Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799
  2. உண்மையான இடதுசாரிகளென்று, இன்று உலகில் எங்குமே இல்லை. இதில் சிங்கள பௌத்த பேரினவாதத்துள் ஊறியவர்களைக் கூறவும் வேண்டுமா? உண்மையான இடதுசாரிகளாயின் சுனாமிக்காலத்தில் உருவான கட்டமைப்மைப்புக்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அதற்கான வாய்ப்புகளைக் குழப்பியயடித்தவர்கள். இவர்களிடம் எமது மக்கள் அதிகம் எதிர்பார்கிறார்கள். ஆனால், இறுதியில் ஏமாற்றமே பரிசாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. இந்திய மேற்குலக்கூட்டுகுச் சாதகமான அரசியலே கடந்த 15ஆண்களாக நடைபெற்றது. அடுத்துவரும் அநுர அரசும் அப்படியே. முதல் பயணமே இந்தியா. சீனாவுக்கோ அல்லது ரஸ்யாவுக்கோ போகவில்லை. எமது பிரச்சினை தீரும்வரை பேசவேண்டியதேவையும் இருக்கும். அது ஒருவேளை சிங்களத்துக்காக இனவாதத்தோடு நாய் குலைத்தாற்கூட பதிலளிக்க வேண்டிய சூழலே தமிழினத்தினதாக உள்ளது. நாம் எமது தலைமுறையில் காணமுடியாமல் போனாலும் அடுத்தலைமுறைக்காவது இவற்றைப் பதியமிடப் பேசவேண்டும். எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. இதனை யார் செய்திருந்தாலும், எமக்காகத் தமிழ்த் தேசியம் என்ற தமிழினத்தின் இருப்புக்காகத் தம்மை ஈந்தளித்தோரை வணங்க்கும் மாதத்தில் தேவையற்ற குழம்பங்களுக்கு வழிசமைக்கலாம். அதேவேளை விமல், ரில்வின் போன்ற சானாதிபதியின் நிழற்குடைப் பரப்புரைகள் சும்மாவே ஆடுவார்கள்...... அப்படியிருக்கும்போது தமிழினம் ஏனிப்படி மறைகழண்டவர்கள்போல் யோசிக்கிறார்களோ தெரியவில்லை.
  5. அதுதான் சிங்களம். சிங்களம் தான் விரும்போது, தனது தேவைகருதி, தனது இனநலன் சார்ந்து மட்டுமே முடிவெடுக்கும். தமிழர்களைப்போலல்லத்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. “தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல Sri Lanka.4 hours ago தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல. “இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும். ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பௌத்த சமய முன்னுரிமையும் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியாக - பிரதமராக பதவி வகிக்க முடியாத பின்னணிகளும் இனவாத நோக்கம் கொண்டவை என்று பொருள் கொள்ள முடியும் அல்லவா? 1945ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் போது, ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 1(2), 55(c) சரத்துகளில், 'சம உரிமை, மக்களின் சுயநிர்ணய உரிமை (Equal Rights and Self-Determination of Peoples) ஆகியவற்றின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிய சட்டவிளக்கம் உண்டு. இலங்கைத்தீவில் 'சோசலிச சமத்துவம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு ஜேவிபி இரண்டு முறை அயுதப் போராட்டம் நடத்தித் தோல்வி கண்ட நிலையில், 1994ஆம் ஆண்டு முதல் முதல் ஜனநாயக வழியில் அரசியலுக்குள் நுழைந்தது. ஆனால் ஆரம்பகாலம் முதல் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்க மறுத்திருந்தது. இப் பின்னணியில் 2024ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்துடனும் ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி எனப்படும் மக்கள் சக்தி தற்போது 'தேசம்' 'சுயநிர்ணய உரிமை' என்ற ஒரு இனத்தின் சுயமரியாதைக்குரிய கோட்பாடுகளை இனவாதமாகச் சித்தரிக்க முனைவது அரசியல் வேடிக்கை. வெளிச் சக்திகளின் வற்புறுத்தல்கள் இன்றி, ஒரு இனக் குழுமம் தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்ளும் தத்துவமே சுயநிர்ண உரிமை என்பதன் மற்றுமொரு விளக்கம். தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு. சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக ”மொழி” என்பதை மையமாக் கொண்டு சொல்லப்படுகிறது. பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வகுக்கப்படுகிறது. வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை எடுத்துரைத்த திம்புக் கோட்பாட்டின் முதலாவது பகுதியானது 'இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்' என்று சட்ட வியாக்கியாணம் செய்கிறது. தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் காம்யூனிஸ போராளியான ஜோசப் ஸ்டாலின், 'வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்' என்று வரையறுக்கிறார். குறிப்பாக பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும். ஒரு தேசத்தின் இருப்பு என்பது, 'நித்திய பொதுவாக்கெடுப்பு' என்று ஏனஸ்ட் றெனன் என்ற அறிஞன் வரையறுக்கிறார். இதனை மையமாக் கொண்டே வடக்குக் கிழக்கு இணைந்த தயாகம் என்பதற்கும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை அங்கீகரிக்கவும் பொதுவாக்கெடுப்பு ஒன்றை சிவில் சமூக அமைப்புகள் கோரி வருகின்றன. 'சர்வதேச சட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட மூலாதாரங்கள், சுயநிர்ணய உரிமையானது பொதுவாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மூலம் நிறைவேற்றப்படுவதாக நிறுவுகிறது” என்று கியூபெக் மாநிலத்தின் பிரிவினை தொடர்பான வழக்கில், கனடிய உச்சநீதிமன்றம் பொருள் கோடல் செய்துள்ளது. ஆகவே இச் சர்வதேச சட்ட விளக்கங்களை எவருமே மறுக்க முடியாது. 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கப்பிளவும் 1921 இல் உருவான தமிழர் மகா சபையுயும் சிங்கள - தமிழ் இன முரண்பாட்டின் ஆரம்பம். அன்றில் இருந்து இன்றுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் யாப்புக்களிலும் ஈழத்த் தமிழர்களின் சுயநிரிணய உரிமை மறுதலிக்கப்பட்டு வந்த பின்னணியில் அகிம்சைப் போராட்டங்களும் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களும் உருவெடுத்திருந்தன. 2009 மே மாதத்திற்குப் பின்னரான 15 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக மறுதலிப்புகளே விஞ்சிக் காணப்பட்டன. இன நல்லிணக்கத்தை ஏற்கும் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்கிறது என ஜெனீவா மனித உாிமைச் சபையும் குற்றம் சுமத்தியிருந்தது. இப் பின்னணியில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் போது தமிழர்களின் ”தேசம்” ”சுயநிர்ணய உரிமை” மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதமாகவே கருதும் என்றால், பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. 1948இல் இருந்து அரசியல் - பொருளாதார பொறிமுறைகள் வகுக்கப்பட்ட போது தமிழ் - முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டவில்லை. இதனால் எழுந்த 30 வருட போர் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்கிறார் அசோக லியனகே என்ற பொருளியல் ஆய்வாளர். இன்று வெளியான 'ஒருவன்' நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் https://oruvan.com/sri-lanka/2024/11/18/nation-right-to-self-determination
  7. வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அவைதானிப்ப ஆப்பிழுத்த குரங்கின் நிலையில்... நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி எனக்கும் ஒரு**** அனுப்பி சுப்பரான சனாதிபதியாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. எதிர்வரும் 5ஆண்டுகளில் தெளிவான செய்தியை இடதுசாரிக் கோட்பாட்டு முகமூடியுள் மறைந்துள்ள புதிய சிங்கள இனவாத ஆட்சியாளரிடமிருந்து தெளிவானதும் முழுமையானதுமான பரிசுகளைத் தமிழினம் பெறும்வரை இந்த அங்கலாய்ப்புகள் தொடரும். முதலாவது ஆட்சி ஆண்டில் கொண்டுவரப்படும் அரசியல் திருத்தம் 13ஐ தூக்கி எறிவதோடு தொடங்கும் என்றே ஊகிக்கமுடிகிறது. அல்லது இந்தியாவைப் பகைக்காது 13இல் இருக்கும் ஏனைய பற்களையும் பிடுங்கிவிட்டு ஒப்புக்குத் தேர்தலை நடாத்தி அதிகாரங்களை மாகாணங்களுக்குக் கொடுப்பதாகக் காட்டிவிட்டுத் தமிழினத்தை பப்பாவிலேத்தித் தள்ளிவிடும் அரசியலை யே.வி.பி என்ற என்.பி.பி கையெலெடுக்கும். தமிழினம் கவர்ச்சியரசியலுள் அள்ளுண்டுபோயுள்ள சூழலில் தமிழினம் தனது இருப்பை எப்படித் தக்கவைக்கப்போகிறது என்பது மிகப்பெரும் வினாவாகத் தொக்கிநிற்கிறது. சிங்களத்தின் உளவு அமைப்புப் புலம்பெயர் நாடுகள்வரை வியாபித்துள்ள சூழலில், தாயகநிலை எப்படியிருக்கும், அவர்கள் தமிழ்த்தேசிய ஆதரவுத்தளங்களைச் சும்மாவிடுவார்களா? இல்லைத்தனே. ஆட்சியும் கட்சியின் பெயருமே மாறியுள்ளது. ஆனால், அமைந்துள்ளது சிங்களர் அரசாகும். யூரூப்பர்கள் மட்டுமன்றி சில முன்னணி ஊடகங்களும் இப்படியான தலைப்புகளைப் போடுவது வெட்கக்கேடு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. வடக்கில் சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களாலோ, குடியேற்றவாசிகளாலோ இடையூறுகள் இல்லை. மற்றும் நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெளிநாடுவாழ் உறவுகளின் உதவியென்று நிதியும் கிடைக்கும் அதேவேளை, எந்தவொரு அரசியல் புரிதலுமற்ற யுரூப்பர்களுடைய பரப்புரையின் தாக்கம் போன்றனவும் தாக்கம் செலுத்தியுள்ளன. எடுத்துக்காட்டிற்காக 1300மீற்றர் வீதி திறப்பைப் பேசியவர்கள்,அங்கே காணிகளுக்குக் கம்பிக்கட்டை போட்டு வேலி அமைப்பது பற்றி வாயே திறக்கவில்லை.
  10. பாதையைத் திறந்துவிட்டு வளவுக்க இறங்கவிடாமல் வேலியைப் போடுறான். அதைப்பற்றி ஒருகதை கிடையாது. இவையள் ஏதோ பாதையை விட்டதை, ஈழத்தை விட்டமாதிரி உச்சமா வாசிக்கினம். எனக்கு சில யூரூப்பர்மாரிலை சந்தேகமாக இருக்கிறது. 14ஆம் திகதி அநுரக்குப் போடுங்கோ என்று சொல்லும் வேலையையும் ஒருவர் செய்வதை அவதானித்தேன். மயிலிட்டித்துறை முகத்தைக் காட்டுகினம். எங்கடசனம் தொழில் செய்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்த துறைகளில் ஒன்று. இன்று சிங்களவன் படகுவைச்சு மீன்பிடிக்கிறான். .... இப்படி நிறைய எழுதலாம். காலத்தைப் பதிவுசெய்த கவிதைக்குப் பாராட்டுகள்.
  11. தமிழ்சிறியவர்களே, யாழ்கள தேர்தல் மதிப்பீட்டியே இணைந்துகொள்ள அழைத்தமைக்கு நன்றி. 2024ஆம் ஆண்டினது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பல தமிழ்த் தேசிய எதிர்நிலையாளர்களுக்கும், சிறிலங்காத் தேசியர்களாய் மிளிரும் தமிழருக்கும் வாய்ப்பான தேர்தலாக இருக்கும்போலவே தோன்றுகிறது. ஆனாலும், ஆசைக்கு அழவில்லைத்தானே. அதனால் தமிழ்க்கட்சிகளை முழுமையாகத் தமிழினம் கைகழுவி சிங்களத்தோடு ஐக்கியமாகிவிடும் என்றும் கூறிவிடமுடியாது. வளர்ந்த நாடுகளிலேயே கணிப்புகள் சறுக்கிவிடுவதுண்டு. இந்த ஆண்டு தேர்தற்களமானது என்றுமில்லாத வகையிற் மிகப்பெரும் குழப்பமாகவும், முடிவுகளை முன்கூட்டித் தீர்மானிக்க முடியாத சூனியநிலையாகவும் உள்ள சூழலில் மதிப்பிட முடியுமா? பார்ப்போம் இன்னும் பத்துநாட்கள் இருக்கின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. இவர் புலிகளின் ஆயுதபலம் இருக்கும்வரை மத்தியில் கூட்டு, மாநிலத்தில் சுயமென்று பாடித்திரிந்தவிட்டு புலிகள் இல்லாத இந்தப் பதினைந்து ஆண்டுகளில் இப்போ தேர்தல்காலத்தில் மீண்டும் உளறுகிறார். இந்தியாவே இவரது வழக்குகளைக் கணக்கிலெடுக்கவில்லை. இலங்கையரசு, அனுர அரசு சிங்களர் அரசு, தமிழரைத் துன்புறுத்திய தமிழரைத் தண்டிக்குமா? அரவணைக்குமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்: மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஜனாதிபதிக்கு கடிதம் November 1, 2024 2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான காலப்பகுதியிலும் நவம்பரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த கடிதத்தை எழுதுகின்றது. இலங்கை தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள ,மிக மோசமான பொருளாதார வன்முறைகள்; மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டு மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற சூழமைவில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் குறி;த்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். 2022 அரகலய இயக்கம் ஆட்சிமுறை மாற்றம்,ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், வெளிப்படைதன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தியது. இவை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ள விடயங்கள். இலங்கையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் ,அரசியலமயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மற்றும் தண்டனையின்மை கலாச்சாரம், போன்றவற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கிய தேவையாக உள்ளதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உட்பட ஏனைய அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ளன. அர்த்தபூர்வமான ஆட்சிமுறை சீர்திருத்தம்,நாட்டில் ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியதன் அவசியம்,நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட பொறுப்புக்கூறலை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நாங்கள் அறிந்துள்ளோம் அங்கீகரிக்கின்றோம். மேலும் சமீபத்தைய நிகழ்வுகள் இலங்கையின் வன்முறை மற்றும் பலவீனமான சமாதானங்கள் குறித்த அனுபவங்களை மீள நினைவுபடுத்துகின்றன. மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தீர்வைகாண தவறியமை ஏற்கனவே காணப்படும் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த நேரத்தில் 2024 ஒக்டோபரில் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள் வெளியிட்ட முக்கியமான வாக்குறுதி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. சவால்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் ,நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்;ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை திரும்பிபார்க்கவேண்டும், எனவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வெளிப்படையான அனைவரையும் உள்வாங்கி முன்னெடுக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த மாற்றங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும்,புதிய நாடாளுமன்றத்திலேயே இதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகள் குறித்த உறுதி;ப்பாட்டை மீள உறுதி செய்யவேண்டும்.மேலும் புதிய நாடாளுமன்றம் இந்த சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான ஆயத்தவேலைகளை செய்யவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகி;ன்றோம். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற சம்பவங்கள்- இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற நன்குஅறியப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வது பொதுமக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயம். இதில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் உட்பட ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துதல் அடங்கும். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்- நிறைவேற்றதி;கார முறையை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்- 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய இனப்பிரச்சினை மற்றும் இலங்கையின் சிறுபான்மையினர் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் துயரங்களை தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை காண்பிப்பதற்கான முதல்படியாகும். தற்போதுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இனமத சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். சட்ட சீர்திருத்தம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மனித உரிமைதராதரங்களிற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்யவும், சிறுபான்மையினத்தவர்களை பாதிக்கும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும்,சீர்திருத்தங்களை நாங்கள் கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் இணையவழிபாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம், கடந்த காலங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளுதல் – இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நீதியை தேடி மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதற்கான நேர்மையான முயற்சிகள் அவசியம். பொறுப்புக்கூறல் தொடர்பான சுயாதீனமான நடவடிக்ககளை ஆரம்பித்தல் ,ஆழமாக வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தி;ற்கு முடிவை காண்பதற்காக உண்மையை தெரிவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும். https://www.ilakku.org/பயங்கரவாத-தடைச்சட்டத்த-5/
  14. சிங்களக்காடைத்தன அரசு செய்த தமிழினப்படுகொலையையும், நாம் இழந்த எமது சிறுவர்களையும் நினைவூட்டுகிறது. ஆனால், பலஸ்தீனருக்காக ஐ.நாவரை களத்தில்.... ஈழத்தமிழராகி நாம் சாட்சிகளே இல்லாது அழிக்கப்பட்டு 15ஆண்டுகள்.. உலகம் நீதியின்பாலில்லை. ஆதிக்கத்திமேல் நிறுவப்பட்டள்ளதின் சாட்சியாகக் காஸா. நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி
  15. வளவனவர்களே இணைப்புக்கும் கருத்துக்கும் நன்றி. சற்றுமுன் ஒரு காணொளி பார்த்தேன்.யாழிலும் இணைத்துள்ளேன். அதில் அந்தச் சகோதரி (32ஆவது நிமிடத்தில்) சொல்கின்ற விடயத்தை இதுபோன்ற யூரூப்பர்களது ஆழமான பார்வையற்ற பரப்புரைகள் செயற்படுத்திவிடுமோ என்று யோசிக்க வைக்கிறது. வீதியைத் திறந்துவிட்டு, உள்ளேயுள்ள படைமுகாமுக்கு அவன் வேலியைப்போடுவதை ஒரு யூரூப்பர்கூடக் கேட்கவில்லை. கதைக்கவில்லை. நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி
  16. ஐநாவில் அதிரடி காட்டும் ஶ்ரீலங்கா! தமிழர்களுக்கு தீர்வு இதுவே!! | Sri Lanka | Jaffna தமிழர் தொடர்பாக ஐ.நாவிற் செயற்படுகின்ற ஒரு சகோதரியினுடைய கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. ஒரு இளம்பெண்ணாக இருக்கிறார். சிறப்பாக விளக்குகின்றார். யாழ்க்கள உறவுகள் பார்க்பதற்காக இணைத்துள்ளேன். நன்றி-யூரூப் நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி
  17. இரண்டாவது காணொளியில் வீடுகளைப் பார்க்க மனம் வேதனையாக இருக்கிறது.எவளவு கனவுகளோடு இந்த வீடுகள் கட்டப்பட்டிருக்கும். தற்போது அவை நினைவுகளாகக் காட்சியளிக்கின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. நன்றி, நீங்களும் அவதானிதுள்ளீர்கள். குமாரசாமிஐயா இப்படித்தான் சிலர் விவேகமென்று வேண்டாத கருத்துகளை காணொளியென்று பரப்பிவருகிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி காணொளியெடுப்பவரது அண்மைய காணொளிகள் ஏறக்குறைய அநுரவிற்கான பரப்புரையாளர்போல உள்ளதும் நோக்கப்பட வேண்டியது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. யாழிணையத்திலே ஏற்கனவே பல்வேறு திரிகளில் சும் வெளிநாட்டமைச்சர் பதவியை இலக்குவைத்து இன்னொரு கதிர்காமராவோ அல்லது நீலனகாவோ சிங்களத்துக்குத் தொண்டாற்ற ஆவலோடு திரிவதாக எழுதப்பட்டவையே. ஆனால், அனுராவைச் சந்தித்து அதைதான் ஆள் கேட்டிருக்குமோ. யாரறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. ஒற்றுமை, தமிழ் அகராதியில் மட்டுமே உள்ள சொல்லாகிப் பல காலம். ஆனால், படைப்பாளர்களால் அடிக்கடி பதவிடப்படுகிறது. இன்றை தேவையை வலியோடு வலியுறுத்தும் படைப்பு. பாராட்டுகள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படினும் அரசியல் தீர்மானம்சார் அதிகாரங்கள் ஜே.வி.பி வசமே உள்ளன! Posted on October 21, 2024 by தென்னவள் 36 0 சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், பொதுத்தேர்தலின் பின்னர் நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் பின்னணியில், விசேட நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு: கேள்வி – எதிர்வரும் பொதுத்தேர்தலில் எத்தனை ஆசனங்களை வென்றெடுக்கும் எதிர்பார்ப்புடன் பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறீர்கள்? பதில் – இம்முறை வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தெரிவுசெய்யப்படலாம். அதன்படி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் நாம் அவற்றில் 10 ஆசனங்களைக் குறிவைக்கிறோம். கட்சியை வளர்ப்பதும், நாங்கள் அறுதிப்பெரும்பான்மை எடுத்துவிட்டோம் என்று காண்பிப்பதும் அதற்குக் காரணம் அல்ல. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையுடன் ஸ்தம்பிதமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே குறிப்பிட்டிருந்தார். அந்த இடைக்கால அறிக்கையானது மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கியதாகவே அமைந்திருந்தது. தமிழிலும், சிங்களத்திலும் ‘ஏக்கிய இராச்சிய’ என்ற சொற்பதம் தான் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அச்சொல்லுக்கான தமிழ் சொற்பதம் ‘ஒற்றையாட்சி’ என்பதாகும். அதற்கு நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக ஏற்கனவே வலுவானதொரு அர்த்தம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இப்புதிய அரசியலமைப்பின் ஊடாகவும் ‘ஏக்கிய இராச்சிய’ என்ற ‘ஒற்றையாட்சி’ முறைமையே தொடரப்போகிறது. அதனைத் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் மூடிமறைக்கும் நோக்கில் ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ் சொற்பதத்தைப் பிரயோகித்து, ஏமாற்றுவதற்கான முயற்சியொன்றைத் தமிழரசுக்கட்சி முன்னெடுத்திருந்தது. எனவே இந்த நடவடிக்கையைத் தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முடிவுறுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றையாட்சியை உள்ளடக்கிய இப்புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கவில்லை. ஆனால் அவ்வேளையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சகல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் அம்முயற்சிக்கு ஆதரவளித்தன. தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமே தேவையில்லை என்று கூறியிருக்கிறார். எனவே வரப்போகிற பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்கையில், அதனை வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரித்துவிட்டால், அதற்குப்பிறகு இனப்பிரச்சினையொன்று நிலவுவதாக எப்போதும் பேசமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதுவரையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பையும் தமிழர்கள் ஆதரிக்கவில்லை என்பதனாலேயே போர் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் இனப்பிரச்சினை குறித்துப் பேசுகிறோம். ஆகவே ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு ஏதுவான புதிய அரசியலமைப்பை தமிழ் மக்களின் அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரிப்பதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை தமிழ்மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோன்று அம்முயற்சியைத் தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கே வாக்களிக்கவேண்டும். கேள்வி – அவ்வாறெனில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஆட்சிபீடமேறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்பதாகவே, அவர்களது ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிட்டாது என்ற தீர்மானத்தை எடுத்துவிட்டீர்களா? அந்தத் தீர்மானத்தை எம்முடன் பேசுவதற்கு முன்பதாக அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். எனவே தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. ‘அரகலய’ போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் இடைக்கால ஜனாதிபதியொருவரைத் தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்தின் வசமிருந்தது. அப்போது தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்த்தர்களான ஹரினி அமரசூரிய மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் எம்மைச் சந்தித்தனர். அப்போது அவர்களது நிலைப்பாடுகள் கணிசமானளவு முற்போக்கு அடிப்படைகளைக் கொண்டிருந்த போதிலும், அரசியல் விவகாரங்கள் அனைத்தும் மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், அதில் தம்மால் ஆதிக்கம் செலுத்தமுடியாதிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அரசியல் தீர்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் நாம் பங்கேற்காமைக்குக் காரணம் அது மக்களால் ஆணை வழங்கப்படாத ஜனநாயக விரோத ஆட்சி என்பதேயாகும். அவ்வேளையில் மக்களே கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் எவ்வாறெனினும் சிங்கள தேசத்துடன் தான் பேசவேண்டும். ஆனால் அச்சிங்கள மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு அரசாங்கத்துடன் நாம் பேசுவதென்பது, அம்மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகவே அமையும். என்னைப் பொறுத்தமட்டில் சிங்கள மக்களுக்குத் துரோகமிழைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்துப் பேசுவது முட்டாள்த்தனமான செயற்பாடாகும். இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை இல்லை என்று நாங்கள் கூறவரவில்லை. ஆனால் காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். அதன் பின்னரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோமாயின், நாமும் அவர்களது நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவே கருதப்படும். ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். வட, கிழக்கில் அவர்களை எதிர்த்துத்தான் நாம் எம்முடைய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். கேள்வி – ஆக, தென்னிலங்கை சிங்கள அரசாங்கத்துடன் பேசித்தான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெறமுடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? முக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைக் கண்டடைவதற்கும், ஒரே நாட்டுக்குள் இரு தேசங்கள் ஒன்றாக இருப்பதற்கும் அவர்களுடன் பேசித்தான் ஆகவேண்டும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அப்பேச்சுவார்த்தை மூலம் எவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரப்போகிறீர்கள் என்பது தான் முக்கியமானது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு நாம் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியும். கடந்த காலங்களில் இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் தேவைப்பாடுகளுக்கு ஏற்றவாறு செயற்படக்கூடிய அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது, அந்நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஓரளவுக்குத் தளர்வாகப் பேசினர். பின்னர் அந்நாடுகள் வலியுறுத்தும்போது காட்டமாகப் பேசினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் விளையவில்லை. ஆகையினாலேயே இதுவரை தாம் ஆணை வழங்கிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் என அடையாளப்படுத்தப்படும் தரப்புகள் மீது தமிழ் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். கேள்வி – உங்களது கட்சி உட்பட? பதில் – எம்முடைய கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. இதுவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமே தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தான் எமக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. நாங்கள் அவ்விரண்டு ஆசனங்களை வெல்வதற்கு முன்னரும், வென்றதன் பின்னரும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகளில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதற்கு முன்னர் இனப்படுகொலை, சமஷ்டி, தமிழ்த்தேசம் போன்ற வார்த்தைகளையே உச்சரிக்காதவர்கள், இப்போது அவ்வார்த்தைகளின்றி தமிழ்மக்கள் மத்தியில் செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர். அந்த மாற்றத்துக்கு அடித்தளம் இட்டவர்கள் நாங்கள் தான். எனவே தமிழர் நலனை முன்னிறுத்திய பேரம் பேசலை முன்னெடுப்பதற்கு இம்முறை தேர்தலில் மக்கள் எமக்கு ஒரு வாய்ப்பளித்தே ஆகவேண்டும். கேள்வி – வட, கிழக்கில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களுடன் மக்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், அடுத்துவரும் பாராளுமன்றப் பதவிக்காலத்துக்குள் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்ற உத்தரவாதத்தை வழங்குவீர்களா? பதில் – இங்கு இரண்டு விடயங்கள் மிகமுக்கியமானவை. முதலாவது எமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நகர்வுகளை முழுமையாகத் தடுக்கவேண்டும். ஆகக்குறைந்தபட்சம், அந்நகர்வுகள் எம்முடைய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். அதற்கு அப்பால் தமிழ் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு வழங்கப்படும் பட்சத்தில், அதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கிறோம். கேள்வி – இருப்பினும் ஜனாதிபதித்தேர்தலின்போது தேசிய ரீதியில் எழுச்சியடைந்த மாற்றத்துக்கான கோஷம், வட, கிழக்கு மாகாணங்களிலும் எதிரொலிப்பதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, அவர்கள் சிங்கள தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடிய நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இம்மாற்றத்தின் எதிர்கால சவால்களை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்? பதில் – எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அதுவொரு திட்டமிட்ட கருத்துருவாக்கமே தவிர, உண்மையான களநிலைவரம் அதுவல்ல. குறிப்பாக நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வட, கிழக்கு மாகாணங்களில் குறைந்தளவு வாக்குகளைப்பெற்று கடைசி இடத்திலேயே இருந்தார். கேள்வி – ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு சிங்கள தேசிய கட்சியல்லவா? வட, கிழக்கு மாகாணங்களில் அக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தானே முன்னிலையில் இருந்தார்? பதில் – ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்குமாறு ஒரு பாரம்பரிய தமிழ்த்தேசிய கட்சி தான் கேட்டுக்கொண்டது. அதேபோன்று தமிழ்மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் பார்க்கும் விதத்தில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அதனைத் தத்துவார்த்த ரீதியாக நியாயப்படுத்துவதில் மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்சவும், ஜாதிக ஹெல உறுமயவுமே முக்கிய பங்காற்றினர். வட, கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரிப்பதற்கு முன்நின்று செயற்பட்டார்கள். போரின் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு விடயத்திலேனும் மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்ததா? எனவே தமிழ் மக்கள் அதன் நீட்சியாகவே தேசிய மக்கள் சக்தியைப் பார்க்கிறார்கள். எனவே அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது சஜித் பிரேமதாஸவா எனும் தெரிவுகளில், தமிழர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். கேள்வி – ஆக, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும்? பதில் – ஏனைய பழக்கப்பட்ட அரசியல் கலாசாரத்திலிருந்து மாறுபட்டு நாம் எம்மைக் கட்டமைத்து வெளிப்படுத்திவரும் தமிழ்மக்கள் மைய அரசியல் கலாசாரம், தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் என அடையாளப்படுத்தப்பட்ட தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்கு எதிரான எமது நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள், நேரடியாகவும், தமிழ்மக்களின் நிதியுதவி மூலமும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்துவரும் உதவிகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கலாக நாம் நீண்டகாலமாக தமிழ்மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே செயலாற்றிவருகிறோம். இவற்றின் அடிப்படையில் தமிழ்மக்கள் எமக்கு வாக்களிக்கவேண்டும். https://www.kuriyeedu.com/?p=630844
  23. தில்லைவினாயகலிஙகமவர்களே, மிகவும் சிறந்த ஒரு காலக்கண்ணாடியான படைப்பு. ஒருமுறை இதனை அரசியல் தலைமைகள் படித்துப்பார்த்தால்.... நிகழ வாய்ப்பில்லை. ஆனால், நிலா தேயலாம் ஓய்வதில்லை. நிலா போன்றவர்கள் வருவார்கள் என்பது தமிழினத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. தமிழரை, தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் ஆழ்மன ஏக்கத்தை பதிவாக்கியமைக்குப் பாராட்டுகள் ஐயா. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  24. இந்த ரொய்லெற் ஊடகங்கள் புகழ்பாடேக்கை ரொய்லெற் ஊடகங்கமாத் தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் சிங்களப்படைகளின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் இடையூறுகளைக் கடந்து ஒரேகொள்கையோடு உறுதியாக நிற்பதென்பது சிங்களத்துக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் இடையூறாக உள்ளது. அதன்விளைவேயாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.