Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான்: விமானப்படைத் தளத்தினுள் தீவிரவாதிகள் ஊடுருவல் - சண்டை தொடர்கிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pakistan-16812-150.jpg

[size=4]பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானப்படைத்தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மின்காஸ் விமானப்படைத்தளத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை அடுத்து இந்தச் சண்டை மூண்டுள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர்....![/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பாகிஸ்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஆயுதபாணிகள் தாக்குதல்[/size]

[size=2]

[size=4]air(3).jpg

பாகிஸ்தானிலுள்ள விமானப்படை தளமொன்றின் மீது ஆயுதபாணிகள் இன்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதலில் 10 பேர் பலியாகியள்ளனர்.

கம்ரா நகரிலுள்ள மின்ஹாஸ் விமானப்படைத் தளத்தின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் பலியானதுடன் விமானமொன்றும் சேதமடைந்துள்ளது. தாக்குதல் நடத்திய ஆயுதபாணிகள் 9 பேரும் உயிரிழந்தனர்.

ஜே.எவ். -17 ரக யுத்த விமானங்கள் உட்பட 30 விமானங்கள் அப்படைத்தளத்தில் நிறுத்திவைக்கப்ட்டிருந்தன.

தாக்குதல் நடத்தியவர்கள் எவ்வாறு படைத்தளத்தின் உள்ளே நுழைந்தார்கள் என்பது தெரியவில்லை. இவர்களில் நால்வர் படையினரின் சீருடையுடன் காணப்பட்டனர்.

அதிகாலை 2.30 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றது. இது ரமழான் மாதமாகையால் அவ்வேளையில் சிப்பாய்கள் பலர், காலை உணவுக்காகவும் தொழுகைக்காகவும் விழித்திருப்பார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இப்படைத்தளம் ஏற்கெனவே இரு தடவை தாக்கப்பட்ட நிலையில் புதிய தாக்குதல் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இம்முகாம் மீண்டும் பாகிஸ்தான் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தாக்குதல் இடம்பெற்று சுமார் 10 மணித்தியாலங்களின்பின் பாகிஸ்தான் விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

air3(8).jpg[/size][/size][size=2]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/46764-2012-08-16-07-13-52.html[/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பாக். விமான படை தளம் மீது தாக்குதல்-8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை-விமானங்களை கடத்த திட்டம்?[/size]

[size=3][size=4]இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களில் ஒன்றான காம்ரா படை தளம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து விமானப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் படைத்தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.[/size][/size]

[size=3][size=4]பாகிஸ்தான் நாட்டின் முக்கிய விமானப் படை தளங்களில் ஒன்று காம்ரா தளம். இது தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தளத்தைக் கைப்பற்ற கடந்த பல ஆண்டுகளாகவே தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தும் முக்கிய இலக்காக இத்தளம் இருந்து வருகிறது. காம்ரா தளத்தில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதுதான் தீவிரவாதிகளின் இலக்குக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் மிராஜ் போன்ற போர் விமானங்களை கடத்திச் செல்லவும் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=3][size=4]இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினரைப் போல் சீருடையணிந்திருந்த தீவிரவாதிகள் 10 பேர் காம்ரா தளத்துக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தினர் .இதையடுத்து படைத்தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையேயான மோதல் சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.[/size][/size]

[size=3][size=4]மோதலின் முடிவில் 8 தீவிரவாதிகளும் 2 படையினரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தீவிரவாதிகள் தப்பியோடியது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.[/size][/size]

[size=3][size=4]சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்திருந்தார். கயானியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் காம்ரா வான்படை தளத்தில் அணு ஆயுதம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]http://tamil.oneindi...led-159716.html[/size][/size]

Edited by தமிழரசு

[size=4]நேற்றுத்தான் அமெரிக்க மீண்டும் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை பற்றியும் அவை தீவிரவாதிகளின் கைகளில் போய்விடலாம் எனவும் கூறியிருந்தது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. [/size]

இந்த தாக்குதல் பின்னணியில் இந்தியா இருக்கலாம் :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஏதோ கூட்டுச்சதி போலைத்தான் இருக்கு.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரமழான் மாதத்தில்... முஸ்லீம்கள் இரவில் உணவு அருந்தவும், மற்ற... விளையாட்டுக்கும் விழித்திருப்பார்கள்.

இந்த நேரத்தை... தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததை பார்க்க இந்தியா, அல்லது அமெரிக்காவின் வேலையாக இருக்கலாம்.

இந்தத் தாக்குதலை, பட்டப்பகலில் நிகழ்த்தியிருந்தால்.... எல்லாப் பாகிஸ்தானியும் குறட்டை விட்டுத் தூங்கும் நேரமாதலால்.. தாக்குதல் வெற்றியளித்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இருந்தால் உலகளாவிய ரீதியில் மக்களுக்கு மிக பாரிய அளவிலான அச்சுறுத்தல் ஏற்படும் இதை தவிர்க்கவேண்டுமானால் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முற்று முழுதாக இல்லாது ஒழிக்கப்படவேண்டும்.

ரமழான் மாதத்தில்... முஸ்லீம்கள் இரவில் உணவு அருந்தவும், மற்ற... விளையாட்டுக்கும் விழித்திருப்பார்கள்.

இந்த நேரத்தை... தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததை பார்க்க இந்தியா, அல்லது அமெரிக்காவின் வேலையாக இருக்கலாம்.

இந்தத் தாக்குதலை, பட்டப்பகலில் நிகழ்த்தியிருந்தால்.... எல்லாப் பாகிஸ்தானியும் குறட்டை விட்டுத் தூங்கும் நேரமாதலால்.. தாக்குதல் வெற்றியளித்திருக்கும்.

எமக்கென்று நாடோ ஒன்று கிடைத்தால் எங்கட தமிழ் சிறியை புலனாய்வு தாக்குதல் தளபதியாக நியமிக்கவேண்டும் அவரிடம் நல்ல திறமை உள்ளது :D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.