Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14வயது பள்ளி மாணவனை வதைத்த பௌத்த பிக்கு ! ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14வயது பள்ளி மாணவனை வதைத்த பௌத்த பிக்கு ! ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

பௌத்த சரித்திர பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பதில் அளிக்க மறுத்த 14வயது கத்தோலிக்க பள்ளி மாணவனை, பௌத்த பிக்கு ஒருவர் வதைத்த சம்பவத்தினை, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.

AHRC-UAC-102-2012-01-300x280.jpgதமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் நிலையில் இவ்விவகாரத்தினை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

http://www.humanrights.asia/news/urgent-appeals/AHRC-UAC-102-2012

குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் :

கண்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும்அமில தரங்க திலகரத்னே என்னும் பெயரினைக் கொண்ட 14 வயது கத்தோலிக்க மாணவனே, இவ்வாறு பௌத்த பிக்குவின் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பௌத்த சரித்திரம் தொடர்பிலான பாடத்தில், ராகுல தேரோவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் கத்தோலிக்க மதத்தினை தழுவியிருப்பதால் குறித்த கேள்விக்கு தன்னால் பதில் அளிக்க முடியாதென மாணவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பௌத்த சரித்திர ஆசிரியரான தேரோ, அந்த மாணவன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்.

மத அடிப்படையிலேயே குறித்த மாணவன் மீது வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்தோடு, பிற மதங்களுக்கு உரிய அனுசரணை காட்டப்படாமல் மாணவன் வஞ்சிக்கப் பட்டுள்ள்தாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளது.

தற்போது கண்டி போதனா வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டிருப்பபோடு, சிறிலங்கா காவல்துறையினிரிடம் மாணவனின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்த போதும், இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இட்பெற்றுள்ளது.

http://meenakam.com/2012/06/16/a-14-years-old-student-is-tortured-by-a-buddhist-monk-for-refusing-to-learn-buddhism.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் சிங்கள கிறிஸ்தவர்களுக்கு தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்ட வேண்டும்.....அவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்கள் போராட வேண்டும்....கி...கி...

சிங்கள கிறிஸ்துவர்கள் சிங்கள பௌத்தர்களுடன் சேர்ந்து வாழ முடியும். காடினல் ரஞ்சித் மல்கம் இதை ராசபக்சாவிடம் தெளிவாக கூறிவிட்டார். அவர்களை தனி இனமாக நீங்கள் நிரூபிக்கத்தவறும் பட்சத்தில் தனி அலகு தேவை இல்லை. இதனாலேயே கம்யூனிசத்தை ஆதரிக்காத நான் காங் காங் தனி அலகாக இருக்க முடியாது என்கிறது. தாய்வான் குழப்படி விடாமல் சீனாவுடன் இணைய வேண்டும். புது சேரியில் மத்திய அரசின் பந்தங்கள் பதவிக்காக (மலையாள, தெலுங்கு புது சேரிகளை பற்றிய கேள்விகளுக்கு விரைவில் பதில் எழுதுவேன்) தமிழ்நாட்டின் பகுதிகளை பிரித்து வைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுக்கொடுத்துவிட்டு, கருணாநிதியினதும் எனதும் அடுத்த திட்டம் புதுச்சேரியை தமிழ் நாட்டுடன் இணைப்பது.

சிங்கள கிறீஸ்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய புலிகள் (நீங்கள் எல்லோரும் புலிகள் வெல்லும் போது தமிழர்தான் புலிகள் என்று எழுதியவரகள். ஆகையால் தமிழர் தான் பொறுப்பு; மேலும் காடினல் கிறிஸ்தவர்களும் பௌத்தர்களும் ஒன்றே என்று கூறியிருப்பதால் நான் புத்த பிக்கு ஒருவர் வந்து அடித புத்த பிக்குவை குறை கூறாதவரைக்கும் இந்த குழப்படிகார மொக்கு கிறிஸ்தவ பெடியனை நம்ப மாட்டேன்) அதாவது சிங்களவரை தாக்கும் இந்த தமிழர், இதனால் மேலாண்மையை உணரும் சிங்களவருக்கு தனி அலகு பரிசீலிக்க வேண்டும்.

தயவு செய்து நான் சிங்கள்வருக்கு தனி அலகு வேண்டும் என்று எழுதி இருப்பதாக வாசிக்க வேண்டாம். நான் அதை ஒரு போதும் தொடர வேண்டும் என்று இங்கே எழுதவில்லை.

நீங்கள் அல்லது தமிழர், இல்லை வேணுமானால் புலிகள் வெல்லும் போது முஸ்லீங்களை அடித்தீர்கள். அப்போது நீங்கள் முஸ்லீங்களை அடிக்கிறீர்கள் என்பதால் நான் தேசிய வாதியாக இருக்காமல் விட முடியாது. புலிகள் அப்போது வெல்ல முடியும் என்றிருந்ததால் அவர்கள் அதன் பின் நான் சொன்தை நம்பவில்லை. ஆனால்தான் நான் சொன்னனான் அவர்கள் தோற்பார்கள் என்று. அப்போது நான் தேசிய வாதி. இப்போது எனக்கு உணர்வு வந்திருக்கு. நீங்கள் 100 வருடங்களா முஸ்லீம்களை துன்புறுத்தி வந்திருக்கிறீர்கள். இருந்தாலும் இன்னொருக்கால் நான் நீங்கள் முஸ்லீம்களை அடித்தது சரி என்று வாதவேண்டுமென்றால் தனி ஈழம் கிடைக்கிற சந்தர்பத்தை ஏற்படுத்த வேண்டும். ராமநாதன் நல்லா பொய்சொல்வார் என்பதால் சிங்களவர் அவரை இலங்கையின் ஒரேஒரு M.P யாக தெரிவுசெய்த போதே தெரிந்துவிட்டது தமிழர் முஸ்லீம்களை தாக்குவார்கள் எனபது. இவர் வெள்ளைகார கவனருக்கெதிராக இங்கிலாந்து சென்று முறைப்பாடு கொடுத்த போது இங்கிலாந்து வெள்ளைக்கார் அதை விசாரித்துப் பார்த்து ராமநாதன் முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்று கண்டு பிடித்தார்கள். இதனால் வெள்ளைக்கார கவனரின் ஆணைகள் மீளப்பெறப்படவேண்டும் என்று மேலாணையை ராமநாதன் கைகளில் கொடுத்து கவனருக்கு அனுப்பிவைத்தார்கள்.

மிச்ச கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் எழுதுவேன். அவை உங்கள் கைகளுக்கு வந்து சேராவிட்டால் மட்டக்குளியாவில் 134ம் இலக்க பஸ் எடுத்து வந்து முடிவிடத்தில் வரும் ஆஸ்பத்திரில் வந்து என்னை சந்திக்கவும். அங்கே சிலநாட்களில் (யாழை வாசித்து வரும் காரணத்தால்) வை(பயி)த்தியரார் இருப்பதுண்டு. உங்களுக்கு நேரேயே பதில் சொல்லிவிடலாம்.

Edited by மல்லையூரான்

சிறிலங்காவின் சிங்கள கிறிஸ்தவர்களுக்கு தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்ட வேண்டும்.....அவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்கள் போராட வேண்டும்....கி...கி...

... உள்ளதையே கொண்டிழுக்க முடியவில்லை ... உதொன்றும் கூடவா ...!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.