Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் நினைவு கொள்வோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீள் நினைவு கொள்வோம்.

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, July 11, 2012

398875_3709344845022_1662961015_n.jpg

கால விதிகளின் கட்டறுத்தெறிந்த

வீரத்தின் விலாசங்களோடு

வனவாசம் போனவர்களுடன்

ஆழுமையின் வீச்சாய்

அடையாளம் காட்டப்பட்டவள் நீ.

பெண் விதியின் முழுமைகளை

நீ பேசிய மேடைகள்

பதிவு செய்து கொண்டதோடு

நீயொரு பெண்ணியவாதியாய்

பெருமை கொள்ளப்பட்டவள்.

உன்னையும் உனது ஆழுமைகளையும்

உச்சத்தில் ஏற்றி எழுதியோரும்

உன் குரலில் பதிவு செய்தோரும்

எண்ணிலடங்காதவவை....

எழுச்சியின் காலங்களை இப்படித்தான்

காலம் கௌரவப்படுத்துவது வரலாறு.

வீழ்ச்சியின் பின்னரே யாவும்

விழித்துக் கொள்கிறது.

அதுவே உனக்கும்

உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது.

000

2009 மே,

காலச் சூரியனின் கைகளிலிருந்து

தவறிப்போனவளாக

வரலாறு உன்னைப் பதிவுசெய்தது....

பணியாத வீரங்களெல்லாம் கைதூக்கிய சரணாகதி

உன்னையும் தோல்வியின் கைகளில் கொடுத்துவிட

காலத்தால் கைவிடப்பட்டவர்கள் வரிசையில் நீயும்

தோற்றப்போன ஒரு முன்னாள் பெண் போராளி.

திட்டும் சபித்தல்களும்

உன்மீது சொரிந்த வேளையில்

எல்லோர் போலவும்

நானும் கோபித்ததும் உன்னை சந்;தேகித்ததும்

நீயறியாத இரகசியங்கள்....

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்

கடைசிநேர நிலவரம் பற்றியும்

உங்களைத்தான் விழுங்கியது

எங்களது பேரங்கள்.

இருள் நிறைந்த கம்பிகளின் பின்னால் - நீ

இருளோடு கரைந்த கதைகள்

அறிந்த போது

எல்லாக் கோபமும் போய்

தோழமை வென்றது.

தோழியே உனக்காய் கண்ணீரில் கரைந்த

பொழுதுகள் கனத்தது....

கோபம் மறந்து உன்னோடு கதைத்து

உனது கண்ணீரைப் பங்கிட்ட போது

நெஞ்சுக்குள் உறுத்தும்

உன் மீதான எனது கோபங்கள்

அர்த்தமற்றுப் போய்விட்டன....

துயரங்கள் தின்ற உனது நாட்களை

நினைவுகொள் நேரமெல்லாம்

கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்

துயர் கரைக்கும் அந்தரத்தில்

உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்

உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய

வெற்றியை யாரிடமும் சொல்லாமல்

அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

கம்பிகள் உன்னை விடுவிக்கப் போகும் நாளுக்காய்

உன் அம்மாபோல நானும் காத்திருந்த நாட்களில்

உனது விடுதலையின் செய்தி

நெஞ்சுக்குள் பொங்கிய மகிழ்வை

நீ வரும் வரை

பொக்கிசமாய் பத்திரமாய் வைத்திருக்கிறேன்....

வா நாங்கள் மீண்டும்

பேசிக் கோபித்து விவாதித்து

மிஞ்சிய பொழுதுகளையேனும்

மீள் நினைவு கொள்வோம்.

22.06.2012

[size=5]http://mullaimann.blogspot.de/2012/07/blog-post.html[/size]

துயரங்கள் தின்ற உனது நாட்களை

நினைவுகொள் நேரமெல்லாம்

கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்

துயர் கரைக்கும் அந்தரத்தில்

உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்

உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய

வெற்றியை யாரிடமும் சொல்லாமல்

அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

[size=4]ஒரு பொண்ணோட மனச பொண்ணு தாங்க புரிஞ்சுக்க முடியும் :) .அதுவும் ஈழத்துப் பொண்ணுங்கள சொல்லவே வார்த்த வருதில்லீங்க சாந்தி அக்கா . பெரெண்ட்சிப்போட வால்யூவ ரெம்ப ஃபீல் செஞ்சு எழுதியிருக்கீங்க பாருங்க அங்கதான் நீங்க நிங்கீறீங்க . இந்த கிராமத்து காலேஜ் பொண்ணுக்கு அவ்வளவா அரசியல் வராதுங்க பட் உங்க கிஸ்டரி எல்லாம் என்னோட கிளாஸ்மேட் சிலோன் பிரெண்டு சொல்லுவா :(:( . ரெம்ப ஃபீலிங்கா இருக்குங்க உங்க கவிதைய பாத்து :( .[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்பையும் நம்பாத சந்தேகம் என்றென்றும் நல்லதில்லையே சொப்னா. கருத்துக்கு நன்றிகள்.

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்

கடைசிநேர நிலவரம் பற்றியும்

உங்களைத்தான் விழுங்கியது

எங்களது பேரங்கள்.

இரத்தினச்சுருக்கமாய் சுருக்கென்று சொல்வது இது தானோ . உங்கள் கவி வரிகளின் வீச்சும் கனதியும் பெறுமதியானவை சாந்தி . பல புரிதல்கள் , புரிந்தும் புரியாத பலருக்கு உங்கள் கவிதை நல்ல குத்தூசி . தொடர்ந்து எழுதுங்கள் .

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதை தமிழினி அவர்களுக்காக 2012 எழுதம்பட்டது.

வெலிக்கடையிலிருந்து தமிழினி  வவுனியா புனர்வாழ்வு முகாம் சென்ற போது எழுதியது.

தோழி, திருமணம் முடிந்த போது பலமுறை வாசித்தாய் சொல்வாய். இன்று நீ பிரிந்து போன துயரம் உயிரை தின்கிறது. 

தோழி உன் பிரிவு இன்றைப் பொழுதை இருளாய் நிறைத்திருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.