Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு விற்ற நடத்துனர்: தகராறில் பஸ்சிலிருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

srilanka-bus-news150.jpg

[size=4]யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பஸ்ஸிலிருந்து விழுந்து இளைஞரொருவர் மரணமாகியுள்ளார். நேற்றிரவு யாழ். பஸ்தியான் சந்திக்கருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.[/size]

[size=4]கிளிநொச்சி, ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறி வவுனியா செல்வதற்கு இளைஞர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். 180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு நடத்துனர் கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.[/size]

[size=4]இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் பயணித்த பயணிகளும் இவ்விவகாரத்தில் தலையிடவே கைகலப்பு ஏற்பட்டு குறித்த இழைஞர் நடத்துனரால் பஸ்சிலிருந்து தள்ளிவிடப்பட்டார். பஸ் சில்லில் அகப்பட்ட மரணமாகியுள்ளார்.[/size]

[size=4]பஸ் நடத்துனர்- ஓட்டுநர் ஆகியோரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் சிங்களவர் என நினைக்கின்றேன்.

தமிழன் பட்ட அழிவு காணாதென்று, இந்த வேதாளங்களால்... 25 வயது தமிழ் இளைஞன் சாக வேண்டி இருக்கு. :(

நடத்துனரும் ஓட்டுனரும் தமிழர்களாக இருந்தால் கட்டாயம் EPDP ஆக்களாக தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அது சிங்களவராகவோ அல்லது துணை இராணுவக் குழுவாகவோ இருக்க வேண்டும் என்று நியதியில்லை. தமிழர்கள் கூடச் செய்வார்கள்.

எனது அனுபவத்தைக் கூறுகிறேன். 2002 இல் நான் யாழ்ப்பாணம் சென்றபோது, யாழ் - பருத்தித்துறை தனியார் போக்குவரத்து வண்டி நடத்தும் நடத்துனரும் சாரதியும் முழு மது போதையில் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏறினர். வகுப்பு முடிந்து திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளிடம் அந்த இருவரும் நடந்துகொண்ட முறை பலருக்கும் எரிச்சலையூட்டியது. அவர்களின் அங்க சேட்டைகளும், பாலியல் ரீதியான சொற்பிரயோகங்களும் எல்லோரும் இருக்க அந்த மாணவிகள் மேல் பொழியப்பட்டது. நான் சிங்களவன் போல பேசி அவர்களை சிலமுறை தடுத்துப் பார்த்தேன். ஆனால் மனைவி என்னுடன் தமிழில் பேசியதைக் கேட்டுவிட்ட அந்த நடத்துனரும் சாரதியும் என்னுடம் சண்டைக்கு வந்தாட்கள். பின்னர் பஸ்ஸில் இருந்தோரும் அந்தப் பெண்களும் ஒருவாறு சமாதானப்படுத்தினார்கள். ஆனால் நான் நாவல மடத்தடியில் இறங்குபோது, "உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம், எப்படியிருந்தாலும் நீ கொடிகாமத்தாலதானே கொழும்புக்குப் போவாய், அப்போது பார்த்துக்கொள்கிறோம்" என்று உறுமிவிட்டுச் சென்றார்கள்.

இன்னொருமுறை, 1982 இல் நான் 3 ஆம் வகுப்புப் படிக்கும் காலம். கோண்டாவிலில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். எனது சீசன் டிக்கெட்டில் அன்றைய நாளுக்கான பெட்டியை முதல் நாளே தவறுதலாக இன்னொரு நடத்துனர் வெட்டிவிட்டிருந்தார். நான் அதைக் கவனிக்கவில்லை. நான் அன்று சீசன் டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பிக்கவும் அவர் என்னை திருநெல்வேலி விவசாயிக் கல்லூரியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். ஏனென்றால், நான் ஏற்கனவே பயணம் செய்துவிட்ட சீசன் டிக்கெட்டைக் காட்டுகிறேனாம். அங்கிருந்து மூன்று மைல் நடந்து வீடு சென்றேன், பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை.

இப்படிப் பல தடிப்புப் பிடித்த நடத்துனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சிங்களவராகவோ அல்லது தலையாட்டிகளாகவோ இருக்கவேண்டுமென்பதில்லை.

Edited by ragunathan

இறந்தவரின் குடும்பம் ஒரு கோடி நட்ட ஈடு கேட்க வேண்டும்!

கொடுக்கவில்லை என்றால் யாழில் நடமாடும் 10 சிங்களவர்களுக்கு பஸ்ஸின் பாரம் எவ்வளவு என்று அவர்கள் மேல் ஏத்திக் காட்டலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த இரங்கல்கள் ...........

இரத்தக்காட்டேரிகள் வாழும் பே மண்டலம்..............வசந்தம் வீசுகிறது என்று புலுட்டா காட்டாதீர்கள் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.