Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்படிக்கு தோழர் செங்கொடி

Featured Replies

இதனை வண்ணத் திரை பகுதியில் இணைக்க மனம் வரவில்லை.

558369_2282774764331_624229045_n.jpg

இன்னும் பிறக்காத என் அடுத்த தலைமுறைக்கு,

வணக்கம். இன்னும் பிறக்காத உங்களுக்காக எண்பதுகளின் இறுதியில் பிறந்தவன் எழுதும் கடிதமிது. உங்களுக்கு என் பெயர் தேவையில்லை… என் அடையாளங்கள் தேவையில்லை… என்றாவது ஒரு நாள் நீங்கள் இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்…! இது வரலாற்று சிறப்புமிக்க கடிதமும் இல்லை… நானும் சிறப்புமிக்கவனும் இல்லை…! உலகமயமாக்கலின் இரு பக்க விளைவுகளையும் பார்த்து வாழ்பவன...ின் புலம்பல் கடிதம்…! எப்போதும் எழுத தோன்றுவது இல்லை…! ஏதாவது விஷயங்கள் நம்மை அழ்ந்து பாதித்தால் மட்டுமே எழுத தோன்றுகிறது…!

இந்த கடிதமும் என்னை பாதித்த ஒரு விஷயத்தை பற்றி தான்…!

நான் சொல்ல போகிற ஒருத்தியை பற்றி… நிச்சயம் உங்கள் பெற்றோர் உங்கள் காலத்தில் உங்களிடம் சொல்ல போவதில்லை… அவர்கள் அவளை மறந்திருக்கலாம், அல்லது உங்கள் பெற்றோருக்கே அவளை தெரியாமல் இருக்கலாம்… அவளும் என்னை போல் சாமானியமானவள் தான்… ஆனால் அவள் செய்த ஒரு காரியம் தான் என்னை இந்த கடித்ததை உங்களுக்கு எழுத வைத்த்து…

அவள் பெயர் செங்கொடி… அவள் தன் 21 வயதில் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டாள்… மூன்று பேரை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அவள் மரணத்தை தழுவினாள்…! அவளை பற்றி எடுக்கப்படும் ஒரு ஆவண படத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்… அது தந்த வலியும் வேதனையும் தான் நான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத காரணம்…!

நான் வாழ்கையை தர்க்கங்களாக (Logics) தான் பார்ப்பேன்… எளிதில் எதற்கும் உணர்ச்சிவசபடமாட்டேன்… ஆனால் இக்கடிதத்தை எழுதும் போது கண்களில் நீர் வருகிறது…!

அவள் தற்கொலை செய்துக் கொண்டாள் என்று சொன்னேன் அல்லவா… இல்லை… நிச்சயம் இல்லை… எங்கள் சமகால அரசியல் அவளை கொன்றது… நாங்கள் அவளை கொன்றோம்…!

எந்த விளைவுகளையும் தராத உழைப்பு, எவ்வளவு வேதனையை ஏற்படுத்தும்… நிச்சயம் அது தந்த வேதனையில் தான் அவள் இறந்தால்…!

எங்கள் கால அரசியல் தலைவர்களுக்கு பிரச்சனையை சொல்ல தெரிகிறதே தவிர அதற்கான தீர்வை சொல்ல தெரியவில்லை…! எங்கள் தலைவர்கள் உணர்ச்சிகளை வார்த்தைகளில் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டு அவர்கள் உணர்ச்சிகளற்ற திடப்பொருளாக ஆகிவிடுகிறார்கள்…!

எங்கள் தலைவர்கள் யாரும் பொது பிரச்சனைக்காக இறந்தது இல்லை… எங்கள் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சமூக பிரச்சனைக்காக தீ குளித்தது இல்லை…! நிச்சயம் உங்கள் காலத்திலும் இருக்க மாட்டார்கள்…!

அவர்கள் தீ குளிக்க வேண்டுமென்ற நோக்கமும் எனக்கில்லை…

ஆனால் இதற்கெல்லாம் என்ன தீர்வு…! இது ஒரு முடிவிலியாக போய் கொண்டிருக்கிறது…!

இறந்த செங்கொடியின் தம்பியிடம்… “உன் அக்கா ஒரு பொது பிரச்சனைக்காக தீ குளித்தாள், இதை எப்படி உணர்கிறாய்…?” என்றோம்.

அதற்கு அவன் “உங்க அக்கா செத்தா எப்படி இருக்குமோ அப்படி தான் எனக்கும் இருக்கிறது…” என்றான். அவனின் பதில் தந்த வேதனை நிச்சயம் வார்த்தைகளால் உங்களிடம் இறக்கி வைக்க முடியாது…!

எங்கள் காலத்தில் பண அரசியலும்… பிண அரசியலும் தான் நடந்துக்கொண்டிருக்கிறது…!

செங்கொடி ஆவணப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது… படம் வெளிவரும்… படத்தின் உள்ளடக்கமும், தொழிற்நுட்பமும் விமரிசிக்கப்படும்… சிலர் பாராட்டுவார்கள்… சிலர் தூற்றுவார்கள்…

காலம் நகரும்… அனைவரும் அவணப்படத்துடன் சேர்த்து, செங்கொடியையும் மறந்துவிடுவார்கள்…!

சமூக கோபம் பெருநகரத்தின் நெரிசலில் கரைந்து விடும்… அவரவர் தன் சொந்த பிரச்சனையுடன் போராட போய்விடுவார்கள்…!

தீர்வுகளற்ற அனைத்து பிரச்சனைகளும் உங்களை பின் தொடர தொடங்கிவிடும்…!

மிகவும் மனவேதனையாக இருக்கிறது… இவ்வளவு சிக்கல்கள் உள்ள ஒரு சமூகத்தை உங்களுக்கு வழங்குகிறோமே என்று…!

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு நாள் தீர்வு கிடக்குமென்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை முடிக்கிறேன்…

நன்றி…

மேலே எழுதியுள்ள கடிதம் நியாஸ் அவர்களின் கடிதம், முதலில் தவறுதலாக பாரதித் தம்பி என்று போட்டு விட்டேன்

முகநூல் மூலம்...

Edited by நிழலி
மேலே எழுதியுள்ள கடிதம் நியாஸ் அவர்களின் கடிதம், முதலில் தவறுதலாக பாரதித் தம்பி என்று போட்டு வ

[size=4]தியாகங்கள் வரலாறகவேண்டும். அடுத்த தலைமுறைகளும் உண்மைகளை தெரிந்திருக்கவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேரின் உயிரைக்காக்க, தன்னுயிரைக் கொடுத்த செங்கொடியின் வாழ்க்கையை... ஆவணப்படமாக எடுக்கும் சந்திரசேகரின் பணி மகத்தானது.

  • தொடங்கியவர்

மேலே எழுதியுள்ள கடிதம் நியாஸ் அவர்களின் கடிதம், முதலில் தவறுதலாக பாரதித் தம்பி என்று போட்டு விட்டேன்

தீ குளிப்புக்கு நான் எதிரானவன். இது உணர்ச்சி அரசியலை சார்ந்தது உடனடி விளைவை அன்றி நீண்ட விளைவு எதனையும் ஏற்படுத்தாது என்பது என் கருத்து. இருப்பினும் செங்கொடியின் உயிர் தியாகம் மகத்தானது. ஆவணப்படம் எடுப்பது ஒரு நல்ல முயட்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.