Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. @goshan_che சிகிரியாவுக்கு அண்மையில் உள்ள village tour செய்தீர்களா? பாரம்பரிய முறையில் சமைத்த கிராமிய உணவுவகைகள் பரிமாறப்படும் காணொளி பார்ததேன்.
  2. சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது உணவில் பூசணிக்காய்கறி பரிமாறப்பட்டதை மறைத்துவிடும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட மக்களைப் பழக்கியிருக்கும் தமிழ் தேசிய ஊடகங்களோ முழுப்பூசணிகாயையே சோற்றினுள் மறைத்துவிடும். ஆனால், சர்வதேச அபிப்பிராயம் எமது மக்களின் வருங்கால சந்திதியின் அரசியல் தீர்வுக்கு அவர்களில் இருப்பை இலங்கைத்தீவில் காப்பாறவும் மிக முக்கியம். அதனால் அதனை உருவாக்கும் சர்வதேச ஊடகங்களும் பெறுமதி வாய்ந்ததே. புலம் பெயர் தேசியம் பேசுவதாக கூறி பொழுது போக்கும் கும்பலுக்கு அது முக்கியமில்லை. இப்படியே இன்னும் 20 - 30 வருடங்களுக்கு இப்படியே பொறுப்புணர்சசியற்று பொழுது போக்கிவிட்டு அந்த கும்பல் ஜாலியாக செத்து போய்விடுவர். இவர்களில் 10 சதத்துக்கு பெறுமதி அற்ற அரசியலால் பாதிக்கப் படப்போவது தாயகத்தில் வாழப்போகும் மக்களே.
  3. பரிஸ் ரெலிகிராப்ஃ கூறியதை நான் கூறியதாக கூறும் அளவுக்கு புரளியை கிழப்பி மற்றவர்களை நம்ப வைக்கலாம் என்று நம்பும் அளவுக்கு பேதைத்தனமாக உள்ளவர்களுக்கும் தான் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று நம்பி பாலை குடிக்கும் பூனைகளுக்கும் சாதாரண அறிவுள்ள மனிதர்களால் கூட புரிந்து கொள்ளக் கூடிய இந்த சிறிய விடயத்தை கூட புரிய வைக்க முடியாது என்பதும் அனைவருக்கும் புரியும்.
  4. நீங்க என்ன சொல்ல வாறீங்க பையன். சர்வதேச ஊடகங்கள் புலிகளை பற்றியும் அதன் தலைவர்களை பற்றியும் கிழி கிழி என்று கிழிச்சாலும் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை நம்ம ஊரு குப்பனும் சுப்பனும் குடித்து விடு ஏதோ உளறினால் அவர்களுக்கு சங்குதான். நல்ல தெளிவான அரசியல் கொள்கை. இந்த கொள்கையை வைத்து தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று வேற சொல்லுறீங்க. தனிநாட்டை விடுங்கள். தமிழருக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை உருவாக்க வேண்டுமென்றாலே எமக்கு சாதகமான சர்வதேச அபிப்பிராயம் முக்கியமாக மேற்கு நாடுகளில் தேவை. அதைக் கெடுக்கும் அதேவேளை நீங்கள் விரும்பும் உங்கள் தலைவரை சர்வதேச ஊடகங்கள் எதிர்மறையாக எழுத வைத்த லாசப்பல் லூசுப் படையணியை உங்களால் எப்படி ஆதரிக்க முடிகிறது என்று வியப்பாக உள்ளது.
  5. நீங்கள் கூறிய Paris telegraph தளத்தில், Woman was attacked by a group of LTTE (terrorist) Mobs in Paris என்ற தலைப்புடன் இந்த காணொளி உள்ளது. இப்போது தெரிகிறதா யார் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது என்று. சொந்த செலவில் சூனியம் வைப்பது என்று இதை தான் கூறுவர். இதை செய்த முட்டாள்களுக்கு பாராட்டுப்பத்திரம் வேறு. அடிமுட்டாள்கள் மட்டுமே இந்த செயலையும் காணொளி எடுத்து பதிவிட்ட முட்டாள்களையும் ஆதரிக்க முடியும்.
  6. மிகவும் பண்பாக விமர்சித்தவரை முன்பு இதே பாரிசில் கொலையே செய்துள்ளோம். அநாரிகமாக வசைபாடிய இந்த பெண்ணுக்கு இதை கூட செய்யக்கூடாதா என்று கேட்பதில் நியாயம் உண்டு தானே!
  7. இவ்வாறு வெளிநாட்டவர்களுக்கும் உள்நாட்டவர்களுக்கும் கட்டண முறையில் இருக்கும் மிகவும் பாரிய வேறுபாடு சரியானதா?
  8. இரண்டு மூன்று வீடியோவை இணைத்தாவது 11 ஆக்கிவிட்டா போச்சு. 😂 யாழ்பாணக் கூழ்.
  9. @goshan_che இந்த விவாதத்தில் எதை நிரூபிக்க சிலர் முற்படுகின்றர்கள் என்றோ எதனால் விவாதம் நீண்டு செல்கிறது என்பதோ புரியவில்லை. ஆனால், ஏழையோ பணம்படைத்தவர்களோ இனம் மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் பணம் தேவை. சமூகப்பார்வையில் மக்கள் என்று பார்ககும் போது தென்னிலங்கை மக்களுகளைப் பொறுத்தவரை நீண்ட காலமாகவே தமது வாழ்க்கையை அனுபவித்து வாழ அவர்களுக்குப் பணம் தேவை. வடபகுதி மக்களை பொறுத்தவரை சேர்தது வைத்து விட்டு சாக அவர்களுக்குப் பணம் தேவை. ஆகவே இரு பகுதி மக்களின் பொருட்கள், சேவைகள் கொள்வனவு, சுற்றுலா போன்ற விடயங்களில் பாரிய வேறுபாட்டை அவதானிக்க முடியும். அதனால் உழைக்கும் பணத்தை வைத்தோ நுகரும் பொருட்களை வைத்தோ அவர்கள் ஏழையோ பணம் படைத்தவர்களோ என்பதை தீர்மானிப்பது கடினம். அது அவரவர் வாழ்ககை விருப்பங்களை பொறுத்தது. ஆனால் இன்றைய நிலையில் வடபகுதி மக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது கண்கூடு.
  10. நடந்ததுண்டு. இந்த பெண்ணை போல கேவலமாக பேசாமல் பண்பாக விமர்சித்த பலருக்கு இவருக்கு நடந்ததை விட மோசமாக பல நடந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவில் தமிழர்வசிக்கும் அனேகமாக எல்லா நாடுகளிலும் 1985 ம் ஆண்டுகளைத் தொடர்ந்த பல ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. நீங்கள் வசிக்கும் நாட்டிலும் நடைபெற்றுள்ளன. அந்த காலத்தில் காணொளிகள எடுக்கப்படுவதும் இல்லை அவை இவ்வாறு பகிரப்படுவதும் இல்லை.
  11. எதிரியை விட நாம் கேவலமானவர்கள் என்பதை நிருபிப்பதில் எம்மவருக்கு எப்போதும் எக்காலத்திலும் வெற்றிதான். அந்த நிருபிப்பில் சந்ததியை இழந்தாலும் எமது அடிப்படை நோக்கத்தை இழந்ததிலும் எமக்கு கவலை இல்லை. வெற்றியை கொண்டாட வேண்டியதுதான். 😂
  12. இணைப்புக்கு நன்றி பாலபத்திரரே. முழுவதும் பார்த்தேன். இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அத்தனையும் ஆரோக்கியமானவையே. எமது இனத்துக்குள் இருக்கும் சமூகப்பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட வேண்டும். ஆனால் இங்கு பேசியவர்களை பார்க்கும் போது கருத்து வேறுபாடுகளின் போது குரலை உயர்ததி கத்துவதும் பணபற்றமுறையில் அங்கும் இங்கும் நடந்து திரிவதும் பார்கக ரசிக்க கூடியதாக இல்லை. புலம் பெயர்ந்து மேற்குநாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்தும் எம்மவர்கள் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றத்தையும் தம்முள் ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அமைதியான முறையில் எதிரில் இருப்பவர்களுக்கு புரியக் கூடிய வகையில் கருத்தாடல்களை செய்திருந்தால் அவர்கள் பேசிய ஆரோக்கியமான விடயங்கள் மக்களை இலகுவில் சென்றடைந்திருக்கும்.
  13. பதிலுக்கு நன்றி கோஷான். நீங்கள் இலங்கையின் பல இடங்களுக்கு ஏற்கனவே சுற்றுலா சென்றிருப்பதால் மேலும் பல தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இது போன்ற பயண வீடியோக்களை இணைத்து உங்கள் பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தை குறைக்கின்றேனோ என்று தயங்கி தயங்கியே இதனை இணைத்தேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளூவீர்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், உங்கள் நேர்மறையான பதில் கண்டு திருப்தியடைந்தேன். நன்றி கோஷான். இலங்கை முழுவதற்குமான பயண தகவல்கள் அடங்கிய பல வீடியோக்கள் இந்த இளம் தம்பதியினரின் யூருயூப் தளத்தில் உள்ளன. நான் அறிந்த வரை இலங்கையில் இயங்கும் யூருயூப் தளங்களில் மிக தரமான தளம் இவருடையது. சுற்றுலா பிரதேசங்களின் தகவல்களை துல்லியமாக முன்பே திரட்டி தேவையற்ற அலட்டல்களை தவிர்தது சிறந்த மொழி நடையில் இவர்கள் தரும் பாணி மிகச் சிறப்பானது.
  14. பொதுவாக சமூக வலைத்தளங்களின் போக்கு என்பது பின்வருமாறு உள்ளது. பரந்துபட்ட அறிவுத்தேடல் உள்ளவர்களை அதை நோக்கி உந்தித் தள்ளும் ஆரம்ப புள்ளியாக செயற்பட்டு அவர்களுக்கு சேவை செய்யும் கருவியாக செயற்படும் அதேவேளை, பொது அறிவுக்கு தன்னைமட்டுமே முழுமையாக நம்பியவர்களை அவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவையும் மங்க வைத்து அடி முட்டாளாக்கிவிடும்.
  15. அப்ப ஒருக்கக அங்க போய் புத்தர் சிலையை புடுங்கி எறிஞ்சிட்டு நெஞ்ச நிமிர்ததி வீரந்த்திருமகனா திரும்பி வாறது தானே. 😂😂😂 திரி திரியா திரிஞ்சு யாழ் இணையத்தை வாசிக்காதவனுக்கு பதிலெழுதி மினக்கெடுவதால் ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை. லண்டனில் இருந்து புறுபுறுப்பது தான் லேற்றஸ் தேசியப் போராட்டமோ. 😂
  16. புத்தர் சிலைக்கும் சம்பந்தருக்கும் என்னப்பா சம்பந்தம்? விடுதலைப்புலிகள் பலத்துடன் இருந்த போதும் திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அவர்களாலும் அதை தடுக்க முடியவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்பாணம் இருந்த போது தான் பலாலியை அண்டிய பல ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின. இனப்பிரச்சனை, அதனால் ஏற்பட்ட யுத்தம், போராட்டத்தை வென்றெடுக்க முடியாத அரசியல் ராஜதந்திர திறமையற்ற கடந்த 70 வருட தமிழ் தலைமைகள், அதனால் ஏற்பட்ட மக்கள் பேரழிவு, அரசியல்ப் பேரழிவு என்று மலைபோல காரணங்கள் இருக்கும் போது ஒரு சில தனி நபர்கள் மீது பழி போட்டு தப்பிக்க நினைப்பது தமது தவறுகளை மறைக்க நினைப்பவர்களின் தந்திரம் அல்லது தனிப்பட்ட காழ்ப்புணர்வு மட்டுமே.
  17. வணக்கம் @goshan_che பயணக்கட்டுரை அருமை. நாட்டின் நிலமைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். சிறந்த மொழி நடையுடன் நாட்டின் ஜதார்தத நிலையை படம் பிடித்து எழுத்தில் தந்தமைக்கு நன்றி. 👍👍 நுவரெலியா, எல்லே போன்ற அழகான இடங்களுக்கு சென்றீர்களா? புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறை அதிகமாக விரும்பி போகும் ரம்மியமான பிரதேசங்கள். இந்த YouTube தளத்தில் இலங்கையின் சுற்றுலாபிரதேசங்களை அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.
  18. இதை பற்றி அறிய வேண்டுமானால் இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று தகவல்கள் அடங்கிய அறிந்து கொள்ளும் நூல்களை நீங்கள் வாசிப்பது அவசியம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வியில் உரிமை மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான அடக்கப்பட்ட மக்களை மேலே தூக்கி விட இட ஒதுக்கீடு அவசியம். இதை உங்கள் தலைவர் சீமான் அடிக்கடி முஷடியை உயர்த்தி மேற்கோள் காட்டும் புரட்சியாளர் அம்கேத்கார் கூட வலியுறுத்தியுள்ளதுடன் இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. இலங்கையில் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும் அவ்வாறே அதை அடிப்படையாகக் கொண்டதே. இதன் மூலம. பின்தங்கிய பிரதேச மாணவர்கள் பலன் பெற்றனர். என்ன பெயரால் அழைத்தாலும் ஒரு மக்கள் கூட்டதின் மீது மேலாதிக்கம் மேற்கொண்டால் அது ஒன்றே தான். இனம் என்று அழைத்தாலென்ன சாதி என்று அழைத்தாலென்ன. சாதிப்பிரச்சனை காலப்போக்கில் அகன்றுவிடும் அதை தூக்கி பிடிக்க வில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இனப்பிரச்சனையும் அப்படியே தானாக போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  19. திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது. பேதமற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவது. அதை நோக்கிய படிக்கட்டுகளை கட்டி எழுப்புவது. பெரியாரின் பல தசாப்ச போராட்டம் மனிதர்களுக்கு இடையிலான பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாகும். அதற்காகவே தேர்தல் அரசியலில் பங்கேற்காது தனது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அது தமிழ் நாட்டில் முழுமை பெற்று விட்டதா என்றால் நிச்சயமாக இல்லை இன்னும் முன்னேற பல விடயங்கள் உள்ளது என்பதே பதில். பத்தாம்பசலித்தனத்தில் இருந்து விடுபட்டு இன்னும் பல மாற்றங்களை அது உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்றால் ஆம் என்று கூறலாம். தமிழ் நாட்டில் தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் அடிபடையற்ற போலி அறிவியலை முன்னிறுத்தும் காணொளிகளை உருவாக்கி அதை பரப்பிவருவதை நீங்கள் அவதானிக்கவில்லையா? தமிழ் தேசியம் உலகளாகிய ரீதியில் வலுப்பெற வேண்டுமானால் அறிவியல் ரீதியில் அது பலம் பெற வேண்டும். அப்போது தான் உலகில் மற்றய இனங்களுக்கு நிகராக தலைநிமிர்ந்த இனமாக எமது சந்ததி வாழமுடியும். இன்று தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்வோர் செய்துவரும் போலி அறிவியலை ஊக்குவித்தல், பத்தாம்பசலித்தனம், விட்டுத்தொலைக்கவேண்டிய மூடப்பழக்கங்களுக்கு அறிவியல் முட்டுக்கொடுத்து அதை பரப்புவது, வெறுமனே உசுப்பேற்றுவது ஆகியவை தமிழருக்கு பெருமை தரும் விடயங்கள் அல்ல. ஈழத்தில் சமூகநீதி ஏற்கனவே நிலைநாட்டப்பட்டு சாதி, இன, மத, பிரதேச வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் கட்டப்பட்டு விட்டதென்றால் நீங்கள் கூறும் திராவிட சித்தாந்தம் தேவையில்லை என்று கூறலாம். அந்த பெயரில் அது தேவையில்லை என்று நீங்கள் கூறலாமேயொழிய அதையொட்டிய சித்தாந்தம் ஈழத்துக்கு தேவை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்களே ஈழத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக கண்டித்து சமூகநீதியின் அவசியத்தை வலியுறுத்திய முற்போக்கு கருத்தாளராக உள்ளீர்கள். உங்கள் பல கருத்துக்கள் அவ்வாறு முற்போக்காக இருந்ததை அவதானித்துள்ளேன். ஈழத்துக்கு திராவிட சித்தாந்தத்தை ஒட்டிய சமூக நீதி சித்தாந்தம் தேவையில்லை என்று கூறுபவர் யாழ்பாண மேற்தட்டு ஆதிக்க சாதி கோட்பாடுகள் தொடரவேண்டும் என்று கருதும் ஒருவராகவே இருக்க முடியும்.
  20. இங்கு கருத்திறும் சில உறவுகள் அவ்வாறு செய்யாமல் சீமானுக்கு வக்காலத்துவாங்குவதற்காக மற்றய கட்சிகளைப் பகைக்கும் வசைபாடல்களை தொடர்ந்து தெரிவிப்பதாலும் சீமான் ஏதோ உத்தமன் என்ற ரீதியில் கருது தெரிவித்து உண்மைகளை மறைப்பதாலும், அவ்வாறு இல்லை சீமான் ஒன்றும் உத்தமன் அல்ல, மற்றய கட்சிகளைப்போல் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான் என்பதை ஆதாரங்களுடன் கூறினேன். அதை ஆதாரங்களுடன் மறுக்காமல் மற்றயவர்களை விட்டுவிட்டு என்னிடம் நீங்கள் கேள்வி கேட்டால்…..
  21. சீமானின் மனைவியின் அப்பா காளிமுத்து தானே. பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும் என று சட்ட சபையில் சபாநாயகராக இருந்து தீர்மானம் நிறைவேற்றி அதில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய காளிமுத்து தானே! தான் தலைவன் என்று கொண்டாடும் பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றிய காளிமுத்துவை துரோகி என்று சீமான் கூறாதது ஏன்? ஊழல்பற்றி வாய்கிழிய பேசிய சீமான் ஊழல்ராணி என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்ட சசிகலாவை அரசியலில் ஆதரித்தது ஏன்? அரசியலுக்கு அப்பால் குடும்ப உறவு இருந்தால் ஊழலை கண்டுக்க மாட்டாரா அண்ணன்? 😂 இதில் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில் இடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய காளிமுத்து துரோகி என்று அண்ணன. கூறமாட்டார். ஆனால் 1982 ல் பிரபாகரனை இலங்கையிடம் கையளிக்க கூடாது என்று தீவிரமாக போராடி பிரபாகரனை காப்பாற்றிய திராவிட இயக்கதினர் அண்ணன் பார்வையில் துரோகிகள்.
  22. சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி நான் எதுவும் கூறவில்லை. எதில் காலத்தில் உயர்பதவிகளுக்கு வரும் போது ஆங்கிலவழிக்கல்வி மகனுக்கு உதவியாக இருக்கும் என்ற அக்கறையில் ஒரு தகப்பனாக அவர் தன் மகனை ஆங்கிலவழிக் கல்வியில் படிப்பிப்பதை தவறென்று கூற முடியாது. நாம் தமிழரை வசை பாடவில்லை. அவர்களின் வண்டவாளங்களை ஆதாரத்துடன் கூறினேன். எனது கருத்துக்களை ஆதாரங்களுடன் உங்களால் மறுக்க முடியாது. தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியையும் பகைக்கக்கூடாது என்பதை இங்கு களத்தில் பல உறுப்பினர்கள் நீண்ட காலமாக மீறியபோதும் சீமானுக்காக படு மோசமான வார த்தைப் பிரயோகங்களுடன் அடுத்த கட்சிகளின் தலைவர்களை வசை பாடியபோதும், ஏன் இந்த திரியின் ஆரம்ப கருத்துக்களின் போதும் அவ்வாறு நடந்து கொண்ட போதும் அவர்களிடன் என்னிடம் கேட்டதைப்போன்ற ஆக்கரோஷத்துடன் இந்த கேள்வியை கேட்கவில்லையே? கேட்க மாட்டீர்கள் அது உங்கள் அரசியல் என்று கூறலாமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.