Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரேஇரவில் முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் வந்த 9000 சிங்களவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

manalaru.jpg

[size=4]வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

“உதாரணத்துக்கு, முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இருந்த வெலிஓயா பகுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரவுடன் இணைக்கப்பட்டது.

தமிழில் நாங்கள் அதை மணலாறு என்றே அழைக்கிறோம். அங்கு 9000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

தற்போது ஒரே இரவில் மணலாறு பிரதேசத்தில் உள்ள 9000 சிங்களவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் இந்த மாவட்டத்தின் இனப்பரம்பல் முற்றாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளது. முன்னர் தமிழர்களால் நெற்செய்கை பண்ணப்பட்ட பகுதியில் தற்போது 600 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கின் சனத்தொகை கணிசமாக குறைந்து விட்டது. போரில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர்.

இந்தநிலையில் இது முக்கியமான விவகாரம்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.[/size] [size=4]http://www.puthinapp...?20120701106504[/size]

  • கருத்துக்கள உறவுகள்
:blink: :blink: :blink:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்சியாக சிங்களவர்கள் குடி ஏறுவதன் மூலம் தமிழர்கள் தமது தனித்துவத்தை இழந்து தமிழர்களின் பூர்வீக தாயகமும் இல்லாது திட்டமிட்ட வகையில் ஒழிக்கப்படுகின்றது இதனை தடுப்பதற்கு உடனடியாக மக்கள் போராட வேண்டும் .

Mullaitivu-150x150.jpgவடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

“உதாரணத்துக்கு, முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இருந்த வெலிஓயா பகுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரவுடன் இணைக்கப்பட்டது.

தமிழில் நாங்கள் அதை மணலாறு என்றே அழைக்கிறோம். அங்கு 9000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

தற்போது ஒரே இரவில் மணலாறு பிரதேசத்தில் உள்ள 9000 சிங்களவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் இந்த மாவட்டத்தின் இனப்பரம்பல் முற்றாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளது. முன்னர் தமிழர்களால் நெற்செய்கை பண்ணப்பட்ட பகுதியில் தற்போது 600 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கின் சனத்தொகை கணிசமாக குறைந்து விட்டது. போரில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர்.

இந்தநிலையில் இது முக்கியமான விவகாரம்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

www.irruppu.com

சில செய்திகளை நல்ல விளக்கமானவர்களுக்கு மட்டும் என்று போட்டால் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இன்ப மயம் (?) தான்.

இலங்கையின் தொன்மையான ஐந்து சிவாலயங்களில் தொண்டீஸ்வரம் என்பது மதரை எனும் தென் முனையில் இருந்தது.

கேரளா கட்டிட கலையில் இருந்த இந்த அழகிய சிவனாலயம் சுற்றி வாழ்ந்த தமிழ் மக்களாலும், தமிழ் வியாபாரிகளாலும் வணங்கி வழிபடப் பட்டதாக, 16 ம் நூற்றாண்டு மொரோக்கோ நாட்டு பயணி இபின் பாத்துட குறிப்பு எழுதி உள்ளார்.

போத்துக் கேயாரால் அழிக்கப் பட்ட இச் சிவாலயம் பின்னர் தொண்டர எனப் பெயர் மாறி, மாத்தறை ஆக இடத்தின் பெயரும் மாற, விஷ்ணு கோவில் ஆகி இன்று புத்தர் குடி கொண்ட கோவில் ஆக உள்ளது.

thodeswaramlingam.jpg

'தொண்டர' வில் சிவனே என ஒரு மூலையில் இருக்கும் சிவலிங்கம். சந்திர மௌலீஸ்வரர் (நிலா ஈஸ்வரர்) என வழங்கப் பட்டவர்.

நகுலேஸ்வரம் அழி நிலையில் இருந்து யாழ் பகுதியில் இருப்பதால் எதோ கொஞ்ச நாளைக்குப் இருக்கும்.

திருக் கேதீஸ்வரம் புத்தர் எட்டிப் பார்த்து விட்டார். திருக் கோணேஸ்வரம் குறித்து சொல்ல தேவை இல்லை.

முனேஸ்வரமும் தமிழர் கையில் இல்லை. கதிர்காமம்?

மெல்லத் தமிழும் சைவமும் இனி சாகலாம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சில செய்திகளை நல்ல விளக்கமானவர்களுக்கு மட்டும் என்று போட்டால் நல்லது .

சித்தார்த்தனுக்கு எல்லாம் விளங்கும். இதுகள் மட்டும் விளங்காதோ?

சித்தார்த்தனுக்கு எல்லாம் விளங்கும் :icon_idea: :icon_idea: :icon_idea:

உதெல்லாம் ஒரு விடயமோ ?

தமிழ் சிறைக்கைதிகள் மீதுவவுனியா சிறையில் தாக்குதல் ,செங்கல் பட்டில் தாக்குதல் .இதெல்லாம் காது வழி போய்விடும் ,

எங்களுக்கு பிரான்சில் ,ஜெர்மனியில் ,நோர்வேயில் விளையாட்டு விழாவும் கனடாவில் நட்சத்திர விழா வைக்கவே நேரம் காணாது .

இப்படியே நீலிகண்ணீரை விட்டபடி அகப்பட்டதை சுருட்டுவம்.பிள்ளை பிரைவேட் பாடசாலையில் படிக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். நாங்கள் யெமோகனைக் கூட்டி வந்து, வீட்டில் தடபுடலாக விருந்து வைக்கவோ, அல்லது வாரவிடுதியில் புலியைப் பழித்துத் தண்ணியடிக்கவோ நேரமில்லை இதற்குள் நாட்டுக்கதை??

உண்மையில் இதற்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை.ஃ மலையத்தமிழர்களைத் தான் கொண்டு போய்க் குடியமர்த்த வேண்டும். அதுக்கு சிங்கள அரசு கடுமையான கஸ்டத்தைத் தரக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் ஒரு விடயமோ ?

தமிழ் சிறைக்கைதிகள் மீதுவவுனியா சிறையில் தாக்குதல் ,செங்கல் பட்டில் தாக்குதல் .இதெல்லாம் காது வழி போய்விடும் ,

எங்களுக்கு பிரான்சில் ,ஜெர்மனியில் ,நோர்வேயில் விளையாட்டு விழாவும் கனடாவில் நட்சத்திர விழா வைக்கவே நேரம் காணாது .

இப்படியே நீலிகண்ணீரை விட்டபடி அகப்பட்டதை சுருட்டுவம்.பிள்ளை பிரைவேட் பாடசாலையில் படிக்க வேண்டும் .

தமிழ்ச் சிறைக் கைதிகள் மீது வவுனியாவில் தாக்குதல், செங்கல் பட்டில் தாக்குதல் போன்றவற்றினை நிற்பாட்ட அல்லது இனிமேல் வராமல் தடுக்க என்ன செய்யலாம். உங்களின் கருத்து என்ன?

தனி நபர்களோ அல்லது தனியார் அமைப்புகளோ என்ன செய்தாலும் அது அவரவர் விருப்பம் .(கெலிகொப்டரில் மகளை கொண்டு வந்து சாமத்திய சடங்கு செய்வதுபோல் ) .

மக்கள் பணத்தில் தேசியம் என்ற போர்வையில் கூத்தாடுவதுதான் தான் பிழை .முதல் நாள் கறுப்பு யூலைக்கு கண்ணீர் .அடுத்தநாள் நட்சத்திருவிழா என்று கூத்து .எம்மவரில் என்னால் விளங்கிகொள்ளமுடியாத விடயம் இதுதான் .

கந்தப்பு ஒரு சிறிய கட்டுரை இன்றே எழுதி இணைக்கின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.