Jump to content

சாமானியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    535
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by சாமானியன்

  1. மார்க்கத்தில செல்லியிருக்காங்களா வாப்பா குடு வெக்க செல்லி … அதனா வெள்ளையன் எண்டு காக்கா பெயரை மாத்தினவர்…!!
  2. பிள்ளைகள், குழம்ப வேண்டாம்.. அண்ணை தோன்றப் போவது உறுதி. வேண்டியது ஆகக்கூடியது 15,000 டொலர் மட்டுமே!! சைனாக்காரனிடம் கொடுத்தாலே கொண்டு வந்து காட்டுவான். இதுக்கு ஏனய்யா இவ்வளவு சவுண்டு……
  3. கனக்க வேண்டாம் .. ஒரு இரசாயன உரத்திலும் ஒரு சண்டையிலும் ஒரு ஊழலிலும் இலங்கை வல்லரசு டுபாயில் போய் புலிக்குட்டிக்கு பால் குடுக்கேல்லையே ??
  4. என்ன கொடுமை சரவணா இது... தமிழ் பிரஸ்ஸின தீர்வு..1 காணாமல் போனோர்.. 2 நாட்டை விட்டு தலை தெறிக்க ஓடி துபாயில் புலிக்குட்டிக்கு பால் கொடுப்பவர்.. 3 பதவியை விட்டு விலகும் போது நாட்டில் இரத்தக் களரிக்கு முயன்றவர்..4. நினைவுப் பிறழ்த்தியுடன் தமிழர் நலன் மறந்தவர் ..5 எல்லாம் உனக்கே வெளிச்சம் கச்சியேகம்பனே .....
  5. அம்மணமாக ஓடும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் , அவை விளக்குமாற்றையும் காவிக்கொண்டா ஓடுகின்றன என அவதானிப்பது சுவாராஸ்யமாகக இருக்கும் ....😜
  6. இப்பதானே வெண்ணெய் வந்திருக்கு.. இனி கொக்கை தேடிப்பிடிச்சு தலையில வெண்ணெய் வைச்சி ' உருகி கண்ணுக்குள்ள போகும் வரை காத்திருந்து ' பின்னர் கொக்கை லபக்கெண்ண்டு பிடிக்கிறத்துக்கு கொஞ்ச நாளாகும் பாய்ஸ் ...😜
  7. அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் காலமானார். On Nov 14, 2022 தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று (13) காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே. காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர். மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார். இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார். லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர். துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது. இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல. அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம். அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் காலமானார். - Ceylonmirror.net
  8. நாட்டில் இருப்பவர்களின் மனநிலை இப்ப எங்கேயோ போய் நிற்கிறது . எனது அனுபவம் ஒன்று.. பாடசாலை நண்பர்கள் சேர்ந்து ஊரில் வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் , சில வருடங்களாக . ஒரு 25 பேருக்கு கோழி வளர்ப்பதற்கான உதவிகள் செய்து கொடுத்தோம் , ஆளுக்கு Rs 65,000 செலவில் , 50 குஞ்சுகள் , கோழிக்கூடு , 6 மாத்திற்குரிய செலவுகள். 6 மாதத்தின் பின்னர் மாத வருமானம் 20,000 ரூபா வரும் என்பது கணக்கு. எல்லாமே இலவசமாக வந்தது தானே , அவர்கள் பெரிய அக்கறை எடுக்கவில்லை , ஒரு 4,5 பேரை விட மற்றவர்களின் கோழிக்கூடுகளில் அணில்கள் தான் குடியிருக்கின்றன. இனிமேல் இப்படியான திட்டங்களை இலகுகடன் (வட்டியில்லாமல் நீண்டகால அடிப்படையில் திரும்பித்தருதல் - பின் மீள்சுழற்சி முறையில் வேறு பயனாளிகளுக்கு வழங்கலாம் ) முறையில் கொடுப்போம் என்று யோசித்தால் , அப்பிடி எனில் இந்த உதவியை பெற்றுக்கொள்ள பெருமக்கள் எவரும் வர மாட்டார்கள் என்று ஒரு அபிப்பிராயம் முன்வைக்கப்பட்டிருக்கு. கம் ஓர் கோ சிக்காகோ, திரைகடல் ஒடித் தான் திரவியம் தேடுறது , மற்றும்படி நேரத்தை வீணாக்குறது என்ற முடிவில் அவை இருக்கினம். என்ன செய்யலாம் கச்சியேகம்பனே…..
  9. எல்லாம் பட் ஈழம் என்ற நிலைமையிலிருந்து அவை எள்ளளவும் மாறவில்லையே.😀 குட்டி JR க்கும் கூவுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமோ..😜
  10. லைக்கா கேட்டாராம்... ரணில் உடனே விட்டாராம்... மத்திய வங்கியில் லைக்கா நுழையப் போறாரோ ..??
  11. யாழ் ஹிந்திக் கல்லூரி வாத்திமாரிட்ட கேட்டா , சிலவேளை டவுட்டை கிளியர் பண்ணி விடுவினம் 😀
  12. முன்பொரு தடவை யாழில் வேறொரு இடத்தில் தரையிறங்கி மானபங்கப் பட்டதும் ஒரு காரணமா இருக்குமோ. கம் ஒன் பாய்ஸ், இப்பவெல்லாம் வடக்கு தனியவா அல்லது கிழக்கோட சேர்ந்தா உங்கட ஒரு மாநிலமா வாறதெண்டு சிலபேருடைய எண்ணப்பாடுகள் போய்க்கொண்டிருக்கு. டேக் இட் ஸ்போர்ட்டிவ்..... பிளீஸ் கம் அண்ட் லாண்ட் ஒன் அஸ் ......
  13. எங்கட அறளை பேந்தது தீபாவளி தைப்பொங்கல் எண்டு தான் கெடு வைக்கும். குத்தியருக்கும் வயசு வட்டுக்குள்ள போய்க்கொண்டிருக்கில்லே. அறளை பெயர்ற தன்மை சாடையாக வெளிப்படுக்குது. என்ன கோடை மாரி எண்டு ஆள் வானிலை வாசிக்குது..😀 எல்லாம் உன் செயலே கச்சியேகம்பனே .....
  14. பிரான்சில் இருக்கக்ககூடிய ஒரு உக்ரைன்காரிக்கு இந்த அசிங்கம் என்று நீங்கள் சொல்லுவதை அரங்கேற்றுவதில் உங்களுக்கு ஒரு வித மான ஆட்சேபனையும் இல்லை போல தெரிகிறது.😡 நல்லா இருங்க ஸார் ...💚
  15. பல வருடங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்த நேரம் பருத்தித்துறை சந்தையில் நூறு ரூபாய் நோட்டோன்றை குடுத்து கோவாவோ, கரட்டோ, கத்திரியோ ஞாபகமமில்லை, வாங்கிவிட்டு மிச்சத்திற்கு காவல் நிண்ட நேரம் நிண்ட நேரம், அந்த பெண்மணி ஏன் நிக்கிறாய் எண்டு கேக்க , நான் மிச்சத்திற்கு எண்டு பதில் சொல்ல, அம்மணி உதட்டோரத்து புன்முறுவலுடன் நீங்கள் ரெண்டு ரூவா தரவேணும் இரண்டெண்டபடியால் கேக்கேல்லை என்று சொல்ல, அசடை துடைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ண வேண்டியதாயிற்று . புலம் பெயர்சிற்கு ஊர் நேரம் அப்பிடியே உறைஞ்சு போச்சு. இருக்கிற இடத்து நேரம் டபிள் ஸ்பீடில ஓடுது கச்சியேகம்பனே ....
  16. படி, படி எண்டு சொன்னதை விட பிடி, பிடி எண்டு சொல்லாம விட்டிட்டேனே என்று புலம்பெயர்ஸ் மம்ஸ் சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன் ...
  17. நம்மட ஆக்களுக்கு சுக்கிர தசை இப்ப. புலம்பெயர்ஸ் இல்லாட்டி, சீனா இருக்கவே இருக்கு .. ஆப்பு எடுபாடேக்குள்ள வாலைப் பற்றி கவலைப்பட்டுக்கொள்ளலாம் ... China gives unforgettable Deepavali present to 10 residents of Kaluvankerny China gives unforgettable Deepavali present to 10 residents of Kaluvankerny – The Island
  18. சாவித்திரி கண்ணன், உங்கள் அப்பாவிடம் ஒரு அலுவலாக கதைக்க வரவேண்டும். உங்கள் வீட்டில் குதிர் எதாவது இருக்கிறதா என்று சொன்னால் நலம். நன்றி .....
  19. நம்மட ஆக்கள் எப்பயிருந்து காலநிலை மாற்றங்கள் பற்றி கவனமெடுக்கத் தொடங்கினவை ?? 🤫
  20. சகோதரி , அறுபதை தாண்டிய பிராயத்தில் கோவிட் புண்ணியம் நண்பர்கள் எல்லோரையும் மீளிணைத்தது நண்பன் ஒருவன் அன்று பதிந்த பதிவு எட்டாம் அதிசயம் தெரியுமோ பொடியள் என்ன அது ….. மிகப்பெரும் சந்தோசங்களை எல்லாம் ஒரு தனி சம்பவம் சிறிதாகவே இருந்தாலும் கருத்திழக்க செய்கிறதே -அது பிறந்த நேரமே நாடி நரம்புகள் திசு துணுக்குகள் என்று மாறும் எவ்வாறு மாறும் என்பதெல்லாம் அந்த இருவரின் உயிர்த்துடிப்பு நேரமே தீர்மானம் பெற்ற விடயங்கள் …. இருப்பனனவற்றை எண்ணி மனதை திருத்தி ( சொல்வது சுலபம் தான்) நாட்களை கொண்டு செல்லுங்கள் .. இதுவும் கடந்து போகும் .. இந்த நேரம் பயம் பற்றி நண்பன் ஒருவன் நேற்று எழுதியதை பகிரவும் தோன்றிற்று .. Fear is always about what may happen or what may not happen. Fear is not about what we experience right now. Fear is about something which does not exist. If we are suffering from something that does not exist, it is just about our mind being out of control. Is it important first of all we learn to atleast manage our mind?
  21. இலவு காத்து, காத்து , நம்பிக்கை என்பது நெடுந்தூரமாக நகர்ந்து போயிற்று போலிருக்கு ...
  22. அண்மையில் எமது திருமண நாளுக்கு மகள் ஒரு மலர்க்கொத்து வாங்கியிருந்தாள் , பதினைந்து டாலர் , சந்தோசமான விடயம் , ஆயினும் இது அவசியமான செலவு தானா என்று மனதுக்குள் ஒரு அங்கலாய்ப்பு. ஒரு கிழமைக்கு முன்னர் மீண்டும் ஒரு அழகான ரோஜக் கொத்து , மலிவாகக் கிடைத்ததாம் பனிரெண்டு டொலருக்கு 10 பூக்கள் ஒரு கிழமைக்கு மேல் வாடாமல் இருக்கிறது , ஒவ்வொரு தடவையும் அதனை கடந்து செல்லும் போது மனதுக்கு இனம் புரியாத ஒரு மகிழ்வு தான் , ஆயினும் நான் என்றால் காசு கொடுத்து ஒருநாளும் வாங்கியிருக்க மாட்டேன். முன்னர் Brunei யில் இருந்த சமயம் , வீட்டு வேலைகளுக்கு உதவியாக என்று இலங்கையில் இருந்தது ஒரு பெண்ணை அழைத்து வைத்திருந்தோம் , அங்கே இதற்கான வேலையாள் விசா எடுப்பது வெகு சுலபம். ஒருநாள் கடைக்கு போன நேரம் அவள் ஒரு பிறந்தநாள் கார்டு வாங்கினாள் ஆறோ , ஏழு டொலருக்கு , நாங்கள் என்றால் ஓரிரு டொலருக்கு மேல் வாங்குவதில்லை. என் காசைக் கரியாக்குகிறாய் எண்டு கேட்டதிற்கு , இங்க வெளியில வந்த பிறகு இதெல்லாம் பார்க்க ஏலாது எண்டு சொன்னாள். கோடு இழுத்தல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி , தள்ளி நின்று ரசிக்க வேண்டியது தான்…. இதே கேள்வியை இன்னொரு குரூப்பில் யாரோ கேட்க , மலபார்காரருக்கு பழைய ஞாபகம் வந்துடுத்து போல எண்டும் ஒரு பதில் வந்தது ...
  23. இங்க கனடாவில நாங்கள் போகாத வக்கேசனா? கொலிடேயா? செய்யாத பார்ட்டிகளா?🤠
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.