Everything posted by island
-
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்
1993 ல் அரபாத் - ரபின் ஒப்பந்தத்திலேயே பாலஸ்தீனம் அங்கீகரிகப்படுவதறகான சூழ்நிலை உருவாகி விட்டது. அந்த சமாதானத்தை குழப்பியவர்கள் ஹமாஸ் கடும் போக்குவாத அமைப்பினரே. இலங்கையிலும் அதே நிலமை தான் 2002 சமாதானத்தை இரு தரப்பும் குறிப்பளவு விட்டுக் கொடுப்புகளுடன் தொடர்ந்திருந்தால் இத்தனை அழிவுகள் வந்திருக்காது. நல்ல விதமான முடிவுகளும் வந்திருக்கும். பிடிவாதமும் கடும் போக்கு தேசியவாதமும் கற்பனாவாதமும் அழிவுகளையே கொண்டுவரும் என்பதற்கு பாலஸதீனமும் இலங்கையும் உதாரணங்கள். இப்போதும் கூட கூட ஹமாஸ் கடும்போக்கு வாதிகள் இதை கெடுக்காமல் இருக்க வேண்டும். சமாதானத்தை கெடுத்துவிட்டு குத்துதே குடையுதே என்று புலம்புவதில் பயன் இல்லை.
-
ரப் பாடகர் வேடன்
யாழ்பாண தமிழ் வேர் என்பது அவரது பெருமை அல்ல. அவரது திறமையே அவருக்கு பெருமை. யாழ்பாணத்தில் இருந்திருந்தால் ஜாதீய ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இன்று போற்றப்படுகிறார். வாழ்த்துகள் வேடன்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கோஷான், நீங்கள் கூறியது அவர்கள் செய்த குற்றச்செயல். அமைப்பாக பாது காத்ததும் ஒரு குற்றச்செயல். நான் தெரிவித்தது அதை பற்றியதல்ல. மதததின் பெயரால் எதை எவர் கூறினாலும் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டாலும் அதை சிந்திக்காது ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டதை பேணிப்பாதுகாப்பது பற்றியது. மற்றப்படி அனைத்துமே ஒரே ரகம் தான்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவர்கள் விரும்பினாலும் அவ்வாறு தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாத அளவுக்கு அந்த மதத்தை பின்பற்றும் மக்களிடையே விழிப்புணர்வும் அறிவியலும் மேம்பட்டுள்ளது. அதனால் அவர்களால் தலிபான்களாக மாற முடியாமல் உள்ளது. ஆனால் எம்மவரிடையே காவியையும பட்டையையும் போட்டாலே வேலன் போன்ற டுபார்கூர் பயல்களாலேயே எளிதாத சொந்த மக்களுக்கே பட்டை நாமம் சூட்டக் கூடிய நிலையே இன்னும் உள்ளது. இந்த தலிபான்களின் வாலும் ஒட்ட நறுக்கப்படல் வேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவர்கள் சேர்சசை தாண்டி வெளியே வந்து மக்களின் வாழ்வியலின் தனிப்பட்ட சுதந்திரங்களின் தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாமிய, இந்து, சைவ தலிபான்கள் அப்படியல்ல. மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களில் தலையிடுபவர்களே தலிபான்கள் ஆவர்.
-
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!
தெரிவான விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். தெரிவானவர்களில் 8 பேர் பெண்கள் என்பது உண்மையில் சாதனை தான்.
-
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
இது தான் உண்மையான கருத்து. இரு தரப்பும் பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டியெழுப்பும் அரசியலை நோக்கி நகவர்வதே தீர்வை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான முதல் காலடியாக இருக்கும். இதனையே இரு தரப்பு அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டும். இரு தரப்பு அரசியல்வாதிகளும் தத்தமது அரசியல் இலாபத்திற்காக வெறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வதானது, ஆபத்தை நோக்கி ஓடும் ஒரு றிலே ஒட்டம் போலவே இருக்கும். இந்த றிலே ஓட்டத்தில் அதிகம் ஆபத்தை எதிர் நோக்குவது சிறுபான்மை மக்களே என்ற பட்டறிவை உணர்ந்து அந்த மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எது எப்படியோ யாழின் பாரம்பரிய சைவ உணவகங்களை போல் அசுத்தமாக இருக்காமல் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் காட்சி தரும் ஒரு ஒரு சைவ உணவகம் வந்தது யாழ்பாண மக்களுக்கு கெத்தும் மகிழ்ச்சியும் தான். 😁
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஜேர்மனியின் முருகனும் நல்லூர் முருகனும் வேறு வேறு ஆட்களா நியாயம்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வண்டியை இழுப்பது கழுதை. வண்டியில் இருப்பது கோவேறு கழுதை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எம. ஆர் ராதா நடித்த படத்தில் வரும் இந்த காட்சி இந்த வேலன் என்ற கள்ளச் சாமிக்கு நல்லா பொருந்தும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சரி நைனா! பன்றி இறைச்சி
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கற்பனை செய்து பாருங்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழர் இனப்படுகொலை என ICC இல் வழக்கு தொடுத்து ICCஆதாரம் கேட்டால் இதே போல தான் ஒவ்வொரு தவணைக்கும் மாற்றி மாற்றி ஒவ்வொரு சப்பை காரணங்களை சொல்லி வழக்கையே சொதப்பி விடுவர். 😂😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சைவ உணவு என்று அறிவிக்க வைத்த வெற்றியை கொண்டாட வேலன் சாமி வீட்டில் கோழி குழம்பும் குவாட்டருமா பார்ட்டியாம். 😂😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கூகிள் வரைபடத்தின்படி, Barista cafe உணவகம் இருக்கும் இடத்திற்கும் நல்லூர் கோவில் இருக்கும் இடத்திற்குமான தூரத்தை விட சென்ற் ஜேம்ஸ் சேர்ச் தான் மிக அண்மையில் உள்ளது. 😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
@வாலி வாலி கூறிய விடயங்கள் அடங்கிய யாழ்பாண வைபவமாலை நூலின் பக்கங்களை இங்கு தந்துள்ளேன். பன்றியிறைச்சியை போட்ட கதை மட்டுமல்ல புத்த கோவில்களை இடித்து சிங்களவரை துரத்திய வரலாறும் அங்கு உள்ளது. மதம் மாறிய ஒரே காரணத்துக்காக மன்னாரில் பெண்கள் குழந்தைகள் என்று பாராது 600 க்கு மேற்பட்ட சொந்த மக்களையே சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. இதை யெல்லாம் பார்ககும் போது, “ செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா” எனப் பாடத் தோன்றுகிறது. 😂😂
- IMG_0285.jpeg
- IMG_0283
- IMG_0284.jpeg
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்த வேலன் என்ற மத வெறியர் கடந்த சில வருடங்களாக எல்லா விடயங்களிலும் மூக்கை நுளைத்து குரைத்து வருகிறார். பாமரத்தனமாக அரசியலும் பேசுகிறார். மக்களின் அரசியலுக்கு உசுப்பேற்றல் வெறுப்பு பேச்சால் மக்கள் பிரச்சனைகளை தீர்பதற்கு பதிலாக சிக்கலாக்குதல். சொந்த குடும்ப தேவைகள் என்றால் பின்கதவால் உரியவர்களிடம் பேசி கமுக்கமாக அலுவலை முடிப்பது என்ற தமிழ் தேசிய கொள்கையை இவரும் குத்தகைக்ககு எடுத்துள்ளார். ஆர்எஸ் எஸ் சங்கித் தனத்தை தமிழர் அரசியலுக்குள் புகுத்த முயல்கிறார். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்உ இவர் கூறும் வார்த்தையே கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளே அனுமதிக்காது அவர்களை திருப்திப்படுத்த கூறப்பட்ட வார்ததை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அப்ப நல்லை கந்தனும் ஊரில் அடுத்த சாதி தமிழர்கள் மீது வன்மம் காட்டும் யாழ்பாண தமிழர்கள் போல் சகிப்பு தன்மை இல்லாமல் பன்றியை போட்டு அயலானை விரட்டியடித்தாரா? 😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அங்கெல்லாம் எமக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தை வாங்கி தாங்கோ, அப்புறம் நாங்கள. யார் என்று காட்டுகிறோம். 😂 போதுவாக இப்படியான விடயங்களுக்கு ஓவரா பொங்குறவர்கள. யாரெண்டா 25 நாள் திருவிழா எப்ப முடியும் என்று காத்திருந்து 26 ம் நாள் பூங்காவனம் முடிய மீன்சந்தைக்கும் இறைச்சிகடைக்கும் படையெடுப்பவர்களாக தான் இருக்கும். அதுக்குள்ள சதி அது இது என்று வேலன் சாமி என்ற **** பொங்கு***
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இந்த தீர்ப்பு மலையக தமிழர்களை அன்றைய இலஙகை அரசு இந்தியாவுக்கு திருப்பு அனுப்பிய சமயம் வந்திருந்தால் மிகவும் மகிழ்சசியடைந்திருப்பேன். 7 அல்லது 8 எம்பிகளை பாராளுமன்றம் அனுப்பும் அளவு மலையக தமிழர்கள் 1950 ல் இருந்தார்கள். அவர்களில் 25 வீதத்தை வட கிழக்கில் குடியேற்ற அன்றைய தமிழ் தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தாலே வட கிழக்கில் நிலங்கள் பறி போயிருக்காது. 1977 கலவரத்தில் வந்தவர்கள் கூட திரும்பி மலையகம் செல்ல வேண்டிய நிலையே வந்தது. தோட்டக்காட்டான் என்று அவர்களை வெறுத்த யாழ்ப்பாண dominant சமூகம் அதன் பலனை இன்று அனுபவிக்கிறது.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
நீங்கள் கூறியது போல் தமிழ்கவி ஆழமான அரசியல் பார்வை கொண்டவரல்ல. அவர் புலிகளுடன் இருந்த போது கூட ஒரு கவிஞராக சாமான்ய மக்களிடையே போர்பரணியை ஊக்குவிக்கும் கலை நிகழ்வுகளை ஒருங்கு செய்யும் ஒருவராகவே இருந்தவர். பழைய ஒளிவீச்சு வீடியோகளைப் பார்ததால் இதைத் தெரிந்து கொள்ள முடியும் தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர். சாமான்ய மக்களுடன் வாழ்ந்தவர். அவரது அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மக்களின் குரலாக யுத்த இறுதி நாட்களில் நடந்த பல உண்மைகள் அவரின் செவ்வியில் இருப்பதை மறுக்க முடியாது. அதில் பலருக்கு உவப்பில்லாத அவர்கள் மறைக்க விரும்பும் உண்மைகள் இருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து காவியம் எழுதி அதை அடுத்த சந்ததிக்கு கடத்தினால் மீண்டும் இதே கசப்பான அனுபவங்களே ஏற்படும் நிலாந்தன் அப்படிப்பட்டவர் அல்ல. வன்னியில் இருந்தபோது பல அரசியல் ஆய்வுகளை வெளியிட்டவர். சர்வதேச அரசியல் நிலை பற்றி அறிந்தவர். அப்போது புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்து அதை அவர்களுக்கு எடுத்து கூறாமல், அவர்களை தவறாக வழிநடத்தியவர். அதன் மூலம் நடந்த பேரழிவுக்கு பொறுப்பு கூற வேண்டியவர். இன்றும் கூட அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் நடைமுறை அரசியலுக்கு அப்பால் மக்களை கற்பனாவாதத்திற்குள் வைத்திருக்கும் அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
சிங்க கொடியின் நிழலில் நாட்டை ஆள்வது முக்கியமல்ல. அனைத்து இனங்களும் தத்தமது பாதுகாப்பை உணரும் ஒரு அரசியல் பொறிமுறையை கொண்ட அரசியலமைப்பை உருவாக்காதது இவரது பாரிய தோல்வியாகும். இதுவே ஶ்ரீலங்கா நாட்டின் படிப்பினை. இப்போதைய ஆட்சியளர்கள் உணர வேண்டிய மிக முக்கிய விடயம். தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெற்று கோஷங்களை விடுத்து இதை வலியுறுத்தி நடைமுறை சாத்தியமான அரசியலுக்கு வரவேண்டும்.