Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!

Featured Replies

வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!

எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -

கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?

அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது?

கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் -

இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே -

ஏறக்குறைய -

ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் அழிக்க பார்க்கிறார்கள் - என்று குற்றம் சுமத்தப்பட்டது -அவமானபடுத்தப்பட்டு - வெளியேற்றப்பட்டதை - என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?

எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?

வைகோ - வின் அரசியல் நேர்மையை - ஜெ உடன் கூட்டு சேர்ந்ததால் - கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கிளிடம் -

*பாம்புகளூம் - தேள்களும் நிறைந்த அரசியல் சதுரங்கத்தில்- கால சூழ்நிலைகளூக்கு ஏற்ப - ஒரு கட்சிக்கு தலைமை தாங்கும் ஒரு மனிதன் - அதனை கட்டிக்காக்க சில அரசியல் நகர்வுகள் செய்வது பச்சை -துரோகம் ஆகுமா?

அப்பிடி ஆயின் ஒரு துணை கண்டமான - இந்தியாவை அடிமை கொண்டு - அந்த மண்ணின் மக்களையே சிறையில் அடைத்து - ஜூலியன் வாலா படுகொலைகள் வரை செய்து - சொந்தமண்ணின் மக்களையே அந்நியனுக்கு - வரி - கப்பம் செலுத்த வைத்து -

நார் நாராய் உங்களை அவலப்படுத்திய இங்கிலாந்திடம் - இன்று போர் விமானம் கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் - பயிற்சி-

என்று வழியுறீர்களே - இது மட்டும் என்ன?

ஏன் இங்கிலாந்தை ஒரு பயங்கரவாத நாடாக - அறிவிக்கவில்லை? - கலைஞருக்கு கொடி பிடிப்பவர்கள்?

மேடை - வித்தியாசபட்டதாயினும் - நடந்த நாடகங்கள் - ஒன்றுதான் இல்லையா?

தற்போதைக்கு - முடிக்கிறேன் -

அயல்நாட்டு நண்பர்களே - யாரையும் விமர்சிக்கும் - உரிமை உங்க நாட்டில் இருக்கு என்று நான் நம்புறேன் - அதுதான் நீங்க இப்பிடி பேசுறீங்களா?

எங்க 'நாட்டில?' அதெல்லாம் இல்ல

அடிக்கதேடா என்று சொல்லவும் வேணாம் - ஒதுங்கி பேசாமல் இருந்தாலும் - பெண்ணென்றும் பார்க்காமல் - பிறப்புறுப்பில் குண்டு வைத்து கொல்லுவாங்க - கோணேஸ்வரி!

அஜீதுக்கும் - விஜக்கும் சண்டை பிடிக்கும் உஙகளூக்கு - இப்பிடி ஒரு நிலமை வந்தால் என்ன செய்வீர்கள்?

மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?

அதை நாங்கள் சகித்துகொண்டே ஆகவேண்டுமா?

நாம் பட்ட அவலத்தை எங்கோ இருந்தும் உலக அரங்குக்கு கொண்டு சென்று - உதவி செய்த்த மனிதனை - சீண்டிப்பார்க்க - எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் - அனுமதிப்பீர்களா?

வைக்கோ ஒட்டுப்படையா?

அப்போ - திராவிட இயக்கம் - மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் - எப்பிடி - மத பித்து பிடித்து அலையும் பாரதீய ஜனதா கூட - கூட்டணி வைச்சிசு - ஒரு காலம்?

அதன் அர்த்தம் என்ன - எதுக்காக?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது வர்ணன்!!

அமைதியாக இருந்தால் தன் பாட்டிற்கு வசை பாடலாம் என்று யாரும் நினைத்தால் அது தான் தப்பு!!

தமிழ்நாட்டின் தலைவர்களை மதிக்கின்றோம். ஆனால் இங்கே என்ன நோக்கத்துக்காக கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன என்பது தெளிவாவதால் விமர்சனங்களையும் தவிர்க்க முடியவில்லை. மன்னிக்க தம்பியுடையான்!!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்டும் வைகோவுக்கு எதிரா வச பாடல்ல just ஜெ யோட சேர்தத தான் ஏத்துக்க முடியல்ல thats all...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்டும் வைகோவுக்கு எதிரா வச பாடல்ல just ஜெ யோட சேர்தத தான் ஏத்துக்க முடியல்ல thats all...

ஆமா!! இவர்கள் வசை பாடுவது என்பது இதை விட அதிகமாக பேசுவதைத் தான் சொல்கின்றார்களோ!! பண்பை அப்படியே வெளிப்படுத்துகின்றது!! :wink: :P

எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?

ஸ்டாலினுக்கு முடி சூட்ட வேண்டும் என்ற நோக்கம் திமுக தலைவருக்கு இருந்திருக்குமேயானால் வைகோ நீக்கப்பட்ட பின்பு 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் அசுர பலத்துடன் சட்டமன்றத்தில் நுழைந்தபோதே முடிசூட்டப்பட்டிருக்கும்..... எனவே உங்கள் வாதம் அர்த்தமற்றது..... இப்போதும் கூட கலைஞர் தான் தமிழக முதல்வர் என்று திமுக கூட்டணி பிரச்சாரம் செய்கிறதே தவிர ஸ்டாலினை யாரும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை..... மேலும் வைகோவை நீக்குவதை கடுமையாக எதிர்த்தவர் கலைஞரின் மருமகன் மாறன் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்....

எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -

கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?

இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதெல்லாம் தமிழகத்தில் நடந்த கண்டன கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறோம்....

96ஆம் ஆண்டு ஈழத்தமிழருக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்டமான பேரணி குறிப்பிடத்தக்கது..... ஜெ. அரசு அந்தப் பேரணியை முடக்க செய்த செயல்கள் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.... அதே ஜெ.வுடன் வைகோ கொண்ட உறவினை தான் ஜீரணிக்க முடியவில்லை.....

மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?

சுட்டிக்காட்டிய மனிதன் வைகோ அல்ல.... வைகோவுக்கு உங்கள் மேல் பற்று ஏற்பட காரணமாய் இருந்த வைகோவின் தலைவர்.... 83ஆம் ஆண்டு தமிழக நிகழ்வுகளை நடுநிலையோடு ஆராய உங்களால் முடியுமென்றால் (முடியுமென்று நான் கருதவில்லை) இந்த உண்மையை நீங்கள் உணரலாம்.... மேலும் 83 இனப்படுகொலையை தமிழகத்துக்கு சொல்லியது யார் தெரியுமா? நீங்கள் எல்லாம் பார்ப்பன ஏடு என்று தூற்றும் இந்து பத்திரிகை தான்... அந்தப் பத்திரிகையின் ஒரு பெண் நிருபர் இலங்கைக்கு வந்து செய்த ரிப்போர்ட் தான் உங்கள் நாட்டில் நடைபெறும் கொடுமைகளை உலகுக்கு வெளிகாட்டியது....

16_3.jpg

இந்தச் செய்தியைப் பார்க்கவும்.... தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் வைகோவிடம் மதிமுக தொண்டர்கள் என்ன கேட்கிறார்கள் என்று உங்களுக்கு புரியும்... மதிமுக தொண்டனே இது போல கேட்கிறான் என்றால் பொதுமக்கள் மனதில் வைகோவைப் பற்றி என்ன அபிப்ராயம் இருக்கும் என்று கணித்துக் கொள்ளுங்கள்.....

ஜெயாவுடன் கூட்டுச்சேர்ந்தால் இப்போ என்ன?

எப்போதும் எங்களுக்காய் குரல் கொடுக்கும் ஒரு குரல் வைகோதான்.... அவரை எதிர்க்க வேண்டும் என்னும் தேவை எப்போதும் ஈழத்தவனுக்கு கிடையாது....

தமிழகத்தில் இருந்து ஈழத்தவனுக்காய் குரல் கொடுக்கும் வைகோவை விமர்சித்து.. எங்களை நேசிக்கும் ஒரு தலைவனின் உள்ளத்தை புண்படுத்துவது எப்போதும் நல்லதல்ல....

அவரின் குரலை அடக்கவே ஈழத்தவரின் விமர்சனங்கள் வளிசெய்யும்.... இதைத்தான் (இருக்கும் நண்பர்களை பாதுகாக்க வேண்டும் என கையொப்பம் வைத்திருக்கும்) வசம்பு போண்றவர்கள்... விரும்புகிறார்கள்... அதை எங்கள் யாழ் உறுப்பினர்கள் செய்து அவரை (வசம்புவை) குளிர்விக்க வேண்டும் என வேண்டுகிறேன்....

எப்போதும் எங்களுக்காய் குரல் கொடுக்கும் ஒரு குரல் வைகோதான்.... அவரை எதிர்க்க வேண்டும் என்னும் தேவை எப்போதும் ஈழத்தவனுக்கு கிடையாது...

சாரி... அது டப்பிங் குரல் தான்... ஒரிஜினல் குரல் கரகரப்பானது.... 91க்கு பிறகு அதனால் குரல் கொடுக்க முடியாது... ஏற்கனவே குரல் கொடுத்ததால் ரொம்பவும் அனுபவம் பட்டாகி விட்டது..... :lol::lol::lol:

சாரி... அது டப்பிங் குரல் தான்... ஒரிஜினல் குரல் கரகரப்பானது.... 91க்கு பிறகு அதனால் குரல் கொடுக்க முடியாது... ஏற்கனவே குரல் கொடுத்ததால் ரொம்பவும் அனுபவம் பட்டாகி விட்டது..... :lol::lol::lol:

அப்ப பொடாவில் உள்ள போனது கலைஞரா...??? பிறகு ஏன் வைகோ கவலைப்படவேணும்...?? ஜேயோடே சேரலாம் தானே...! :lol::lol::lol:

பொடாவில் உள்ளே போனதுக்கு அவர் ஈழத்தமிழர்களை ஆதரித்தது காரணமில்லை... அப்போ ஜெயாவை எதிர்த்தது தான் காரணம்....

தடா சட்டத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈராண்டு உள்ளே இருந்தாரே? அவர் மீது எந்த ஈழத்தமிழனுக்கு நன்றி விசுவாசம் இருப்பதாகத் தெரியவில்லையே?

பொடாவில் உள்ளே போனதுக்கு அவர் ஈழத்தமிழர்களை ஆதரித்தது காரணமில்லை... அப்போ ஜெயாவை எதிர்த்தது தான் காரணம்....

இது அடிப்படை அற்ற பேச்சு, விடுதலைப்புலிகளை பற்றி பேசியதால் அவர் கைது செய்யப்பட்டார், விடுதலை புலிகளை பற்றி பேசுவது என்றால் வைகோ எதிர்த்தா பேசுவார் ஆதரித்துதான் பேசுவார் :lol: . நீர் எப்படி கருத்து மயக்கம் உருவாக்கிறீர் என்று இதில் இருந்து தெரிகிறது. :twisted:

தடா சட்டத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈராண்டு உள்ளே இருந்தாரே? அவர் மீது எந்த ஈழத்தமிழனுக்கு நன்றி விசுவாசம் இருப்பதாகத் தெரியவில்லையே?

அவர் மட்டும் அல்ல வைகோவின் தம்பி ரவி(இரவிச்சந்திரன்) மீதும் எங்களின் அன்பு உண்டு...

அதோடு சட்ட அமைச்சர் பொன்னையனையும் மறக்க முடியாது... 8)

விடுதலை புலிகளை பற்றி பேசுவது என்றால் வைகோ எதிர்த்தா பேசுவார் ஆதரித்துதான் பேசுவார்

அப்புறம் ஏன் இனி விடுதலைப் புலிகளை பற்றி மேடைகளில் பேச மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் அரசுக்கு எழுதிக் கொடுத்து ஜாமினில் வந்தார்?

வெளியே வந்தபின் எந்த மேடையிலாவது விடுதலைப்புலிகளை பற்றிப் பேசினாரா?

அய்யா, நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன்.... அந்த வாய்ச்சொல் வீரரை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.... இங்கே எனக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியும்.... சும்மா காது குத்தாதீர்கள்......

அதோடு சட்ட அமைச்சர் பொன்னையனையும் மறக்க முடியாது... 8)

ஆனா, அம்மா மறந்து விட்டார்..... அம்மாவோட சகோதரர் வைகோவும் மறந்து விட்டார்.... :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.