Jump to content

கருணாநிதி ‘டெசோ’வுக்காக தேட, ராஜபக்ஷே பின் பதுங்கும் தமிழ் எம்.பி.க்கள்!


Recommended Posts

டெசோ மாநாடு குறித்து எதிர்பார்த்ததைவிட அதிகளவில் எதிர்ப்பு கருத்துகள் வர துவங்கியுள்ள நிலையில், மாநாட்டை எப்படியும் வெற்றிகரமாக நடத்தி காண்பிக்க முழுமூச்சுடன் இறங்கியுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில் மாநாட்டு அரங்கம் அமையவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி, பிரபல பந்தல் கான்ட்ராக்டர் ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கம் பிரமாண்டமாக சினிமா செட்டிங் போல் அமைக்கப்படுகிறது. அரங்கத்தின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை, கருணாநிதி தாமே நேரில் வழங்கியுள்ளார்.

இந்தியாவுக்கு வெளியே இந்த மாநாடு தோற்றுவித்துள்ள நெகடிவ் கருத்துக்களை உடைப்பதற்காக, சுமாரான அளவில் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த பிரசாரம், யாரையும் சென்றடைவதாக தெரியவில்லை.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளை மாநாட்டுக்கு அழைத்துவரும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர்களின் பெரிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை எப்படியாவது மாநாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று, கருணாநிதிக்கு நெருக்கமான இருவர் தலைகீழாக முயற்சிக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் அரசியல் செய்தாலும், அதன் தலைவர்கள் குடும்பத்துடன் வசிப்பது தமிழகத்தில்தான். கடந்த தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்ட சலுகைகளை பட்டியலிட்டு கூறி, “இவ்வளவு உதவிகள் செய்த நாம் நடத்தும் மாநாட்டுக்கு நீங்கள் வாராதிருப்பதா?” என்று கேட்கப்படுகிறது.

நாளையே தமிழகத்தில் ஒருவேளை ஆட்சி மாறி, தி.மு.க. மீண்டும் ஆளும்கட்சியாக வந்துவிட்டால், என்னாகும்? அப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தமிழகத்தில் வசிக்க வேண்டும் அல்லவா? அதனால் அவர்கள் நெளிகின்றனர்.

இருவர் சடுதியாக ஐரோப்பா டூர் கிளம்பி விட்டனர். மற்றையவர்களும், தாய்லாந்து, கம்போடியா என்று எங்காவது செல்லும் இலங்கை அரசு குழுக்களில் இணைந்து கொள்ள முடியுமா என்ற முயற்சியில் உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஒருவருக்கு இலங்கை தூதுக்குழுவுடன் மியன்மார் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. மற்றையவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில், கருணாநிதியுடன் சகவாசம் வைப்பதைவிட, இலங்கை அரசுடன் இணக்கமாக இருப்பது இவர்களுக்கு பலன் தரும்.

இவர்கள் எல்லோருமாக சேர்ந்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

நன்றி - விறுவிறுப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.