Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் இந்து ஈழ ஆதரவு மகாநாடு

Featured Replies

486454_3953246626172_1292395274_n.jpg

டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஓகஸ்ட் 5ஆம் திகதி இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். வேலூரிலுள்ள ஸ்ரீவைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும். திட்டமிட்டு ஆன்மிகவாதிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என அவர் தெரிவித்தார். விழுப்புரத்தில் ஓகஸ்ட் 5ஆம்திகதி நடைபெறுவதாக இருந்த டெசோ மாநாட்டினை கருணாநிதி சென்னைக்கு மாற்றியுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு எதிராக அதே திகதியில் இந்தியா முழுவதுமுள்ள இந்து அமைப்புகளைத் திரட்டி சென்னையில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்த உள்ளோம். காங்கிரசுடன் பேரம் பேசுவதற்கே கருணாநிதி டெசோ மாநாட்டை கையில் எடுத்துள்ளார். இலங்கைப் பிரச்னைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம்தான் என்பது எங்களது கோரிக்கை. இந்திய அரசு இலங்கை மீது போர்தொடுத்து தனித்தமிழ் ஈழத்தை உருவாக்கித் தரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

தாம்பரத்தில் பயிற்சி பெற்ற இலங்கை விமானப்படையினர் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது. எதிர்வரும் 15ஆம் திகதி ஸ்ரீராமசேனை மற்றும் கன்னட அமைப்புகளுடன் இணைந்து பெங்களூரில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

http://www.thinakkathir.com/?p=39097

யார் குத்தினால் என்ன அரிசி வந்தால் சரி.

[size=4]காங்கிரசு - கருணாநிதி கூட்டு தோற்பதற்காக நாம் எதையும் செய்யத்தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா யார் என்பது ஈழத்தமிழர் எல்லோருக்கும் தெரியும். ஆனல் கருணாநிதி யார் என்பது பலருக்கு தெரியாது. [/size]

[size=4]ஆகையால்த்தான் ஸ்ரீவைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்துடனோ அல்லது ஸ்ரீராமசேனையுடனோ கூட்டு வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் அதை நிச்சயம் செய்துகொள்ள வேண்டும். ஏன் எனில் கருணாநிதி வைக்கும் காங்கிரசுடனான கூட்டை விட தாழ்ந்தது ஒன்றும் இருக்க முடியாது. எனவே பொதுத் தேர்தலில் காங்கிரசு-கருணாநிதி கூட்டுக்குத் தோல்வியை தேடி ஸ்ரீ ராபிரானின் அடியானாகிய ஆஞ்சநேயன் அருளைவேண்டி துதி பாடுவாம்.[/size]

[size=4]எதிர்ப்போரை எதிர்ப்போனும், வாயுவின் மூத்த புத்திரனும், விஜயனின் வெற்றிகொடியில் இருந்து அவனுக்கு வெற்றியைதருபவனும், பாரதத்தின் மதிநுட்பம் மிக்க மந்திரியும், இராமபிரானின் புகழைப் பாடுபவனும், சீதாதேவியை போற்றுபவனுமாகிய ஆஞ்நேயனை போற்றி கருணாநிதியிற்க்கு தோல்வியை வேண்டுவாம். [/size]

வீரனுக்கு வீரன் வீமனுக்கு மூத்தோன், விஜயன் வெற்றிச் சின்னம்

பாரின் பெருவூராம் பழங்கண்ட பாரதத்துப் பெருமந்திரிப் புகழான்

காரின் வண்ணன் கைவல்ல கோதண்ட கோமகன் புகழ் சாற்றி

சீரின் பெருந்தேவி சீதையையும் போற்றியவனைப் போற்றுவாம்

ஆஞ்சநேயா சுத்த தமிழனாகிய நீ, நாம் தமிழ் எழுதும் பொது விடும் சொற்பிழை கருத்துப்பிழைகளைப் பொறுத்து கருணாநிதி போன்ற எம்மிடர்களையும் களைவாயாக.

:D :D :D:lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்

எங்களை வைத்து அரசியல் செய்வதே இவங்கடை வேலையை போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் கருணாநிதி.இவரால் முள்ளிவாய்கால் இரத்தக்களரியை நிறுத்துவதற்கு உரிய சக்தியும் தருணமும் இருந்தது.அதனை தட்டிக்களித்து விட்டு இப்போ மட்டும் டெசோ மாநாடு என்று எதற்கு & யாருக்கு பம்மாத்து காட்டுகிறார்???

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை தனது அரசியல் காய்நகர்த்தலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே டெசோ மாநாடு என்ற ஒன்றை கருணாநிதி கையிலெடுத்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.