Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை யுத்தத்தின் போதான தனது பாத்திரத்தை மீளாய்வு செய்ய ஆரம்பித்தது ஐ.நா.

Featured Replies

இலங்கை யுத்தத்தின் போதான தனது பாத்திரத்தை மீளாய்வு செய்ய ஆரம்பித்தது ஐ.நா.

இலங்கை யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க இம்மீளாய்வு இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம்பகமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இத்தகவல் தெரியவந்ததாக ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைறேறப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கிணங்க, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 22 ஆவது கூட்டத்தொடரின்போது, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவீ பிள்ளை விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தமரா குணநாயகம் கூறினார்.

யுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா. அதிகாரிகள் செல்வற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அறிக்கையில் இலங்கை மீது குறைகூறப்படும் சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இலங்கை குறித்து 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்.

http://www.tamilmirr...8-19-16-59.html

Edited by akootha

  • தொடங்கியவர்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது பல மடைகளை திறந்து புதுப்புது நீரோடைகளை திறந்து விட்டுள்ளது.

மேலே உள்ள செய்திகள் உண்மை எனில், வரும் காலங்கள் எமது தாயக மக்களின் கனவுகளை நிச்சயம் நனவாக்கும்.

செய்ததெல்லாம் செய்தாலும் பான்-கி-மூன் இடத்தை போய் பார்த்தவுடன் கொஞ்சம் கவனமாகத் தொடங்கியிருக்க வேண்டும். தலதா மாளிகைக்கு கூட்டிக்கொண்டு போய்க்காட்டி போட்டு முதல் பார்த்ததை மறந்திருப்பார் என்று நினத்துப்போட்டர்கள். பான்-கி-மூன் வன்னியைப் பார்த்துபோட்டு தான் வாழ்க்கையில் அப்படி ஒரு கோர காட்சியை காணவில்லை என்று வாய் திறந்தும் கூறிவிட்டர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ. நா. வின் பொறுப்பற்ற செயல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக அது அமைய வேண்டும்.

பாதிக்கபட்ட ஈழத் தமிழர்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கும் வரையும், நட்ட ஈடுகள் கிடைக்கும் வரையும், சிங்கள அரச பயங்கரவாதிகளையும், எல்லை தாண்டி இனப்படுகொலையில் ஈடுபட்ட இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளையும் தடை செய்ய வேண்டும்.

பாதிக்கபட்ட ஈழத் தமிழர்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கும் வரையும், நட்ட ஈடுகள் கிடைக்கும் வரையும், சிங்கள அரச பயங்கரவாதிகளையும், எல்லை தாண்டி இனப்படுகொலையில் ஈடுபட்ட இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளையும் தடை செய்ய வேண்டும்.

நல்லது ஐ நா வே மீளாய்வு செய்தல் ஒரு முக்கிய நிகழ்வு. செய்தியை வழங்கியவர் தமரா குணநாயகம் என்றிருக்கிறபடியால் பெருமளவில் இதில் உண்மையிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.