Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 14 Aug, 2024 | 10:47 AM ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொள்கின்றார். நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில் இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார். செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ள நிலையில் இலங்கையின் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத நீளமான வாக்குசீட்டினை எதிர்கொள்கின்றனர். இந்த வாக்குசீட்டில் இரண்டு நாமல்கள் காணப்படுவது வாக்குசீட்டினை குழப்பம் மிகுந்ததாக மாற்றியுள்ளது.ஆகக்குறைந்தது நாமல் ராஜபக்ச விசுவாசிகளுக்காவது. ஒரே பெயருடைய வேட்பாளர்களை நிறுத்துவது என்பது கடந்தகாலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம். 2015 இல் அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களை குழப்புவதற்காக ராஜபக்சாக்கள் சிறிசேன என்பவரை நிறுத்தினர் . மைத்திரிபால சிறிசேன போன்ற தோற்றமுடையவராக அவர் காணப்பட்டார். இந்த ஏமாற்று வேலையால் பலர் ஏமாறாத போதிலும் ராஜபக்சக்காள் நிறுத்திய ஏஆர் சிறிசேன 18174 வாக்குகளை பெற்றார். தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ள மற்றைய நாமல் வாக்குகளை சிதறடிப்பதில் பெயர் பெற்றவர். அவரது பெயரை சி;ங்களத்தில் எழுதினால் அது ராஜபக்சாக்களின் வாரிசின் பெயரை ஒத்ததாக காணப்படும். எனினும் ஆங்கிலத்தில் எச் என்ற எழுத்து மேலதிகமாக காணப்படுவது ஒருசிலரின் பார்வைக்கே அகப்படும். 2015 இல் இந்த நாமல் ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் வாக்குகளை சிதறடிக்க முயன்றார்.போலி சிறிசேனவிற்கு அடுத்ததாக நான்காவதாக வந்தார்- 14000வாக்குகளை பெற்றார் எனினும் 2019 தேர்தலில் அவரால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அதிக வாக்குகளை பெற முடியவில்லை. 2015 இல் நாமல்ராஜபக்சவின் சின்னம் சுமார் முப்பது நாற்பது வருடங்களிற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி.தற்போது அது ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம்.நாமல் ராஜபக்சவின் சின்னம் தபாலுறை. ஒருகாலத்தில் ஏகபோக கட்சியாக காணப்பட்ட தனது கட்சிக்குள் காணப்படும் கருத்துவேறுபாடுகளை எதிர்த்து போராடவேண்டிய நிலையில் உள்ள இளவரசர் நாமல் ராஜபக்ச தவறாக வழிநடத்துதல் , ஏமாற்றுதல், குழப்பம் போன்றவற்றையும் எதிர்த்துப்போராடவேண்டிய நிலையில் உள்ளார். இவை ஒரு வெற்றிகரமான இலங்கை அரசியல்வாதியின் முக்கிய பண்புகள் ஒரே பெயரில் வேட்பாளர் ; ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவாலை எதிர்கொள்கின்றார் நாமல் | Virakesari.lk
  2. 14 Aug, 2024 | 05:33 PM இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். அவர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் தொடர்கிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாம்பனில் இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் ஆழமற்ற கடற்பகுதிகளில் நங்கூரமிடப்பட்ட்டுள்ளன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக ஆகஸ்ட் 20-ம் தேதி பாம்பன் பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம் | Virakesari.lk
  3. 14 Aug, 2024 | 05:41 PM தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். இன்று புதன்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் எதிர்பார்த்த கோரிக்கை அவர் ஊடாக பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தின் பின்னணியில் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் பலர் பங்காற்றிய நிலையில் அவர்களுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பில் கையப்பமிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் ஓடிச் சென்று பேசிய நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்த நோக்கத்தை தாண்டி அதன் கட்டமைப்பை சிதைத்து தற்போதைய ஜனாதிபதியும் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க வை சந்தித்ததன் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகமாக காணப்படுகின்ற நிலையில் தமிழ் கட்சிகள் ரணிலுடன் பேசுவது தமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும். 1983 கலவரம், அவசரகால சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம், மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் மற்றும் யாழ் பொது நூலக எரிப்பு போன்றவற்றில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இரசித்துக்கொண்டிருந்தவர் வேறு யாரும் இல்ல ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க. இவற்றையெல்லாம் மறந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் காலை நக்கி அரசியல் பிளைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் பணப்பெட்டி அரசியலை மேற்கொள்வதற்காகவா பேச்சுக்கு சென்றார்கள் என சந்தேகம் எழுகிறது. ரணில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறேன் எனக்கூறி 83 பில்லியனாக இருந்த நாட்டின் கடனை சுமார் 100பில்லியனாக மாற்றிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவை சாரம். ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தேசிய மக்கள் சக்தியுடன் நாட்டில் உள்ள மக்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளனர். ஆகவே தமிழ் மக்களை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் கட்சிகள் உறவை மேற்கொள்வது பொது வேட்பாளரை பாதுகாக்கவா அல்லது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கவா என தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? ; தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? - சந்திரசேகரன் கேள்வி! | Virakesari.lk
  4. (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கிற்கு மத ரீதியான ஆளுநர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாமும் ஜனாதிபதியும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கமைய செயற்பட்டு வருகின்றோம். எனவே புதிதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு ஒன்றும் இல்லை. 18ஆம் திகதி கொட்டகலையில் எமது தேசிய சபை கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கமைய அடுத்து தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கில் மத ரீதியாக ஒரு ஆளுனரைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். மத ரீதியாக ஒரு அமைச்சர் கிடைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். எமது அரசாங்கத்தில் நாம் இலங்கையர் என்ற ரீதிலேயே சிந்திக்கின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடு எம்மிடம் இல்லை. இலங்கையராக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். ஆனால் இவர்கள் குறிப்பிடும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை கணிப்பிட முடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோல்விடைவார் என்றும் அவருக்கு வெற்றி பெறத் தெரியாது என்றும் சிலர் கூறுகின்றனர். மத மற்றும் இன ரீதியான தீமானங்களை எடுப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை செயற்பட இடமளிக்கவில்லை. தற்போதுள்ள எதிரணியினருடம் நாம் இருந்தால் அனைவரும் புத்தர். அவ்வாறில்லை என்றால் அனைவரும் கல்வர் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர் என்றார். இன, மத ரீதியாக பயணிக்க முற்படும் எதிரணி ரவுப் ஹக்கீமின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை - ஜீவன் தொண்டமான் விசனம் | Virakesari.lk
  5. Published By: Vishnu 14 Aug, 2024 | 06:13 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களுடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசிய விடயங்களை சுமந்திரன் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தார். மூன்று பிரதான வேட்பாளர்களும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதாகக் கூறியிருக்கும் பின்னணியில், அதில் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் விடயங்கள், அவற்றை அமுல்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரிடம் (ரணில் விக்ரமசிங்கவிடம்) கையளித்த ஆவணம், 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கையளித்த ஆவணம் என்பன பற்றி உயர்ஸ்தானிகரிடம் விளக்கிக்கூறிய சுமந்திரன், அவரிடம் அந்த ஆவணத்தையும் காண்பித்தார். அதேபோன்று இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்தும், 13 ஆவது திருத்தத்தில் இருந்த மற்றும் அதிலிருந்த எடுக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் விளக்கமளித்த சுமந்திரன், அவ்வாறு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கும் நிலையில் அதற்கான நடைமுறைகள் பற்றியும் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். அதில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட நிர்வாக அதிகாரங்கள் மற்றும் 'திவினெகும' உள்ளடங்கலாக சட்டங்களின் ஊடாக பறிக்கப்பட்ட அதிகாரங்கள் பற்றி எடுத்துரைத்த சுமந்திரன், இவற்றில் நிர்வாக ரீதியாகப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை தற்போது வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாகவும், அது செயல்வடிவம் பெறுவதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார். அதனை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதால் இந்த பேரம் பேசலை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதன் பின்னர் சிறந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைப்பவரை ஆதரிப்பது குறித்துத் தீர்மானிக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் யார் என சுமந்திரனிடம் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பேரம்பேசுமாறுதான் ஏனைய கட்சிகளுக்கும் தான் ஆலோசனை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து பேரம் பேசுவதே சிறந்த அணுகுமுறை - சுமந்திரனிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு | Virakesari.lk
  6. ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஆகஸ்ட் 2024 இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளன. ஆனால், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பொன்றை உருவாக்கி, அதனூடாக சுயேட்சை வேட்பாளராக பா.அரியநேத்திரன் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார். ''வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்த மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குரலால் சர்வதேசத்திற்குச் செய்திகளைச் சொல்ல வேண்டும். சிதறி இருக்கின்ற கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைய வேண்டும்," பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''கடந்த காலங்களில் ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்தும் இருக்கின்றோம். எதிர்த்தும் இருக்கின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். அதனால், இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. வடகிழக்கில் ஒரு பிரச்னை இருக்கின்றது. அவர்களுக்கான ஒரு உரிமை கொடுத்தால் மாத்திரம்தான், இலங்கையின் பொருளாதாரம் மீண்டு, வெற்றியளிக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இதை உணர்த்துவதற்காகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நான் களமிறக்கப்பட்டுள்ளேன்," என அவர் கூறினார். இலங்கையின் ஜனாதிபதியாக தான் போட்டியிடவில்லை என கூறிய அவர், மாறாக வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான விடிவை எதிர்நோக்கிய ஒரு குறியீடாகவே போட்டியிடுகின்றேன் எனவும் அவர் கூறுகின்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி தான் போட்டியிடுவதாக பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார். மலையக தமிழரின் ஜனாதிபதி வேட்பாளர் என்ன சொல்கின்றார்? தமிழ் பொது வேட்பாளர் என்ற விஷயத்தில், இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார். நாட்டின் பிரஜாவுரிமை அற்ற சமூகமாக வாழ்ந்த மலையக சமூகம் பாரிய போராட்டங்களின் பின்னர் அந்த உரிமையை பெற்றதாக கூறிய அவர், மலையக மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு வாழும் சமூகம் குறித்து சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக அவர் கூறுகின்றார். ''இலங்கையில் மலையக மக்கள் போராடியே வாக்களிக்கும் உரிமையை பெற்றார்கள். பல வருட காலத்தில் வாக்களிக்கும் உரிமை மாத்திரம் இல்லாது போகவில்லை. மறுக்கப்பட்ட காணி உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. '' ''இலங்கையில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்டது போல, சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தினாலேயே சட்டரீதியாக பிற்படுத்தப்பட்ட இந்த சமூகத்தின் குரல் சர்வதேச அளவில் வெளிப்பட வேண்டும்." என எம்.திலகராஜ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''தமிழ்ப் பொது வேட்பாளர் என கூறிக் கொள்வோரும் மலையக தமிழர்கள் தொடர்பில் பேசவில்லை. அந்த எண்ணம் கூட அடிப்படையில் வரவில்லை. கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை. இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்," எனவும் அவர் கூறினார். காணி உரிமை பெருந் தோட்ட தமிழர்களுக்கான காணி உரிமை மறுக்கப்பட்ட நிலையில், அதனை வழங்குவற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்ட போதிலும் அது இதுவரை முழுமை பெறவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை தேயிலை, ரப்பர் உற்பத்திகளுக்காக குத்தகை அடிப்படையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியது. இந்த நிலையில்,மலையக தமிழர்களின் வாழ்வாதாரம், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான பகுதிகளை அண்மித்து காணப்படுகின்ற நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த காணிகளை மக்களுக்கு வழங்க மறுத்துள்ளன. இன்றும் அந்த மக்கள்,பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கீழ் வாழ்கின்றமையினால், இன்றும் லயன் அறைகளில் வாழ்கின்றனர். பெருந்தோட்ட பிரதேசங்களில் லயன் அறைகள் காணப்படும் பகுதியை மாத்திரம் பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்று, காணி உரிமையுடன் கூடிய கிராம முறையொன்றை உருவாக்கும் யோசனை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் முன்வைத்திருந்தார். பொது வேட்பாளர் விவகாரத்தில் மலையக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா? வடகிழக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் போது, மலையக மக்களையும் இணைத்ததாகவே தீர்வை பெற்றுக்கொள்வோம் என தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்குத் தெரிவிக்கின்றார். மலையக மக்களைப் புறக்கணித்து, வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''மலையகத் தமிழர்களை முன்னிறுத்தியே வடகிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் எப்போதும் செயற்பட்டுள்ளன. மலையக மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்ட போது அதற்காக நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் நான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன்.'' என்றார். மேலும், “எமது சகோதரர் திலகராஜ் அவர்கள் இந்த விஷயத்தை தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பிடம் கேட்டிருக்கலாம். அவரும் யாரோ திட்டமிட்டு ஒரு பேரினவாத ஜனாதிபதி வெற்றி பெறுவதற்காக போடப்பட்ட ஒரு கருவியே தவிர, அவர் சொல்கின்ற காரணமும் யாரோ ஒருவர் சொல்லி கொடுத்து சொல்கின்றாரே தவிர, அவரிடமிருந்து அது வரவில்லை. அது எங்களுக்கு தெரியும். எங்கள் விடுதலை போராட்டம் என்பது இன்று நேற்று நடைபெறவில்லை.'' “ஆகவே, நாங்கள் மலையக மக்களைப் புறக்கணித்து ஒதுக்கி விட்டு தீர்வை எடுக்க மாட்டோம். மலையக மக்களை மாத்திரமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்போம். எங்களுக்கு ஒரு தீர்வு வருகின்ற போது, அவர்களையும் இணைத்துக்கொள்வோம்," என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மக்களால் விமர்சிக்கப்படுகின்ற பா.அரியநேத்திரனின் எந்தவொரு கருத்திற்கும் இப்போது பதிலளிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என எம்.திலகராஜ் கூறுகின்றார். அரசியல் பார்வயாளர்கள் சொல்வது என்ன? தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொண்டு வந்தால், மலையக தமிழ் சமூகத்திற்கு அது பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு எண்ணியிருக்கலாம் என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். ''ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது, எனினும், தமது கோரிக்கைகளை தென்னிலங்கைக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துரைக்கும் நோக்கிலேயே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தமிழ் பொது வேட்பாளர் முயற்சி அரசியல் ரீதியில் அக்னிப் பரீட்சையாகும். அதில் தோல்வி மற்றும் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் அது தமிழர்களின் ஒற்றுமைக்கும் விடுக்கப்படும் பெரும் சவாலாகும்,” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியை வடக்கு, கிழக்குக்கு வெளியில் கொண்டுவந்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் வாழும் மலையக தமிழர்களுக்கு பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும், சில வேளை இனவாத தேர்தல் பிரசாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் தமிழ் தேசிய பொது கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மலையக தமிழர்களின் நலன்கருதி அவர்கள் வடக்கு, கிழக்குக்குள் இந்த கோஷத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம்,” என்றார். “அதேபோல வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழ் பொது வேட்பாளர் கோஷத்தை கொண்டுவர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துவிட்டன. எனவே, தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம் கருதியும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்." என்கிறார். ஜனாதிபதி தேர்தலென்பது தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரம் பேசுவதற்கு இருக்கும் சிறந்த வாய்ப்பாகும் என்று கூறியவர், மக்கள் போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கை அரசியல் களமும் மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுக் கூட்டணி அமைத்து, பொதுக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான வேட்பாளர்களிடம் பேச்சு நடத்தி இருக்கலாம் என ஆர்.சனத் கூறுகிறார். மேலும், "ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டில் பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் பொதுவேட்பாளர் அணுகுமுறையை பின்பற்றியது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும் அதேவேளை, அவர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வந்து அது தொடர்பில் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்காமல் இருக்கும் அணுகுமுறை சிறந்ததே.'' என்கிறார். ''மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு பிரதான வேட்பாளர்கள் அனைவரும் உறுதியளித்துள்ளனர். இது நெடுநாள் கோரிக்கை, எனவே, பிரதான வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுடன் பேரம் பேசுதலே மலையக மக்களுக்கு நன்மை பயக்கும்." என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். இலங்கையில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை மலையகத் தமிழர்கள் புறக்கணித்தது ஏன்? - BBC News தமிழ்
  7. கீர்த்தி துபே பதவி,பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த போது, ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து டெல்லியை வந்தடைந்தார், அவர் ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை யூகிப்பது சுலபம் தான். வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, ஷேக் ஹசீனா இந்தியாவுடனான தனது உறவை பெரிதும் வலுப்படுத்தினார். அதே சமயம் பல துறைகளில் வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்தது. வங்கதேசம் உணவுப் பொருட்கள் முதல் மின்சாரம் வரை அனைத்தையும் இந்தியாவிலிருந்து பெறுகிறது. இந்தியா வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ரயில் பாதைகள் உள்ளன. மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எல்லையைக் கடந்து எளிதாக பயணிக்க முடிகிறது. இந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த போது, ஷேக் ஹசீனா அவரின் முதல் வெளிநாட்டு விருந்தினராக இருந்தார். கடந்த ஓராண்டில் இரு தலைவர்களும் 10 முறை சந்தித்துள்ளனர். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா 2009ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியா அங்கு பெரிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. ஷேக் ஹசீனா ஆட்சியில் இல்லாதது, அவர் மீதான மக்களின் கோபம், அந்நாட்டில் அதிகாரம் மாறிவரும் விதம் என அனைத்தும் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. குறிப்பாக இருதரப்பு ஒப்பந்தங்கள், எதிர்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உட்பட அனைத்தும் பாதிக்கப்படும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வங்கதேசத்தில் இந்தியாவின் முதலீடு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டாக்காவில் பணிபுரியும் வங்கதேச பெண்கள் வங்கதேசம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக வங்கதேசத்திற்கான இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா உள்ளது. 2023-24ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே 13 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில், இரு நாட்டு பிரதமர்களும் இந்தியாவின் ஆதரவுடன் மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். அகௌரா-அகர்தலா ரயில் இணைப்பு, குல்னா-மங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் மைத்ரி வெப்ப ஆலை ஆகிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. வடகிழக்கு இந்தியாவை வங்கதேசத்துடன் இணைக்கும் முதல் ரயில் சேவை அகௌரா-அகர்தலா திட்டம். ``லைன் ஆஃப் கிரெடிட்’’ திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே சுமார் 1000 கோடி ரூபாயை வங்கதேசத்தின் ரயில்வே உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்தின் பெரும் பங்குகள் அதானி குழுமம் வங்கதேசத்தில் பெரிய முதலீட்டைக் கொண்டுள்ளது. `அதானி பவர்’ நிறுவனம் 2017 இல் `வங்கதேச பவர் டெவலப்மெண்ட்’ நிறுவனத்துடன் 25 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் அதானி பவர் நிறுவனம் ஜார்கண்டில் உள்ள கோடா ஆலையில் இருந்து 1,496 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. கோடா பவர் ப்ராஜெக்ட் என்பது நாட்டின் முதல் பரிமாற்ற மின் உற்பத்தி நிலையமாகும். அதன் 100 சதவீத ஆற்றல் வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலை 2023 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்துக்கு மின்சாரத்தை அனுப்புகிறது. அதானி மட்டுமின்றி டாபர், மரிகோ, ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மோட்டார் ஆகிய நிறுவனங்களுக்கும் வங்கதேசத்தில் முதலீடுகள் உள்ளன. 2007-2010 வரை வங்கதேசத்துக்கான இந்திய உயர் ஆணையராக இருந்த பினாக் சக்ரவர்த்தி கூறுகையில், “2007ல் நான் வங்கதேசத்தை மிகவும் கடினமான காலகட்டத்தில் பார்த்திருக்கிறேன், தற்போது நிர்வாக அமைப்பு சீர்குலைந்த காலகட்டம். ஆனால், வங்கதேசத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை புறக்கணிக்க முடியாது.” என்றார். இந்தியாவை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வங்கதேசத்தின் சார்பு அதிகமாக உள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான திட்டங்கள் சில காலம் மட்டும் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இந்தியாவின் முதலீடு ஆபத்தில் உள்ளது என்று கூறுவதும் புரிந்து கொள்வதும் சரியல்ல” என்கிறார். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவைச் சார்ந்திருக்கும் வங்கதேசம் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு அக்டோபர் 2023 இல் தொடங்கியது. இதனால் இரு நாடுகளிலிருந்தும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி நீக்கப்படும். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இதன் மூலம் இந்தியாவுக்கான வங்கதேசத்தின் ஏற்றுமதி 297 சதவீதமும், இந்தியாவின் ஏற்றுமதி 172 சதவீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் டிவிஎஸ் ஆகியவை வங்கதேசத்தில் இருசக்கர வாகனங்களுக்கான அசெம்பிளி ஆலைகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் வங்கதேச தொலைத்தொடர்பு நிறுவனமான ராபி ஆக்சியாட்டாவில் 28 சதவீத முதலீட்டைக் கொண்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பிரபீர் டே கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் தொழில் முக்கியம். இது முதலீட்டாளருக்கும் அந்த நாட்டிற்கும் பயனளிக்கிறது, இந்தியாவுடன், சீனாவும் வங்கதேசத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் வங்கதேசம் இந்தியாவை சார்ந்திருப்பது மிக அதிகம். இந்தியாவில் இருந்து அன்றாட தேவைக்கான பொருட்களும் அங்கு செல்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு வந்தவுடன் இந்தியாவில் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடு நன்றாக இருக்கும்.” என்றார். இந்திய எல்லைகளில் புலம்பெயர்ந்தோர் வரவு அதிகரிக்கும் அபாயம் பட மூலாதாரம்,Getty Images வங்கதேசத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், அங்கு வாழும் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து, சிறுபான்மை இந்துக்களின் சொத்துகள் மற்றும் கோவில்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினரின் வணிக நிறுவனங்கள், கோயில்கள் பல இடங்களில் தாக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்த தாக்குதல்கள் எந்த மட்டத்தில் நடைபெறுகின்றன, அவற்றின் முழு நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வங்கதேசத்துடன் 4 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பது இந்தியா எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்று என்கிறார் பிரபீர் டே. "வங்கதேசத்துடனான வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு ஆபத்து இல்லை. ஏனெனில் நிலைமை மாறும்போது அது மாறும், ஆனால் அகதிகளின் அழுத்தம் இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார். வங்கதேசம் - இந்தியா இரு தரப்பு வர்த்தகம், முதலீடு தொடருமா? ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு என்ன நடக்கிறது? - BBC News தமிழ்
  8. நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசூதி இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்திருக்கிறார். இது குறித்த அறிக்கையில், ``இஸ்லாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே புதிய வக்பு வாரிய திருத்தச்சட்ட வரைவாகும். ஓர் இறையை ஏற்று, நபி வழி நின்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றி வருபவர்கள், தாங்களாக விரும்பி இறை வழிபாட்டுப் பணிகளுக்கோ, அல்லது இறைவன் திருப்பெயரால் மக்கள் தொண்டு செய்வதற்கோ மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளே ‘வக்பு’ என்பதாகும். இந்தியா என்றொரு நாடு விடுதலைப்பெற்று ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியச் செல்வந்தர்கள் பெருமளவில் தானமாக அளித்த நிலங்களே வக்பு நிலங்களாகும். அவை முழுக்க முழுக்க இஸ்லாமியப் பெருமக்களது இறை வணக்கப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நில உடைமைகளாகும். அவ்வாறு இஸ்லாமியச் செல்வந்தர்களால் இஸ்லாமிய இறைப்பணிக்காக வழங்கப்பட்ட உடைமைகளைப் பாதுகாக்க இஸ்லாமியச் சான்றோர்களால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளைகள்தான் வக்பு அமைப்புகள் ஆகும். சீமான் இந்தியா விடுதலைப்பெற்ற பிறகு வக்பு அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்பு சொத்துக்களைப் பாதுகாக்கவும், நேர்மையாக நிர்வகிக்கவும் 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. தற்போது நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 லட்சத்திற்கும் அதிகமான வக்பு அறக்கட்டளைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை ஒருங்கிணைக்கவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அந்தந்த மாநில அரசின் கீழ் வக்பு வாரியங்கள் செயல்பட்டுவருகின்றன. மேலும், வக்பு சட்டத்திலிருந்த குறைபாடுகளைக் களைவதற்காக ஏற்கனவே 1959, 1964, 1969, 1995-ம் ஆண்டுகளில் தேவையான திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. இறுதியாக 2013-ம் ஆண்டு வக்பு சட்டத்தைப் பல்வேறு நிலைகளில் ஆய்ந்து, அதிலிருந்த ஒருசில குறைகளையும் நீக்கத்தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, முழுமையான வக்பு சட்டம் தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், இந்து மதத்தினரிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக பா.ஜ.க மேற்கொள்ளும் மதவெறி சூழ்ச்சியே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவாகும். அதன்படி இஸ்லாமிய சமய சொத்துக்களைப் பாதுகாக்க முழுக்கவும் இஸ்லாமியர்கள் அங்கம் வகித்த வக்பு வாரிய குழுக்களில், புதிதாக 2 மாற்று மதத்தினரை நியமிக்கவும், வக்பு வாரிய நிலங்களை 12 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்திருந்தால், அந்த நிலங்களை ஆக்கிரமித்தவர்களே சொந்தமாக்கி பட்டா பெற்றுக்கொள்ள முடியும் என்பது உள்ளிட்ட 40 திருத்தங்களைக் கொண்டுவந்து வக்பு வாரியத்தின் அதிகாரங்களை முற்று முழுதாக நீர்த்துப்போகச் செய்ய பா.ஜ.க அரசு முயல்கிறது. அமித் ஷா, மோடி குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களை நிலமற்ற அகதிகளாக, நாடற்ற நாடோடிகளாக மாற்றவே இதை பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களை அந்நியமானவர்கள் என்று நிறுவத் துடித்த மதவாத பா.ஜ.க அரசின் முயற்சிக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது இஸ்லாமிய சமயத்தவரிடம் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் வக்பு நிலங்களாகும். இந்தியாவிலேயே பாதுகாப்புத்துறை மற்றும் தொடர்வண்டித்துறைக்கு அடுத்தபடியாக ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலமுடையவர்களை இந்த நாட்டுக்குத் தொடர்பில்லாதவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவேதான் சட்டத்தின் மூலம் அதை அபகரிக்க நினைக்கிறது பாசிச பா.ஜ.க அரசு. வக்பு வாரியம் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும். ஒன்றிய மற்றும் மாநில அளவில் வக்பு வாரியங்கள் உள்ளன. அதில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுபவர்கள். வக்பு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகள் தவறெனக் கருதினால் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடும் செய்ய முடியும். எனவே, வக்பு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகளுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதும், வக்பு வாரியம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத கட்டற்ற அதிகாரம் படைத்த தன்னாட்சி அமைப்பு போலவும் பா.ஜ.க பரப்புவது அனைத்தும் பச்சைப் பொய்யாகும். பாஜக உண்மையில் வக்பு சொத்துக்களால் பயனடைவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. குத்தகைக்கு விடப்பட்டுள்ள வக்பு வாரிய நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள வணிகக் கடைகள், மண்டபங்கள், ஓய்வெடுக்கும் அறைகள், மருத்துவ சேவைகள், அவசர ஊர்திகள், பேரிடர்காலத் துயர்துடைப்பு உதவிகள் என அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அதைவிட அதிகமாக இந்து மக்களுக்கும், ஏனைய மதத்தினருக்கும் உதவவும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நடைமுறை உண்மையாகும். வக்பு சட்டத்தில் குறைகள் உள்ளது என்றால் அதைக் கூற வேண்டியது இஸ்லாமியப் பெருமக்கள்தான். தங்களுக்கு இத்தகைய திருத்தங்கள் வேண்டும் என்று கேட்க உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான். ஒரு சில இடங்களில் நடைபெற்ற தவறுகளை வைத்து ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்க நினைப்பது என்ன நியாயம்? ஒரு இந்து மடத்தில் தவறு நடந்தால் ஒட்டுமொத்த இந்து மடங்களையும் பா.ஜ.க அரசு மூடிவிடுமா? அல்லது மாற்று மதத்தினரை இந்து மடங்களில் நிர்வாகிகளாக நியமிக்கத்தான் அனுமதிக்குமா? நிர்வாகத்தில் ஊழல் என்பதற்காக சங்கரமடத்தையும், சிதம்பரம் கோயிலையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்றால் அதனை பா.ஜ.க ஆதரிக்குமா? வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களே அதனைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற மோடி அரசின் முடிவு, கோயில் நிலங்களுக்கும் பொருந்துமா? மோடி - சீமான் சச்சார் குழு கொடுத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகக் கூறும் பா.ஜ.க அரசு, இஸ்லாமியர் நலன் காக்க சச்சார் குழு கொடுத்த அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றத் தயாரா? என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க உரிய விளக்கமளிக்க வேண்டும். எனவே, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை உடனடியாக பா.ஜ.க அரசு திரும்பப்பெறாவிட்டால், எப்படிக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியப் பெருமக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றுதிரண்டு போராடினார்களோ, எப்படி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடித் திரும்பப்பெறச் செய்தார்களோ, அப்படி இதற்கெதிராகவும், நாடு முழுவதும் மிகப்பெரிய மக்கள் திரள் புரட்சி போராட்டங்களை பா.ஜ.க அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்" என்று சீமான் குறிப்பிட்டிருக்கிறார். `வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்; இல்லையென்றால்..!' - பாஜக-வை எச்சரிக்கும் சீமான் | NTK chief seman warns BJP govt to withdraw waqf bill 2024 - Vikatan
  9. கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். 4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார். முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஸ்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், “ஆக.18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கு விசாரணை சிபிஐ-வசம் ஒப்படைக்கப்படும்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா உறுதி: கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை இன்று (ஆக.12) நேரில் சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது, “மருத்துவரின் குடும்பம் விரும்பினால், இந்த கொலை வழக்கின் விசாரணையை மத்திய ஏஜென்சிகளிடம் வழங்கத் தயார் என்றும், மத்திய ஏஜென்சிகள் மூலம் விசாரணை செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மம்தா பானர்ஜி தனது அறிவிப்பில், “மாநில காவல்துறை இந்த வழக்கின் குற்றவாளிகளை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்போம்” என்று தெரிவித்துள்ளார். சம்பவமும், போராட்டமும்.. - மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர், கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இந்த கொலை தொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை கொல்கத்தாவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்யக்கோரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம் பின்னர் மேற்குவங்கம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் பரவியது. இதனால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (ஆக.12) நாடு முழுவதும் மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர். டெல்லியில் இயங்கிவரும் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி, ஐஎச்பிஏஎஸ், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். FORDA மருத்துவர்கள் சங்கம் போராட்டம்: பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி FORDA மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை இன்று நடத்தி வருகிறது. லோக் நாயக் மருத்துவமனை, டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை போன்று நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு வெளியே திரண்ட மருத்துவர்கள், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டம் தொடர்பாக பேசியுள்ள FORDA பொதுச் செயலாளர் சர்வேஷ் பாண்டே, “நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் மத்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கியமான கோரிக்கை” என்று கூறியுள்ளார். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’ | Mamata visits residence of murdered RG Kar hospital doctor, says will hand over to CBI if Kolkata Police fail to crack case by August 18 - hindutamil.in
  10. சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் இன்று (ஆக.12) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களை போராடிய தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (ஆக.9) தீர்ப்பளித்த நீதிபதிகள், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவும், அவர் மீது தொடர்ச்சியாக போடப்பட்டுள்ள வழக்குகளும் உள்நோக்கத்துடன் பதியப்பட்டவை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்துக்காக கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தாமதமாக வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை | Theni Police action against YouTuber Shavukku Shankar under Goondas Act - hindutamil.in
  11. தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது 12 Aug, 2024 | 03:03 PM ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரன் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார். தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது | Virakesari.lk
  12. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது. இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர் - அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியை கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது. அண்மையில் வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடையாக அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந்நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது. ஆனால், சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். இலங்கைக்கு சீனா நன்கொடையாக வழங்கிவருகின்ற அரிசி குறித்து பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் அதிகளவில் அரிசியை உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிகளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் சீனாவே முதலிடத்தில் உள்ளது. ஆனால், அண்மைக் கால ஆய்வுகளின் முடிவுகள் சீனாவின் அரிசியில் சூழல் மாசு காரணமாக கட்மியம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விடவும் பன்மடங்கு அதிகமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கட்மியம் உடலுக்கு அத்தியாவசியம் இல்லாத ஆபத்தான ஒரு பாரஉலோகம். உணவின் மூலம் உடலில் நுழைந்து நீண்டகாலம் தேங்கியிருக்கக்கூடிய இக்கட்மியம் சிறுநீரகங்களை செயலிழக்க வைப்பதோடு மார்பு, நுரையீரல், சதையம், சிறுநீரகம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தரப்பரிசோதனை செய்யப்படாத அரிசியை நுகர்வது குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும். இலங்கை 2023ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் தன்நிறைவைக் கொண்டிருந்தது. கடந்த பெரும்போகத்தில் மழைவெள்ளம் சில பிரதேசங்களில் நெற்செய்கையைப் பாதித்திருந்தாலும் இந்த ஆண்டினது ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படவில்லை. சீனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டிருப்பின் தனது சந்தேகத்துக்கு இடமான அரிசியை இலங்கையில் விநியோகிப்பதை நிறுத்தி இலங்கையிலேயே அதனைக் கொள்வனவு செய்து விநியோகிப்பதே சாலச்சிறந்தது. இந்நடைமுறை சரியான சந்தை வாய்ப்புகளின்றித் தவிக்கும் எமது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதோடு ஆபத்தான பார உலோகங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும் செய்யும். சோற்று அரசியல் சேற்றுக்குள் சிக்கி மென்மேலும் எமது மக்களின் வாழ்வு சீரழியாமல் இருக்க உரிய தரப்புகள் இது குறித்து உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் - பொ. ஐங்கரநேசன் | Virakesari.lk
  13. Published By: Vishnu 12 Aug, 2024 | 07:01 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவுடன் தமக்கு எந்தவொரு போட்டியும் இல்லை என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவித்திருக்கும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் இந்தியாவுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்திருக்கிறார். இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (12) கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்றது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சமகால அரசியல் நிலைவரம் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடும் நோக்கிலேயே சீனத்தூதரகத்தினால் இச்சந்திப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும், தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தமிழ் பிரதிநிதிகள், தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர். அதேவேளை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கவுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் தாம் வெற்றியீட்டினால் தமிழ் மக்களுக்கு வழங்கவிருக்கும் தீர்வு குறித்து பெரும்பாலும் ஒரேவிதமான கருத்துக்களையே வெளியிட்டிருக்கிறார்கள் எனவும், ஆகவே சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளரை ஆதரிப்பது குறித்து ஆராயலாம் எனத் தாம் தீர்மானித்திருப்பதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர். அதனை செவிமடுத்த சீனத்தூதுவர், தாம் வட, கிழக்கு தமிழ்மக்களுடன் நெருங்கிய தொடர்பைப்பேண விரும்புகின்ற போதிலும், தாம் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர்கள் என்பது உள்ளடங்கலாக தம்மைப் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்களும், புரிதல்களும் தமிழர்கள் மத்தியில் நிலவுவதாகக் கவலை வெளியிட்டார். அத்தோடு அண்மையில் தாம் வடமாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்களை வழங்கியமையானது எந்தவொரு அரசியல் நலனையும் எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும், மாறாக அம்மக்கள் மீதான உண்மையான அக்கறையின் நிமித்தமே அந்நடவடிக்கைகயை முன்னெடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார். அதனைத் தாமும் வரவேற்பதாகத் தெரிவித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன், சகல தரப்பினருடனும் இணைந்து நட்புறவுடன் பணியாற்றுவதற்கே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அதற்குப் பதிலளித்த சீனத்தூதுவர் 'நீங்கள் இந்தியாவுடன் அல்லவா அதிக நெருக்கத்தைப் பேணுகின்றீர்கள்?' என வினவினார். அதனை ஒப்புக்கொண்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தம்மைப் பொறுத்தமட்டில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவகாரமே மிகப்பிரதானமானது எனவும், அவ்விடயத்தில் இந்தியா குறிப்பிடத்தக்களவு கரிசனை காண்பிப்பதனால் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுவதாகத் தெரிவித்தனர். அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட சீனத்தூதுவர் சி சென்ஹொங், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு இந்தியாவுடன் எவ்வித போட்டியும் இல்லை எனவும், இலங்கையின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் சீனா ஈடுபடாது எனவும் உறுதியளித்தார். வட, கிழக்கில் இந்தியாவுடன் எமக்கு எவ்வித போட்டியுமில்லை : தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சீனத்தூதுவர் தெரிவிப்பு | Virakesari.lk
  14. Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சாவின் விளிம்பிலிருந்து உயிர்பிழைத்த இருவரின் பயணமே இந்த 'மின்மினி'. 2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத்தியாயத்தில் சபரி தன் வாழ்வை மீட்டானா என்பதே படத்தின் கதை. கதாபாத்திரங்களின் பள்ளி நாள்கள் 2015-ல் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது எடுக்கப்பட்டிருக்கின்றன. கதைப்படி அவர்கள் வளர்ந்த பின்னர் நடக்கும் நிகழ்வுகள் 8 வருடங்கள் கழித்து மீண்டும் அதே நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. சினிமாவின் இந்த அரிதினும் அரிதான முயற்சிக்கு இயக்குநர் ஹலீதா ஷமீமுக்குப் பாராட்டுகள். பள்ளிப் பருவத்தில் குறும்புத்தனங்களும் சேட்டைகளும் சுறுசுறுப்பும் நிரம்பிய சிறுவனாக மிளிர்கிறார் கௌரவ் காளை. யார் வம்புக்கும் செல்லாத தனிமை விரும்பி, இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வலி என முதல் அத்தியாயத்தில் தேவையான உணர்வுகளைக் கடத்துகிறார் பிரவீன் கிஷோர். ஆனால் இரண்டாம் அத்தியாயத்தில் இமயமலை பைக் பயணம் போலத் தன் நடிப்பிலும் சிரமப்பட்டிருக்கிறார். சிறுமியாகப் பெரிதாகக் காட்சிகள் இல்லாவிட்டாலும் நிகழ்காலத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் எஸ்தர் அனில். உதகமண்டலம், இமயமலை என இரு மலைப்பிரதேசங்களின் எழிலையும் அழகாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. கால இடைவெளிகளை கலர் டோனினால் வேறுபடுத்தி மென்மையான ஒளியுணர்வால் வருடியிருக்கிறார். முதல் பாதியில் ஒரு நல்ல ஹைக்கூவைச் சேகரிப்பது போலக் காட்சிகளைச் சிறப்பாகக் கோத்திருக்கிறார் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, தத்துவ புத்தகம் போல நீளும் இரண்டாம் பாதியின் சில காட்சிகளை இன்னும் கவனித்திருக்கலாம். அறிமுக இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான் இசையில் ‘இரு பெரும் நதிகள்’ பாடல் நமது பிளேலிஸ்ட்டில் இடம்பெற்று மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் காதல் ராகம். பின்னணி இசை ரசிக்க வைத்தாலும் நிசப்தமே இல்லாமல் எல்லா இடங்களிலும் வருவது, காட்சிக்கான இயல்பினையும் உணரமுடியாத நிலைக்கு சில இடங்களில் கொண்டு செல்கிறது. இது புது முயற்சி என்று தெரிந்தே நாம் திரைக்குள் வர, பள்ளிப் பருவக் காட்சிகள் குட்டி குட்டி கியூட் மொமெண்ட்களால் நம்மை இயல்பாகவே ரசிக்க வைக்கின்றன. அதிலும் பாரியின் கதாபாத்திர வடிவமைப்பு நம்மோடு நெருக்கமாகி பீல் குட் உணர்வைத் தருகின்றன. மலையாளி வார்டன் செய்யும் சில கட்டாய நகைச்சுவை காட்சி, துணை நடிகர்களின் சுமாரான நடிப்பைத் தவிர, இன்றைய திரைப்படத்தில் நாம் அரிதாகவே காணும் மென்மையான உணர்வினை படம் அளிப்பது கூடுதல் ப்ளஸ்! ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் முதல் பாதியில் இருக்கும் அந்த இயல்பு அப்படியே மிஸ்ஸிங்! ‘வாழ்க்கை என்றால் என்ன தெரியுமா’, ‘நட்சத்திர துகள்கள்’, ‘செலஸ்டியல் பாடி’ எனத் தத்துவ வகுப்புகளாக செயற்கைத்தனங்கள் விரிகின்றன. அதிலும் ‘நதிகள் இணைகின்றன’ என்று பாடலின் வரிகளையே மீண்டும் வாய்ஸ் ஓவர் வசனமாகவும் வைத்து ரிப்பீட் அடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பிழையே செய்யாத ஒருவனின் குற்றவுணர்வைப் போக்குவதாகவும், தன்னை மறந்து தன் திறமையை மறந்து வேறுபயணத்தில் இருக்கும் ஒருவனை மீட்பதாகவும் பின்னப்பட்ட தன்னுடைய கதைக்கு உணர்வுபூர்வமாக உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். அதற்கான விதையாக முதல் பாதியில் வைத்த காட்சிகள் வேரினைப் பிடித்தாலும், இரண்டாம் பாதி கனி கொடுக்கவில்லை. திரைக்கதை இமயமலையின் வளைவுகளாகச் சிக்கலில் சுற்ற, அவர்களோடு சேர்ந்து நாமும் மாட்டிக்கொண்ட உணர்வைத் தந்து அயர்ச்சியை ஏற்படுத்துகிறது படம். மின்மினி படத்தில்... உண்மையைச் சொல்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற போதிலும் ஏன் நாயகி அதைச் சொல்லத் தயங்குகிறார் என்பதற்கு எந்தத் தெளிவான விளக்கமும் கடைசிவரை புலப்படவில்லை. இத்தனை வருடங்கள் காணாமல் போன நாயகனைத் தேடாத நாயகி, இமயமலைப் பயணத்துக்கு மட்டும் இணைவது ஏன் என்பதற்கான காரணங்களை எல்லாம் வெறும் வாய்ஸ் ஓவர்களாகக் கடந்து போயிருப்பதும் அதீத சினிமா உணர்வினைத் தந்துவிடுகிறது. புதுமையான முயற்சியாக மின்னும் இந்த ‘மின்மினி’ ஊட்டி காட்சிகளில் அழகாக மிளிர்ந்தது. இமயமலை சென்றபிறகும் அதன் ஒளியைக் குன்றவிடாமல் பத்திரப்படுத்தி இருந்தால் மறக்க முடியாத பயணமாகியிருக்கும். https://cinema.vikatan.com/kollywood/halitha-shameems-minmini-movie-review-2?pfrom=story-card
  15. 1990, 2000 ஆண்டுகளில் திரையில் கோலோச்சிய நடிகரின் ‘ரீ என்ட்ரி’யை மீண்டும் திரையில் பார்ப்பது உற்சாகம் கூட்டக் கூடிய அனுபவம்தான். அதுவும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் எனும்போது ஒருவித நம்பிக்கையையும் கூடவே அழைத்துச் செல்வது இயல்பு. அப்படியான எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டு ஒருவழியாக திரைக்கு வந்துள்ளது பிரசாந்தின் ‘அந்தகன்’. படம் கொடுத்த அனுபவம் எப்படி என்பதைப் பார்ப்போம். பார்வையற்றவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் க்ரிஷ் (பிரசாந்த்) ஆத்மார்த்தமான ஓர் இசை பிரியர். பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படும் அவர், அதற்காக லண்டன் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கும் ஜுலிக்கும் (பிரியா ஆனந்த்) இடையே நட்பு மலர்கிறது. அவரது ரெஸ்ட்ரோ பாரில் க்ரிஷுக்கு பியானோ வாசிக்கும் வேலை கிடைக்க, அந்த ஊதியத்தை வைத்து லண்டன் செல்ல திட்டமிடுகிறார். இப்படியாக வாழ்க்கை சீராக சென்றுகொண்டிருக்கும்போது, க்ரிஷுக்கு முன்னால் கொலை ஒன்று நிகழ்ந்து அவரது திட்டம் மொத்தமும் தலைகீழாக மாறிவிடுகிறது. அந்தக் கொலையும் அதன் பின் நடக்கும் சம்பவங்களும் க்ரிஷின் இசைக் ‘கனவை’ கலைத்ததா, உயிர்பெறச் செய்ததா, என்னதான் நடந்தது என்பதே திரைக்கதை. கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்கான இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் காட்சிகளை அச்சு அசலாக தமிழுக்கு மாற்றியிருப்பதால், ஒரிஜினல் வெர்ஷனை பார்த்த பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் கிட்டுவது கொஞ்சம் கடினம். ஆனால், அசல் படத்தைப் பார்த்து மறந்துபோனவர்களுக்கும், புதிய பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காத வகையில் தமிழுக்கு ஏற்ற வகையிலான நேர்த்தியாக இயக்கம் கவனிக்க வைக்கிறது. இதற்கு மற்றொரு காரணம், நீர்த்துப்போகாத கதையின் திருப்பங்களும், அதன் எங்கேஜிங் தன்மையும். குறிப்பாக பியானோ வாசிக்கும் பிரசாந்த் பல இடங்களில் இளையராஜாவின் இசையில் ரெட்ரோ பாடல்களின் இசையை மீட்டெடுப்பது, ஒரிஜினல் நடிகராக கார்த்தி, தனது ‘மவுன ராகம்’ படத்தைப் பார்ப்பது, ‘ஜீன்ஸ்’ பட ரெஃபரன்ஸ் ஆகியவை நினைவுகளை மீட்பதுடன் ரசிக்கவும் வைக்கிறது. ‘சந்திரனே சூரியனே’ மற்றும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ பாடல்கள் வரும் இடம் அட்டகாசம். ஒப்பீட்டளவில் ‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா - ராதிகா ஆப்தே இடையே ஒருவித இயல்புத்தன்மையுடன் கூடிய நட்பும், காதலும் இருக்கும். பிரசாந்த் - ப்ரியா ஆனந்திடம் அது கொஞ்சம் மிஸ்ஸிங். அதேசமயம் சில கதாபாத்திரங்கள் ஒரிஜினலை விட மிஞ்சி நிற்கின்றன. உதாரணம் ஊர்வசி கதாபாத்திரம். ஒருபுறம் அப்பாவியான இசைக் கலைஞனாகவும், மறுபுறம் பதற்றம், பயத்துடன் போராட்டம் நடத்துபவராகவும் தன்னால் முடிந்த அளவுக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார் பிரசாந்த். அழுத்தமான எதிர்மறை கதாபாத்திரத்தில் சிம்ரன் ரசிக்க வைக்கிறார். எல்லோரையும் ‘ஓவர்டேக்’ செய்து நடிப்பால் திரையில் ஆளுமை செலுத்துகிறார். பிரியா ஆனந்த் குறைந்த திரைநேரம் எடுத்துக் கொண்டாலும் நிறைந்த நடிப்பை வழங்கத் தவறவில்லை. ஊர்வசி - யோகிபாபு காம்போ புன்முறுவலுக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. கார்த்திக் வழக்கமான உடல்மொழியில் தடம் பதிக்கிறார். சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்டோர் தேவையான பங்களிப்பு செலுத்துகின்றனர். இசையின் வழியே நகரும் கதையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திருப்பம் நிறைந்த காட்சிகளில் அதிர்ச்சியை கூட்டுகிறது. பியானோ இசை ஈர்க்கிறது. பாடல்கள் பெரிதாக ஒட்டவில்லை. இறுதியில் வரும் ‘என் காதல்’ பாடல் ஓகே. திரைக்கதையின் அடர்த்தியைக் கூட்டும் ரவி யாதவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம். திருப்பம் நிறைந்த விறுவிறுப்பான கதை என்பதால் பெரிதாக போராடிக்காமல் நகர்கிறது படம். அதற்கு முதிர்ச்சியான நடிகர்களின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. அதேசமயம் ‘அந்தாதூன்’ படம் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் மறவாதவர்களுக்கு நிறைவு தருவது சந்தேகமே. அந்தகன் Review: பிரசாந்தின் ‘கம்பேக்’ எப்படி? | Prasanth starrer Andhagan movie review - hindutamil.in
  16. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமாரது தலைமையில், இந்து, பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதி சிரமதானமும் செய்யப்பட்டது. (ப) புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! (newuthayan.com)
  17. 26 JUL, 2024 | 06:13 PM கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று (25) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு அறுவடையை ஆரம்பித்துவைத்தார். இதில் பரந்தன் விவசாய கல்லூரியின் விரிவுரையாளர் ம.ரஜீதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர். கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா | Virakesari.lk
  18. 26 JUL, 2024 | 07:04 PM (நா.தனுஜா) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் முன்வைக்கப்பட்ட 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த இக்கலவரங்களின் மிக மோசமான தாக்கத்தையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் 'இற்றைக்கு 41 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் மக்களையும், அவர்களின் வர்த்தக நிலையங்களையும் இலக்குவைத்து வன்முறைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியானதுடன், பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் காயமடைந்தனர். அத்தோடு பலர் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானதுடன், நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினர். 'கறுப்பு ஜுலை' என அறியப்படும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நாட்டின் அமைதியின்மையை தோற்றுவித்ததுடன், பல தசாப்தகால போருக்கும் வழிவகுத்தது. இது இலங்கையின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்' என கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார். அதுமாத்திரமன்றி இவ்வாறான மிக மோசமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூருவதில் கனேடியத் தமிழர்கள் மற்றும் உலகவாழ் தமிழர்களுடன் தாம் உடன்நிற்பதை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியை 'தமிழினப் படுகொலை நினைவு நாளாக' பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் கனேடியப் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்றும், ஜூலை மாதம் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் தினத்தன்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்படும் அறிக்கைகளில் பயன்படுத்தப்படும் 'இனப்படுகொலை' என்ற சொற்பதத்தை நிராகரித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுவரும் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் கூறிவருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறையும் அத்தகையதொரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை முற்றாக நிராகரிப்பதாக அதில் தெரிவித்திருக்கிறது. அத்தோடு இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து இதற்கு முன்னரும் கனேடிய பிரதமருக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் 'கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் பங்களிக்காது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனேடிய பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை | Virakesari.lk
  19. Published By: VISHNU 26 JUL, 2024 | 07:54 PM ஜனாதிபதி தேர்தலில், ஒரு சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி வேட்பாளர் நிறுத்தப்படக் கூடாது என்ற அடிப்படையில், தமிழ் பொது வேட்பாளர் கருத்தியலை ஆதரிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk
  20. ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்- 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு-3 Published By: RAJEEBAN 26 JUL, 2024 | 05:39 PM Sri Lanka, Island of Terror - An Indictment by Thornton, E.M. & Niththyananthan, R. தமிழில் - ரஜீபன் மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள். திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள். அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின் பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள். பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன அவர்கள் தனது ஆடைகளை பலவந்தமாக அகற்றியவேளையிலும் அவள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தனக்கு ஏற்படுத்தப்பட்ட வலிகள் தன்னை பாதிக்காத நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். தன்மீது சுமத்தப்பட்ட ஈடு செய்ய முடியாத அவமானம் குறித்து அவள்வெட்கப்படவில்லை. ஏறைக்குறைய 20 ஆண்கள் அவளை பாலியல்வன்முறைக்கு உட்படுத்திய பின்னரே ஒருவன் ஏனையவர்களை எச்சரித்தான் . அவளை மூர்க்கத்தனமாக உலுப்பினான். அவள் கத்தவும் போராடவும் தொடங்கினாள்,சுற்றிலும் பார்த்த அவள் தனது உடலில் இருந்து குருதி வெளியேறிக்கொண்டிருப்பதை முதல்தடவையாக உணர்ந்தாள். நான் உதவியில்லாத பார்வையாளனாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் திடீரேன தனது முஷ்டிகளை இறுக்கிக்கொண்டாள்,பின்னர் அவளது முகத்த்தில் உதவியற்ற சரணடைதல் தென்பற்றது.அவள் வானத்தை அண்ணாந்து பார்த்து தனக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். ஆண்டவரே அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவர்களிற்கு தெரியாததால் அவர்களை மன்னியுங்கள் அவள் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மயக்கத்திலாழ்ந்தாள்.அவர்கள் பின்னர் அவள்மீது பெட்ரோலை ஊற்றி எரித்தனர். உயிருடன் ஒருவர் எரிக்கப்படுவதை இரண்டாவது தடவையாக நான் அன்றைய தினம் பார்த்தேன். நாங்கள் மத்திய காலத்திற்குள் நுழைந்துவி;ட்டோமோ என நான் சிந்தித்தேன். இன்றைய காலத்து சிங்கள பௌத்தர்களை விட வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் - காட்டுமிராண்டிகள் மிகவும் நாகரீகமானவர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். 3.15- இரண்டுமணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் அந்த பகுதி களியாட்ட நிகழ்வு இடம்பெறும் பகுதி போல காணப்பட்டது. சூறையாடப்பட்ட பொருட்களை மக்கள் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஆடைகள் முதல் தளபாடங்கள் வரை சூறையாடப்பட்டன. இராணுவ டிரக் அங்கு வந்தவேளை சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயலவில்லை. அவர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டார்கள் என்ற செய்தி அவர்களிற்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும். 4.30 - வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தன.சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் ஆறுதலாக அவசரமின்றி தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆச்சரியமளிக்கும் விதத்தில் அவர்கள் இன்னமும் எனது வீட்டை தாக்கவில்லை.மஹரகம வாக்காளர் பட்டியலில் நான் என்னை பதிவு செய்யாததே இதற்கு காரணம்;. நான் ஒரு தமிழன் என யாரோ காடையர்களிற்கு தகவல் வழங்கப்போகின்றார்கள். எனது குடும்பத்தவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததால் நான் மாத்திரம் வீட்டிலிருந்தேன். 6.15 - அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது எனினும் அவர்கள் தொடர்ந்தும் சூறையாடலில் ஈடுபட்டிருந்தனர். பெடெஸ்டல் மின்விசிறியொன்றை யுவதியொருவர் கொண்டு செல்வதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இன்னுமொரு குழுவினர் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட யுவதிகள் பல பொதிகளை கொண்டுசென்றுகொண்டிருந்தனர்.உடைகளாகயிருக்கவேண்டும். 7மணி இன்னமும் இருள் விலகவில்லை எனது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்- 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு-3 | Virakesari.lk
  21. காடையர்கள் கைகளில் சிக்கிய தமிழ் சகோதரிகள்; காடையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த இராணுவம் - 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு - 2 Published By: RAJEEBAN 25 JUL, 2024 | 05:08 PM Sri Lanka, Island of Terror - An Indictment by Thornton, E.M. & Niththyananthan, R. தமிழில் - ரஜீபன் வீதியின் மறுபக்கத்திலிருந்து பௌத்த மதகுருமார் பேரணியாக அந்த சந்தியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் கைககளை அசைத்து சத்தமிட்டனர்,அவர்களில் ஒருவர் அனைத்து தமிழர்களையும் கொலை செய்யவேண்டும் ஒருவரை கூட தப்பவிடக்கூடாது என காடையர்களை நோக்கி கூச்சலிட்டார். நான் கடும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டேன்-சில நிமிடம் சிந்தித்த பின்னர் விரைவில் வீட்டுக்கு செல்வதே சிறந்த விடயம் என தீர்மானித்தேன். பேருந்து மூலம் பயணி;ப்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதால் நான் நடந்தே வீட்டிற்கு செல்ல தீர்மானித்தேன். 9.30 -நுகேகொட சந்தியிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவிலிருந்த எனது வீட்டை நோக்கி நான் நடக்கதொடங்கினேன்- வீதியின் இரு மருங்கிலும் இருந்த கடைகளை மக்கள் சூறையாடிக்கொண்டிருந்தார்கள்.கடைகளை முழுமையாக கொள்ளையடித்த பிறகு அவற்றை தீயிட்டு கொழுத்தினார்கள். தொலைவில் இராணுவத்தினரின் ஜீப்பினை பார்த்தேன்.ஒருவித நிம்மதியுடன் நான் அதனை நோக்கி நடந்தேன், ஆனால் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது,ஜீப்பின் மேற்பகுதியில் ஆறு ஏழு இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள் அவர்கள் காடையர் கும்பல் சூறையாடுவதற்கான கொள்ளையடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்,நான் திகைத்துப்போனேன். 10.45- நான் மஹரகமவில் உள்ள எனது வீட்டை சென்றடைந்தேன்.அங்கு இன்னமும் எதுவும் நடக்கவில்லை.நான் வீட்டிற்குள் சென்றதும் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.அதன் பின்னர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று நிலத்தை ஆழமாக தோன்றி அதற்குள் பெறுமதியான பொருட்களை துணி பொலித்தீனால் மூடி புதைத்தேன். 11.30- எனது வீட்டிற்கு வெளியே பெரும் சத்தங்கள் கேட்டன,கூச்சல் குழப்பமான நிலை காணப்பட்டது.ஜன்னலால் எட்டிப்பார்த்தேன். அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஜீப்கள்,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேருந்துகள் திடீரென அந்த பகுதிக்கு வந்தன. அந்த பேருந்துகள் ஜீப்புகளில் இருந்து பலர் கத்திகள் வாள்களுடன் இறங்கினார்கள்.சுமார் 200 பேர் இருப்பார்கள் அவர்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி ஒடினார்கள். அவர்களின் தலைவர்கள் போன்று தோற்றமளித்த ஒரு பத்துபேரின் கரங்களில் பேப்பர் போன்ற ஆவணங்கள் காணப்பட்டன,( அவை தேர்தல் வாக்காளர் பதிவேடுகள் என பின்னர்தான் தெரியவந்தது)அவர்கள் தமிழர்களின் வீடுகளை நோக்கி காடையர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரை என்னால் அடையாளம் காணமுடிந்தது,ஆளும் கட்சியின் தேர்தல் கூட்டங்களில் நான் அவர்களை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன்( ஐக்கிய தேசிய கட்சி) எனது வீட்டிற்கு நேரே தமிழர்களின் வீடுகள் இருந்தன,காடையர்கள் ஜன்னல்களை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.அந்த வீடுகள் தீப்பிடித்தன,தீ வானளவிற்கு உயர்ந்தது.உள்ளேயிருந்தவர்கள் அலறினார்கள். 11.45- நான் ஜன்னலை மூடிவிட்டு உள்ளே சென்றேன் - மெழுகுதிரியை கொழுத்தி அந்தோனியரை வணங்கினேன் தமிழர்களை பாதுகாக்குமாறு மன்றாடினேன். 12.25 நான் வானொலியி;ல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தியை செவிமடுக்க ஆரம்பித்தேன்.பாதுகாப்பு அமைச்சின் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பு வெளியானது. 1.30 மணி நான் தொடர்ந்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவேளை வெளியே பெரும் அலறல்கள் சத்தங்கள் கேட்டன. பலர் இரண்டு யுவதிகளை கூந்தலில் பிடித்து இழுத்து வந்துகொண்டிருந்தனர். எனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்தவர்கள் என நான் அடையாளம் கண்டுகொண்டேன்.' மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள். திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள். அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின் பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள். பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன காடையர்கள் கைகளில் சிக்கிய தமிழ் சகோதரிகள்; காடையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த இராணுவம் - 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு - 2 | Virakesari.lk
  22. கனடா ஒன்ராரியோவில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கழிப்புறும் கடற்கரையான வசாகா கடற்கரையிற்கு சுற்றுலா வரும் இந்தியர்கள், கடற்கரையில் குழி தோண்டி மலம் கழித்து அசுத்தம் செய்வதாக அக் கடற்கரை அமைந்துள்ள ஊரில் உள்ளவர்கள் விசனப்படுகின்றனர். இது தொடர்பாக அவ் ஊரில் உள்ள ஒரு பெண் ரிக்ரொக் கில் சில காணொளிகளை பகிர்ந்து விமர்சித்துள்ளதுடன் தன் குழந்தைகளை கூட அக் கடற்கரை க்கு அனுப்ப முடியாமல் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அறிய: Videos from a Wasaga Beach resident in Ontario are being shared widely on social media after she accused immigrants, mainly from India, of defecating in holes on the beach and burying it. Tiktoker “ItsNattylxnn2.0,” is a local in the Ontario resort town that boasts the world’s longest freshwater beach. “Natty” went viral online after ranting about being unable to take her kids to the beach because visitors have been using it as a toilet. She claimed to have discovered feces in spots where she witnessed Indian families digging and even setting up a tent over the hole for the day. “It’s pre-planned, premeditated. They dig the hole. There are tents,…They pitch the tent; you think they’re going to change, but they’re not. They are using them as washrooms,” she said in one video. Another video in which she complained about the central part of the beach, known as Beach One, attracted over 410,000 views on TikTok. “I’m tired of people saying that the people pooping on the beach (is) ‘what they do back home.’ We are not back home. We are in Canada, and as a local, I refuse to let my kids dig in the sand on Beach One,” she said in the video. She has received mixed comments on her videos, from people pushing back, saying that she is lying—to many others both local and elsewhere in Canada vouching for her, saying they have experienced the same thing. “I worked on beach one for a summer, and I used to have to tell them to stop, and they just wouldn’t,” one user said in the comments. One TikToker from India made a video calling the minority of Indian immigrants who are acting in ways that make negative headlines like this “problematic” and not a representation of the Indian-Canadian community. They did it off my backyard. There were three different families of maybe 25, 30 people that came for barbecues who would set up right on the fence of my backyard. I saw them digging the hole. I saw them placing a tent (over it). When they left, there was poop,” Natty said in another video. Natty said the issue became noticeable after the COVID-19 lockdowns were lifted. “People were coming to the beach, and the washrooms were closed. So they were making their washrooms,” she said in another video where she called those who did so selfish. She has faced accusations of racism for her comments. She responded to one TikTok user who called her a racist colonizer by saying she has a First Nations background. “People are too scared to speak up because they think that it’s being racist. It’s not because if another white person was doing that, would you feel any type of way to tell them to ‘pull your pants up.’ ‘Don’t be doing that on a beach?’” she said. “This has nothing to do with targeting someone based on their skin colour and everything to do with protecting our beaches, our parks. These are places that everyone is supposed to be able to go to and enjoy.” https://tnc.news/2024/07/22/ontario-resident-viral-immigrants-pooping-beach/
  23. கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. “எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாசவேலையை விஎச்பி கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. நாட்டில் அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான இந்த பிரிவினைவாத செயலுக்கு எதிராக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம்” என விஸ்வ ஹிந்து பரிஷத் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எட்மன்டன் சுவாமிநாராயண் கோயிலை சேதப்படுத்தியது அவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பை தனிநாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு காலிஸ்தான் என பெயரிட வேண்டும் என்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரி வருகின்றனர். கனடா அரசு இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் அங்கு காலிஸ்தான் ஆதரவு தரப்பினர் இப்படி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. [எ] கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம். (newuthayan.com)
  24. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தி சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனித படுகொலையுடன் தொடர்புடையவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதை வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவொன்று கண்டுபிடித்துள்ளதாக தனியார் இணையத்தள செய்தித் சேவை கடந்த 20 ஆம் திகதி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அச்செய்தி பாரதூரமானது.இந்த விடயம் தொடர்பில் நான் சபாநாயகருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். என்னை படுகொலை செய்வதற்கு சதி செய்வதாக கூறப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்தமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துகின்றேன் என்றார். என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் - சாணக்கியன் சபையில் வலியுறுத்தல்! | Virakesari.lk
  25. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிறைவேற்றுத்துறையின் ஒருசில அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளேன்.இச்சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுடனும்,சுயாதீன தரப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அரசியலமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது.ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எதிராகச் செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆகவே ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படலாம். கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டன.இவ்விடயம் குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சு அறிவியல் ரீதியில் முன்னெடுத்த ஆய்வு அறிக்கைக்கு அமைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி,நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நான் ஒன்றிணைந்து கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோரும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.அத்துடன் கவலையடைகிறோம். 1983 ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கரும் புள்ளியாக காணப்படுகிறது.41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த சம்பவங்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை.இருப்பினும் நாட்டு பிரஜை என்ற ரீதியில் தமிழர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார். ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.