Everything posted by குமாரசாமி
-
திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
அனுரவிற்கு கோத்தபாய துண்டைக் காணோம் துணியையை காணோம் என ஓடிய ஞாபகம் வந்திருக்கலாம். அந்த நேரம் ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் குப்பன் சுப்பன்கள் சன்லைட் சவுக்காரம் போட்டு குளிச்சது ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். 👉அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கோத்பாயவின் கோமணம் கட்டித்தொங்க விடப்பட்டது ஞாபகத்திற்கு வந்திருக்கலாம்.👈 பிஎச்டபிள்யூ பண்டாரநாயக்க சுட்டுக்கொல்லப்பட்டது ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். கிறிஸ்தவ ஜேஆர் புத்தர் சிலையை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போனது ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். அதே அரசியலை செய்யும் கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்கவை பார்த்து மிரண்டிருக்கலாம். யார் கண்டார்?
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இன்றைய காலத்திற்கு இந்த சட்டம் போதாது.வேற்று நாட்டார்களுக்கு குடியுரிமை வழங்கவே கூடாது. வா,இரு,உழை,சாப்பிடு,குடி,நாலு காசு சேர். சொந்த ஊருக்கே திரும்பி போ...டொட் 😎 நீ👈👉 நீயாகவே இரு... நான் நானாகவே இருப்பம்.மற்றவன் உழைப்பில் குளிர்காயாமல் சொந்த நாடு,சொந்த மொழி,சொந்த மண்ணில் குறியாக இருக்கணும் கோபால்.
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
இங்கே திறமையாக காய் நகர்த்துவது அமெரிக்கா மட்டுமே.
-
கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பம் - தொல். திருமாவளவன் பங்கேற்பு
திருமாளவன் வருகின்றாரா? இவர் தமிழினத்திற்கு எதுவும் சாதித்ததாக தெரியவில்லை. தன் சாதீய கொள்கைக்கும் நல்லதை செய்ததாகவும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். இவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. வெந்த மண் சூடு ஆற முன் தீ வைத்தவனுடன் கைலாகு கொடுத்த விடய வருத்தம் என்றும் ஆறாது.
-
சுவிஸ் தமிழர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்.
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடுடன் வளர என் வாழ்த்துகள். நான் இங்கு பூர்வீகத்தின் முக்கியத்தை உணர்கின்றேன்.
-
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்
ஒரு சிறிய கோட்டின் மேல் ஒரு பெரிய கோடு போடுகின்றார்கள் போல் தெரிகின்றது. போதை பொருள் விவகாரம் பெரிதுதான். ஆனால் ஏற்கனவே இருக்கும் இனப்பிரச்சனையை பற்றி எதுவுமே பேசாமல்.....தனியே போதைப்பொருள் பிரச்சனையை பூதாகாரமாக்கி இலகு அரசியலை செய்ய துணிகின்றார்கள் போல் எனக்கு தென்படுகின்றது. எமது தமிழினத்தில் சிறந்த தலைவன் இல்லாத பற்றாக்குறையை அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சொல்லி நிற்கின்றது. குறை சொல்பவர்கள் இவர், இன்னார் தமிழ் அரசியலுக்கு ஏற்றவர்கள் என உதாரணம் காட்டி விட்டு மற்ற அரசியல்வாதிகளை குறை குற்றம் சொல்லலாமே? 😄
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
இவர்கள் வளர்ந்து வர வர அமெரிக்கன் அவ்வப்போது தளிர்களை நறுக்கிக்கொண்டே இருப்பான். 😃 பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல்.....நூறாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு மட்டும் தெரியும் ஜேர்மனிய மண்ணின் சித்து விளையாட்டுக்கள்.😂
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
இதற்காகத்தான் குலம்,கோத்திரம், பூர்வீகம் பாராத சமதர்ம அரசுகள் இந்த உலகில் வேண்டும் என்கிறேன்.🤣 உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி. 🙏
-
மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.
மனம் கனத்த நினைவஞ்சலிகள். தன்னடக்கத்தின் சிகரம்.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என்னைப்பொறுத்தவரை இருவருமே அமெரிக்காவிற்கு பஞ்சம் பிழைக்க சென்றவர்கள்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பூர்வீகம் என்றுமே காலாவதியாகி விடாது.பூர்வீகம் என்பது குடியேற்ற/பல்லின கலாச்சார நாடான அமெரிக்காவிற்கு சரிவரலாம்.இங்கிலாந்திற்கும் சரி வரலாம்/வரும். அவுஸ்ரேலியா கொஞ்சம் ஆங்கில பூர்வீகத்தை கெட்டியாக பிடிக்கின்றது என நினைக்கின்றேன்.இந்த நாடுகள் எல்லாம் ஒரு சந்தைக்கு சமம். பணம் இருந்தால் கடை போடலாம்.தாய் தந்தையை தவிர எதையும் விற்கலாம்.வாங்கலாம்.இருந்தாலும் கௌ போய் கட்டி வளர்த்த நாட்டை கண்டவன் கிண்டவன் எல்லாம் கதைத்து வெற்றியாட்டம் போட விடமாட்டார்கள் என நினைக்கின்றேன். கனடாவிற்கு வேறு வழியில்லை.🤣😁 ஆனால்...👇 போலந்து தொடக்கம் உக்ரேன் ஊடாக ஜேர்மனி,சுவிற்சலாந்து,ஆஸ்திரியா போன்ற நாடுகள் போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பூர்வீகம் கவனிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் பூர்வீகம் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது.தென்னமெரிக்க நாடுகளில் பூர்வீகம் பார்க்கப்படுகின்றது. ஆசிய நாடுகளில் பூர்வீகம் அதி முக்கியமாக உற்று நோக்கப்படுகின்றது. இலங்கையில் கூட பூர்வீகம் அச்சில் வார்த்து வைக்கப்பட்டுள்ளது.பூர்வீகம் என ஒன்று இல்லையென்றால் தமிழினத்தை என்றோ அழித்து துடைத்திருப்பார்கள்.
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
அங்கத்துவத்தை நான் பெரிதாக கணிக்கவில்லை. ஜேர்மனியினது அரசியல் பலமும் பொருளாதார பலமுமே ஏனைய அங்கத்துவ நாடுகளை தலையாட்ட வைக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
"Mississippi Masala"(12.02.1992) எனும் திரைப்பட வெளியீட்டிற்கு வந்த மீரா நாயர் தன் குழந்தை மம்தானியுடன் வந்த புகைப்படத்தை வைத்து....நியூயோர்க் மேயர் சம்பவம் மாதிரி ஜேர்மனியிலும் நடக்கக்கூடிய சாத்தியம் உள்ளதா என அச்ச செய்தியை விவாதமாக்கியுள்ளது. யூத மடியிலிருந்து காஸா அழிப்பை இனக்கொலை என குற்றம் சாட்டியவர் எவ்வளவு காலம் நீடிப்பார் என காத்திருந்து பார்க்கலாம்.
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
இங்கே நாங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். அமெரிக்கா ரஷ்ய எரிபொருள் வாங்குவதற்கு தடை போடுகின்றது. அதை அது சார்ந்த நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும்.கடைப்பிடிக்கினார்கள் தான். ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் மேற்குலகின் எதிரிகளாக விமர்ச்சிக்கப்படுவார்கள்.பார்க்கப்படுவார்கள். முக்கியமாக சீனா இந்தியா. ஆனால்.... ரஷ்ய எரிபொருள் வாங்கி தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றும் அதே இந்தியா,சீனாவில் மேற்குலகு தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவுவார்கள். அல்லது பற்பல பொருளாதார ஒப்பந்தங்களை செய்வார்கள்.அதே ரஷ்ய எரிசக்தி மூலம் உருவாக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வார்கள். இந்த லாஜிக் உங்களுக்கு புரிகின்றதா? சென்ற ஒரு சில தினங்களுக்கு முன் ஜேர்மனியின் உருக்கு தொழிற்சாலைகள் எரிசக்திவிலை உயர்வினால் பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாக செய்திகளில் படிக்கக்கூடியதாக இருந்தது.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
என்ன மாதிரியான அரசியல் அனுகூலங்களுக்காக என்பதை தெளிவாக சொல்ல முடியுமா?
-
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!
நான் தனிப்பட அறிந்த வரையில் சட்டவிரோதமான கருணைக்கொலைகள் ஜேர்மனியில் உண்டு.ஒரு தொகை பணம் கொடுக்க வேண்டும். இதை மருத்துவ தாதியர்களே செய்கின்றதாக சொல்கின்றார்கள். எனக்கு உண்மை பொய் தெரியாது.எல்லாம் கேள்விப்பட்டவையே. ஜேர்மனிய அரசு கருணைக்கொலையை விவாதப்பொருளாக சிறிது காலம் வைத்திருந்தது.இப்போது என்னமாதிரி என தெரியவில்லை.சுவீஸ் மற்றும் நெதர்லாந்தில் கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். எனது பார்வையில் நோய்களை மாற்ற முடியாமல் இருப்பவர்களுக்கு கருணைக்கொலை நல்ல திட்டம் என நினைக்கின்றேன்.
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
சில தினங்களுக்கு முன் தலைவர் பிரபாகரனுக்காக பாடிய அன்றைய பாடலை.... ஒரு சில சொற்களை மாற்றி செல்வம் அடைக்கலநாதனுக்காக பாடி மகிழ்ந்தார்கள். அதை எந்த கோணலும் இல்லாமல் கேட்டு உதட்டோர புன்னகையுடன் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார். பல ஊடங்கங்களில் அந்த காணொளி உலாவுகின்றது.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் நிற்கின்றீகள் என நினைக்கின்றேன். நீங்கள் கூறும் கருத்தின் படி பார்த்தால் வட கிழக்கு பகுதிகளில் எந்தவொரு சிங்கள கட்சிகளும் இருக்க வாய்ப்பில்லை அல்லவா? இலங்கையின் இன்றைய அரசியல் நிலமையை பார்த்துமா இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை? அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நாம் இனவாத கட்சிகள் என சொல்லிக்கொண்டிருக்கும் கட்சிகளில் இருந்து தமிழர்கள் வெற்றி பெறவில்லையா? இனவாத கட்சிகள் சார்பாக தமிழ் எம்பிக்கள் பாராளுமன்றம் செல்லவில்லையா? இதே போல் சிங்கள பிரதேசங்களிலிருந்து சிங்களவர்கள் ஒரு தமிழ் எம்பியை பாராளுமன்றம் அனுப்பியிருக்கின்றார்களா?
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
உலக நாடுகளில் தவறான கொள்கை உள்ள அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகின்றது. என் நாடு,என் தேசம், என் மக்கள், என் இனமே என்ற கோஷசங்களும் இனி வரும் காலங்களில் எடுபடாது போலவும் தெரிகின்றது. தம் இனத்தை விட்டு ஏனைய இனத்தவர்களுக்குள் தம் தலைவனை தேட ஆரம்பித்து விட்டார்கள் போல் உள்ளது.மாற்றான் மல்லிகை மணக்கும் என்பது போல்.....🤣 உங்களிடம் ஒரு கேள்வி? தம் பூர்வீக மண்ணில் செய்ய வேண்டியதை ஏன் புலம்பெயர்ந்த மண்ணில் சாதிக்க நினைக்கிறார்கள்? மம்தானி போன்றோர் அவர்களின் பூர்வீக மண்ணில் ஏன் சாதிக்க முடியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை? அங்கு தானே அதிக அடக்குமுறைகளும் அநீதிகளும் நடக்கின்றன? பிழைக்க வந்த இடத்தில் அவரவர் கருத்துக்களை சொல்லலாமே தவிர .....பதவி வந்ததும் நாட்டு தலைவனையே அவமதிப்பது ஒரு வித கருடா சௌக்கியமா கதைதான்.😎
-
கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்
கேள்வி கேட்ட அந்த இடத்திலேயே....நேருக்கு நேர் திருப்பி கேள்வி கேட்ட அந்த பெண்மணியை பாராட்ட வேண்டும். இந்த சம்பவம் இன்னும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாகும் என்பதில் ஐயமில்லை. 10,20 வருடங்கள் சென்ற பின் பணத்திற்காக / அரசியலுக்காக குற்றம் சாட்டும் பெண்மணிகள் கவனிக்க...
-
அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
அவர் தான் போற வாற இடமெல்லாம் தன்னை பிரபல்யப்படுத்த..... எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய வெளிக்கிட்டுட்டார் போல கிடக்கு...😂 யூ ரியூப்பர்மார் இவரிட்ட ரியூசன் எடுக்க வேணும்😎
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
நீங்கள் இந்த கொலையை நியாயப்படுத்துகின்றீர்கள்? ஒவ்வொருவருவருக்கும் என தனிமனித சுதந்திரங்கள் உண்டு என்பதை இங்கே பல திரிகளில் பலர் எழுத வாசித்துள்ளேன். அதெல்லாம் பொய்யா?
-
அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
ஆள் வேணுமெண்டும் நித்திரை மாதிரி நடிக்கக்கூடியவர் கண்டியளோ..😂இல்லாட்டி சுவீஸ் நேர நினைப்பிலை நித்திரையோ எண்டும் யோசிக்க வேண்டிக்கிடக்கு 😎
-
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு!
இப்படியான சுத்துமாத்துக்காரர்களால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நம்பிக்கையீனம் வரப்போகின்றது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதம் மாறக்கூடியது. மொழியும் இனமும் மாற முடியாதவை.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
இந்த செய்தி தனியே டொனால்ட் ரம்பிற்கு மட்டுமல்ல.