Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் படுகொலைகள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற்துறையில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

வெட்டுக் காயங்களுடன் இந்த இளைஞர் சடலம் மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் பருத்திடைப்பு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 24 அகவையுடைய தம்பு கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தகவல்:சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரியில் வணிகர் ஒருவர் சுட்டுக்கொலை

யாழ். மாவட்டம் சாவகச்சேரிப் பகுதியில் வைத்து வணிகர் ஒருவர் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

இராணுவக் காவலரண்களிற்கு அண்மையில் உள்ள அந்த வணிகரின் வீட்டில் வைத்தே அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

உந்துருளியில் வந்த நபர்களே அவரைச் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்:சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர் சுட்டுக்கொலை

யாழ். மாவட்டம், சுன்னாகம் பகுதியில் வைத்து Wednesday, 12 April 2006 காலை 6.30 மணியளவில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் அடை யாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

செல்லத்துரை கஜேந்திரன் என்பவரே கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மின்சாரநிலைய வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இருந்தவேளை, உந்துருளி ஒன்றில் அங்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் சாளரத்தினு}டாக இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தகவல்:சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஒரு வர்த்தகர் மிருசுவிலில் சுட்டுக் கொலை!

மிருசுவில் பகுதியில் வைத்து மற்றொரு வணிகரும் இன்று காலை ஒட்டுப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சின்னையா தயா என்ற வணிகரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதும் மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை..

தகவல்:சங்கதி

மொத்தமாக சாவகச்சேரிப்பகுதியில் இன்று மட்டும் இரண்டு வணிகர்கள் ஒட்டுப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது படுகொலை!!

மிருசுவில் உசன் பகுதியில் வைத்து தையல் கடை உரிமையாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்க வில்லை.

தகவல்:சங்கதி

ஒட்டுப்படைகளின் இரத்தவெறியால் இன்று மட்டும் 3பேர் யாழ்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற்றில் வந்த செய்தி

Three business owners shot dead in Thenmaradchi

[TamilNet, April 13, 2006 03:22 GMT]

A reputed jewellery shop owner from Chavakachcheri, a mini-tractor owner from Sarasalai and a tailor shop owner from Usan, Mirusuvil, were shot and killed in three various shooting incidents, by suspected paramilitary cadres working with the Sri Lanka Army (SLA) intelligence, civilian sources in Chavakacheri said. Families fearing reprisals from the Sri Lanka military in Jaffna peninsula have again started moving into safer areas inside the Liberation controlled territories, passing the Muhamalai checkpoint after the reports of serial killings in SLA controlled Thenmaradchi sector of Jaffna district Thursday.

Panchadcharam Kirupakaran, 36, who owns the jewellery shop, "Saranga," in Jaffna town was gunned down in front of his house located on Kandy Road (A9) in Chavakachcheri.

His body has been taken to Jaffna Teaching Hospital for postmortem examinations, hospital sources said.

A mini-tractor Landmaster owner from Manthuvil, Chinniah Thaya, was also gunned down Thursday morning.

The third victim to be gunned down in Thenmaradchi Thursday was a tailor shop owner from Usan, Mirusuvil.

¦¾ýÁáðº¢Â¢ø ¿¡øÅ÷ ´ðÎôÀ¨¼Â¡ø ÍðÎ즸¡¨Ä

¡ú. ¦¾ýÁáðº¢Â¢ø ‚Äí¸¡ À¨¼¸Ù¼ý §º÷ó¾¢ÂíÌõ ´ðÎôÀ¨¼ ´ýȢɡø ãýÚ Å½¢¸÷¸û ¯ðÀ¼ ¿¡øÅ÷É þýÚ Å¢Â¡Æì¸¢Æ¨Á ÍðÎ ¦¸¡øÄôÀðÎûÇÉ÷. þýÚ ¸¡¨Ä 6.00 Á½¢ìÌ º¡Å¸î§º¡¢ ºí¸ò¾¡¨É¢ø ¯ûÇ ¿¨¸ì¸¨¼ ¯Ã¢¨Á¡Ç÷ ´ÕÅâý Å£ðÊüÌî ¦ºýÈ ´ðÎôÀ¨¼Â¢É÷ «Å¨Ã «¨ÆòÐ ÐôÀ¡ì¸¢Â¡ø ÍðÎì ¦¸¡ýÚ Å¢ðÎ ¾ôÀ¢î ¦ºýÚûÇÉ÷.

þîºõÀÅò¾¢ø º¡Å¸î§º¡¢ ºí¸ò¾¡¨É¨Âî §º÷ó¾ 36 «¸¨ÅÔ¨¼Â ÀﺡðºÃõ ¸¢ÕÀ¡¸Ãý ±ýÀÅ÷ ¯Â¢Ã¢ÆóÐûÇ¡÷.

þó¾ Ž¢¸Ã¢ý Å£ðÊüÌ «ñ¨Á¢ø þáÏÅ ¸¡ÅÄÃñ¸û «¨ÁóÐûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

þ§¾§Å¨Ç ÁóÐÅ¢ø À̾¢Â¢ø ¨ÅòÐ º¢È¢Â ¯Æ× þÂó¾¢Ã(Ä¡ñ¼ Á¡ŠÃ÷) ¯Ã¢¨Á¡ÇÃ¡É º¢ý¨É¡ ¾Â¡ ±ýÀÅ÷ ÍðÎ즸¡øÄôÀðÎûÇ¡÷.

Á¢ÕÍÅ¢ø ¯ºý À̾¢Â¢ø ¨ÅòÐ ¨¾Âø ¸¨¼ ¯Ã¢¨Á¡Ç÷ ´ÕÅÕõ ÍðÎì ¦¸¡øÄôÀðÎûÇ¡÷. ±É¢Ûõ «Å÷ ÌÈ¢ò¾ Å¢ÀÃí¸û ±Ð×õ þÐŨà ¸¢¨¼ì¸ Å¢ø¨Ä.

þýÚ ¿ñÀ¸ÖìÌô À¢ýÉ÷ Á£º¡¨Ä¢ø ¨ÅòÐ Ó¾¢ÂÅ÷ ´ÕÅÕõ ÍðÎ;즸¡øÄôÀðÎûÇ¡÷.

Á£º¡¨Ä Å¼ì¨¸î §º÷ó¾ 67 «¸¨ÅÔ¨¼Â ¾ô¨À¡ þÃð½ºÀ¡À¾¢ ±ýÀÅ÷ ¾ÉРţðÎ ÓýÈÄ¢ø ¿¢ýȧÀ¡Ð ÍðÎ즸¡øÄôÀðÎûÇ¡÷.

தகவல்-சங்கதி

Claymore blast kills 2 civilians

[TamilNet, April 13, 2006 08:28 GMT]

Two civilians were killed in a claymore mine blast in LTTE held village of Mullikulam, northwest of Vavuniya, Thursday. LTTE sources blamed Sri Lanka Army's Deep Penetration Unit for the attack.

In a similar attack in January this year, LTTE's Vavuniya West area political head, Major Jeyanthan, and a civilian were killed.

The LTTE blamed a deep penetration unit of the Sri Lanka Army (SLA) operating from the Iranai Illuppaikulam SLA base for the attack.

ÓûÇ¢ìÌÇò¾¢ø À¨¼Â¢É÷ ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾ø: þÕ ¦À¡ÐÁì¸û ÀÄ¢

Å×ɢ¡ŢüÌ Å¼§Áü¸¡¸ ¯ûÇ ÓûÇ¢ìÌÇõ ±ýÈ Å¢Î¾¨Äô ÒÄ¢¸Ç¢ý ¿¢÷Å¡¸ À̾¢Â¢ø º¢í¸Ç ¬Æ °ÎÕ ×õ À¨¼ §Áü¦¸¡ñ¼ ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾Ģø þÕ «ôÀ¡Å¢ ¦À¡Ð Áì¸û ¯Â¢Ã¢ÆóÐûÇÉ÷.

«ÕÅ¢ ¦ÅðΞü¸¡¸ ¯Æç÷¾¢ ´ýÈ¢ø ¦ºýÚ ¦¸¡ñÊÕó¾ ¦À¡Ð Áì¸§Ç À¨¼Â¢Éâý ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾Ģø ¯Â¢Ã¢ÆóÐûÇÉ÷. þ¾ý§À¡Ð §ÁÖõ º¢Ä÷ ¸¡ÂÁ¨¼óÐûǾ¡¸ ¾¸Åø¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.

þРŢξ¨Äô ÒÄ¢¸Ç¢ý ¿¢÷Å¡¸ô À̾¢ìÌû þýÚ ¿¨¼¦ÀüÈ þÃñ¼¡ÅÐ ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾ø ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

தகவல்-சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமலை வன்முறையில் இந்திய சோதிடர் உள்ளிட்ட மூவர் பலி

திருகோணமலை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் நடத்திய கொடூர வெறியாட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு இந்தியரது சடலங்கள் இன்று காலை திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.

கிண்ணியாவில் நேற்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் நடேசபுரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேஸ்வரி (வயது 60) என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

தென் இந்தியாவின் பெங்களுர் இராமமூர்த்தி நகரைச் சேர்ந்த சோதிடரான வெங்கடசாமி வெங்கட்ராமன் (வயது 30), திருகோணமலை அரச செயலக ஊழியரான தண்ணிமலை நமசிவாயலிங்கம் (வயது 28) ஆகியோரும் நேற்றைய வன்முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் போக்குவரத்துச் சேவைகள் முற்றாகத் தொடர்ந்து முடங்கியுள்ளது வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. திருமலை நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

செய்திகள்:புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் இளைஞர் சுட்டுக்கொலை!!

யாழ். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் இளைஞரின் தந்தையாரும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கற்கோவளம் விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் எஸ்.தேவராசாவையும் அவரது மகன் மரியதாசையும் இலக்கு வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதன் போது 25 வயதுடைய மரியதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது தந்தை படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

தகவல்:புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில் மேலும் ஒரு வர்த்தகர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் இராமலிங்கம் சகிலன் (வயது 30) என்ற வர்த்தகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மீசாலை ஏ- 9 வீதியில் புத்தூர் சந்தியில் தனது மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இராமலிங்கம் சகிலன் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு ஆயுததாரிகள் அவரது கடைக்குள் அத்துமீறீ நுழைந்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

துப்பாகிச் சூட்டை நடத்தியவர்கள் இராணுவச் சீருடை அணிந்திருந்துள்ளனர். இச்சம்பவம் நடந்த போது கடைக்கு வெளியே 15-க்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் நின்று பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடுத்துக் கொண்டிருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தினரே தன் மகனை சுட்டுக்கொன்றதாக சம்பவத்தின் போது கடையில் இருந்த சகிலனின் தந்தையார் இராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

சகிலனின் உடல் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிளைமோர்த் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் யாழ். தென்மராட்சியில் தொடர்ந்து வர்த்தகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

தகவல்:புதினம்

ஒட்டுப்படைகள் இப்போது வர்த்தகளை படுகேவலமாகக் கொலை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அப்பாவி வர்த்தகன் கொல்லப்பட்டிருக்கின்றான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு சந்திவெளியில் துணை இராணுவக் குழுவினரால் ஈசன் (வயது 24) என்ற இளைஞர் இன்று திங்கட்கிழமை சுட்டுப் ப டுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாகனம் ஒன்றில் வந்த கருணா குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈசனின் வீட்டுக்குள் உள்நுழைந்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணா குழுவைச் சேர்ந்த அந்த ஆயுததாரிக்கு சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பு அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் வடபகுதியில் சந்திவெளி அமைந்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல் மாவட்டத்துக்குட்பட்டது சந்திவெளி.

இதனிடையே வாழைச்சேனை கறுவாக்கேணி பாடசாலை முன்பாக நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது வான் ஒன்றில் வந்த ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கணபதிபிள்ளை கோனேஸ்வரன் (வயது 24) மற்றும் குணபால் சுரேஸ் (வயது 24) அகியோர் தமது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது வானில் வந்த ஆயுதக் குழுவினர் இன்று காலை 9.45 மணிக்கு இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்

தகவல்:புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சாவகச்சேரியில் கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் காயம் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 9 மணியவில் நடைபெற்றுள்ளது.

சாவகச்சோரி மகளிர் கல்லூரிக்குச் அண்மித்த பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அற்புதராசா சுரேஸ்குமார் (சாவகச்சேரி) என்பவர் உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது.

எஸ்.திலீபன் (வயது 25) மற்றும் சி.திருச்செல்வம் (வயது 35) ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல்:புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளியங்குளத்தில் வேட்டைக்குச் சென்ற மூவர் படையினரால் படுகொலை

வவுனியா மாவட்டம், புளியங்குளம், பெரியமடு காட்டிற்குள் வேட்டைக்குச் சென்ற மூன்று பொது மக்கள், அங்கு ஊடுருவிய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களிற்கு முன்னர் தமது நான்கு நாய்களுடன் வேட்டைக்குச் சென்ற இவர் கள் வீடு திரும்பாதமையினால், உறவினர்களால் விடுதலைப் புலிகளிடமும், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூவரது சடலங்களிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும், அவர்களில் ஒருவரது கழுத்தில் வெட்டுக்காயமும் காணப்பட்டிருந்தது. மூவரது முகத்திலும் திராவகம் ஊற்றப்பட்டதினால் முகங்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன.

பெரியமடுப் பகுதியைச் சேர்ந்த தியாகராசா குகனேஸ்வரன்(36), சிவசம்பு நகுலேந்திரராசா(44) மற்றும் சிவகுரு திரவியன்(32) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களை சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே படுகொலை செய்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 14ம் நாள் கறுப்பு உடையில் ஐந்து படையினர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றைதையும் தாம் கண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்:சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை

யாழ். கொய்யாத்தோட்டம் புதுவீதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞர் ஒருவர் இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் றெஜிநோல்ட் றொசாந்தன்(27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந் சமயம் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு; உந்துருளி ஒன்றில் தப்பிச்சென்றுள்ளனர்.

தகவல்:சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்து}ரில் ஐந்து அப்பாவி பொதுமக்கள் படையினரால் படுகொலை!!!!!

யாழ். மாவட்டம், புத்து}ர் வாதரவத்தைப் பகுதியில் நேற்றிரவு சிறீலங்கா இராணுவத்தின ரால் ஐந்து அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாநாகரசபை அதிகாரி, மின்உபகரண திருத்துனர், விவசாயி மற்றும் இரு முச்சக்கர வண்டி ஓட்டு னர்கள் ஆகியோரே படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு சுகவீனமுற்றிருந்த உறவினர் ஒருவரை அவரது வீட்டில் விட்டுவிட்டு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வர் இரவு 10.30 மணியளவில் படையினரால் மறிக்கப்பட்டு 51-1 படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களை காணாததால் அப்பகுதியால் தேடிச் சென்ற மற்றொரு முச்சக்கர வண்டியின் ஓட்டுனரும் படையினரால் மறிக்கப்பட்டு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் இவர்கள் ஐவரையும் படைமுகாமிற்கு அருகேயுள்ள தரவை வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற படையினர் அவர்களை ஓடுமாறு பணித்துள்ளனர். இதனையடுத்து ஓடிய ஐவர் மீதும் பின்னே நின்ற இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச் பிரயோகம் செய்துள்ளனர். படையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சம்பவ இடத்திலேயே ஐவரும் உயிரிழந்துள்ளனர்.

மாநகரசபை அதிகாரி கந்தசாமி கௌரிபாலன்(32), முச்சக்கர வண்டி ஓட்டுனர் பாலசுப்பிரணியம் கண்ணதாசன்(27), மின்உபகர திருத்துனர் செல்லப்பபு கமலதாசன்(25), விவசாயி மகாதேவன் கிசோர் குமார்(20) ஆகியோரும் அவர்களை காணாது தேடிச் சென்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர் தங்கராசா ரவீந்திரன் ஆகியோரே படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் மூவரின் சடலங்கள் ஒரே இடத்திலும் மற்றைய இருவரின் சடலங்கள் 200 மீற்றர் து}ரத்திலும் கிடந்துள்ளன.

படையினரின் இந்த வெறிச்செயலால் புத்து}ர் பகுதி மக்கள் கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது

தகவல்:சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹட்லர் எப்படி யுூதர்கள் மீது இரத்த வெறியில் இருந்து கொன்றானோ, அதே போன்ற விடயத்தை தான் சிங்கள ஆக்கிரமிப்பு சக்திகளும் செய்கின்றன. ஓடவிட்டுச் சுடும் கொலைகளை இந்தச் சிங்கள இராணுவத்தினர் செய்திருக்கின்றனர். அரசபயங்கரவாதம் மீண்டும் இரத்தவெறி கொணடு தமிழ்மக்களை அனுகுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 5 சகோதரர்கள் இறப்புக்கு அமெரிக்கா,அவுஸ்திரேலியா,கனடா

பிரித்தானியா ஒன்றும் சொல்லாது. புலிகளை மட்டும் சாடும். விரைவில் பொங்கி எழும் படை சிங்கள அரசுக்குப் பதிலடி கொடுக்கும். அச்சகோதரர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பிரதேசத்தில் இராணுவம் ஊருடுவித் தாக்குதல்- பெண் விவசாயி சுட்டுப் படுகொலை- இருவர் காயம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசமான மடுப்பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினரால் சிவஞானசுந்தரம் கலாராணி (வயது 50) என்ற விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே சிவஞானசுந்தரம் கலாராணி படுகொலை செய்யப்பட்டார்.

காயமடைந்த வீரையா ஜெயலட்சுமி (வயது 50) மற்றும் உடையப்பன் வீரப்பன்(வயது 60) ஆகியோர் அடம்பன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நெல் மூட்டைகளுடன் விவசாய காணிகளிலிருந்து வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இராணுவத்தினரது ஊடுருவும் அணியினரால் மன்னார் மாவட்டம் சின்னவலயன்கட்டுப் பிரதேசத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தமிழீழக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாலம்பிட்டியிலிருந்து 10 கிலோ மீற்றர் கிழக்கில் இச்சம்பவம் நடந்துள்ளது.

தகவல்:புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடிகாமத்தில் ஓட்டோ சாரதி சுட்டுக் கொலை

யாழ். கொடிகாமம் பகுதியில் ஓட்டோ சாரதி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொடிகாமம் ஓட்டோ தரிப்பிடத்தில் இன்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோர் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர் செல்வரத்தினம் மதிசீலன் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் கொடிகாமம் மீன் சந்தைக்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. கொடிகாமம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ள 8 ஆவது ஓட்டோ சாரதி இவராவார்.

இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஓட்டோ சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை முகாமிலிருந்து இயங்குவோரே காரணம் என்று கூறப்படுகிறது.

தகவல்:புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு பொதுமக்கள் படுகொலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பனிக்கன்குளம் வனப்பகுதியில் காணாமல் போன வனவளப் பாதுகாப்பு குழுவின் இரு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.

மாங்குளம் வடமேற்கில் ஏ-9 வீதிக்கு மேற்கே 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பனிக்கன்குளம் வனப்பகுதியில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி திருவையாறைச் சேர்ந்த வீரக்கொடி சோமராச (வயது 60) மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த தொப்பிலான் பெரியசாமி (வயது 58) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரது உடல்களிலும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் உள்ளன. வெற்றுத் தோட்டா உறைகள் நான்கும் அப்பகுதியில் இருந்ததையும் தமிழீழ காவல்துறையினர் கண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டோரின் சடலங்கள் கிளிநொச்சி அரச மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன. மருத்துவமனைக்குச் சென்று கண்காணிப்புக் குழுவின் கிளிநொச்சி அதிகாரி மட்டி வைனியோன்பா சடலங்களைப் பார்வையிட்டார்.

வனப்பகுதிக்குள் கடந்த மே 2 ஆம் நாள் இரு பணியாளர்களும் சென்றுள்ளனர். அதன்பின்னர் மே 5 ஆம் நாள் முதல் காணவில்லை என்று தமிழீழ காவல்துறையின் மாங்குளம் துணுக்காய் பிரிவு அதிகாரி விஜயகுமார் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக வனப்பகுதியில் இதுவரை சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரால் மூன்று சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த அணியினர் கறுப்பு மற்றும் இராணுவச் சீருடையில் ஊடுருவியுள்ளதாகவும் விஜயகுமார் கூறினார்.

தகவல்:புதினம்

படுகொலைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். சமாதானம் என்ற போர்வையில் தமிழ்மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பறிகொடுபதிலும் பார்க்க போரைத் தொடங்குவது எவ்வளவோ மேல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படையினர் முன்னிலையில் இளைஞன் படுகொலை.

யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் சிறீலங்காப் படையினரின் முன்னிலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று காலை 8.00 மணிக்கு பத்தைமேனிச் சந்திப்பகுதியில் வீதிக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்காப் படையினரின் முன்னிலையில் வைத்து உந்துருளியில் வந்த அடையாளந்தெரியாத ஆயுததாரிகள் இருவரால் இவ் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது குறிப்பிட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாரதி வீதி, அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பசுவலிங்கம் காண்டீபன் (23) என்ற இளைஞரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்.

தகவல்:சங்கதி

அச்சுவேலிப்பகுதியி;ல் கடந்த இரு நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள அப்பாவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

¾¢Õ§¸¡½Á¨Ä ãà÷ À̾¢Â¢ø þÕÅ÷ þýÚ ÍðÎ즸¡øÄôÀðÎûÇÉ÷.

þýÚ ÓüÀ¸ø 9.45 Á½¢ÂÇÅ¢ø þó¾ ºõÀÅõ ãà÷ ¦À¡¢ÂÀ¡Äõ À̾¢Â¢ø þ¼õ ¦ÀüÚûÇÐ.

º¢üÚÆ× þÂó¾¢Ã¦Á¡ýÈ¢ø Å¢ÈÌ ¦¸¡ñΦºýÈ þÕÅ÷ Á£Ð þÉõ¦¾¡¢Â¡¾Å÷¸û §Áü¦¸¡ñ¼ ÐôÀ¡ì¸¢îÝðʧħ þÕÅ÷ ¦¸¡øÄôÀ𼾡¸ ¦¾¡¢Å¢;ì¸ôÀθ¢ÈÐ.

¦¸¡øÄôÀð¼Å÷¸û ¦ƒÂîºó¾¢ÃÉ,; ÁÐÃý ±ýÀÅ÷¸û ±É×õ ¦¾¡¢Å¢ì¸ôÀθ¢ÈÐ.

¾¢Õ§¸¡½Á¨Ä¢ø þùÅ¡Ú ¦¾¡¼Õõ ÀΦ¸¡¨Ä¸û ÌÈ¢òÐ Á¡Å𼠫ú¢ÂøÐ¨È ¸ñ¼Éõ ¦¾¡¢Å¢òÐûÇÐ. þÐ ¦¾¡¼÷À¢ø ºí¸¾¢ìÌ ¸ÕòÐ ¦¾¡¢Å¢ò¾ ¾¢Õ§¸¡½Á¨Ä Á¡Å𼠫ú¢ÂøÐ¨Èô ¦À¡ÚôÀ¡Ç÷ º¢.±Æ¢Äý þáÏÅ ÒÄÉ¡ö×ôÀ¢¡¢Å¢ÉÕ¼ý §º÷ó¾¢ÂíÌõ ´ðÎìÌØÅ¢É¡¢ý þùÅ¡È¡É ¦ºÂüÀ¡Î¸û «¾¢¸¡¢òÐ ÅÕž¡¸×õ, ¾¡õ þÐ ¦¾¡¼÷À¢ø «ñ¨Á측ÄÁ¡¸ ÀÄ ¾ÃôÀ¢ÉüÛõ ¸ÄóШÃÂ¡Ê ÅÕž¡¸×õ ÌÈ¢ôÀ¢ð¼¡÷.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.