Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. யானை குட்டி ஈனுவதை தத்ரூபமாக படம் பிடித்த தமிழரின் சிற்பக்கலை..! வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி “NATIONAL GEOGRAPHIC” சேனலிலும், “DISCOVERY” சேனலிலும் பேசிக்கொண்டிருப்பதை மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருக்கும் தமிழர்களே, ஒருநிமிடம் இந்த பதிவை வாசியுங்கள். மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே. திருபுவனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது ( தும்பிக்கை எங்கே காணோம்.. ? ) அதான் நமக்கு கைகள் இருகின்றதே ..! உடைத்து விட்டோம்..! பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது. இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்..! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது. வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது…அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா ? https://www.vazhviyal.com/யானை-குட்டி-ஈனுவதை-தத்ரூ/
  2. தற்போதைய நிழற்கூடை ..😢 கமிசன் அடிக்காமல் உருவாக்கப்பட்ட அந்த கால நிழற்கூடை ..🤔 ( உத்திரமேரூர் )
  3. பழந்தமிழர் அளவை கருவிகள். முறையே படி , சின்ன படி , மரக்கால், கலன்
  4. ஓனியன் ரவா ..😋 டிஸ்கி : வீட்டில் பெரும்பாலான மனுசிமார் கரண்டி மாவை எடுத்து தோசை கல்லில் வட்ட வடிவமாக தேய்ச்சு விடுவினம் . பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தை மேலே தூவி விடுவினம் .. அந்த முறை தவறு .. காணொளியில் காட்டியவாறு தூவப்பட்ட வெங்காயத்தின் மேல் ஒரு ரம்பளரில் தோசை மாவை துளி துளியாக ஊற்ற வேண்டும் ..👌
  5. அந்த கால பயிர்ச்செய்கை பாடல் படம் : பழனி (1965 ) வரிகள் : கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியோர் : TMS & PBS & சீர்காழி கோவிந்தராஜன். ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு சேராத செல்வம் இன்று சேராதோ? தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ? ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா நாணம் என்ன சொல்லம்மா அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா திருமண நாளம்மா போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள் தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது? தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது? ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது? போர் செய்யும் வீரன் ஏது? போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம்.
  6. உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே.. சரி சொல்லு.. அத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..☺️
  7. சரக்கு அதும் குறிப்பா தமிழ்நாடு அரசின் "ராஸ்மாக்" சரக்கு அடிச்சால் இப்படித்தான் ஆகும்..😊 அடிச்சு தூக்குங்க எசமான்..😎
  8. கல்வராயன் மலை கற்கால கருவிகள் ஏந்திய சிற்பம்
  9. படம் : கலோ மிஸ்ரர் ஜமீன்தார்( 1965) வரிகள் : கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் : P சுசீலா இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே.. ... அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ... ... (இளமை...) ... பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும் செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..
  10. பேராசிரியர் கிருட்டிணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂
  11. எத்தனையோ முறை மடிக்க பழகினாலும் ...சதுரமாக .. போண்டா .. மாதிரியும் வந்து விடுவதுண்டு.. இதோ ஆய கலைகளில் ஒன்றான சமோசா மடிக்கும் கலை..😇
  12. படம் : மீண்ட சொர்க்கம் (1960) வரிகள் : கண்ணதாசன் இசை : T சலாபதி ராவ் பாடியோர் : A M ராஜா & P சுசீலா ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: எங்கே? ராஜா: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: எங்கே? ராஜா: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாள சின்னம் ராஜா: பொன் போன்ற உடல் மீது மோதும் இந்தக் கண் தந்த அடையாளம் போதும் இந்தக் கண் தந்த அடையாளம் போதும் ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: நானா? ராஜா: ஆமாம் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: மாலைக்கு நோயாகிப் போனேன் காலை மலருக்குப் பகையாக ஆனேன் ராஜா: உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: யாரோ? ராஜா: நீ தான் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: மண மேடை தனில் மாலை சூடும் உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும் ராஜா: நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: ஓஹோ.. ராஜா: என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.