Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மா காந்திக்கு ’தேச தந்தை’ என்று பெயர் வைத்தது யார்..? - பதில் தெரியாமல் விழிக்கும் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்திக்கு ’தேச தந்தை’ என்று பெயர் வைத்தது யார்..? - பதில் தெரியாமல் விழிக்கும் அரசு

img1120404029_1_1.jpg

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய ஆறாவது படிக்கும் மாணவி கேட்ட கேள்விக்கு சரியான தகவல் இல்லை என்ற பதிலை மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் வழக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்டது எப்போது, அதற்குரிய ஆவணங்கள் உள்ளனவா? என விவரம் தருமாறு கோரியிருந்தார்.

இந்த மனு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் உள்துறை அமைச்சகத்திடம் போதிய ஆதாரம் கிடைக்காததால், மனு இந்திய தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய ஆவண காப்பகத்திலும் காந்திக்கு தேசத்தந்தை பட்டம் வழங்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால், இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் துணை இயக்குனர் ஜெயப்பிரபா ரவீந்திரன், மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்து, மனு செய்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளார்.

மேலும், மாணவி விரும்பினால், காந்தி குறித்த தகவலை பெற இந்திய அரசின் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜெயப்பிரபா ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தில் உள்ள தகவல் படி, காந்திக்கு மாகாத்மா என்ற பட்டம் எப்படி வந்தது என்றால், 1944-ல் சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ், காந்தி குறித்து வானொலியில் பேசும் போது, மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் அது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காந்தி படுகொலை செய்யப்படும்போது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் பேசும் போது, “தேச தந்தை நம்மோடு இல்லை... “ என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1204/04/1120404029_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன சந்தேகம் இப்போது?

பிள்ளைகளைப் பார்க்கத் தெரிகின்றதே, இவர் தான் தந்தையாக இருந்திருப்பார் என்று!

தோழர் உங்கள் தேசத்தந்தை, செஞ்சிக்கோட்டை சிங்கமாக்கும்! :D

குரங்குகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்க உத்தேசித்தன.

முதல் குரங்கு சொல்லியது, "நாம் மிகவும் கட்டுபாடோடு இதைக் கடைபிடித்து மாலை ஆறு மணிக்கு சாப்பிடலாம். உண்ணாவிரதம் முடிப்பதற்கு தேவையான வாழைப்பழத்தை இப்போதே ஓரிடத்திற்கு கொண்டு வந்து வைத்து விடலாம்."

குரங்குகளும் அப்படியே செய்தன.

...

இரண்டாவது குரங்கு சொல்லியது, "உண்ணாவிரதம் முடியும் போது மிகுந்த பசியோடு இருப்போம் அதனால் அவரவருக்குரிய பங்கை ஒரு இலையில் அவரவர் முன்னாலையே வைத்து கொண்டால் சாப்பிடுவதற்கு ஓட வேண்டியதில்லை."

சரி என அப்படியே செய்தன.

முன்றாவது குரங்கு, "அவரவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் தோலுரித்து தயாராக வைத்து கொள்ளலாம்; அப்படி செய்தால் உடனே சாபிடுவதற்கு இன்னும் வசதியாக இருக்கும்" என்றது.

நான்காவது குரங்கு, "நமக்குதான் சாப்பிடாமல் வாயில் அடக்கி வைத்துக் கொள்கின்ற ஆற்றல் உள்ளதே. அதனால் பழத்தை வாயில் அடக்கி வைத்து, விரதம் முடிந்ததும் விழுங்கலாமே" என்றது.

எல்லா குரங்கும் சம்மதித்தன.

இனி உண்ணாவிரதம் என்னவாகும்?

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்க உத்தேசித்தன.

முதல் குரங்கு சொல்லியது, "நாம் மிகவும் கட்டுபாடோடு இதைக் கடைபிடித்து மாலை ஆறு மணிக்கு சாப்பிடலாம். உண்ணாவிரதம் முடிப்பதற்கு தேவையான வாழைப்பழத்தை இப்போதே ஓரிடத்திற்கு கொண்டு வந்து வைத்து விடலாம்."

குரங்குகளும் அப்படியே செய்தன.

...

இரண்டாவது குரங்கு சொல்லியது, "உண்ணாவிரதம் முடியும் போது மிகுந்த பசியோடு இருப்போம் அதனால் அவரவருக்குரிய பங்கை ஒரு இலையில் அவரவர் முன்னாலையே வைத்து கொண்டால் சாப்பிடுவதற்கு ஓட வேண்டியதில்லை."

சரி என அப்படியே செய்தன.

முன்றாவது குரங்கு, "அவரவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் தோலுரித்து தயாராக வைத்து கொள்ளலாம்; அப்படி செய்தால் உடனே சாபிடுவதற்கு இன்னும் வசதியாக இருக்கும்" என்றது.

நான்காவது குரங்கு, "நமக்குதான் சாப்பிடாமல் வாயில் அடக்கி வைத்துக் கொள்கின்ற ஆற்றல் உள்ளதே. அதனால் பழத்தை வாயில் அடக்கி வைத்து, விரதம் முடிந்ததும் விழுங்கலாமே" என்றது.

எல்லா குரங்கும் சம்மதித்தன.

இனி உண்ணாவிரதம் என்னவாகும்?

தேவையில்லாத கதை இது, ஒரு விடுதலை போரட்டதை நடத்தியவர் மீது, விடுதலைக்காக போரடும் உணர்வுள்ள இனம் இப்படி எழுத மனம் வராது.

எனக்கும் சோனியா, காங்கிரஸ் & றோ இல்ல ஆத்திரம் இருக்கு, அதற்காக எத்தனையோ ஆயிரம் உள்ளங்களில் வாழும் ஒருவரின் திரிக்கு கீழ் இப்படி ஒரு கதை தேவையில்லை

அவரின் கால் தூசிக்கு கூட லாயக்கில்லை நாங்கள்

ஒரு விவாதத்திற்கு இன்றும் இந்தியாவை இங்கிலாந்து ஆட்சி செய்து அங்கு காந்தி அகிம்சைவழியில் போராடினால் அதை ஏற்கும் பக்குவம் இங்கிலாந்திற்கு இருந்திருக்கலாம். அதனால் இன்றும் அவர் தேசத்தின் தந்தையாகும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் அதை மதிக்கும் பக்குவம் இன்றைய இந்தியாவுக்கும் இருந்திருக்குமா என்பது கேள்வியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.