Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன கூறுகிறார் மகிந்த:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]mahintha07_CI.jpg

[size=4]பயங்கரவாதம் நிறுத்தப்பட்ட போதும் நமது செயல்பாடுகள் நிறுத்தப்பட முடியாதது. வட்டுக்கோட்டைத் தனிநாடு கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]நாட்டின் பாதுகாப்புக்கும் செயற்பாட்டுக்கும் நாம் செய்ய வேண்டியது பெருமளவு உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தனி இராச்சியத்துக்குப் பலம் சேர்க்க முயல்வோர் விடயத்தில் படையினர் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் தெளிவுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் வலியுறுத்தினார்.[/size]

[size=4]அண்மையில் நடந்த ஈழக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் மாநாடு பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி; அந்த மாநாட்டின் பின்னணி தனியான ஈழ இராச்சியக் கொள்கையே எனவும் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் சகலரும் தெளிவுபெற்றிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.[/size]

[size=4]'கெமுனு சேவா' படையணிக்கு வர்ணம் கையளிக்கும் வைபவம் நேற்று இரத்தினபுரி குருவிட்ட படை முகாமில் நடைபெற்றது. அமைச்சர்கள், ராஜதந்திரிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, முப்படைத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, மனித உயிர்களைப் பாதுகாப்பதையே புத்த சாசனமும் மதமும் வலியுறுத்துகின்றன.[/size]

[size=4]மனிதனின் நல்வாழ்வு, கருணை என்பன இதன் அடிப்படை. அதனால் தான் நாம் எதிர்கொண்ட எதிரிகளின் நல்லவைகளைக் கூட நமது போர் சம்பிரதாய ங்களாக நாம் கொண்டிருந்தோம்.[/size]

[size=4]நாட்டை ஒன்றிணைப்பதற்காக நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் ஞாபகங்கள் பல ஆயிரமாண்டுகள் எமது மனங்களில் நிலைத்திருக்கும். எதிரி எம்மீது எத்தகைய குரோதங்களைக் கொண்டிருந்த போதும் எமது உயிர்களைப் பலிகொண்ட போதும் நாம் எதிரிகளையும் அந்த மக்களையும் குரோதமாக நோக்கவில்லை.[/size]

[size=4]அத்தகைய கொள்கையொன்று எம்மிடம் இருந்தது. அன்று துட்டகைமுனு அரசர் எமக்குத் தந்த முன்னுதாரணம் அது. இயல்பாக படை வீரர்கள் யுத்தக் களத்தில் செயற்படுவது போலன்றி எமது படையினர் வித்தியாசமான முறையில் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் மனித உரிமைக் கொள்கையையும் அவர்கள் ஏந்தி செயற்பட்டனர். மனதில் மனித உரிமையைச் சுமந்து அதனை உணவுப் பொட்டலமாக வடக்கு மக்களுக்கு வழங்கினர்.[/size]

[size=4]ஜயஸ்ரீ மஹா போதி விகாரை, தலதாமாளிகை, மடுதேவாலயம், காத்தான்குடிப் பள்ளி வாசல்கள் இப்போது பாதுகாக்கப்பட்டு பக்தர்கள் சுதந்திரமாக வழிபட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]21,000 க்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களும் தற்போது படையினரைப் போல பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது படையினரின் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு.[/size]

[size=4]அது மட்டுமன்றி வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இப்போது பாரிய அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுவதும் படையினரின் அளப்பரிய பங்களிப்பால் தான். இன்று வடக்கில் 80 வீத இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களைப் போன்றே சூழலையும் பாதுகாத்துக் கட்டியெழுப்ப முடிந்துள்ளமைக்குக் காரணம் படையினர் நாட்டின் மீது கொண்ட எதிர்பார்ப்பு தான்.[/size]

[size=4]யுத்தத்தின் போதும் அதற்குப் பின்ன ருமான உங்கள் சேவை மிகவும் கஷ்ட மானது. எனினும் உங்கள் அர்ப்பணிப் பினால் தான் நாட்டைப் பாதுகாக்க முடிந்துள்ளது. பயங்கரவாதம் நிறுத்தப்பட்டுவிட்டது என எமது செயற்பாடுகளை நாம் நிறுத்திவிட முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கும் நாட்டின் செயற்பாட்டிற்கும் இன்னும் பலதை மேற்கொள்ள வேண்டியுள்ளது.[/size]

[size=4]நாற்பது வருடங்களுக்கு முன் வட்டுக்கோட்டையில் தனி நாடு யோசனை முன்வைக்கப்பட்டது. அதேபோன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதற்குத் துணை போகின்ற மாநாடு நடத்தப்பட்டு யோசனைகள் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.[/size]

[size=4]இந்த யோசனைகளின் பின்னணியில் இருப்பது என்னவென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியான இராஜ்ஜியமே அதன் இலக்கு. நாட்டில் அனைவரும் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.[/size]

[size=4]எம்மத்தியில் உள்ள ஒற்றுமையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கின்ற செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. ஈழம் கோருபவர்களின் தந்திரமான செயல்களே அவை. நாட்டின் மீதான எமது உணர்வை அவர்கள் இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். அதனால் பிறந்த தாய்நாட்டை விமர்சிக்க பலர் தம்மைப் பழக்கிக் கொண்டுள்ளனர்.[/size]

[size=4]கடந்த காலங்களில் ஈழத்தை ஆதரிக்கும் இத்தகைய மாநாடுகளுக்குப் போன ஒரு கட்சித் தலைவரும் கூட இந்தியாவை விமர்சித்தார். இலங்கையில் ஈழம் அமைக்க நினைத்த அவர்கள் அத்தோடு அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டனர். இது தான் உலகின் இன்றைய நிலை என்பதை நாம் உணர வேண்டும்.[/size]

[size=4]வேறு நாடுகளில் ஈழம் உருவாக்கப் பட்டால் பரவாயில்லை. தமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.[/size]

[size=4]அதேபோன்று நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் தமது நாட்டைப் பற்றி பிற நாடுகளில் விமர்சிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. ஈழம் கோருபவர்கள் எம்மிடம் எதிர்பார்ப்பதை நாமே செய்து கொடுக்கக் கூடாது. படையினரைப் போலவே முழு நாட்டு மக்களும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.[/size]

[size=4]எம்மிடம் உலகின் கவனத்தைத் திருப்பிய படையினர் உள்ளனர். பயிற்சிகளைப் போன்றே அறிவிலும் முதிர்ந்தவர்கள். எதிர்காலத்திலும் அவர்களுக்குத் தேவையான சகலதும் அரசினால் பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

[size=4]ஜனநாயாக ரீதியாக செய்யும் அரிசயல் போராட்டங்களை இராணுவத்தை வைத்தும் அதன் உதவியுடன் குடியேற்றங்களை நிறுவியும் இல்லாமல் செய்யவே சிங்களம் விரும்புகின்றது.[/size]

வேறு நாடுகளில் ஈழம் உருவாக்கப் பட்டால் பரவாயில்லை. தமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.

[size=4]இந்த கூற்று மூலம் இந்தியா மீது சாடியுள்ளார். ஆனால், தமிழகம் என்ற மாநிலம் கொண்டுள்ள உரிமைகளில் பத்து வீதம் கூட ஈழத்தமிழர்களுக்கு இல்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் மனித உரிமைக் கொள்கையையும் அவர்கள் ஏந்தி செயற்பட்டனர்

பச்சை பொய் சொல்லுகிரானே .....தெய்யனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாடுகளில் ஈழம் உருவாக்கப் பட்டால் பரவாயில்லை. தமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.

நாங்கள் வேறு நாட்டவர்கள் இல்லையே எமது தாயகத்தைதானே நாம் கேட்கின்றோம் சிறிலங்கா என்கின்ற சிங்கள தேசத்தில் ஆளும் உரிமை உங்களுக்கு எவ்வளவு உள்ளதோ அதே அளவு ஆளும் உரிமை எங்களுக்கும் ஈழத்தில் ஆள்வதற்கு எமக்கும் உள்ளது என்பதினை உணர்ந்து கொள்ளவேண்டும் சிங்களம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.