Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்வானி பேச்சால் ஆவேசமடைந்த சோனியா; அவையில் அமளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 'சட்டவிரோத’ அரசு என்று பா.ஜனதா தலைவர் அத்வானி பேசியதால் காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் ஆவேசமடைந்தார்.

மக்களவையில் இன்று அசாம் கலவரம் மற்றும் சுரங்க ஊழல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அரசு ஒரு சட்டவிரோத அரசு என குற்றம்சாட்டினார்.அத்வானி இவ்வாறு கூறியதும் சோனியா கடும் ஆவேசமடைந்து,தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.அதனை தனது முக பாவனை மூலமும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் அத்வானியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அவர் தனது கட்சி எம்.பி.க்களுக்கு கண் ஜாடை காட்டினார்.

திரும்ப பெற்ற அத்வானி

இதனையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து சபாநாயகர் மீரா குமார் அத்வானியிடம் “சட்ட விரோத” என்ற வார்த்தையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார்.

இதை அடுத்து, அத்வானி தான் கூறிய சட்டவிரோத அரசு என்ற வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொண்டார்.அதன்பிறகும் மக்களவையில் கடும் அமளி நீடித்ததால், அவையை 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

துரதிருஷ்டவசமானது: பிரதமர்

இதனிடையே மத்திய அரசு சட்ட விரோத அரசாக செயல்படுகிறது என்ற எல்.கே.அத்வானியின் கருத்து துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

’வங்கதேச ஊடுருவல்காரர்களால் வன்முறை’

முன்னதாக அத்வானி பேசுகையில், சட்டத்துக்குப் புறம்பாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் advani%2816%29.jpgஊடுருவி வந்து, இங்கே அனைத்து வசதிகளையும் அனுபவித்து வரும் ஊடுருவல்காரர்களால்தான் அசாமில் வன்முறை வெடித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஊடுருவல்காரர்கள் வங்கதேசத்தில் இருந்து உள்ளே புகுந்து அசாமில் பரம்பரை பரம்பரையாக வாழ்பவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் மண் தங்கள் கையைவிட்டுப் போய்க்கொண்டிருப்பதாலேயே அசாமில் நெருக்கடியும் பதற்ற நிலையும் தோன்றுகிறது.

தங்கள் சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக அரசுகள் செயல்படுகின்றன. சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசாம் கலவரம் குறித்து பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அத்வானி மேலும் கூறினார்.

vikatan news

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் ஆவேசமடைந்தார்.

காந்தி வேடம் கலைந்து

முசோலினி வெளியே வருகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.