Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.பொதுசன நூலகத்தில் US - UK நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கணனி மையத்தை இடிக்க உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலசல கூடம் கட்டப்போகிறாராம் ஆளுனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

chandrasri_CI.jpg

யாழ்.பொதுசன நூலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனி;ன் நாடுகளது நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கணனி மையத்தை உடனடியாக இடித்தகற்றிவிட்டு அங்கு நவீன மலசலகூடமொன்றை அமைக்க வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார்.

நிர்மாண வேலைக்கான அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக தொடர்புடைய தரப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மூடப்பட்ட கணனி மையம் எங்கு அமைக்கப்படவுள்ளது என்பது பற்றியோ மீளத்திறக்கப்படுவது பற்றியோ தகவல்கள் தமக்கு தரப்பட்டிருக்கவில்லையென நூலக நிர்வாகம் கூறுகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியினது அடாவடிகள் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவையே. நினைத்த மாத்திரத்தில் உடைத்தெறிவதும் மக்கள் எதிர்ப்பையடுத்து மீண்டும் அவற்றை கட்டியெழுப்புதென்பதும் பகிரங்கமாகவே நடந்து வருகின்றன. ஏற்கனவே பழைய பூங்கா மதில்களை இடித்ததுடன் பின்னர் அதனை முன்பிருந்தது போன்றே மீளக்கட்டியெழுப்பியதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அண்மைக்காலமாக யாழ்.பொதுசன நூலகத்தினுள் தனது மூக்கை நுழைத்து வரும் அவர் ஏற்கனவே நூலக சிற்றுண்டிச்சாலையை தன்னிச்சையாக வடக்கு மாகாண சபைக்கான மாநாட்டு மண்டபமாக்கியிருந்தார். தற்போது கணனி மையத்தை அவர் மலசலகூடமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். யாழ்.மாநகர சபையினது நிர்வாகத்தின் கீழேயே பொதுசன நூலக நிர்வாகமும் இருந்து வருகின்றது. இதனால் ஆளுநரது இத்தகைய அடாவடிகளைக் கண்டுகொள்ளாத போக்கையே ஈ.பி.டி.பி கட்சியின் முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணமும் கடைப்பிடித்து வருகின்றார்.

பல்வேறு தரப்பினரிடையேயும் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்வடாவடி நடவடிக்கை தொடர்பில் யாழ்.மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனிடையே எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புகளும் மறுபுறம் தயாராகிவருகின்றன.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கணனி மையத்தை விட... கக்கூஸ் முக்கியமாக போய் விட்டது.

தமிழன் முன்னேறக் கூடாது என்று... கண்கொத்திப் பாம்மாக, இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணனி மையத்தை விட... கக்கூஸ் முக்கியமாக போய் விட்டது.

தமிழன் முன்னேறக் கூடாது என்று... கண்கொத்திப் பாம்மாக, இருக்கிறார்கள்.

இதைத்தானே சிங்களவன் காலகாலமாக செய்து தமிழர்களை போராட தூண்டியவர்கள்.

மீண்டும் சிங்களவன் சிவில் நிர்வாகம் என்ற பெயரில் புதிய முறையில் பழைய விடயங்களையே செய்கின்றான்.

சர்வதேசம் தொடர்ந்தும் மௌனம் காக்குமா ?

தமிழன்,

தமிழனின் பிரதிநிதிகள் என்ற சோம்பேறிக் கூட்டம்,

கல்விச் சமூகம் என்றொரு கதையளக்கும் குழு,

பூச்சிகளுக்கு இருக்கும் புத்திகூட இல்லாத புத்தி ஜீவிகள்,

இணையத்தில் உலாவி செய்திகளைத் திருடி, 100,000 க்கும் 1,000,000 க்கும் வித்தியாசம் தெரியாமல் பிழைப்பு நடாத்தும் ஊடகவியலாளர்கள்,

சர்வதேசம் அல்லது சேனல் 4 போன்று யாராவது குரல் எழுப்புவார்களா ஏங்கித் தவிக்கும் தமிழ் அரச பிரதிநிதிகள்,

என்று இவர்கள் எல்லாம் மௌனமாக இருந்துகொண்டு,

சர்வதேசம் குரல் கொடுக்குமா என்றால் - அதை என்னவென்பது?

1981 ஆம் ஆண்டு நூலகத்தை எரித்த இந்த அரக்கர் கூட்டத்திற்கு இன்று சந்திரசிறி தலைமை தாங்குகிறார், அன்று காமினி திசநாயக்கா. அவர்கள் மாறப்போவதில்லை.

இலங்கையில் தமிழன் என்ற ஒருவன் கூட இருக்க கூடாது என்று சிங்களம் நினைக்கிறது. இன்னும் அவனை நக்கி பிழைக்கும் கூட்டம் புரியாமல் இருப்பது தான் வேதனை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் போராடி அழிந்தான் என்ற சரித்திரம் எழுதப்பட வேண்டும்....படைப்பாளிகளே எழுதுங்கோ...போராட்ட வீரர்களின் பிழைகளை எழுதாமல் போராட்ட வீரர்களை உருவாக்கிய அரச பயங்கரவாதிகளைப்பற்றி எழுதுங்கோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழன் என்ற ஒருவன் கூட இருக்க கூடாது என்று சிங்களம் நினைக்கிறது. இன்னும் அவனை நக்கி பிழைக்கும் கூட்டம் புரியாமல் இருப்பது தான் வேதனை

டக்கிலஸ், கருணா, பிள்ளையான், இவர்கள் புளைப்பே அதுதானே ...... இவர்களையும் ஆதரிக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்யும், அதற்காக நாம் செய்யும் நல்ல விடயங்களை கைவிட முடியாது

தமிழன் போராடி அழிந்தான் என்ற சரித்திரம் எழுதப்பட வேண்டும்....படைப்பாளிகளே எழுதுங்கோ...போராட்ட வீரர்களின் பிழைகளை எழுதாமல் போராட்ட வீரர்களை உருவாக்கிய அரச பயங்கரவாதிகளைப்பற்றி எழுதுங்கோ....

உண்மைதான் புத்தன்,

இல்லாவிடின் வரலாற்றை திரிவு படுத்தி விடுவார்கள் எமது எதிரிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1981 ஆம் ஆண்டு நூலகத்தை எரித்த இந்த அரக்கர் கூட்டத்திற்கு இன்று சந்திரசிறி தலைமை தாங்குகிறார், அன்று காமினி திசநாயக்கா. அவர்கள் மாறப்போவதில்லை.

மாறுவினம் என்று நம்பி சிங்களவனுடன் பேசுவோம், கிரிகெட் விளையாடுவோம் என்று சம்பந்தர், சோரன், யோகர்ணன், சோபால சத்தி எல்லாம் சொல்லினம்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாறுவினம் என்று நம்பி சிங்களவனுடன் பேசுவோம், கிரிகெட் விளையாடுவோம் என்று சம்பந்தர், சோரன், யோகர்ணன், சோபால சத்தி எல்லாம் சொல்லினம்?

இவர்களில் யாரும் சிங்களவனால் நேரடியாக பாதிப்புக்குள்ளாக வில்லை என்று நினைக்கின்றேன்.

அந்த ஆறாத ரணம் எங்கள் மனங்களில் தினமும் வந்து போகின்றதே ....... இவர்களுக்கு இந்த வேதனை பற்றி என்ன தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.