Everything posted by குமாரசாமி
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
புலம்பெயர் நாடுகளில் இறுதிக்கட்ட போருக்கென குடும்பத்திற்கு 2000 என சேகரித்த நிதிகள் எங்கே போனது? அந்த பணம் சேகரித்த பின்னர் பெரிய எதிர்ப்பு சண்டைகள் எதுவுமே நடக்கவில்லை.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
எமது இனத்தின் விடுதலைப்போரை எதனுடன் ஒப்பிடுவது என விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. உக்ரேன் போருக்கும் எமது இன விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? உக்ரேனுக்கு இருப்பது வேறு பிரச்சனை. எம் இனத்திற்கு இருப்பது வேறு பிரச்சனை.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இதோட உக்ரேன் போர் முடிவுக்கு வரும்... 😎
-
சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்
அஸ்வினுக்கு வாழ்த்துக்கள்💟
-
ரப் பாடகர் வேடன்
அந்த வட்டங்களை இனியும் காவிக்கொண்டு திரியக்கூடாது. அப்படியான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். Michael Jackson நிற வெறிக்காக போராடி வெற்றி பெற்றவர் என்பதை மறக்க கூடாது.
-
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்
நல்ல விடயம். ரொனி பிளேயரும், சந்திரிக்கா,கதிர்காமர் போன்றோர் இல்லாதிருந்தால் இன்று ஈழத்தமிழரின் நிலமை வேறு நல்லவிதமாக இருந்திருக்கும்.இருந்திருக்கலாம்.
-
ரப் பாடகர் வேடன்
வேடன் மலையாளத்தில் ஏற்கனவே பிரபல்யம். 4 கிராம் கஞ்சா தான் இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தேடி பார்த்ததில் ஏற்கனவே ஈழம் சம்பந்தமாகவும் சாதி அடிமை சம்பந்தமாகவும் பல பாடல்களை பாடியுள்ளார் என தெரிய வருகின்றது. யார் கம்பு சுத்தினாலும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு வரணும்.
-
ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
இன்று ரம்பின் அதியுச்ச வரி நடவடடிக்கைக்கு எதிராக வழக்கு போடுபவர்களும்,தீர்ப்பு வழங்குபவர்களும்......இந்த அமெரிக்கா ஏனைய நாடுகள் மீது,அப்பாவிகள் மீது குண்டுகள் வீசி ஆக்கிரமிக்கும் போது ஏன் வாய் மூடிக்கொண்டு இருந்தார்கள்?
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆர்ப்பாட்டம் இல்லாத நடிகர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
ரப் பாடகர் வேடன்
இருந்தாலும் வேடனுக்கு இருக்கும் தைரியம் ஏனைய கலைஞர்களுக்கு இல்லை.இலங்கையிலும் இப்படியொரு கலைஞன் வேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஓ....ராகு கேது பெயர்ச்சியெல்லாம் பார்க்கிறீங்கள் போல.... 😲 புரியவில்லை சொல்லுங்கள். 😁
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சிவன் ஒரு புறம் இருக்க.....63 நாயன்மார்களும் ஒரு புறம் இருக்க.... சைவசமயம் இயற்கையோடு ஒட்டிய மதம். சைவர்கள் இயற்கையையும் வழிபடுபவர்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஒரு சிறிய வீட்டிற்குள் சாமி அறை ஒரு பக்கம். நாலு காலடி தூரத்தில் இருக்கும் சமையலறையில் பறப்பன,ஊர்வன,நீந்துவன என விதம் விதமான சமையல்கள் தூள் கிளப்பும். 😂 வேறு எந்த மதங்களிலும் இல்லாதவாறு சைவசமயத்தில் மட்டும் தான்..... காளி தெய்வத்திற்கும் வைரவர் தெய்வத்திற்கும் மாமிச படையல்கள் இருக்கின்றது.எமது முன்னோர்களின் நினைவு தினங்களுக்கு பிதிர் எனும் நாளில் மச்ச உணவுகள் மிக முக்கியமாக படையலாக படைக்கப்படுகின்றது. இந்து மதத்தில் தான் அதாவது பார்ப்பனர்களால் அவர்கள் பிழைப்பிற்காக கொண்டுவரப்பட்டது தான் ஒரு சில நடைமுறைகள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீண்ட காலத்திற்கு பின்னர் காதுக்கு இனிமையான அமைதியான பாடலை கேட்கின்றேன்.😍 https://youtu.be/QJ-4za89Y6k?si=J7im5V7LmBCF6pfY பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண் : ………………………………. தீம் தோம் த தீம் தன தோம் தன தோம் பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம் இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் மற்றும் குழு : கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா உறவும் நீ வேண்டியெங்கும் ஆண் : …………………………….. பெண் : ……………………………….. ஆண் : ஓ….. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ…. பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நீங்கள் அடிக்கடி தலிபான்ஸ் எனும் சொல்லை பாவிப்பதால் உங்கள் உருட்டல் பிரட்டல்களை வறட்டல்களை வத்திக்கான் நோக்கியும் திசை திருப்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
பப்பிளிக்கிலையே உந்த சாத்து எண்டால்.....வீட்டில உலக்கையாலதான் சாத்துப்படி போல... 🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உந்த வெட்டொண்டு துண்டு இரண்டு கதையெல்லாம் அரபுநாடுகளிலை சரிவராது. பன்றி படத்தையே கண்ணிலை காட்டக்கூடாதாம்.😂
-
சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும்
இடுப்பு கொழுப்பும் தொந்தி கொழுப்பும் ஒரு பிரச்சனையா?🤨
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
டொனால்ட் ரம்புக்கு கடிதம் எழுதுவமா? 😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நாங்கள் எல்லா விடயங்களையும் சீரியஸ்சாக கதைக்க முடியாது. மத விடயங்களில் ஆதாரம் என்று பார்த்தால் எதுவுமே மெய்யானது இல்லை.வாதம் விதண்டாவாதம் செய்யலாமே தவிர நிறுவப்போவது யாருமில்லை. கலிகை கந்தனுக்கு ஒரு நக்கல் கதை இருக்கும். கதிர்காம கந்தனுக்கு இன்னொரு நக்கல் கதை இருக்கும். செல்வசந்நிதியானுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்கும். பணக்கார கந்தன் நல்லூரானுக்கு இன்னொரு நக்கல் இருக்கும். மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை.மத நூல்களும் மத வரலாறுகளும் பொய்யானவை என்பது என் கருத்து.மற்றும் படி அந்த இயற்கையை நோக்கி அரோகரா சொல்வதில் எந்த தவறுமில்லை. இயற்கை வலிமையானது.
-
உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்
இதைத்தானே உக்ரேன் போர் தொடங்கின நாளிலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்.செலென்ஸ்கி பிள்ளையருக்கு வாய் சரியில்லை எண்டு....எதுக்கெடுத்தாலும் சண்டித்தன கதையும்,புட்டின் மீதான நக்கல் கதைகளும்.... எல்லாம் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரிய பிரித்தானியாவும் தனக்கு பின்னாலை நிக்கிது எண்ட தைரியம் தான்
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கலிகை கந்தனுக்கும்.... சந்நிதி கந்தனுக்கும்.... நல்லூர் கந்தனுக்கும்.... இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
-
ரப் பாடகர் வேடன்
விதைகள் எங்கு முளைத்தாலும் அதற்கான வீரியத்தை காட்ட தவறுவதில்லை.
-
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி
உக்ரேனில் மனிதாபிமானத்தை தேடும் மேற்குலகும் அதன் விசுவாசிகளும் காசா அழிவில் மட்டும் காணாமல் போய் விடுவார்கள். அக்கிரம போர்களில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் குறைந்த பட்சம் மேலைத்தேய நாடுகளில் நாயாக ஆவது பிறந்து தொலையுங்கள்.வசதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வீர்கள்.☹️
-
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
சிங்கள இனவாதிகளால் சந்ததிக்கு சந்ததியாக, போகத்திற்கு போகம் நடத்தப்பட்ட ஒவ்வொரு இனக்கலவரத்திற்கும்/இன அழிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நினவுத்தூபிகள் அமைக்கப்பட வேண்டும்.இப்படியான நெருக்கடிகளும் உலக அரங்கில் சிங்களத்தை தலை குனிய வைக்கும் என நினைக்கின்றேன்.