Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. உங்கள் பார்வையில் திராவிடமும் தமிழ்த்தேசியமும் வேறு வேறல்ல என்று உணர முடிகிறது.தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம்தான் திராவிடத்தேசியம் என்று சொல்கிறீர்கள். காலடுவெல்லுக்கு முதல் திராவிடம் என்றே சொல்லே கிடையாது. எந்த பழந்தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. தென்இந்திய மொழிகளன்தாய் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளும் கார்டுவல் எதற்காக திராவிட மொழிக்குடும்பம் சமஸ்கிருத சொல்லை வைத்தார். தமிழ்மொழிக் குடும்பம் என்று சொல்வதில் அவருக்கு என்ன தயக்கம். ஒரு பிள்ளைக்கு தந்தையின் பெயருக்குப் பதிலாக பக்கத்து வீட்டுக்காரனின் பெயரை வைப்பதை எப்படி டஏற்கலாம்.சரி விடயத்துக்கு வருவோம். தமிழ்தேசியத்தை முன்னெடுத்து தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசியல் இயக்கம்தான் இருக்கிறது. திராவிடத் தேசியத்தை கொண்ட பல கட்சிகள் இருக்கின்றன. விஜை மாற்றாக வருவதாயின் அவரும் திராவிட் தேசியத்தின் பெயரில் கட்சிப் பெயரை வைத்திருக்கலாமே.எதற்காக தமிழ்த்தேசிய முகமூடி தேவைப்படுகிறது. விஜயகாந் போல ஏன் தனித்து நின்று தன் பலத்தைக்காட்டிவிட்டு பின்பு கூட்டணிபற்றி பேசலாமே. அதுவும் விஜயகாந்தை விட உச்ச நடிகர். மதற்தடைலையிலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். அது மிகவும்சவாலானதுதான் அதிமுக தன்தலைமைவிட்டுக் கீழிறங்காது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாயின் அதிமுகவே 4ட்டணியின் தலைமை அணியாக இருக்கும். விஜய் தன் பலததை நிரூபிக்கும் வரை இதுதான நிலைமை. வேண்டுமானால் இன்னுமொரு மக்கள் நலக் கூட்டணியாக அல்லு சில்லு கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்கலாம். அது எந்த அளவுக்கு வெற்றிவாய்ப்பைத் தரும் என்பது சொல்ல முடியாது. இருந்தாலும் விஜய்யின் அரசியல் லருகையை நான் ஆதரிக்கிறேன்.ஊழல்கட்சிகளுக்கு மாற்றாகவும் திராவிட வாக்குகளைச் சிதறடிப்பதற்கும் அது உதவட்டும்.
  2. தமிழ் ஒரு பழைமையான மொழி. இன்று திராவிட மொழிகள் என்று சொல்லப்படுகின்ற அத்தனை மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்தான் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அந்த மொழியில் எந்த ஒரு இடத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. அதுதமிழ்ச்சொல்லே அல்ல. காரடுவெல்லுக்குப் பிறகே திராவிடம்(திரிவடுகர்)என்ற சொல் தோற்றம் பெறுகிறது. வராற்று ஆய்வுகள் காலத்திற்கு காலம் மாறுபடுபவை. பல ஆய்வுகள் பிழை என்று நிருபி;கப்பட்டும் இருக்கின்றது. இன்று பல ஆய்வாளர்கள் திராவிடம் என்பது பிழையான கோட்பாடு என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.
  3. அந்தக்கட்சி உருவாகிய காலத்தில் தனிநாட்டுக் கோரிக்கை எழுந்திருக்;கவில்லை. இலங்கைத் தேசத்துக்குள் தமிழருக்கான கட்சியாகத்தான் அது உதித்தது. அதிலிருந்து பிரிந்த கட்சிகள்தான் தமிழரசுகட்சி தொடநங்கி நேற்று முளைத்த கட்சிகள்வரை.
  4. நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும் கத்திப் பேசுவமதும் நியாயமா?
  5. விஜய் மோடி சந்திப்புhttps://www.vikatan.com/government-and-politics/26950- இது விஜயின் மோடி மஸதான் அரசியல் சீமானவது மும்பையில் ஒரு தமிழ்வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்து இருந்தார். மோடி ஆரமபத்தில் இருந்தே பிளவுவாதக் கட்சித் தலைவர். அவரோடு என்ன பேசியிருப்பார். மேலும் கடநத பாராளுமன்றத் தேர்தலில் சமானின் சின்னத்தை திடமிட்டுப் பறித்தததே பாஜகதான்.எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம் உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்
  6. பிஜேபி,காங்கிரஸ்.திமுகவோடு சீமான் கூட்டணிவைத்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். ஆனால் விஜய் பிஜேபியோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்கமாட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி வைத்தால் விஸஜயை எதிர்ப்பீர்களா? எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம் உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும். விஜய் மோடி சந்திப்பு https://www.vikatan.com/government-and-politics/26950-
  7. எப்படி அழைப்புக் கிடைக்கும் விஜய் மாநாட்டுக்கு எந்த அரசியல் தலைவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் சல மாதங்களுக்கு முன் சீமான் விஜய் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இன்று கூட்டணிக்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய் என்ன சொல்லியிருப்பார். நன்றாக ஊகிக்க முடிகிறது.திமுக ஆதிமுக வாக்குககைளக் கவர திராவிடத் தேசியத்தை தன் ஒரு கண் என்றும்.இதுவரை திராவிடம் கோலோச்சிய தமிழ்நாட்டில் தமிழ்த தேசியக் கருத்தியல்சீமானுக்குப் பின் தமிழ்நாட்டில் ஒரு தவிர்க்க முடியாத கருத்தியல் என்பதால் தமிழ்தேசியத்தை யும் ஒரு கண் என்று பேசியிருக்கிறார். விஜய்க்கு காங்கிரஜ் கட்சியின் கூட்டணி தேவை அப்படி இருந்தால்தான் மத்தியில் செல்வாக்கைச் செலுத்தலாம். பாஜகவோடு கூட்டு இல்லை என்று அறிவித்து விட்டார். தமிழ்த்தேசியத்துக்கு சீமானைச் சேர்ப்பதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது. காங்கிரசும் சீமானும் ஒனரே மேடையில் ஒரே கூட்டில் இருக்க முடியாது. தமிழ்தேசியத்தலைவரின் படத்தை அகற்றிவிட்டு சீமான் அரசியல் செய்ய மாட்டார். யார் முதல்வர் வேட்பாளர் என்பதிலும் குழப்பம் இருக்கிறது. இதே குழப்பம் அதிமுகவை கூட்டணிக்கு அழைத்தாலும் வரும். அதிமுக கூட்டணியில் எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர். இப்போது சீமானைத்தவிர்த்த விஜய் கூட்டணிப் போச்சுவார்தைகள் ஆரம்பிக்கும் பொழுதுதான் அரசியல் என்பது சினிமா வசனம் பேசுவதுமாதிரி இல்லை என்பது தெரிய வரும். விஜய் இன்;னும் தனது பலத்தை நிரூபிக்கவில்லை.அதுவரை எந்தப் பெரிய கட்சிகளும் அலரது தலைமைய எற்காது. காங்கிரஸ்.விசிக>கம்னியூஸட்டுக்கள் .தே.திமுக>பாமக.மதிமுக மற்றும் அல்லு சில்லுகள் தான் கூட்டணிக்குப் பேசும். அதிலும் பாமகவும் தேதிமுகவும் பேசும் கூட்டணிப் பேச்சுவாரத்தைககைள் விஜய்க்கு பெரிய தலையிடியாக இருக்கும்.இந்த அல்லு சில்லுகள் எல்லாம் ஊழல்கட்சியான திமுகவுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே இவர்களைக் கூட்டணியில் வைத்துக் கொண்டு விஜையால் எப்படிஊழலுக்கு எதிராகப் பேச முடியும். விஜய் தனியாக நின்று தன்பலததை நிரூபிக்கும் வரை பெரிய கட்சிகள் அவரது தலைமையை எற்காது. இதுவரை எந்த அல்லு சில்லு கட்சியும் விஜயுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கவில்லை. விஜையின் குழப்பமான அரியல் கொள்கையை விமர்சிக்கவும் இல்லை. சீமான் 4ட்டணி இல்லை என்று அறிவித்து விட்டு விஜையின் இரட்டை வேட அரசியலை விமர்சிக்கத் தொடங்கி விட்டார்.ஒரு தமிழ்த்தேசியக்கட்சி என்ற முறையில் அவரது விமர்சனம் நியாயமானதே.
  8. https://www.facebook.com/share/p/3UMgeJLADBq9DiJt/ இந்தப்படம் தியேட்டருக்கு வந்து பல காலமாகி விட்டது. அப்போது இல்லாத அளவுக்கு எந்தப்பட்த்திற்குமில்லாத அளவு விமர்சனங்கள் இப்போது படம் OTT வந்தவுடன் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. எல்லாம் நேர்மறையான விமர்சனங்கள். படம் மிகவும் மெசுவாகப் போகின்றது என்றாலும் இந்தக்கதைக்கு அதுதான் நல்லது போலத் தெரிகிறது. தவறவிடாமல்பாருங்கள்.
  9. இனமொன்றின் குரல் · இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து வடக்கு கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளது அதாவது 10:1 என்ற விகிதத்தில் இராணுவம் நிலைகொண்டிருக்கிறது. குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கின்றது. வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவம் வசம் இருக்கின்றது முல்லைத்தீவில் 1,578.27 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளார்கள் கிளிநொச்சியில் 4,378.8 ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளனர் யாழ்ப்பாணத்தில் 3,300 ஏக்கர் காணியில் இராணுவம் தங்கியுள்ளது இது தவிர யாழ்ப்பாணத்தில் 68 இடங்களில் தங்களின் நிரந்தர முகாம்களுக்கு காணி பெற்று கொள்ள முயற்சி செய்கின்றார்கள் வவுனியா மாவட்டத்தில் 1,021.55 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்ப்பட்டுள்ளது மன்னாரில் 130.77 ஏக்கர் நிலத்தில் இராணுவம் குடி கொண்டிருக்கின்றது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளடங்கலான கிழக்கு மாகாணத்தில் 8,457 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்திடம் இருக்கின்றது ஆனால் நியத்தில் மேற்படி அரச செயலங்களின் புள்ளி விவரங்களுக்கும் அதிகமான நிலங்களை வசப்படுத்தியிருக்கின்றார்கள் Oakland Institute யின் ஆய்வறிக்கையில் வடக்கு கிழக்கில் 30,000 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் நிலங்கள் இராணுவத்திடம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16,910 ஏக்கர் நிலத்தில் இராணுவம் குடி கொண்டிருக்கின்றது என Oakland ஆவணப்படுத்தியுள்ளது இதில் வன பகுதிகள் உள்ளடக்கப்பவில்லை அடையாளம் ஆய்வு நிறுவனம் வன பகுதிகளையும் உள்ளடக்கிய தனது ஆய்வில் முல்லைத்தீவில் 30,000 ஏக்கர் நிலம் இராணுவத்திடம் இருப்பதாக சொல்லுகின்றது உதாரணத்திற்கு திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் A9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1,702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது. அது பற்றி கணக்கில்லை. வன்னியின்மிக வளமான பொருளாதார ஆதாரமான சகல விவசாய பண்ணைகளும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இன்று வரை இருக்கின்றது முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாய பண்ணைகளிலிருந்து மட்டும் இராணுவம் வருடாந்தம் 15 மில்லியன் மற்றும் 13 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. பொருளாதாரம் சார்ந்து வேறு மாற்றுத் தெரிவில்லாமல் முன்னாள் போரா*ளிகளை இராணுவ பண்ணைகளில் வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள் இது போதாதென்று வடக்கின் முன்பள்ளி கட்டமைப்பும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கின்றது இவை இராணுவமயமாக்கலின் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன வடக்கின் 3,152 முன்பள்ளி ஆசிரியர்களில் 481 ஆசிரியர்கள் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு கட்டளை பிரிவின் கீழ் பணியாயாற்ருக்கின்றார்கள் அதாவது கிளிநொச்சியில் 303 பேர், முல்லைத்தீவில் 366 பேர் யாழ்ப்பாணத்தில் 12 பேர் இராணுவ நிருவாகத்தின் கீழ பணியாற்றி வருகின்றார்கள் இவ்வாறு மோசமாக செறிவாக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் வடக்கு கிழக்கு சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்கின்றார்கள் சிங்கள குடியேற்றங்கள்,பௌத்தமயமாக்கல் என சகல அத்துமீறல்களுக்கும் துணை நிற்கின்றார்கள் உதாரணமாக குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் மட்டும் பௌத்த பிக்குகள் உட்பட பல்வேறு தரப்பால் 41,164 ஏக்கர் நிலம் இராணுவ கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள்ளது அதே போல முல்லைத்தீவில் மத்திய ஒற்றையாட்சி நிறுவனங்கள் 80,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை இராணுவ ஒத்துழைப்புடன் ஆக்கிரமித்துள்ளது இது போதாதென்றுஇராணுவ கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் தான் தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கை ஆக்கிரமிக்கின்றார்கள் ஒரு சில தமிழ் கட்சிகளின் வேட்பளர் தெரிவு வரைகளில் கூட இராணுவ தலையீடு இருக்கிறது கடந்த தடவை வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட 3 பாராளமன்ற உறுப்பினர்கள் இராணுவ துணைப்படையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் உண்மையில் உயர் கல்வி நிறுவனமான பல்கலை கழகத்தின் துணைவேந்தரை தீர்மானிக்கும் இடம் வரை இராணுவம் ஆதிக்கம் செலுத்துகின்றது ஆகவே மேற்படி மிக செறிவான இராணுவமயமாக்கலை எங்கள் சமூகத்தின் கூட்டு எதிர்காலதிற்க்காக எதிர்த்தே ஆக வேண்டும் விட்டு கொடுப்பு என்கிற பேச்சே இதில் இருக்க முடியாது இதில் வெறும் வாக்கரசியல் செய்ய முடியாது ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட இராணுவம் மாற்றமின்றி மிக செறிவாக நிறுத்தப்பட்டிருக்கும் அவலத்தை மறைத்து சிலர் வெற்று அரசியல் செய்ய பார்க்கின்றார்கள் https://www.facebook.com/share/p/B532ZFmWpim9kmJo/
  10. வீதியைத் திறக்க வேண்டியது அரசின் கடமை. அதைத் தேர்தல் நேரத்தில் திறந்ததது வாக்கு வேட்டைக்காக என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.இது போன்று மேலும் தேர்தல்கள் வரும். தமழிமக்கள மீது போடப்பட்டுள்ள அழுத்தங்களை அவை குறைக்கும். இதில் அரசியல்வாதிகள் குளிர்காய நினைப்பதை என்னவென்பது?
  11. https://www.facebook.com/share/p/EXy8p3crXdkGhfqC/ விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இந்தப்பம் பிடிக்காது. அதனால்தான் தீயேட்ரில் படம் நன்றாக ஓடவில்லை. இந்தப்படத்திற்கு சி0ல விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு.
  12. படம் பார்க்கப் போவோம் என்று மகள் கேட்டாள். எனக்குக் கார்த்தியின் படங்கள் பொதுவாகப் பிடிப்பதில்லை. படத்துக்ப் போனபின் அதற்குள் நான் முழ்கி விட்டேன். படம் மெதுவாகப் போனாலும்.நாம் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது.தஞ்சைப் பெரிய கோயிலைப் படம்பிடித்துக்காட்டியது.ஆசை தீரத் தரிசித்தேன்.திடீரென்று எமது ஈழப் போராட்டத்தையும் மிக உணர்ச்சி மயமாக கவனமாக கத்தரி போடாத வகையில் தொட்டுச் சென்றது. அதை இயக்குநர் வேண்டுமானால் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதை வேண்டுமென்றே புகுத்தி இருக்கிறார்.ஜ அதேபோல் ஜல்லிக்கட்டு பல இடங்களில் சீமானின் பேச்சுகளின் தாக்கம் தெரிகிறது. பெயரை சீமான் பெயரை எழுதியதற்காகப் பார்க்காமல் விடாதீர்கள். நாம் வாழ்ந் வாழ்க்கை தெரியும் 50 பிளஸ் வயதானவர்களுக்கு மிக நெருக்கமான படம்.படம் தியேட்டரில் வந்த போது பெரிதாக விமர்சனங்கள் வரவில்லை. ஓடிடியில் வந்த பிறகு பல நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. https://www.facebook.com/share/p/3h3dNHnFyhJ51hde/ https://www.facebook.com/share/p/TzHwfyA4y375QnFw/
  13. வாழ்த்துகள்! வாழ்த்துகள்!மேலும் வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துகள்!
  14. திராவிடதேசியத்துக்கு தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கிக்றன. 50 ஆண்டுகால அரசியல் அதிகாரத்தையும் வைத்திருக்கின்றன். அவர்கள் பெயரில் திராவிடம் என்று வாக்குகளைைைக் கவர்வதற்காக வைத்திருந்தாலும் தமிழ்தமிழ் என்றே பேசி நடித்து தொடர்ந்து தமிழ்நாட்டின் தமிழ்மக்களின் வாக்குககைளக் குறிவைத்து அரசியல் நடத்திவருகிறார்கள். விஜய் தன்னால் தனித்து ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிந்து கூட்டணிக்கு அழைக்கிறார். திராவிடத்தேசியம் தன்னுடைய கொள்கைக்கு ஒத்து வராது என்று சீமான் முதல் ஆளாக கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார். சீமானைக்கழித்துப்பார்த்தால் 2 சீற்றுக்கு அதிமுக திமுக என்று தாவும் கம்னிஞ+ஸட்டுகளும் திருமா>வைகோ.காங்கிரஸ் தான் மிச்சம். விஸை பாஜகவோடு சேரமாட்hர் என்று பேசினாலும். திமுகவே பாஜகவோடு கூட்டுச் சேர்ந்து பாஜக எம்எல்லேக்களைப் பெறவும் பாஜக அரசில் பங்கெடுத்த வரலாறும் எல்லோரும் அறிந்ததே.திமுகவை ஊழல் கட்சி என்று மறைமுகமாகச் சாடும் விஜய் அந்த ஊழல்கட்சிகளைத் தாங்கிப்பிடித்த ஊழலுக்குத் துணைபோன அதற்கு வெள்ளையடித்த கட்சிகளைத்தான் கூட்டணிக்கு அழைக்கிறார். இவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?முதலில் மாநாட்டுக்கு வந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கதிரைகளை உடைக்காமல் போகச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும். இலருந்தாலும் தம்நாட்டுத்திரை உலகின் தலைமகன் ஈழத்தின் மருமகன் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். திராவிட வாக்குகள் சிதறட்டும்.
  15. அப்படியா? ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லையே. காங்கிரசுக்கு தூண்டில் போடுறவர் எப்படி ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவார்?திரவிடததையும் பெரியாரையும் கொள்கையாய் வைத்தது தமிழரல்லாதோர் வாக்குகளைக்கவரவும் அரசியல் பிழைத்தால் முpண்டும் சினிமாவுக்குப் போகவும்தான். எழுதிக் கொடுத்துப்பாடமாக்கி ஒத்திகை பார்த்ததை அவரது வாய்மொழி சொல்லாவிட்டாலும் உடல்மொழி சொல்கிறது.கிட்டத்தட்ட விஜயகாந் திரைப்படத்தன் கிளைமாக்ஸ் காட்சிபோல இருக்கிறது அவது பேச:ச. இது சினிமா இல்லை. இறங்கி வேலை செய்யணும். மக்களோட மக்களா நிற்கணும். பவுன்சர்களை சுற்ற வர வைத:தக் கொண்மு மக்களை எப்படி நெருங்குவது?கூடும் கூட்டம் இல்லாம் வாக்குகளாக மாறாது. திமுக மேடையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம் தேர்தல் முடிய உச்சத்தில் இ ருந்த வடிவேலுவை மீண்டும் எழும்ப முடியாத நிலைக்கத் தள்ளிவிட்ட வரலாறுகளை நாம் பார்த்திருக்கிறோம். விஜய் தேர்தலில் நின்று தனக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் உள்ளதென்று நிரூபிக்க வேண்டும். 10-15 வரை வரலாம்.இப்போது நாம் தீர்மானிக்க முடியாது.இருந்தாலும் விஸய் அரசியலுக்கு வருவதை நான் மனதார வரவேற்கிறேன். மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது.
  16. நடிகர் விஜய் அவர்களே...! "திராவிடமும் தமிழ்த் தேசியமும் இருகண்கள்.." என்று நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன? நீங்கள் அரசியலை இன்னும் தெளிவுற கற்கவில்லையா? அல்லது அரசியல் அறிவியலில் நீங்கள் இன்னும் ஒரு குழந்தை என்பதாகவே இதைப் பார்ப்பதா? அல்லது உங்களின் திட்டமிட்ட சதியா? 'சாதி, மதம் கடந்த அரசியல்..' என்பது உலகளாவிய நடைமுறை. அதிலொன்றும் பேசுவதற்கு இல்லை. அதேசயத்தில் 'இனம் கடந்து, மொழி கடந்து..' என்று உங்கள் வாய்க்கு வருவதை எல்லாம் பேசினால் அது அரசியல் பிழையாகும். இதன் மூலமாக நீங்களும் தமிழினத்திற்கு துரோகத்தை மட்டுமே வழங்குவீர்கள் என்ற அச்சம்தான் உண்டாகிறது. அதற்கான காரணங்களை உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன். உலகம் முழுவதும் உருவாகிய தனி நாடுகளில் 99% இனத்தின் வழியாக மட்டுமே உருவானவை. எனவே இனம் சார்ந்த அரசியலை போகின்ற போக்கில் நீங்கள் தட்டிவிட்டு செல்வது பிற்போக்குதனமானது. மேலும், நீங்கள் ஓர் அரசியல் தெளிவற்ற குழப்பவாதி என்பதையே உங்கள் முதல் மாநாட்டு மேடை பேச்சு வெளிச்சம் போட்டு அறிவிக்கிறது. ஒருவேளை நீங்கள் இனிமேல் தான் மேடைப் பேச்சைக் கற்றுக் கொள்வீர்கள் எனில் தலைசிறந்த அறிவாளிகளை உங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், தொடர்ந்து இதே பாணியில் உங்கள் மேடை பேச்சு அமையும் எனில் நீங்கள் வீழ்வது உறுதி. ஈவேரா படம் வேண்டும், ஆனால் அவரது கடவுள் மறுப்பு வேண்டாம். அண்ணாதுரையின் திராவிடம் வேண்டும், ஆனால் திராவிடம் என்ற பெயர் கட்சிக்கு வேண்டாம். தமிழ்த் தேசியம் வேண்டும், ஆனால் தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் வேண்டாம். பாஜகவின் கடவுள் ஏற்புக் கொள்கை உண்டு, ஆனால் அந்த கடவுளின் பெயரால் உருவான ஏற்றத்தாழ்வை ஏற்கமாட்டோம். அடேங்கப்பா... எப்படிப்பட்ட ஒரு குழப்பவாதி நீங்கள்..? விஜய் அவர்களே.. நீங்கள் குழப்பவாதியா..? அல்லது உங்களுக்கு இந்த வசனங்களை எழுதிக் கொடுத்தவன் குழப்பவாதியா..? உங்களைப் பின்னின்று நகர்த்தும் உளவு அமைப்புகளின் திட்டமிட்ட சதியா? 'தேசியம்' என்றால் என்னவென்று உங்களுக்கு முதலில் தெரியுமா? இந்திய தேசிய கட்சிகள் இந்தியா என்ற நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் வேலை செய்பவை. திராவிட தேசிய கட்சிகள் திராவிட நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் வேலை செய்பவை. இந்தியா ஒரு நாடாக என்றுமே இருந்தது இல்லை. திராவிட நாடு ஒரு கற்பனா வாதம். ஆனாலும் அக்கட்சிகள் சரியோ தவறோ தங்களுக்கு என்று ஒரு கொள்கை, ஒரு நில எல்லையை தீர்மானித்து வேலை செய்தன. தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களின் விடுதலை கோட்பாடு. தமிழர்களுக்கு என்று நில எல்லை உண்டு. அதன் உரிமையை வெல்வதே தமிழ்த் தேசியம். எனில் இதில் நீங்கள் எந்த புரிதலின் படி திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்று மேடையில் வாந்தி எடுத்து வைத்தீர்கள்? இந்தியா என்ற நாட்டை நாங்கள் ஏற்க முடியாது என்பது திராவிட வாதம். இந்தியா என்பதும் பொய், திராவிடம் என்பதும் பொய், தமிழர் நாடு என்பதே மெய் என்று தேசிய அரசியலின் இறுதி வடிவத்தை வலிவுறுதுவது தான் தமிழ்த் தேசிய கோட்பாடு. எனில், இந்த கோட்பாட்டு வரையறைகளில் நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது தானே அரசியலின் முதல் கேள்வியாக இருக்க முடியும். அந்த முதல் கேள்விக்கே நீங்கள், ' திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் ' என்ற மிகவும் மட்டமான ஒரு பதிலை சொல்லி இருப்பது எப்படி ஏற்புடையது ஆகும்? கேள்வித்தாளில் A அல்லது B இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால், இரண்டையும் தேர்வு செய்வது முட்டாள்தனம் இல்லையா? உங்களின் இந்த குழப்பவாத பேச்சுக்கு பின்பாக, ஒருவேளை நீங்களும் உங்கள் அரசியல் ஆலோசகர்கள் குழுவும் எழுந்து வரும் தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கலாமோ? அல்லது இந்தியாவின் கொள்கை வடிவமைப்பாளர்கள் எம் ஜி யார் , வைகோ , விஜய காந்த் போன்றவர்கள் மூலமாக தமிழ்த் தேசிய எழுச்சி வராமல் தடுக்க அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தியது போல, அடுத்து உங்களையும் பயன்படுத்த முனைகிறார்களோ? என்ற கேள்விகளும் எழுகிறது. திராவிட நாடு கோரிக்கையை அண்ணாதுரை கைவிட்ட பொழுது, ஒருத் தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் தொய்வடைந்தனர். அண்ணாதுரையின் மறைவுக்கு பின், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தமிழ்த் தேசியர்கள் இயக்கம் கட்டி, மெல்ல மெல்ல தமிழ்த் தேசிய அரசியலை பேசிக்கொண்டு இருந்த பொழுது, எம் ஜி ஆர் என்ற நடிக கோமாளி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்து "இந்திய = திராவிடம்" என்று கொள்கை சமரசம் செய்த பொழுது, அதன் பின்புலம் என்னவென யோசிக்க கூட அறிவற்ற தமிழ் இளைஞர்கள் கூட்டம் அன்று எம் ஜி ஆரை நம்பி வீணாய் போனார்கள். மீண்டும் ஒரு தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் தொய்வடைந்தனர். இந்திய அமைதிப் படை ஈழ நிலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படையுடன் மோதி தோல்வி அடைந்து நாடு திரும்பிய பின், மெல்ல மெல்ல துளிர்விட்டு எழுந்த தமிழ்த் தேசிய உணர்வை வைகோ என்ற ரா ஏஜண்டை கொண்டு ஒரு கட்சித் தொடங்கி, மீண்டும் ஒருத் தலைமுறை தமிழ் இளைஞர்களை திசைதிருப்பி ஏமாற்றியது இந்தியாவும் அதன் கொள்கை வகுப்பாளர்களும். வைகோவின் காட்டிக் கொடுப்புக்கு பலனாக அவர் தொடர்ந்து இந்திய நாடாளுமன்றம் செல்ல வழிவகுத்தது இந்தியாவும் அதன் கூட்டுக் களவாணியான திராவிடமும். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று விஜய் காந்த் கொஞ்ச காலம் உருட்டியதும், தமிழ்த் தேசியம் என்ற கொள்கை பக்கம் தமிழ் இளைஞர் கூட்டம் வரக் கூடாது என்பதற்காக மட்டுமே. அதன் தொடர்ச்சி தான் இன்று நீங்கள்.? ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு பின், தமிழ்நாட்டில் நடந்த தமிழ்த் தேசியப் பெருவெடிப்பு பல லட்சம் தமிழ் இளைஞர்களின் உயிர் கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை ஏற்க வைத்தது. இன்று அதை மீண்டும் ஒருமுறை அழிக்க கோடம்பாக்கத்தில் இருந்து மீண்டும் ஒரு ஆளாக நீங்கள் வந்து இருப்பதை உணர முடிகிறது விஜய் அவர்களே...! எம் ஜி ஆர்.. 'இந்தியா = திராவிடம்' என்று தேசிய இன அரசியல் கொள்கையை நீர்த்துப் போக வைத்தது போல, நீங்கள் 'திராவிடம் = தமிழ்த் தேசியம்' என்று சொல்வதன் மூலமாக மீண்டும் எங்கள் நிலத்தில் எழுந்துள்ள இன அரசியலை நீர்த்துப் போக துடிப்பீர்கள் எனில்... ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வோம்... இது எம் ஜி ஆர் காலமும் இல்லை... நீங்கள் எம் ஜி ஆர்ரும் இல்லை... இயல்பாகவே நீங்கள் தோற்றுபோக பல நூறு அரசியல் காரணங்கள் இன்று உள்ளது. அவற்றை எல்லாம் உங்களுக்கு இப்பொழுது விளக்க விரும்பவில்லை. ஆனால், உறுதியாக ஒன்றை சொல்கிறோம்... தமிழ்த் தேசிய அரசியலை உங்களின் மசாலா அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்கள் போதைக்கு எங்கள் உயிர் அரசியலை ஊறுகாய்யாக பயன்படுத்த விரும்பாதீர்கள்... ஒரு குத்துப் பாட்டு, ஒரு காதல் பாட்டு, ஒரு சண்டை, ஒரு கொலை, ஒரு கொள்ளை, ஒரு நகைச்சுவை என்று கலவையாக மசாலா படம் நடித்து நீங்கள் பெரிய நடிகனாக வந்ததில் பிரச்சனை இல்லை. அதே பாணியில் கொஞ்சம் இந்தியம், கொஞ்சம் திராவிடம், கொஞ்சம் தலித்தியம், கொஞ்சம் தமிழ்த் தேசியம் என்று மசாலா அரசியல் செய்ய நினைப்பது கேவலமானது. அன்று எம்ஜிஆர் செய்த பித்தலாட்ட அரசியல் அவரது ரசிக தொண்டர்களுக்கு புரியவில்லை. வைகோவின், விஜயகாந்தின் பித்தலாட்ட அரசியல் அன்றைய தமிழ் இளைஞர் கூட்டம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், இன்று நீங்கள் ஆட நினைக்கும் இந்த ' இந்திய - திராவிட - தமிழ் தேசிய கூட்டாச்சோறு எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்களும் உங்களை பின் நின்று நகர்த்தும் சதிகார கூட்டமும் என்ன ஆட்டம் ஆடினாலும், இனி தமிழ்த் தேசியத்தை எவனாலும் வீழ்த்த முடியாது என்று அறிந்து கொண்டு களமாடுங்கள் விஜய் அவர்களே...! நீங்கள் என்ன நோக்கத்தோடு வந்துள்ளீர்கள் என்று நாங்கள் அறிவோம்... ஆனால் உங்களின் அப்பாவி ரசிக தொண்டர்கள் அறிய வாய்ப்பில்லை... கொஞ்ச காலத்தில் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்... உங்கள் அரசியல் வருகையால் ஒரேவொரு நன்மை நடந்துள்ளது... அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்... பல லட்ச கணக்கான உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் உங்கள் வாய் வழியாகவே 'தமிழ்த் தேசியம்' என்ற வார்த்தையை கடத்தி உள்ளீர்கள்... உங்களுக்கு ஒருவேளை அந்த வார்த்தையின் அர்த்தமும் ஆழமும் புரியாமல் போகலாம், உங்களின் ஒரேவொரு தொண்டன் அதன் ஆதியையும் அந்தத்தையும் தேடினால் போதும்... மற்றது தானாக நடக்கும்... அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்... நன்றி.. -பேராசிரியர் ஆ. அருள் இனியன் தலைவர் தமிழர் நாட்டுக் கட்சி
  17. திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.
  18. மிகவும் பாராட்டத்தக்க செயல். இது எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கட்டும்.
  19. நெறியாளர் பார்த்துப் பல்லுப்படாமல் கேட்கும் கேள்விகளுக்கு சுமத்திரன் தனது சட்டத்தனமான பதில்களைக் கொடுத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ஆனால் இநதக் காணொளியின் கீழே உள்ள பின்னூட்டங்கள் எதுவும சுமத்திரனுக்குத் சாதகமாக இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.