Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்ல மெல்ல முஸ்லீம் மக்களும் முழுமையாக இலங்கையின் இலக்குக்குள் வந்துவிட்டார்களா?

Featured Replies

கொழும்பில் சிறிலங்காவுக்கான இஸ்ரேல் தூதரகமா? - முஸ்லிம் மக்கள் கொந்தளிப்பு! - அரசுக்கும் கண்டனம்!!

சிறிலங்காவுக்கான இஸ்ரேல் தூதரகம் கொழும்பில் அமைக்கப்பட்டமைக்கும், அதற்கான தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் அமைப்புகளும் கடும் கண்டனத்தையும், விசனத்தையும் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவில் இஸ்ரேல் தூதுவரைக் காலூன்ற இடமளிப்பதில்லை. அதேபோன்று இஸ்ரேலுக்கு சிறிலங்காத் தூதுவரை நியமிப்பதில்லை என்று காலங்காலமாக முஸ்லிம் சமூகத்தைக் கௌரவப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த கொள்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மீறியுள்ளது என முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கடுமையான முறையில் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கொண்டு மறைமுகமாக இலங்கை விவகாரத்தைக் கையாண்ட இஸ்ரேலியத் தூதுவரை கொழும்புக்கு அழைத்து உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

இதுகாலவரை இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதுவராக மட்டும் இருந்து வந்தவரைத் தற்போது சிறிலங்காத் தூதுவராகவும் ஏற்றுக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், சிறிலங்காவின் முன்னாள் விமானப் படைத் தளபதியான எயார் மார்ஷல் டொனால்ட் பெரேராவை இஸ்ரேலுக்கான சிறிலங்காத் தூதுவராகவும் நியமித்துள்ளது.

சிறிலங்கா மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்மன் உஷ்பிஷ் நேற்று முன்தினம் அரச ஊடக நிறுவனம் ஒன்றுக்குச் சென்று பகிரங்கமாகச் செவ்வி வழங்கும் அளவுக்கு இஸ்ரேலின் ஆதிக்கம் சிறிலங்காவில் காலூன்றிவிட்டது எனவும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா கருத்துத் தெரிவிக்கையில், சிறிலங்காவில் இஸ்ரேல் காலூன்றுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்று மிகக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறிலங்காவில் இஸ்ரேல் காலூன்றுவது முஸ்லிம்களை அழிப்பதற்காகவே எனக் குற்றம் சுமத்தியுள்ள ஆளுநர் அலவி மௌலானா, இது முஸ்லிம்களுக்குப் பாரிய அச்சுறுத்தலான விடயமென்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'சிறிலங்காவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எமது ஆட்சேபனையையும், கண்டனத்தையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிப்போம். இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விரைவில் சந்தித்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அதிகளவு ஆயுத உதவியை வழங்கியது இஸ்ரேலே. எந்தவொரு அரபு நாடும் இப்போருக்கு உதவவில்லை. இக்காரணங்களைச் சுட்டிக்காட்டி இஸ்ரேல் சிறிலங்காவில் காலூன்றுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியாயப்படுத்தலாம். அது அவரது அரசியலாக இருக்கலாம்.

அதற்காக சிறிலங்கா கடைப்பிடித்து வரும் பாரம்பரிய இஸ்ரேல் எதிர்ப்புக் கொள்கையை நியாயப்படுத்த முடியாது என்ற யதார்த்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டுவோம்' என் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்

http://ponguthamil.c...c7-006ccb044a1c

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கலாம்.. ஆனால் தூதரகம் அமைக்கக் கூடாதா? :D என்ன அநியாயம் இது?? :rolleyes:

சிங்களத்துக்கு எதிராக தமிழர்களைச் சொல்லும் பெளத்த பிக்குகள் பெளத்தத்தின் எதிரியாக சொல்லுவது இந்து மதத்தை அல்ல; இஸ்லாமைத் தான்.

முஸ்லிம்களின் இனப்பெருக்க விகிதப் படி பார்த்தால் இன்னும் 50 வருடங்களில் அவர்களின் எண்ணிக்கை உலகலாவிய ரீதியிலும், இலங்கையிலும் பல்கிப் பெருகி விடும். இதுவும் பெளத்த பிக்குகள் அடிக்கடி சொல்லி வரும் விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு எதிராக தமிழர்களைச் சொல்லும் பெளத்த பிக்குகள் பெளத்தத்தின் எதிரியாக சொல்லுவது இந்து மதத்தை அல்ல; இஸ்லாமைத் தான்.

முஸ்லிம்களின் இனப்பெருக்க விகிதப் படி பார்த்தால் இன்னும் 50 வருடங்களில் அவர்களின் எண்ணிக்கை உலகலாவிய ரீதியிலும், இலங்கையிலும் பல்கிப் பெருகி விடும். இதுவும் பெளத்த பிக்குகள் அடிக்கடி சொல்லி வரும் விடயம்

1970 ஆம் ஆண்டு இலங்கையில்  இருந்த முஸ்லிம் பா.உ க்கள்( 4 அல்லது 5) தான் அதிலும் வடக்கு கிழக்கில் 2 என நினைக்கிறேன் இன்று..........

Edited by putthan

1970 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த முஸ்லிம் பா.உ க்கள்( 4 அல்லது 5) தான் அதிலும் வடக்கு கிழக்கில் 2 என நினைக்கிறேன் இன்று..........

மூதூர், கல்முனை, சம்மாந்துறை தொகுதி (அதுவும் முன்பு தமிழர்கள் பிரதிநிதித்துவம் படுத்தினார்கள்) மாத்திரமே என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும் இனி அதிக பிரதிநுத்துவம் வரலாம்.

முன்பு ஒரு திரியில் கூறியதையே இப்பவும் சொல்கிறேன் சிங்களவர்களுக்கு ஆப்பு முஸ்லிம்களால்தான்.

சும்மா ஒரு தரவுக்கு இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவக் குழந்தைக்கு எட்டு முஸ்லிம் குழைந்தைகள் பிறக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர், கல்முனை, சம்மாந்துறை தொகுதி (அதுவும் முன்பு தமிழர்கள் பிரதிநிதித்துவம் படுத்தினார்கள்) மாத்திரமே என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும் இனி அதிக பிரதிநுத்துவம் வரலாம்.

முன்பு ஒரு திரியில் கூறியதையே இப்பவும் சொல்கிறேன் சிங்களவர்களுக்கு ஆப்பு முஸ்லிம்களால்தான்.

சும்மா ஒரு தரவுக்கு இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவக் குழந்தைக்கு எட்டு முஸ்லிம் குழைந்தைகள் பிறக்கிறார்கள்.

முஸ்லிம்கள் உருவ வழிபாட்டுக்கு எதிரானவர்கள் ஆகவே புத்தரின்ட சிலைக்கு ஆப்புத்தான்......எதோ நடக்கட்டும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.