Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரந்தனின் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட கனேடியப் பிரஜை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

y-koliaskili%20%284%29.jpg

photo.gifபரந்தன் பகுதியில் கனேடியப் பிரஜை ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இரவு 9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார்.

இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டுப்பிரஜைகளுக்குக் கூட இங்கு தமது நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலைமைகள் தோன்றியிருப்பதாகவும் இதனால் தாயகம் வரும் ஏனைய பிரஜைகள் மத்தியிலும் இவ்வாறான கொலைகள் பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பதாகவும் அங்குள்ள கல்வியியலாளர்கள் இவரின் இந்தக் கொலை தொடர்பில் தெரிவிக்கும் போது குறிப்பிட்டனர்.

இந்தக்கொலைக்கு பின்னர் இங்கு பெரும் பதற்றமான நிலைமைகள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.y-koliaskili%20%281%29.jpgy-koliaskili%20%283%29.jpgy-koliaskili%20%282%29.jpg

http://www.eeladhesa...chten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் குடியுருமை பெற்று வெளிநாடுகளில் இருந்து செல்லும் தமிழர்கள் கொல்லப்படுவதால் விடுமுறைக்காக ஸ்ரீலங்கா செல்வதை தற்போதைக்கு தவிர்பதன்மூலம் இப்படியான துரதிஸ்ரமான சப்பவங்க்களை தவிர்க்கலாம்.

காணியை இவ்வளவு காலமும் பார்த்துக் கொண்டிருந்தவன் போட்டுத் தள்ளியிருப்பான்.

கிளிநொச்சி பரந்தனில் பல கட்டடங்கள் காணிகளின் உரித்துக் காரரான கனேடியப் பிரஜை கொலை

வன்னியின் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கனேடியப் பிரஜை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இவ்வாரறு கோரமாகக் கொல்லப்பட்ட இவரது சடலம் முழு நிர்வாணமாகக் காணப்பட்டதாகவும் வதிவிடப் பகுதியில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களின் முன்பாக வன்னிக்கு சென்ற இவர் 53 வயதுடைய அந்தோனிப் பிள்ளை மகேந்திரராஜா என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

கிளிநெச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் உள்ள பல கட்டடங்களின் உரிமையாளர் இவரது தந்தையார் எனக் கூறப்படுகிறது. இந்தக் கட்டடத் தொகுதிகளை பராமரிப்பதற்கும் குமரபுரத்தில் உள்ள தனது காணிகளை பார்வையிடவுமே இவர் இலங்கை திரும்பி தனது கட்டடத்தை பராமரிக்கும் ஒரு குடும்பத்துடன் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பரந்தன் சந்தியில் இருந்து பூநகரிப்பக்கமாக மேற்காக காந்திபுரம் பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொலையாளிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக முயற்சித்த இவரது உடல் எங்கும் கடுமையான ரத்தக் காயங்கள் காணப்படுவதாகவும் தலை துண்டிக்கப்பட்டே கொல்லப்பட்டு உள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார். புலம்பெயர் தேசங்களில் இருந்து தாயகம் திரும்பும் பலர் கட்டுநாயக்கா வான் தளத்திலும், ஓமந்தைப் பகுதியிலும் துருவி எடுக்கப்படும் நிலையில் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுள் உள்ள கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இந்த கொடூர கொலை இடம்பெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/77012/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கனேடியத் தூதரக அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை

canada14.jpg

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் கமறிக்குடா பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கனேடியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கனேடியத் தூதரக அதிகாரிகள் நேற்று நேரடியாகச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் பிறந்து கனடாவில் வசித்து வந்த நிலையில் அண்மையில் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் குடியமர்ந்த அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா (வயது53) என்பவரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவராவார்.

நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் அயல் வீடொன்றில் இரவு உணவு எடுத்துச் சென்ற நிலையில் இரவு 9 மணியளவில் இனந்தெரியாதோரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இவரது உடற்கூற்றுப் பரிசோதனைநேற்றுக் கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றன. இனந்தெரியாத குழுவினரே மேற்படி நபரின் கழுத்துப் பகுதியில் கூரிய கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். குறித்த நபருடன் நீண்ட நேரம் போராடி பின்னர் அவர் கீழே விழுந்த பின்னரே கழுத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக முதற் கட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கறுப்புத் துணியால் முகத்தைக் கட்டிய சிலர் மரணமானவரின் வீட்டில் நின்றதை அயலவர்கள் அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உடற் கூற்றுப் பரிசோதனைகளின் முடியவில் குறித்த உடல் கனேடிய தூதரகத்தின் ஊடாக அவரது மனைவிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் தெரியவருகின்றது.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=13935:2012-05-06-10-20-27&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

நாட்டில் வசந்தம் வீசுகிறது என்று யாழில் பரப்புரை செய்யும் கனடாவில் வசிக்கும் மதிப்புக்குரியவர் இதற்கு ஏதாவது பதில் கூறுவாரா [

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.