குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
Everything posted by குமாரசாமி
-
குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?
கிந்தியா என்பது யாருக்குமே உதவாத நாடாக போய் விட்டது. சொந்த நாட்டு மக்களுக்கும் பிரயோசனமில்லை. அயல் நாடுகளுக்கும் பிரயோசனமில்லை.
-
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
என்னதொரு கொடுமையான இஸ்ரேல் அரசு? அதுவும் தாகம் தீர்க்க நின்ற நிலையிலும் கூட.... வைத்தியசாலைகளில் குண்டு வீச்சு என்றால்....அரைசாண் வயிற்றுக்கு போராடும் அப்பாவிகளின் மீதுமா? புலம்பெயர் மேற்குலக புருஷர்கள் வாயும் திறக்க மாட்டார்கள். உக்ரேன் என்றால் மட்டும் அவர்களுக்கு வாய்திறக்குமாம். நாஷிகளால் கொடுமையாக அழிக்கப்பட்ட யூத இனம்.....அதையே பலஸ்தீன் மண்ணிலும் விதைப்பது சரியா? இங்கே ஹிட்லர் செய்தது எல்லாம் நியாயமாக்கப்படுகின்றது என நினைக்கின்றேன்.
-
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
சீமானுக்கு எதிராக களம் இறக்கப்பட்ட பினாமி அரசியல் தான் விஜய் அரசியல்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
சீமானை ஆதரிக்கின்றார்கள் எதிர்க்கின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க..... சீமானை எதிர்ப்பவர்கள் ஈழத்தமிழர் அழிவுக்கும் ஆதரவற்ற நிலைமைக்கும் உள்ளாக்கியவர்களை ஆதரிப்பது போல் தெரிகின்றது??????? கருணாநிதி அரசியலுக்கு வாய் மூடிய மௌனத்துடன் பாஜக தமிழ்நாட்டிற்குள் புகுந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு.... இவர்கள் சீமானை எதிர்ப்பதன் மூலம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற குழப்பம் உலகளாவிய குழப்பம் கண்டியளோ..😁
-
நாட்டைப் பிரிக்கும் முயற்சி இன்னும் மாறவில்லை
ஒரு பேராசியரின் சிந்தனையும் பேச்சும் இப்படி என்றால் ஈழத்தமிழினம் தனக்காக யுகம் யுகமாக போராட வேண்டியிருக்கும்.
-
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
எமக்கு நாமே என அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த இனங்களை கொள்ளையடிக்கும் நோக்குடன் படையெடுத்து வந்த வெள்ளை இனங்கள்....... கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் தமது கலாச்சாரத்தையும் மதங்களையும் சித்திரவதைகள் மூலம் திணித்ததெல்லாம் தங்களுக்கு தெரியவில்லை என்றால் யான் என்ன செய்யும்? நிச்சயமாக வெள்ளை கொள்ளையர்கள் வந்த பின்னர் தான் எமது நாகரீகமும் அறிவுபூர்வமான தொழில்நுட்பங்களும் மழுங்கடிக்கப்பட்டது. நான் முன் வைக்கும் கேள்விகளுக்கு மட்டம் தட்டாமல் / நக்கல் நளினம் ஏதுமில்லாமல் வந்த பதில்கள் எங்கேயாவது இருந்தால் எடுத்து காட்டுங்கள். பொறுமையாக பதில் இடுபவர்களை உங்களால் சொல்ல முடியுமா? அதன் பின் நான்பட்டியலிட முயற்சிக்கின்றேன்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஒட்டு மொத்தமாக பண வாக்கு தேர்தலாக இருக்கும் நாட்டில் நீங்கள் சொல்வதெல்லாம் சாத்தியமா சார்? 🤣 இந்திய தேர்தல்கள் என்றாலே மோசடி தேர்தல் என்பது உலகத்தினது பார்வை.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரங்கள் வேறுபடும். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களுக்கு தடையும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்று விட்டது.இதையெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். பால் பொருட்கள் வெளி மாநிலங்களில் இறக்குமதியாகின்றது. கால் நடைகளுக்கான தீனிகளும் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதியாகின்றது. இதையெல்லாம் வளம் மிக்க தமிழ்நாட்டில் ஏன் எதற்காக என்றெல்லாம் விவாதிக்க மாட்டார்கள். இது மாநாடு அல்ல. ஒருவகை போராட்டம் மட்டுமே. மூலைக்கு மூலை மதுபானசாலைகள் இருக்கும் போது கள் உற்பத்தி செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து.
-
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
எமது அரசர்கள் காலங்களிலையே நாகரீகங்களும் அறிவுபூர்வமான வளர்ச்சிகளும் இருந்துள்ளதை வரலாறுகள் பறைசாற்றி நிற்கின்றன. இருந்தும்..... எங்கடை சனம் வெள்ளைக்காரன் செய்வதெல்லாம் சரி. சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறை எதுவுமில்லை எண்ட பாணியில உருட்டல்கள் சொல்லி வேலையில்லை.😄 இதுக்கை கேம்பிறிச்சு ஒக்ஸ்போட்டு அந்த யூனி இந்த யூனி ஆதாரங்கள் வேறை 😎
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
முயற்சிகளுக்கும் நோபல் பரிசு உண்டா? 😧 ஒபாமா காலத்தில் நடந்த அரபு வசந்தம் தான் இன்றைய ஐரோப்பிய நாடுகளின் சீர்குலைவுக்கு காரணம். அரபு எனும் குளவிக்கூட்டை கலைத்து சிதறிடித்த புண்ணியவான் ஒபாமா. நிற்க... யுத்த நிறுத்த முயற்சிகளினால் பலன் இல்லை என்பதை கடந்த பதினைந்து வருடங்களாக இந்த உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது. முள்ளிவாய்கால் அழிவு போல் ஒரு நிரந்தர அழிவு வந்தால் மட்டுமே யுத்த நிறுத்தம் வரும் போல் உள்ளது. இதைத்தான் இரண்டாம் உலகப்போர் முடிவும் அறுவுறுத்தி நிற்கின்றது.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
கட்டாயம் குடுப்பினம். குடிக்காட்டில் அடுத்த மூண்டு வருசத்துக்கு நோபல் பரிசு கமிட்டி காலம் தள்ளேலாது 😁
-
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
ஈழத்திற்கு ஆதரவாக இருந்த/இருக்கும் தமிழக உறவுகளை,பிரபல்யங்களை விமர்சிக்கலாம் ஆனால் எதிர்க்கக்கூடாது என்பது என் நிலைப்பாடு.
-
ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
வழமை போல புட்டினார் ரோமன் அவர்களை போட்டுத்தள்ளி விட்டார்.🤣 கோசானின் கருத்து முன்னோட்டம். 😎
-
மனதுக்கு பிடித்த BGM Background Music
நெஞ்சை வருடும் சோக BGM https://youtu.be/kpOK8mzx3dI?si=7JuGFwhJgzdcA9dF
-
பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!
நாம் எல்லோரும் ஒரு காலத்தில் பாடசாலை கல்லூரி என சென்று வந்திருப்போம்.அப்போது நாம் கண்ட/ அனுபவித்த தறுதலை கூட்டங்கள் எத்தனை? எத்தனை? அதிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பண/ அரசியல்/ஏதோ ஒரு வகையில் பிரபல்யம் என்றால் அவ்வளவுதான்? ஆசிரியர்களும் சக மாணவர்களும் அடக்கி வாசிப்பார்கள். நடவடிக்கை எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். உங்கள் நேர்மையான நடவடிக்கைகளைதொடருங்கள்.
-
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
அந்த திட்டத்தில் என்ன தவறு இருக்கின்றது? புட்டினும் டொனால்ட் ரம்பும் இல்லாத காலத்தில் இந்த மேற்கத்திய உலகம் எதை சாதித்து காட்டியது? அன்றைய கொழுப்புவாத முதலாளிகள் உலகில் எல்லா இடங்களிலும் கலவரங்களை தூவிவிட்டதை தவிர வேறு என்ன நல்ல செயல்களை செய்தார்கள்? பகட்டுக்கு வறிய நாடுகளுக்கான/மூன்றாம் உலக நாடுகளுக்கான உதவி எனும் பெயரில் வறுத்த விசுக்கோத்தையும் கூப்பன் மாவையும் கொடுத்து இன்னொரு பக்கம் மனித சுதந்திரம் எனும் போர்வையில் இன கொலைகளையும் உள்ளூர் போராட்டங்களையும் அழிவுகளையும் ஊக்குவித்து குளிர் காய்ந்தவர்கள் அல்லவா? அகதி அந்தஸ்து தந்தவர்கள் என்பதற்காக வாய் மூடிக்கொண்டு இவர்கள் செய்வதற்கெல்லாம் நன்றிக் கடனாக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் தூக்கிலிட்டு சாவதே மேல்.
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
இனியென்ன..... அஜித்குமார் செய்திகளும் சூடான விவாதங்களும் அடங்கி விட்டது. வழமை போல கரண்ட் வயர் கடித்து தற்கொலை செய்த சம்பவமும்.மாடியால் விழுந்து தற்கொலை செய்த மாணவியின் சம்பவமும் போல..... இந்திய அரசியலும் அதிலும் பிரத்தியேகமாக தமிழ்நாட்டு அரசியல் நடைமுறைகளும் அதன் கிளை அரசியல் அடாவடிகளின் நடவடிக்கைகள் தெரியாமல் கண்டபடி விவாதிக்கும் பாலகர் நீவீர். ஒருவர் செய்த குற்றத்திற்காக அப்பாவிகளை தேடி பிடித்து குற்றவாளிகளாக்கும் நாடு அது.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
சம்பந்தன் மறைவுடன் அவர் வரலாறுகளும் மறைந்து / அழிந்து விட்டது. ( ஏதாவது நல்லது செய்தால் தானே பெயர் நிலைத்து நிற்க) இது இன்றைய தமிழ் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். ஆண்டவரே! சம்பந்தனின் அதிசய கண்டு பிடிப்பான சுமந்திரன் தெளிவு பெற்று உணர்வாராக.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி நில்மினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
-
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
நல்ல விடயம்.
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
அதொண்டுமில்லை தம்பி ....கட்டாப்பாரை கருவாடு எண்டால் எனக்கு விருப்பம். அதுதான் ஒரு பாசல் வருமெண்டு வழிமேல் விழி வைச்சு பாத்துக்கொண்டிருக்கிறன் 😁
-
அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!
உலக நாடுகளோட போர் செய்ய மாட்டம் எண்டு சத்தியம் பண்ணச்சொல்லுங்கோ 😂
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
சிறித்தம்பியருக்கு நான் பலகாரம் கட்டிக் குடுத்த நன்றிக்கடன் இப்பவும் இருக்குமெண்டு நினைக்கிறன்.....😎
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
இதென்ன கடை போட வாங்கிக்கொண்டு வந்தது போல கிடக்கு... 🤣
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
🤣கல்லுண்டாய் குப்பை மேட்டிலை குமாரசாமியின்ரை கோவணத்தையும் கிழிச்சு தொங்க விடுறதுக்கெண்டே ஒரு கும்பல் அலையுது😂