Everything posted by island
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மீண்டும் முதல் நீங்களே படத்துடன் கூறிய விடயத்துக்கான எனது கேள்விக்கு பதில் கூறாமலே முன்னரைப் போல் Skip பண்ணி அடுத்த விடயத்திற்குத் தாவியுள்ளீர்கள்.😂 இருந்தாலும் பதில் கூறுகிறேன் தேர்தல் அரசியல்வாதிகள் கொள்கைகளில் சறுக்குவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நடப்பது தான். அந்த வகையில் கருணாநிதியும் தேர்தல் அரசியல்வாதி என்ற ரீதியில் பல வண்ட வாளங்களை கொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன். கருணாநிதி என்ற தேர்தல் அரசியல்வாதியின் அடுத்த Updated version ஆன சீமானும் மிகக்குறுகிய காலத்திலேயே பல வண்டவாளங்கள் கொண்ட சுயநல அரசியல்வாதிதான். (Updated Version எப்போதும் முன்னதை விட வீரியமாக இருக்கும் என்பதைக் கவனதில் கொள்க)
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதை தான் கோசானும் கூறினார் சீமானும் மற்றைய தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அந்த ஊறிய மட்டைகளில் சீமான் புனிதமானவர் என்று உங்களைப் போன்றவர்கள கூறுவது தவறு என்று கூறுகிறோம். தமிழ் நாட்டில் உள்ள மற்றய அரசியல்க் கட்சிகளில் உள்ளவர்கள் போலவே சீமானும் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான்.
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
@goshan_che 1921 ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வயதுக்கு உட்பட்ட விதவைப் பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தார்கள் என்ற செய்தி வாசித்தேன். 25 வயதுக்கு குறைந்த விதவைகள் தொகை பல லட்சமாம். இது தொடர்பாக அறிந்தீர்களா?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஊழலை எதிர்ப்பதாக முழங்கி தம்பிகளின் கைதட்டுக்களைப் பெற்றுவிட்டு பின்னர் ஊழல் ராணி ஊழலுக்காக சிறை சென்று வந்த சசிகலாவை சந்தித்து சித்தப்பா எடப்பாடியுடன் தூது போய் அந்த ஊழல் ராணி சசிகலாவின் அரசியல் வாழ்ககைக்கு உதவ முன்வந்ததுடன் அந்த ஊழல் ராணியுடன் குழைந்து குழைந்து பேசினார் இந்த சீமான். ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகுத் தோலை உரிப்பேன் என்றவர் இந்த தேர்தலில் தமிழே வாசிக்க தெரியாதவருக்கு சீட்டு கொடுத்தார். பல வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றுகிறார்கள். தடுப்பூசிகள் காப்பிரேட் வியாபாரம் என்று கூறி தடுப்பூசிகளுக்கு எதிராக பேசிவிட்டு தனது மகன் மாவீரனுக்கு அத்தனை தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு அது தொடர்பாக சேய்தியாளர் கேள்விக்கு, எனது தம்பிகள் இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று கூறுவதாக உருட்டுனார். இப்படி அண்ணனின் உருட்டுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதி தனிப்பட முறையில் யாராவது சாமி கும்பிடுவதை தடுத்தாரா, திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையா என்ற எமது விவாதத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்துக்கு தாவுவது நல்லது என்று நினைக்கிறேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
குமாரசாமி, கருணாநிதி சாமி கும்பிடவேண்டாம் என்று எவரையும் தனிப்பட்ட முறையில் தடுத்ததாக எந்த தகவலும் இல்லை. அப்படி தனிப்பட முறையில் யாரையும் தடுத்த ஆதாரம் இருந்தால் இணைக்கவும். தனிப்பட்ட முறையில் யாரையும் தடுக்காத போது குடும்ப உறுப்பினரைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் தொடர்பான திமுக வின் கொள்கை அது உருவானபோது அண்ணாவினால் முன் மொழியப்பட்ட “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதாகும். திமுகவில் கடவுள் மறுப்பாளர களும. உள்ளார கள், தினமும. கடவுளை வழிபடும் கடவுள் நம்பிக்கையாளரும் உள்ளார்கள். இது வெளிப்படையான உண்மை. இதை அறியவும் சாதாரண பத்திரிகை வாசிக்கும் சாதாரண மனிதனாக இருந்தால் போதும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் கூறியது அன்றாடம் நடை பெற்ற உண்மைத்தகவல்கள் பற்றியது. அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை தெரிந்து கொள்ள அன்றாட பத்திரிகை செய்திகளை வாசிப்பது போதும். அரசியலைக் கரைத்து குடிக்க தேவையில்லை.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணன் பேசும் போது, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார். வேண்டுமென்றால் அந்தக் காணொளியைக்கூட இங்கு இணைக்கலாம். தற்போதைய 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றிய காணொளியும் பார்த்தேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் கூறிய விடயங்களை கூற தமிழக அரசியலை கரைச்சுக் குடிக்கவோ அநாதேய உதவாக்கரைகளின் யூருயுப் உளரல்களை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அன்றாடம் பத்திரிகைச் செய்திகளை வாசித்தறியும் சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். நான் எஊறிய எந்த தகவலும் பொய்யானவை அல்ல.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதியை விடுங்கள் சீமான் என்ற சுயநல அரசியல்வாதிக்காக நீங்கள் வன்மத்துடன் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் அன்று 1982 ல் மிகத் தீவிரமாக பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் ஒப்படைக்க விடாமல் காப்பாற்ற தீவிரமாக போராடியதை உண்மையான நேர்மையான ஈழத்தமிழர்கள் மறக்க முடியாது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பையனுக்கு சொல்லவில்லை. சீமானும் நாம் தமிழர் கும்பலும் பரப்பும் பொய்த்தகவல்களை நம்புபவர்களும் அவை பொய்கள் என்பதை தெரிந்தும் பொய்களை பரப்புபவர்களும் உள்ளார்கள் என்பதால், ஆதாரபூர்வமான வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என று நினைக்கிறேன். நான் கூறிய தகவல்களை இங்குள்ளவர்கள. கள்ள மௌனத்துடன் கடந்து செல்லலாமேயொழிய அதை எவராலும் மறுக்க முடியாது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1982 ல் அந்த புழுவும் சேர்ந்து தான் பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் கையளிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது. 😂
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதி வரமுடியாமல் போனது 2011 ல் மட்டுமல்ல 1989/1990 ல் ஆட்சியில் இருந்த போது அந்த செல்வாக்கில் புலிகளைத் தமிழகத்தில் தாராளமாக நடமாட விட்ட குற்றத்திற்காக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் (ராஜீவ் கொலையின் பின்னர்) 1991 ல்நடந்த தேர்தலில் கருணாநிதியுடன் இன்னொருவரைத் தவிர அனைவரையும் படுதோல்வியுறச்செய்து ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியதாக கருதிக் கொண்டு கருணாநிதிக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் தண்டனை வழங்கினர். கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் படு மோசமான தோல்வி அது தான். அதற்கு காரணம் ராஜீவ் கொலை. அதனுடன் ஒப்பிட்டால் 2011 ல் பெற்ற தோல்வி சாதாரணமானது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? நீங்கள் உங்கள் நாட்டுப் பிரச்சனைக்கு போராடியது உங்கள் பிரச்சனை. அடுத்த நாட்டவரான அவர்கள் உதவினார்கள். தடா பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு மத்தியிலும் போராடினார்கள். உங்களுக்கு உதவ வந்ததால் அவர்களில் சிலரும் ராஜீவ் கொலை வழக்கில் தேவையற்று சிக்கினார்கள். அந்த நன்றியை இவ்வளவு எளிதாக உங்கள் சீமான் நாம் தமிழர் என்ற சுய நல கள்ளக் கும்பலுக்காக மறப்பது அழகல்ல. நீங்கள் கூறிய இந்த திராவிட கும்பல் அன்று தடுத்திரா விட்டால் 1982 இலேயே இந்திய அரசு பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைத்தருக்கும். உங்கள் சீமானுக்கு அரசியலுக்கு கண்டென்டே கிடைத்திருக்காது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதெப்படி தள்ளி விட முடியும். நீங்கள் ஆயிரம் தரவுகளை ஆதாரபூர்வமாக திரட்டினாலும் ஒரு எளிய தமிழ்பிள்ளையில் Fake முகநூல் பதிவுக்கு அது ஈடாகுமா? 😂
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது தவறான தகவல். நீங்கள் கூறிய முவரில் வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று தன்மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்ட நிலையிலும் துணிச்சலாக தெரிவித்தவர் வைகோ. (அதற்காக அவரது அரசியலை நான் ஆதரிக்கவில்லை) புலிகளை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறிய பின்னரும் துணிச்சலாக குறித்த திகதியில் நாடு திரும்பி கைதானவர் வைகோ. அதற்கு அடுத்து திருமாவளவன். அதற்கடுத்ததாகவே ராம்தாஸ் வருவார். ராம் தாஸை விட சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷன்ன் என்று பல திராவிட இயக்கத்தினர் புலிகளுக்காக சிறை சென்றவர்கள். எல்லோரையும் தவிர்ததுவிட்டு ராம் தாஸை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஏன்?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மருத்துவத்தில் புலமை பெற்ற நீங்கள் வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் என்று பல விடயங்களில் ஆழ்ந்து சிந் திக்கும் படியான கருத்துக்களை வாசகர்களுக்கு புரியும்படி உங்கள் அறிவுத்தேடலைக் காட்டுவதுடன் அதுவே யாழ் இணையத்தின் பலமும. கூட. யாழ் இணையம் வெறும் சமூக ஊடக குப்பைகளை இணைக்கும் குப்பைத் தொட்டியாக மாறுவதை தடுக்கும் உங்களைப் போன்ற கருத்தாளர்களின் பங்களிப்புக்கு நன்றிகள்.
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன, உண்மைகளும் இருந்தன. ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த பல நூல்களையும் அந்த கால பத்திரிகை செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உறவே, இப்படியே போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல் அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து சில அறிவுறுத்தல்களை உரிமையான கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து. கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சும்மா இருந்து இழுபட்ட திரி @goshan_che வந்ததும் அதிருது. விவசாயி சின்னத்தை விட கோஷானுக்கு அதிக வலு உள்ளது. 💪 பேசாமல் சீமான் கோஷானை தனது கட்சியில் சேர்ததால் கொஞ்சமாவது தேறலாம் போல இருக்கு.
-
இலங்கையில் ஏழுமலையான் கோவில் !
தமது பிரதேசத்தின் உற்பத்தி வளர்சசி, வர்ததக வளர்சசி அதன்மூலமான வேலைவாய்ப்பு மக்களின் வாழ்ககைத்தர உயர்வு ஆகியவற்றை விட இவ்வாறான கோவில்களுக்கு வாரியிறைப்பதில் ஈழத்தமிழர்கள் (புலம்பெயர் தமிழர்கள் உட்பட) அதிக அக்கறையுடன் இருப்பதை அவதானித்த ஏழுமலையான் இந்த ஏமாளித்தனம் உடைய மக்களே தனது வாடிக்கையாளர்கள் என்பதை துல்லியமாக சந்தைஆய்வு (marketings analysis) செய்து இலங்கைக்கு எழுந்தருளி வருகிறார் போலும்.
-
கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார
மகிந்தவும் கோட்டபாயவும் அவரின் கும்பலும் முழுக்க முழுக்க கடும் போக்கு இனவாதிகளாகவே பதவிக்கு வரமுதல் இருந்தே இருந்துள்ளார்கள் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனது நேரடியான பதிலுக்கு நேர்மையான பதிலை வழங்க முடியாமல் நீங்கள் தடுமாறுவதை ரசித்தேன். 😂 உலகம் முழுவதும் உள்ள எல்லா இனங்களிலும் உள்ள இனவாதிகள் தனிப்பட்ட விடயங்களை அரசியலாக்குவதும் விவாதங்களில் பொய்யுரைப்பதும் வழமையானது தான். உங்களைக் கஷடப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனக்கு முதலில் நீங்கள் கொடுத்த பதில் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு (அதாவது இது தனிப்பட்ட குடும்ப விவகாரம் இதற்குள் அரசியலை ஏன் இழுக்கின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு) நாமேதோ நாகரீகமற்றவர்கள் மனித நேயமற்றவர்கள் என்ற பொருள்பட எழுதிய கருத்துக்கு வழங்கப்பட்ட பதில் இப்படி நீண்டுவிட்டது என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி நான் எழுதியதாக நீங்கள் கூறியது உண்மைக்கு புறம்பானது. அந்த கருத்து எங்கே உள்ளது என்று இந்தத் திரியில் காட்டுமாறு மட்டுமே நான் கேட்கிறேன். முடிந்தால் அதை மட்டும் காட்டுங்கள். இல்லை என்றால் நான் அப்படி எழுதியதாக நீங்கள் கூறியது பொய் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.