Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. ஈழப்பிரியன், எப்போதும் தமிழனாகியோரும் சில் தளங்கல்கள் கொடுத்துள்ளார்கள், அவற்றை முயற்சித்துப்பார்க்கலாம்தான் ஆனால் அதற்கு முன்னர் இன்றய போட்டியினை hotstar முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்துள்ளேன், வேலை இடைவேளையில் வேலையில் வழங்கப்பட்ட கணனி பாவிப்பதுண்டு (எனது கணனி 30 நிமிடத்தில் பற்றரி முடின்ட்குவிடும்) அதில் சில வேளைகளில் யாழ் கூட வராது, நான் நினைக்கிறேன் பாதுகாப்பு சான்றிதழ் காலாதி ஆகியிருந்தால் அப்படி ஏற்படுகிறதன, இந்த தளங்கள் பாதுகாப்பற்ற தளமாக இருந்தால் அனுமதிக்காது.
  2. இன்றைக்கு சென்னை தனது சகாக்கள் போல விளையாடும் (கொல்கத்தா, ராஜஸ்தான்)😂
  3. இது நல்ல தெரிவுதான், ஆனால் கடைசியாக நடந்த போட்டியில் பராக் மட்டுமே ஆட வேண்டிய தேவை ஏற்பட்டது. கவலைப்படாதீர்கள் அணையப்போகின்ற விளக்குகள் பிரகாசமாக எரியுமாம் (கொல்கத்தா, ராஜஸ்தான் இன்றைக்கு சென்னை), ஆனால் அவற்றால் ஒரு பிரஜோசனமும் இல்லை.😂
  4. ராஜஸ்தான் அணியில் பல இடது கை ஆட்டக்காரர்கள் விளையாடுவதால் வோசிங்கடன் சுந்தரும் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, சுழல் பந்துவீச்சாளர்களுக்கெதிராக மிக குறைந்த ஓட்டவிகிதங்களை கொண்ட வீரராக ஜுரல் உள்ளார் என கூறப்படுகிறது.
  5. Pitch and conditions Four of the seven games in Jaipur have been won by the chasing side since last year, with the average first innings score being 184. Day temperatures have crossed 40 degrees celsius; while the evenings will be a tad cooler, there's no escaping the oppressive heat that will take a toll on the players' fitness. 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி ஈட்டலாம் என்பது கிரிக் இன்போவின் ஆடுகள அறிக்கை கூறுகிறது. ராஜஸ்தான் அணியின் மத்திய துடுப்பாட்ட பகுதி கடந்த போட்டிகளை மிக சாதகமான நிலையில் இருந்து அதனை தோல்விக்கு எடுத்து சென்றுள்ளது. ராஜஸ்தான் அணியின் பராக், ஜுரல், கெட்மெயர் இந்த மூவரும் அந்த அணியின் துடுப்பாட்ட மத்திய பிரிவில் மிக சிரமத்துக்குள்ளாகின்றனர் என கிரிக் இன்போ தளம் கூறுகிறது. இந்த மூவரையும் ராஜஸ்தான் துடுப்பாட்ட வரிசையில் எங்கே கொண்டு போய் மறைத்து வைக்கலாம் அல்லது வேறு ஏதாவது மாற்றுவழிகள் செய்யலாமா என யாழ்கள போட்டியாளர்களிடம் நகைசுவை ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் கல கலப்பிற்கான விடயம் அதனால் யாருடைய கருத்து மிக சிறப்பாக உள்ளதென பார்க்கலாம்.
  6. எனது $1 KAYO சந்தா முடிந்துவிட்டது, இன்றைய போட்டியில் ஜுரலின் விளையாட்டை பார்க்க ஆவலாக உள்ளது, நிங்கள் எதில் ஐ பி எல் பார்க்கிறீர்கள்?
  7. நானும் குஜராத்தான், ஜுரல் 3 ஆவதாக வந்தால் அப்படி ஒரு வேலை செய்துவிடுவார் எனும் நம்பிக்கைதான்,🤣
  8. ராஜஸ்தான் அணி இன்றைய குஜராத் அணியுடனான போட்டியில் துருவ் ஜுரலை ஏன் 3 ஆவதாக களமிறக்கக்கூடாது? அவசரப்பட்டு சாம்சனை காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் போட்டிக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இல்லை, சென்னை அணி போல ராஜஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டது. ஜுரலினினை ஒரு போட்டியில் உக்கார வைப்பதற்கு பதிலாக 3 ஆவது இடத்தில் களமிறக்கினால் அவர் தனக்கு தேவையான நேரத்தினை எடுத்துக்கொள்ள 3 ஆவது இடம் நல்ல பொருத்தமான இடம். சாம்சனும் அடிக்கடி காயத்தினால் உள்ளே வெளியே என இருக்கிறார், ஜுரலுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை ஏன் குடுக்கக்கூடாது, இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருக்கும்(சாம்சனுக்கு மாற்றீடு), அத்துடன் எமக்கும் 2 புள்ளிகள் கிடைக்கும்.😂
  9. ட்ரம்ப் பல முயற்சிகளை ஒருங்கே செய்ய முயற்சிக்கின்றார், ட்ரம்ப் தொடர்பில் அவர் மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது அண்மையில் அமெரிக்க மத்திய வங்கி ஆளுனரின் பதவியினை பறிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனரை பதவியிலிருந்து தூக்கியெறிய முடியாது, மத்திய வங்கி சட்டம் மூலம் அவர் மீட்கு வட்டி விகிதம் குறைக்கவில்லை என்பதற்காக பதவி விலக்கினால் நீதிமன்றத்தில் ட்ரம்ப் தோல்வியடைவார் என கூறப்படுகிறது ( For cause). அமெரிக்காவின் முதல் காலாண்டு மொத்த தேசிய வருமானம் -0.2% ஆக வந்துள்ளது இன்னுமொரு காலாண்டு மொத்த தேசிய வருமான மறை இலக்கத்தில் வந்தால் பொதுவாக அதனை பொருளாதார சரிவு என வரையறுக்கிறார்கள் (recession). இந்த புள்ளி விபரம் தெரிந்த ட்ரம்ப் தனது தாக்குதலை மத்திய வங்கி ஆளுனரின் மேல் தொடங்கியுள்ளார் என கருதுகிறேன், வட்டி விகித குறைப்பு பொருளாதாரத்தினை தூண்டும் ஆனால் தற்போது பணவீக்கம் முழுமையாக கட்டிற்குள் வரவில்லை அந்த நிலையில் வட்டி விகித குறைப்பு பொருளாதார சரிவினை தூண்டும். பொருளாதார சரிவு வெறுமனே மொத்த தேசிய வருமானத்தினை மட்டும் கவனத்தில் கொள்ளப்படும் விடயம் அல்ல, மாறாக வேலை வாய்ப்பு, உற்பத்தித்துறை, தனிநபர் தேறிய வருமானம் என்பவற்றில் தங்கியுள்ளது. மொத்த தேசிய வருமானத்திலேயே அமெரிக்கா தற்போது சரிவினை கண்டு வருகிறது ஆனால் மற்ற விடயங்களில் ட்ரம்பின் ஆட்சி ஏற்பின் பின்னர் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய காரணி, ஒன்று சரிந்தால் மற்றதும் சரிவடையலாம். Real-time Sahm Rule Recession In...Real-time Sahm Rule Recession Indicator https://tradingeconomics.com/united-states/manufacturing-pmi ட்ரம்ப் தனது புகழை விட்டு செல்ல விரும்புகிறார், ஆனால் அவர் நினைப்பதற்கும் நடைமுறைக்கும் இடையே இடைவெளி உள்ளது போல இருக்கிறது. தற்போது உலகம் ஒரு உண்மையினை உணர்ந்துள்ளது, போரினால் யாரும் அனுகூலமடைய முடியாது, கர்மா வீடு தேடி வரும்.
  10. பாதகத்திலும் ஒரு சாதகம் அந்த 4 அணிக்கு.🤣 பத்திரன விளையாடமாட்டார் எனும் கருத்து நிலவுகிறது, அவருக்கு பதிலாக நாதன் எலிஸ் விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது (உறுதிப்படுத்தப்படாத செய்தி), நாதன் எலிஸ் விளையாடிய போட்டிகளில் சென்னை வென்றுள்ளது. கைதராபாத் அணிக்கு விளையாடும் ஈசன் மலிங்காவினை 1.2 கோடிக்கு வாங்கியுள்ளார்கள், பத்திரன 13 கோடி.
  11. ஒரு போட்டி ஓய்வு கொடுப்பார்கள், அது அவர்களை அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட தூண்டும், வீரர்களுக்கும் அது தெரியும்.
  12. யாழ்கள் சட்ட மன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்த திரியில் மூழ்கி எழுந்தால் போதும் போல இருக்கிறது. எனக்கு சட்ட மன்ற தேர்தலுக்கு மற்ற தேர்தலுக்குமே (பெயர் தெரியவில்லை நாடுளுமன்ற தேர்தல்?) வித்தியாசம் தெரியவில்லை. பையன் யாழ்கள போட்டிக்காக நேரடியாக இந்தியாவிற்கு சென்று களநிலவரங்களை அவதானித்து வருகிறாரோ? தேர்தல் எப்போது?
  13. அவருடைய ஓட்டத்தினை விட அதிகமான பந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்ட ஒரே வீரராக அவர் இருந்திருந்தார், கடந்த போட்டிகளின் தோல்வியின் போது ராஜஸ்தான ரசிகர்கள் அவரில் கொஞ்சம் மனஸ்தாபத்தில் இருந்தார்கள், இந்த போட்டியின் பிறகு கொலைவெறியில் இருப்பாகள்.🤣 குருணலின் பந்து வீச்சிற்கு ஒற்றை ஓட்டம் எடுக்கமுடியவில்லை🤣, அவர் தேவையில்லாமல் ஏற்படுத்திகொண்ட அழுத்ததினை பார்த்து கேசல்வூட்டின் ஓவரை இறுதி ஓவருக்கு சேமித்து வைத்தார்கள் (அப்போது 2 ஓவர்கள் அவரிடம் இருந்தது), அதனால் பின் பகுதியில் அவர்கள் நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. சரி உங்களுக்காக இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டிருக்கு என்பதனை ஜுரலிடம் கூறுங்கள்.😂
  14. தகவலுக்கு நன்றி, இனையத்தில் இருந்து தவறாக புரிந்து கொண்டிருப்பேன் என கருதுகிறேன், யாழ் கள போட்டியில் இணைந்த பின்னரே ஐபிஎல் இல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
  15. எனது அபிப்பிராயம் துருவ் ஜுரல்தான் ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம் என கருதுகிறேன் (யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்🤣), 8.75 ஓட்ட விகிதம் உள்ள நிலையில் களத்திற்கு வந்தவர் தடுப்பாட்டத்தில் இறங்கினார். ஓவருக்கு குறைந்தது 6 ஓட்டங்களை இலகுவாக எடுக்கும் நிலையில் கூட அதனை எட்டவில்லை, ஜுரல் தோனியினை போல விளையாடுபவர் என இணையத்தில் அவர் மேல் இரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் (தேவையில்லாமல் அதிக ரன் ரேட்டிற்கு உயர்த்திவிட்டு பின்னர் 6 கள் அடித்து கதாநாயகனாக ஆட்டத்தினை முடிப்பது). அதனால் அவருடன் கூட்டணியில் இருந்த நிதிஸ் ரானாவிற்கு அழுத்தம் ஏற்பட்டு தனது தவறான ஆட்ட தெரிவின் மூலம் தேவையற்று ஆட்டமிழக்கும் நிலை உருவானது. விக்கெட் விழுந்ததனால் மேலும் அழுத்தம் அதிகரித்து விக்கெட்டினை காக்கும் முயற்சியில் மேலும் ஓட்ட விகிதம் அதிகரித்தது. நல்ல தொடக்கத்தினால் ஏற்பட்ட சாதாரணமாக விரட்ட வேண்டிய இலக்கை கடினமாக்கியவர் ஜுரல். இதே போலவே முந்தய போட்டிகளிலும் செய்தார், சாம்சன் அணிக்குள் மீண்டும் வந்தால் ஜுரலை நீக்கி விடலாம் என கருதுகிறேன். நிச்சயமாக ட்ராவிட் ஜுரலுடன் கதைப்பார் என கருதுகிறேன். SRH தரமான அணி, சென்னை அணி பல அணி வீரர்கள் போர்மிற்கு வர உதவுகின்ற அணி இன்று கைதராபாத்திற்கும் அந்த உதவியினை செய்வார்கள் என கைதராபாத் ஏன் எதிர்பார்க்கக்கூடாது?🤣
  16. சுரண்டல் எனும் வார்த்தையினை பாவித்ததால் இடது சாரி சித்தாந்தம் என எனது கருத்தை வரையறை செய்கிறீர்கள் என கருதுகிறேன், எனக்கு அந்த அரசியல் எதுவும் தெரியாது, எமது செயல்களினால் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறினேன் அவ்வளவுதான் (சுரண்டல் எனும் வார்த்தை பாவித்ததன் காரணம் வேறொருவருக்கு சொந்தமானதை அவரது அனுமதியின் எடுப்பதற்கு உள்ள வார்த்தையினை பொதுவாக யாரும் விரும்புவதில்லை). இது உபதேசம் அல்ல, சில விடயங்கள் நடக்கும் போது எமக்கு ஏன் தான் இப்படி நடக்கிறது என நினைப்போம் காரணம் தீதும் நன்றும் பிறர் தர வராது.
  17. உங்களது வெற்றிக்கூட்டணிக்குள் புகுந்த கறுப்பு ஆடு நான் என நினைத்தேன்.🤣 இல்லை மெதுவாக விளையாடினார் என (அப்படி ஒன்றும் இல்லை ஆனால் தோல்விக்கு யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்).🤣
  18. இன்றைக்கு ராஜஸ்தான் வென்றிருந்தால் அவருக்குத்தான் இங்கு சாத்துப்படி நடந்திருக்கும்.😂 விராட் கோலிக்கு.
  19. நாளைக்கும் அமோகம்தான்.🤣 கைதராபாத் அணி ஒரு தார் ரோடு ஏற்பாடு செய்கிறதாம், அதில மும்பாயினை போட்டு உருட்டுவதற்கு (கட்டாந்தரை ஆடுகளம்), எல்லோரும் எதிர்பார்க்கும் 300 எடுக்க வேணும் எனும் முனைப்பில் இருக்கிறார்களாம், ஆனால் மும்பாய் கைதராபாத்தினை அதே ரோட்டில போட்டு உருட்டி உருட்டி அடிக்க போகிறதோ தெரியவில்லை. நானும் மும்பாய்தான், செம்பாட்டானை போட்டு உருட்டி எடுப்போம்.🤣 அவர் இப்போது என்னை போல சான்விச் மசாஜினை அனுபவித்து கொண்டுள்ளார், மேலேயும் இல்லை கீழேயுமில்லை.🤣
  20. எது விலை போகிறதோ அதனை பயன்படுத்துகிறார்கள், இலங்கையில் மதம், பிரதேசவாதம் போல (தமிழ் தேசியம் கூட அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது) இந்தியாவில் சாதியம் பயன்படுத்தப்படுகிறது, இவை எல்லாவற்றிற்கு பொதுவான ஒற்றுமை சாதி, மதம், பிரதேசவாதம் என்பவை என்ன என்று உய்த்தறிந்து உணரமுடியாவிட்டாலும் அவற்றின் பேரால் மக்களை தம்பக்கம் இழுக்க முடிகிறது அதன் மூலம் அதிகாரத்தினை பெறமுடிகிறது, பின்னர் அதன் பெயரால் அவர்களையே அழிக்க முடிகிறது. சாதாரணமாக சிந்திக்க முடிந்த மனிதனால் இந்த மூட நம்பிக்கைகளில் வெளிவரமுடியாமல் இருக்கின்றமையால் அதனை அவர்கள் பயன்படுத்தி அனுகூலமடைகிறார்கள். இதனை புரிய வைக்க முயன்றால் அப்படி முயற்சிப்பவர்கள் மேல் கோபங்கொள்கிறார்கள், அடுத்த இரண்டு சந்ததிகளின் பின்னர் இவை காணாமல் போய்விடும், ஆனால் என்ன எமது சமூகம் அப்போது உலக ஓட்டத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பார்கள். மக்களின் புலம் பெயர்வு புதிய சிந்தனைகளுக்கான அடித்தளமாக இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இந்த மாற்றத்தினை விரும்பாமல் அதற்கு எதிர்ப்பு கொடி தூக்குவதன் நோக்கம், மாற்றம் வந்தால் கால மாற்றத்திற்கேற்ப தம்மை உயர்த்த முடியாத இவர்கள், தாம் இந்த மாற்றங்களினால் காணாமல் போய்விடுவோம் என அஞ்சுகிறார்கள். அது தேவையற்ற பயம், ஊரார் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பார்கள், பொது நலனில் கூட நாங்கள் விரும்பும் சுயநலம் உள்ளது. மனிதனை சிந்திக்க தெரிந்த மிருகம் என கூறுகிறார்கள், எமது சமூகம் சிந்திக்க விரும்பாத சமூகம்.
  21. கொல்கத்தா அணியின் கடுமையான எதிர் போட்டியினை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ஏமாற்றம்தான், அந்த போட்டி முடிந்து போன போட்டி, கொல்கொத்தா அணிக்கும் அது ஒரு முடிந்து போன போட்டியென்றே கருதுகிறேன். காணொளி
  22. 4 கோடிக்கு தோனியின் பங்களிப்பு ஒரு அணியாக சிறப்பாகவே உள்ளது, சிறந்த விக்கெட் கீப்பர், சிரந்த அணித்தலைமை, இறுதி ஓவர்களில் அதிக ரன் ரேட்டில் துடுப்பாடுபவர் ( சென்னை அணியில் உள்ள வீரர்களில் அதிக ரன் ரேட் கொண்ட வீரராக இருப்பார் என கருதுகிறேன்). அந்த அணிகளிடம் அதற்கான ஆற்றல் இருந்தது (சிறந்த வீரர்கள்), அணியில் ஆற்றல் இல்லை 8 போட்டியில் 2 போட்டி மட்டும் வென்றவர்கள் 6 போட்டியில் 6 இனையும் வெல்வார்கள் என்பது சாத்தியமற்ற விடயம். லக்னோ அணியிடம் சிறந்த துடுப்பாட்டம் மட்டுமே உள்ளது டெல்லி அணி ஒரு சமனிலையான அணி, ஆனால் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது, உள்ளூர் போட்டிகளில் தோற்கும் அணியில் லக்னோவும் ஒரு அணிதான், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் கேமங் பதானி தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்.🤣
  23. பெனாத்தல் என கருதினாலும் முழுமையாக எனது கருத்தினை வாசித்தும் பின் பெனாத்தல்தானே என வெறுமனே கடந்து போகாமல் அந்த பெனாத்தல் கருத்திற்கு நேரம் எடுத்து பதிலிட்டமைக்கும் நன்றி. அதிகார உணவுச்சங்கிலியில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் குறுங்கால சுயநல நடவடிக்கைகளும் அதே உணவுச்சங்கிலியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தொலைதூர நோக்கின்றி சுயநலனினால் தவறானவர்களை (50000 வாக்குகளால் வெற்றி அடைய செய்தவர்கள்) தெரிவு செய்தமையால் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் நீண்டகால பாதிப்பு பற்றி கட்டுரை மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளது, அதற்கு பதிலூட்டம் செய்த எனது கருத்தில் சமூகத்தில் அதிகார உயர்மட்டமும் அடிமட்டமும் மட்டும் சுயநலனிற்காக தவறிழைக்கவில்லை அனைத்து மட்டங்களிலும் தவறுள்ளது என்பதே இந்த கருத்தாடல்களின் இரத்தின சுருக்கம் ஆகும்.
  24. கொல்கத்தா அணியின் கதை முடிந்துவிட்டது.
  25. அந்த பெரும் படையில் நானும் ஒரு துளி.🤣 Pitch and conditions: The Eden Gardens mystery It is going to be hot and humid in Kolkata, where teams winning the toss have elected to chase in all three games this season with mixed results. Royal Challengers Bengaluru (RCB) restricted KKR to 174 and won, but the other two games featured successful defences of 200 totals. இந்த ஆடுகளம் கொல்கத்தாவின் ஆடுகளம், சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம், குறைந்தது 200 ஓட்டங்களாவது எடுத்தாக வேண்டும் என கூறப்படுகிறது, இந்த ஆடுகளம் கொல்கத்தாவிற்கு சாதகம் அதிகம் என கூறப்பட்டாலும் ஏற்கனேவே வெளியே போவதற்கு துண்டு போட்டு வைத்திருக்கும் அணியுடன் இன்று கொல்கத்தாவும் இணைந்து கொள்ளும் என கருதுகிறேன். இந்த போட்டியில் கொல்கத்தாவே வெல்லும் என கிரிக்கட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள், ஆனால் கொல்கத்தா அணியின் துடுப்பாட்டம் அதன் பலவீனமாக தொடர்கிறது, மறு வளமாக குஜராத் அணி ஒரு சமநிலையான அணியாக காணப்படுகிறது, குஜராத் அணியே வெல்லுமென கருதுகிறேன், இன்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு ஓரளவிற்கு முடிவிற்குள் வந்துவிடும் என கருதுகிறேன். இந்த போட்டி கொல்கத்தாவிற்கான வழியனுப்பும் போட்டி என்பதால் போட்டி முடிவில் பாட்டை ஒலிக்கவிடலாம் (சென்னை அணி போலில்லாமல் ஒரு சின்ன நம்பிக்கை கொல்கத்தாவில் இருக்கிறது இன்றைய போட்டியினை வெல்வார்கள் என).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.