Everything posted by தனிக்காட்டு ராஜா
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
ம்ம் சிறு வயதில் கல்யாணம் அதிக பிள்ளைகள் கேட்டால் அல்லா கொடுக்கிறான் என்பார்கள்
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
kilo 1000,1500 ரூபா
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
அவர்களுக்கு பெரிதாக காணி இல்லை சனத்தொகை பெருக்கம் அதிகம் என்பதால் திட்டமிட்டு குடியேற்றத்தை நகர்த்துகிறார்கள் தற்போது நாவலடி அதாவது ஓட்டமாவடி அருகில் இருக்கும் அரச காணிகள் அனைத்தும் களவாடப்பட்டு வருகிறது வாகரை வரைக்கும்
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
கடல் சீற்றம் வந்தால் படங்களை இணைக்கிறேன் அதிக மீன் கள் வேற நேற்று வலையில் பட்டது நெத்தலி கிலோ 200 ரூபாய் என்றால் பாருங்கோவன்
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
அப்படி இல்லை அண்ணை இப்ப காத்தான் குடி கல்லடி வரைக்கும் போய் விட்டது மட்டக்களப்பு மக்களுக்கு இத்தேர்தலுடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தேன் காரணம் பிள்ளையான் இருக்கும் வரைக்கும் அவர்கள் காணி வாங்கி உள்வரவில்லை ( விடவில்லை) இப்ப கிஸ்புல்லா மீண்டும் தெரிவாகி உள்ளார் இனி கல்லடியும் காத்தான் குடிதான் காத்தான் குடியில் இல்லாத பொலிஸ் நிலையமே காத்தான் குடியில் இருக்கு என்று சொல்கிறார்கள் (மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையல் இருப்பது) தற்போது கல்லடி இசைநடனக்கல்லூரிக்கு அருகாமையில் குடிவந்துள்ளார்கள் முஸ்லீம்கள் அப்ப மட்டக்களப்பானுக்கு வாழ்த்து சொல்லத்தானே வேண்டும் சிலமாதங்களுக்கு முன்னர் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் காணியை பிடிக்க அடித்து நொருக்கி ஓடவிட்டார்கள் இனிமேல் அதற்கு ஆள் இல்லை சாணாக்கியனும் , சிறிநேசனும் , பிரவும் புட்டும் தேங்காய் பூ கதையும் சொல்வார்கள்
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
தினம் செய்தி வாசிப்பது கருத்துக்கள் பார்ப்பது அதை உங்களிடமும் கேட்டு இருந்தேன் ஏன் இணையம் வேலை செய்ய வில்லையென கடும் மழை தாழமுக்கத்தால் கடலும் அருகில் இருப்பதால் தாழமுக்கம் கடக்கும் வரைக்கும் நித்திரை இல்லை
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
நன்றி ஏராளன் யாழ் இணையத்தில் இணைந்து பல தடவைகள் முகநூலில் பேசி பேசி இணைந்திருந்தோம் நானும் அவரும். அவர் மனைவி இறந்த செய்தி முகநூலில் அவரின் உறவினர் மூலமாக அறிந்தேன் அந்த செய்தியை அவசரத்தில் இணைத்தேன் நன்றி மோkaன் அண்ணை சரியான தலைப்பிட்டு பிரசுரித்தமைக்கு நன்றி ஏராளன் படத்தை இணைத்தமைக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள்
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
இங்குள்ள கனபேரை பலர் நன்றாக புரிந்து கொள்ளாத நிலைதான் அண்ணை உங்கதும் இங்கு யார் நேரத்துக்கு மாறுவார் யார் காலை வாருவார் என தெரியாது அரசியல் ருசி அப்படி இன்று தமிழரசில் இடம் கேட்டவர்கள் கட்சி கொடுக்க மறுக்க வேற கட்சியிலும் தாவுகிறார்கள் இதுதான் இங்குள்ளவர்கள் இப்ப ஒன்றை அடிச்சு இன்னொன்று வாழ்வது போல ஆகிவிட்டது இதுக்குள்ள வடக்கு கிழக்கு இணைப்பு ஈழம் என குறுக்க மறுக்க நாம் ஓடிக்கொண்டிருக்கிறம் நீங்கள் என்னை அதிக தடவை மென்சன் பண்ணியதால் வந்து உங்களுக்காக இந்த பதில் அவ்வளவுதான் அண்ணை
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
யாழ் களத்தில் சோழியன் என கருத்துக்கள் எழுதி இயற்கை எய்திய இராஜன் அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா இராஜன் அவர்கள் 22.10.2024 அன்று காலமாகியுள்ளார் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்போம்
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்
-
(தீ) சுவடு
ஓகோ நன்றி🙂🙂 இத்துடன் இந்த புதிய நிறைவு ஆண்டுடன் யாழ் இணையத்தில் இருந்து சந்தோசத்துடன் விடைபெற்றுக்கொள்கிறேன் நன்றி அனைவரும் மிக நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இறைவனை பிராத்தித்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் பழகியதில் பெருமகிழ்ச்சியும் சந்தோசமும் அந்த வகையில் எழுத்தால் உணர்வு தந்து முகம் தெரியாத உறவுகளை இணைத்த யாழ் இணையத்திற்கும் ,உறவுளுக்கும் மீண்டும் நன்றி @suvy @MEERA மோகன் @கலைஞன் அண்ணாக்கள் நேரில் சந்தித்தவர்கள் சுமே அக்கா இவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன் நன்றி வணக்கம். யாழ் வாழ்க வளர்க😊😊😊
-
(தீ) சுவடு
ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்
-
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில்
மருந்தும் இல்ல மருத்துவமும் இல்ல எனது தந்தையார் இதய நோயாளி மருந்துகள் இல்லை பாமசியில் எடுத்து விழுங்க அந்த குழுசைகள் ஒத்துவராமல் தலைக்குத்தாவே இருக்கிறது என்றார் அதன் பிறகு அந்த குழுசை பாவிப்பதில்லை தற்போது குழுசைகள் குறைவு
-
(தீ) சுவடு
நன்றி அண்ணை கனபேர் இந்த சமூகத்துக்கு தூரமாகவே வாழ்ந்துவருகிறார்கள் சிலர் சிறையில் இருப்பவர்கள் எந்த கையாவது தங்களை விடுவிக்காதா என்ற ஏக்கத்திலே இருக்கிறார்கள் நன்றி அண்ணை நன்றி புங்கையூரான் வரவுக்கும் கருத்துக்கும்
-
(தீ) சுவடு
(எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு கடையை நடத்துற வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................
-
புதனும் புதிரும்
படிச்சு முடிச்சாச்சு ஒரு கயித்தில கட்டி இழுத்துப்போயிட்டார் வாழ்த்துக்கள் கவி ஐயா
-
புதனும் புதிரும்
ம் வருகிறோம் கூடவே
-
புதனும் புதிரும்
என்ன அவசரம் பொறுங்கவன் தொடரட்டும் ஐயா
-
அக்காவின் அக்கறை......!
ஓ மிக்க நன்றி உங்கள் தேடலுக்கு அக்கா நான் அதைப் பார்க்கவில்லை மன்னிக்கவும்
-
அக்காவின் அக்கறை......!
இலங்கையில இருக்கிறதே பெரிய விசயம்பா நீங்களாவது நினைவில் வைத்திருப்பதில் சந்தோசம் யாழ் இணையத்தில்🙄🙄🤩
-
அக்காவின் அக்கறை......!
அக்கா இல்லை ஆனாலும் ஊர் முழுக்க சொந்தங்கள் ஆக்கம் தொடங்கியாச்சு வாழ்த்துக்கள் சுவி அண்ணை
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
விடுப்பு பார்க்கிறதுல ஒரு விருப்பம்தானே அதான் கேட்டுப்பார்த்தன் இந்த 6 மாத விசிட்ட அப்ப போதும் என்று சொல்கிறீர்கள் போல அப்ப சரி ஆளை விடுவம் இது தெரியாம நாம திரிஞ்சு இருக்கிறம் என்றா பாருங்கோவன்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இந்த 6 மாத தலைப்பு முடிஞ்சுதாமா ஒருக்கா கேட்டுச்சொல்லுங்க
-
அந்த மனிதன்
ம்கூம்
-
அந்த மனிதன்
விலகி போனாலும் விட மாட்டியள் போல தொடரட்டும் மார்ட்டீன் எங்க போனான்