Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

Featured Replies

கடந்த ஒரு வாராமாக கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறேன். அதனால் எழுத முடியவில்லை. என்னை எதிர்பார்த்ததற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் குணமாகிவிடுவேன்.

உங்கள் நோய் குணமாக எல்லாம் வல்ல அல்லாவை பிரார்த்திக்கிறேன். :lol:

Edited by காதல்

  • Replies 153
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த ஒரு வாராமாக கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறேன். அதனால் எழுத முடியவில்லை. என்னை எதிர்பார்த்ததற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் குணமாகிவிடுவேன்.

அண்ணல் காஜியார் சபேசன் நலம்பெறவேண்டும்.

முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்க் கட்சிகள் நடத்துகின்ற நிலவுரிமைப் போராட்டத்தில் பங்குபற்றவில்லை என்பது பற்றி நான் ஆச்சரியப்படவில்லை.

இப்படியான சப்பைகட்டு பதில்கள் யாழுக்கும் புதியதில்லை.

அரசில் உள்ள தமிழ் கட்சிகள் எப்படி இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றவில்லையோ, அப்படியே முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் பங்குபற்றவில்லை

அரசில் இருக்கும் துரோக தமிழ் கட்சிகளுடன் துரோகத்தின் சிகரத்தில் இருக்கும் முஸ்லீம் மந்திரிகளை ஒப்பிட முடியாது. தமிழரின் பிரதிநிதிகள் போல வலிந்துகாட்டப்படும் இலங்கை அரசின் ஏவல் பேய்களான "தமிழ் கட்சி" தலைவர்கள் தாம் செய்த தவறுகளுக்கு விடுதலை இயக்கம் தண்டிக்கும் என்று பயந்து, UNP யுடன் சேர்ந்து பின்னர் SLFPக்கு மாறி உயிரைக்காக்க முயன்றவர்கள். இதுவல்ல முஸ்லீம் காங்கிரசின் நிலை. இருந்தாலும் அரசுடன் இருக்கும் மிகக் கேவலமான "தமிழ் கட்சிகளின்" தலைவர்கள்கூட (பிள்ளையான், கருணா, தேவானந்தா) தமிழருக்காக ஒருதடவை ஆயுதம் ஏந்தி உயிர் துறக்க தயாரானவர்கள். முஸ்லீம் காங்கிரசின் பதியுதின் போன்றோர் இந்த பூமியில் பாவம் செய்யவென்றே சாத்தான் கொண்டுவந்து இறக்கிவிட்ட சென்மங்கள் . இவர் அரசில் சேர்ந்த கதையை இங்கே எழுத வேண்டியதில்லை. முஸ்லீம் காங்கிரஸ் இதுவரை ஒரு துரும்பெடுத்து முஸ்லீம்களை காப்பாற்ற முயலவில்லை. வெறும் பேடிகள், தாம் போராட்டத்திற்கு வருகிறோம் என்று அறிவித்தவுடன் அரசு விட்ட மிரட்டலுக்கு பயந்து அதை மாற்றி அறிக்கை விடுகிறார்கள். அவர்கள் தாமும் போராடத்தில் பங்கு பற்றுகிறோம் என்று விட்ட முதல் அறிக்கைக்கு பதில் எழுதியிருந்தால் அவர்கள் போராடத்தில் பங்குபற்றாதது எதிர்பார்த்ததுதான் என்று யாருக்கும் எழுத தைரியம் வராது. இப்படி எழுதுவது முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் எதிர்பார்க்கும் பேடிகள்தாம் என்று பொருள்பட தக்கதாக இருக்கிறது.

எப்படித் தமிழர்கள் தங்களை நேரடியாகப் பாதிக்காத போராட்டங்களில் பங்கு கொள்வதில்லையோ அப்படியே முஸ்லீம் மக்களும் பங்கு கொள்ளவில்லை. உ+ம்: தம்புள்ள பள்ளிவாசல் போராட்டத்திற்கு வன்னியிலோ, யாழிலோ யாரும் போராடவில்லை.

யாழில் எந்த வகைப்போராடமும் இப்போது நடப்பதில்லை. யாழ்ப்பாணத்திலோ, கிளிநொச்சியிலோ இதுவரை (2009 பிறகு) நடந்தவை அரசாங்கத்தால் சோடித்து காட்டப்பட்ட மகிந்தாவுக்கு பொங்களுக்கும்,தேர்தலுக்கும் நடந்த மிகப்பெரிய வரவேற்ப்புக்கள். அதைவிட சொல்லத்தக்கவை ஐ.நா பிரேரணை எதிர்ப்பு ஊர்வலங்கள் மட்டுமே. தமிழரின் ஜனநாயக போராடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பொலிசால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளாமல் யாழில் செய்திகள் படிப்பவர்கள் உண்மையில் இருக்க முடியாது. தமிழர் தமக்கே போராடமுடியாத நிலை. இதில் முஸ்லீம் மக்களுக்கு போராடவில்லை என்பது மிகப் பெரிய பகிடி. அதைவிடப்பகிடி இங்கே முஸ்லீம்களை போராடக் கேட்பது ஏன் என்பதை விளங்காமல் பதில் அளித்திருப்பதுதான். தம்புள்ளை பள்ளி வாசலுக்கு எல்லா தமிழரின் உண்மையான பிரதிநிதித்துவக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து தார்மீகமாக போராட்டங்கள் நிகழ்த்தியிருந்தார்கள். இன்றும்(26-06-2012) புலத்திலும் வெளியிலும் நடக்கும் சமயப் போராட்டங்கள் தம்புள்ள பள்ளி வாசலின் பின்னர் ஆரம்பித்தவைதான். இந்து கோவில்கள் 1956லிருந்து இடிக்கப் பட்டுகொண்டுதான் வருபடுகிறது. அவற்றுக்காக இப்படி பிராத்தனை போராட்டங்கள் நடத்தப்படவில்லை. முஸ்லீம்கள் தமக்காக போராட மறுக்கும் போது தமிழர்தான் அவர்களுக்காக போராடுகிறார்கள். ஆனால் மேலே எழுதியிருப்பதன் பொருள், முஸ்லீம்கள் தமிழருக்காக போராடுவதற்காக அழைக்கப்பட்டதாகவும் அவர்கள், தமிழர் முஸ்லீகளின் போராட்டங்களில் பங்கு பற்றவில்லையென்பதால் தமிழருக்கு உதவ முன் வரவில்லை என்றும் பொருள்பட விதண்டவாதமாக எழுதப்பட்டிருக்கிறது. பதியபட்டிருக்கும் செய்தியே சொல்கிறது முஸ்லீம்கள் தங்கள் காணிகளை கிழக்கில் இழக்க போகிறார்கள் என்று. எழுத முதல் பதிந்த செய்திகளை படித்து தெளிந்துகொள்ள ஆர்வம் காட்டமை வருந்த தக்கது. இங்கே தமிழர் தங்கள் காணிகளுக்காக போராடும் போது, முஸ்லீம்களை அவர்களின் காணிகளை பாதுக்காக்கத்தான் போராடும்படி கேட்கப்படிருந்தார்கள்.

மலையகத் தமிழர்கள் ஒரு பிரச்சனை என்று போராடினாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்கள் அதற்காக போராடுவது இல்லை. இங்கே முஸ்லீம்களை மட்டும் குறை சொல்ல முடியாது.

தமிழர் போராடினால்தான் முஸ்லீம்கள் தமது அரசியல் உரிமைகளுக்குப் போராடுவார்கள் என்ற வழமையான நொண்டிச்சாட்டு விவாதம் இவர்களிடமிருந்து எதிர்பார்த்ததுதான். அதவாது சந்தர்ப்பவாதத்தை விட ஏன் முஸ்லீம் தலைவர்கள் போகவிருந்த போராட்டத்தை கைவிட்டார்கள் என்பதற்கு அவர்களிடம் உண்மையான ஒரு விளக்கமும் இல்லை. மலையக தமிழர் போராடுகிறார்கள், ஆனால் வடக்கு-கிழக்கு மக்கள் சோம்பேறிகாளாக இருந்து அதில் குளிர் காய்கிறார்கள் என்று எழுதுவது இரணடு தமிழருக்குமிடையில் சிண்டு முடிந்து கூத்து பார்க்கும் நச்சு தன்மையுடன் எழுதப்பட்டது. இந்த வேதனையான வடக்கு கிழக்கு தமிழரின் நிலையை அறிந்து கொண்டு தமது உரிமைகளுக்காக போராடாமல் இருக்கிறார்கள் என்று எழுதுபவரின், தூண்டிவிட்டு கூத்து பார்க்க தவிக்கும் கேவலமான நிலை, ஏன் இயவர்கள் தமிழருக்காக உருகுவதாக நடிக்கிறார்கள் எனபதை அப்பட்டமாகவும், துள்ளியமாகவும் காட்டுகிறது. தமிழர் போராடினால்த்தான் அதைப்பார்த்து முஸ்லீம்கள் போராடுவார்கள் என்பது நிச்சயமாகத்தான் இலங்கையில் நடக்கிறது. அதனால்தான் யாழ்ப்பணத்திலும், கிளிநொச்சியிலும் நடந்த ஐ.நா. பிரேரணை எதிர்ப்பு நடவடிக்கைகளை பார்த்துவிட்டு இலங்கை முழுவதும், முஸ்லீம்கள்,இதுவரையில் இலங்கை காணாத பாரிய அளவில் போராட்டங்கள் நிகழ்த்தியவர்கள். இருந்தாலும் அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தமிழர்களால் செய்விக்கப்பட்ட ஐ.நா பிரேரணை எதிர்ப்பை பார்த்துவிட்டு அதை பிரமாண்டமான் அளவில் செய்த முஸ்லீம்கள் ஏன் முறிகண்டியில் நடந்த சிறிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை பார்த்து விட்டு திரும்பவும் இலங்கை முழுவதிலும் காணிப் பறிமுதலுக்குக்கான பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்ய பின்னடிக்கிறார்கள் என்பது விளங்காமலிருக்கிறது.

Edited by மல்லையூரான்

முஸ்லீம்கள் - பிழைக்கத்தெரிந்த மதப்பிரிவினர்

தமிழர்கள் - ஆலவட்டம் பிடிக்கத்தெரிந்த ஒரு சமூகம்?

Edited by கரும்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.