Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரேக்க அரசு வெளிநாட்டுக் குடியேறிகள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்துகிறது

Featured Replies

கிரேக்க அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் 11.5 பில்லியன் யூரோக்களை அறிவித்து ஒரே வாரத்திற்குப் பின் 4,500 பொலிஸ் அதிகாரிகள், தோட்டாக்கள் ஊடுருவ முடியாத உடைகளை அணிந்து, அல்சேஷன் நாய்களின் துணையோடு, ஏதென்ஸ் நகரத் தெருக்களில் வெளிநாட்டு-தோற்றமுள்ள மக்களைத் தேடிப் பிடிக்கப் புறப்பட்டனர்.

கிட்டத்தட்ட 6,000 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கைது செய்தவர்களில் 1,400 முதல் 2,000 நபர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய தாய்நாட்டிற்கும் அனுப்பப்படுவர்.

நேரில் பார்த்தவர்கள் பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாளுக்கு கொடுத்துள்ள தகவல்படி, பொலிஸ் குழுக்கள் பெரும் மிருகத்தன்மையுடன் செயல்பட்டன. தமக்குத் தோன்றிய வகையில் பொலிசார் வெளிநாட்டினர் போல் தோன்றும் நபர்களை நிறுத்தி, சன்னல்கள் அற்ற பஸ்களில் ஏற்றினர். பல மணி நேரத்திற்குப்பின், அதிகாரிகள் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி அவர்களுடைய ஆவணங்களையும் சோதித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று 88 பாக்கிஸ்தானியர்கள் உடனடியாக தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இவர்களில் பலர் நீண்டகாலமாக அனுமதி பெற்றுக் குடியேறியவர்கள். சிலர் குடியுரிமை கூடப் பெற்றிருக்கின்றனர். பொருளாதாரப் பிரச்சனையை எதிர்கொள்ள நிறவெறியைத் தூண்டிவிடுகிறது கிரேக்க அரசு. கிரேக்க அரசின் முன்னுதாரணத்தை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

பல மணி நேரம் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் முழந்தாளிட்டுச் செலவழிக்கும் இழிந்த காட்சிகள் குறித்தும் தகவல்கள் கூறுகின்றன. காவலில் இருப்பவர்கள்மீது பொலிஸ் அதிகாரிகள் வன்முறைத் தாக்குதல்கள் நடத்திய தகவல்களும் வெளிவந்துள்ளன.

UNHCR இன் ஏதேன்ஸ் பிரதிநிதி பெட்ரோஸ் மஸ்டகஸ், குடியேறுபவர்களின் உரிமைகளை பொலிஸ் நடவடிக்கை மீறுகிறது என சுட்டிக் காட்டினார். “தஞ்சம் கோருபவர்கள் பாதுகாப்பிற்கான அந்தஸ்த்திற்கு விண்ணப்பிப்பது என்பது மிகவும் கடினம், கிட்டத்தட்ட இயலாது, இதையிட்டு நாங்கள் கவலை கொண்டுள்ளோம், கைது செய்யப்பட்டவர்களுள் பாதுகாப்பை நாடுபவர்கள் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் தங்கள் வேண்டுகோளை அவர்களால் சமர்ப்பிக்க முடியாமல் இருக்கலாம்.”

”Operation Xenios Zeus” என்று அழைக்கப்படும் இந்த பரந்த நாடுகடத்தல் நடவடிக்கை, குடியேறுபவர்களுக்கு எதிரான பரந்த நடவடிக்கையின் ஒரு பாகமாகும். ஏப்ரல் மாதத்தில் இருந்து கைதுக்கள், நாடுகடத்தல்கள் ஆகியவற்றிற்கு வகை செய்யும் இடைவிட வெகுஜனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் மட்டும் 819 பேர் கிரேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

www.inioru.com

(உல்லாசபயணம் போகிறவர்களுக்கும்,ஊரில் கக்கூஸ் சரியில்லை என்று சொல்பவர்களுக்கும் ஒரு பொதுசெய்தி எல்லாத்தின் தொடக்கமும் எதேன்சிலிருந்துதானாம் ஆரம்பிக்கின்றது.)

  • கருத்துக்கள உறவுகள்

Don't worry இது தான் கொஞ்ச நாள்ல அமேரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா என்று எல்லா இடமும் நடக்க போது அதுக்குள்ள காச சேர்த்திட்டு எல்லாரும் ஓடி தப்புகப்பா

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாத்தின் தொடக்கமும் எதேன்சிலிருந்துதானாம் ஆரம்பிக்கின்றது" அந்நாளை இனிதே எதிர்பார்க்கிறேன். என்னையும் சேர்த்து நாய் வண்டிலில் ஏத்தி அனுப்பும்நாள் தமிழனின் இரண்டாவது யுகப்புரட்சிக்கான நாளாகும்.

Don't worry இது தான் கொஞ்ச நாள்ல அமேரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா என்று எல்லா இடமும் நடக்க போது அதுக்குள்ள காச சேர்த்திட்டு எல்லாரும் ஓடி தப்புகப்பா

எங்க ஓடுறது? கோத்தபாய காய்ச்சி எடுத்துவிடுவான்!

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா நீ தான் எங்க ஆத்தான்னு சொல்லி தானே இப்போ எல்லாரும் அங்க போறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா நீ தான் எங்க ஆத்தான்னு சொல்லி தானே இப்போ எல்லாரும் அங்க போறாங்க

:D :D :D

[size=4]உலக பொருளாதாரம் மேலும் சரியும் இல்லை பெரிதாக வளர்சிகளை காணாது. இதுவே அடுத்த பத்து வருடங்களுக்கான நிலைமை.[/size]

[size=4]எனவே ஒவ்வொரு நாட்டுக்காரனும் 'வெள்ளையர்கள் அல்லாதவர்கள்' மீதி ஏதோ ஒருவழியில் இனப்பாகுபாட்டை காட்டுவார்கள். [/size]

[size=4]இங்கே அதிகம் பாதிக்கப்படப்போவது, எமது அடுத்த தலைமுறை. [/size]

[size=4]"அப்பா!, ஏன் இங்கே ஓடி வந்தாய் உன் தாய் நாட்டை விட்டு?" எனக்கேட்கும் பிள்ளைகளும் இருப்பார்கள்.[/size]

[size=4]அவுசில் மருத்துவப்படிப்பில் திறமை அடிப்படையில் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வந்தனர். ஆனால் 'வெள்ளை தோல் நிறத்தவர்கள்' குறைவதை அவதானித்தவர்கள் தற்பொழுது 'நேர்முக பரீட்சையை' அறிமுகப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.