா அம்மையார் காலத்தில். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவற்றை மூடாமல் தொடர்சியாக கொண்டு நடத்தினார். TASMAC (Tamil Nadu State Marketing Corporation) began its operations in 1983. It was established by the Government of Tamil Nadu to regulate and manage the distribution and sale of alcohol in the state.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில், இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர். தனவு வாழ் நாள் முழுவதும் தமிழ் தேசியத்தை எதிர்தத காமராஜரை பெருந் தலைவர் என சீமான் கூறுவது தனது சுயநல அரசியலுக்காகவே. தமிழ் நாட்டின் வரலாற்றை சரியாக படித்தால் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களுமே தமிழ் நாட்டுக்கு பல சிறந்த திட்டங்களையும் பல நன்மைகளையும் செய்தே உள்ளனர்.
-
யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்
தமிழர நாட்டில் அனைத்து தமிழர்களும. உலிய கல்வியை கற்றால் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ் நாட்டு அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராக இந்த சிவஞான சங்கிகள் தான் உயர் நீதிமன்றத்தில் ஆகமங்களை சாட்டாக வைத்து தடை வாங்கின. ஆலயங்களில் பிரதான வழிபாட்டு மொழியாக்கவும் அங்கு தடையாக இருந்த இந்த சிவஞான சங்கிகள் இலங்கையிலும் தமது ஆர் எஸ் மத வெறியை பரப்ப தமது யாழ்பாண ஏஜெண்டுகள் மூலம். வந்து கூறும் மாய்மாலங்களே இவை.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தமது தவறுகளை மறைப்பதற்கு துரோகிகள் மீது முழுப்பழியையும் சுமத்தி தப்பிக்கலாம் என்ற தந்திரத்தை பின்புவந்த ஆயுத போராளிகளுக்கும் உங்களுக்கும் சொல்லி கொடுத்த குருவே இந்த அமிர்தலிங்கம் தான். அமிர்தலிங்கம் இறந்தாலும் அவர், தான் சொல்லிக் கொடுத்த கருத்தியல் இன்றும் தலைமுறை கடந்து வாழ்வதை நினைத்தும் குருவை மிஞ்சிய சீடர்களை நினைத்தும் அகமகிழலாம். 😂
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
அமிர்தலிங்கம் தோல்வியடைந்த தலைவர் தான். ஆனால் இவரை கொலை செய்தவர்களும் பாரிய உயிர் அழிவுகளை மட்டும் தமிழருக்கு பெற்று கொடுத்துவிட்டு தோல்வியடைந்தவர்களாக சென்றவர்களே. அமிர்தலிங்கத்தை நினைவு கூரும் வேளையில் அவரின் மனைவி கையால் தேனீர் வாங்கி அருந்தி விட்டு அவரை கொலைசெய்த பாதகர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
இந்த தோழர் பாலன் உயிரோடு இருந்தும் தமிழீழம் கிடைக்கவில்லை. எனவே இவரும் இருந்தும் தமிழருக்கு எந்த பிரயோசனமும் இல்லை. இவர் செத்தாலும் தமிழருக்கு இழப்பு இல்லை. 😂😂
-
சீமான் கைது எப்போது?
ஒரு திரைப்படத்தில் வடிவேலு நடித்த நிகைச்சுவை காட்சி வரும். ரீ கடையில் உட்கார்நிருக்கும் ஒருவரிடம் ஒரு சின்ன பையன் வந்து அந்த நபரின் அப்பன் ஆத்தா எல்லோரையும் படு மோசமாக வாய்ககு வந்தபடி ஆபாசமாக திட்டுவான். அந்த நபர் அதை கணக்கெடுக்க மாட்டார். அதை கண்ட வடிவேலு என்னப்பா இப்படி சகட்டு மேனிக்கு குடும்பத்தை இழுத்து ஆபாசமாக திட்டுகிறானே சும்மா இருக்கிறீர்களே என்று கேட்டவாறு அந்த பையனை துரத்தி செல்ல அவன் அப்படியே போக்கு காட்டி வடிவேலுவை அழைத்து சென்று கிட்னியை எடுக்கும் கூட்டத்திடம் மாட்டிவிட்டு அதற்கான கூலியை அந்த கும்பலிடம் வாங்கி கொண்டு சென்றுவிடுவான். பாவம் துரத்தி சென்ற வடிவேலு. இப்போது அந்த சின்ன பையன் கதா பாத்திரம் தான் சீமான். மாபியா கூட்டதின் அடியாளாக செயற்படும் சின்ன பையனை கண்ணுக்காம விடுவது தான் புத்திசாலித்தனம்.
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
பிரித்தானியாவில் தனது தொகுதியில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வார் தானே. ஆளும் கட்சியாக இருப்பதனால் அதை செய்ய முடியும் தானே.
-
கல்கி 2898 AD : விமர்சனம்!
- சம்பந்தர் காலமானார்
அவ்வளவு தான் விசுகு இனி உங்களுடனும் பேசமாட்டார் உறவே. 😂 - சம்பந்தர் காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.