Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மேலோங்கும் ‘சினிமா’க் கலாசாரம்! - கந்தரதன்

Featured Replies

இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்தால் எஞ்சியுள்ள தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகளின் உச்சமாக இளம் சமூகத்தினரின் போக்கு மாற்றப்பட்டுள்ளமையைக் காணலாம். மிக மிக இளவயதினரே இன்று கலாசார சீரழிவுகளின் உச்சத்திற்கு சென்றுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது.

அன்றாடம் நாம் பார்க்கும் ஊடகங்களின் செய்திகளில் தமிழர் தாயகப் பகுதியில் நடந்த கலாச்சார சீரழிவின் குறைந்தது இரண்டு செய்தியாவது காணப்படுகிறது. எமது சமூகம் எங்கே செல்கின்றது. பெற்றோரே தவறுசெய்யும் போது பிள்ளைகளை யார் கவனிப்பது என்ற நிலைக்கே எமது சமூகம் வித்திட்டுச் செல்கின்றது. யாழ்குடா உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு சினிமாக் கலாசாரமே பின்பற்றப்படுகின்றது.

ஆட்கடத்தல்கள், அடாவடித்தனங்கள் என அங்கு வித்தியாசமான ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது. இது சிறீலங்காப் படையினரையே சாரும். இளவயதினரின் தகாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதற்கு படையினர் துணைபோவது பற்றியும் இப்பகுதியில் பல தடவைகள் குறிப்பிட்டிருந்தோம்.

இவ்வாறான தகவல்கள், வேறுநாடுகளில் வேற்று இனத்தவர்கள் செய்தமையைத்தான் நாம் முன்னைய காலங்களில் செய்திகளாக அறிந்து வியந்திருப்போம். ஆனால், தமிழர் தாயகத்தில் எம் உறவுகளுக்கு மத்தியிலா இவ்வாறான கொடுமைகள் நிகழ்ந்தேறுகின்றன என அதிர்ச்சிகொள்ளும் அளவிற்கு அங்கு நிலைமைகள் கட்டுமீறியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தமிழ் மக்களைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. தந்தையுடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் தந்தையைத் தாக்கிவிட்டு யுவதியை வெள்ளை வானில் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று ஞாயிறு காலை 9 மணிக்கு யாழ். கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உரும்பிராய்ப் பகுதியினைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வராசா அர்ச்சனாம்பிகா என்னும் யுவதி கோண்டாவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குச் சென்று வழிபாட்டை முடித்துவிட்டு தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம் வழியில் இடைமறித்த கடத்தல் கும்பல், உந்துருளியில் இருந்த தந்தையைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, அங்கு நின்று கூச்சலிட்டுக் கத்திய யுவதியை வலுக்கட்டாயமாக இழுத்து வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

எனினும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வருகை தருவதற்குள் கடத்தல் வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தையை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றதாகவும் நீண்ட நேரமாக உந்துருளி சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு யுவதிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை மாலை யாழ் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்.ஆரியாலை ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் ஜெயசுகந்தினி மற்றும் யாழ். கொட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய தம்பிரத்தினம் சுவர்ணநந்தினி ஆகிய இரு யுவதிகளே காணமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இரு யுவதிகளும் வெள்ளிக்கிழமை தொடக்கம் காணமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணமற்போன யுவதிகளில் ஒருவரான நாகேந்திரன் ஜெயசுகந்தினி பத்து பவுண் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் பாசையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகில் இருந்த பற்றைக் காணியில், பிறந்து ஒரு நாளேயான குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறைப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த இப்பாடசாலை மாணவியை அதேபகுதியினை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கண்களையும் கைகளையும் கட்டி மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிலாவத்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்த நிலையில் சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறே, யாழ் தென்மராட்சிப் பகுதியில் 19 வயது இளைஞன் ஒருவன் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். குறித்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பாடசாலை ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினைத் தொடர்ந்து குறித்த இளைஞன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

இதேநேரம், யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்லும் பெண்கள் கலாச்சார சீர்கேட்டினால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதான அதிர்ச்சித் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் காதல் தோல்வியில் நஞ்சருந்திய நிலையில் அனுமதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காதலித்து ஆண்களை ஏமாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் பெண்களின் கலாச்சார சீர்கேடுகள் அதிரித்துள்ளதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறான எத்தனையோ சம்பவங்கள் வெளியிலேயே வராமல் நாளும் நிகழ்ந்தேறுகின்றன. யாழ்.மானிப்பாய் பகுதிச் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு காத்தான்குடியில் கொத்தடிமையாக வைக்கப்பட்ட நிலையில் யாழில் வியாபார நடவடிக்கைக்காக கொண்டுவரப்பட்ட வேளை மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தச் சிறுவன் கடத்தலில் ஈடுபட்ட மூன்று வியாபாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் காத்தான்குடியில் தலைமறைவாக இருப்பதினால் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். யாழ். நகரப்பகுதியில் 15 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன.

மானிப்பாய் பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறைப் பகுதியில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வலுவிழந்த 30 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேசத்தில் தாலிக்கொடியையும் தங்கச் சங்கிலியையும் திருடிய குற்றச்சாட்டில் சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணைமேற்

கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையாக, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் வேலைகளும் படையினரால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இரவில் விசேட வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் குற்றச்செயலை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்பதே அவதானிகளின் கருத்து. நாம் இப்படியே எமது தமிழ் சமூகம் சீரழிவுப் பாதையில் சென்று சின்னாபின்னமாகி சிதைந்து போக விடலாமா? இதற்கு யார் பதில் கூறுவது? புலம் பெயர்வாழ் எம் தமிழ் உறவுகளே! நாம் ஒற்றுமையோடு நின்று சிந்தித்து செயற்படவேண்டிய நேரம் இது!

நன்றி : ஈழமுரசு

இவர்கள் கூறுவது போல் அங்கு ஒன்றும் பெரிதாக நடப்பதில்லை, சிங்கள தேசம் திட்டமிட்டுச் செய்யும் தமிழ் இன அழிப்பு வேலைகளை மறைக்க யாழில் உள்ளை இளையோர் மீது நன்கு திட்டமிட்டு பலி போடப்படுகிறது,

  • கருத்துக்கள உறவுகள்

இதனூடாக இளைஞர்களின் போராட்ட குணம் இல்லாது ஒழிக்க முயல்கின்றார்கள் அடக்கு முறை ஆளர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏட்டிக்கு போட்டியாக சகலதும் புலம்பெயர்தமிழர்களிடம் கொட்டிக்கிடக்கின்றது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.