Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது இனத்தை கொண்ட போர்குற்றவளிகளே!! யார் பயங்கரவதி ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுப்பியவர்: தமிழவன்

Wednesday, 03 May 2006

சிங்கள அரசின் நயவஞ்சகப் போக்கிற்குத் தமிழகத்தின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் மே 3ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு இலங்கை துணைத்தூதுவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கம் போல் தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது.

தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஊர்வலமாக இலங்கைத் துணை தூதுவர் அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட 500க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்

பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்

கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

வே. ஆனைமுத்து, தலைவர், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி

மணியரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தியாகு, தமிழ் தமிழர் இயக்கம்

பொழிலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

இராசேந்திர சோழன், தமிழ்த் தேச மார்க்சிய கட்சி

த. சுந்தரராசன், தலைநிகர் தமிழ்ச் சங்கம்

ஓவியர் வீர. சந்தானம்

திருச்சி சௌந்தரராசன்

பத்மநாபன், உலகத் தமிழர் பேரமைப்பு

பொடா சாகுல் அமீது, தமிழ் முழக்கம்

புலவர் இறைக்குருவனார்

மா. செ. தமிழ்மணி

புலவர் மதிவாணன், உலகத் தமிழர் மய்யம்

முனைவர் தமிழப்பன்

லோகு. அய்யப்பன், புதுவை பெரியார் திராவிடர் கழகம்

ஆகியோர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக செய்திகள் எதிர் பார்க்கப்படுகின்றன..

ஆதர இணைப்பு:http://worldtamilpress.com/index.php?optio...d=359&Itemid=26

எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிக்கும் வைகோ இதுவரை சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்காக எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லையே ஏன்?

கண்டனத்தை விடுங்கள்.... உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கவில்லையே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

காப்பில கிடா வெட்டாமல் பொறும்,, ஆடு அறுக்கமுதல்........................ :evil: :evil: :evil:

டன்,

சீரியஸாக சொல்லுகிறேன்.... தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றால் மட்டுமே வைகோ உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்.... அதிமுக ஆட்சி அமைத்தால் அப்படியே அடக்கி வாசிக்க ஆரம்பித்து விடுவார்.... மீண்டும் அதிமுக இவரைத் தூக்கி வெளியே எறிந்தபின்பு தான் "ஈழத்தமிழர், தொப்புள் கொடி உறவு" என்று பழைய பல்லவியை பாடுவார்....

தமிழ்நாட்டில் இருப்பவன் நான்.... எனக்குத் தெரியாதா எங்க ஊர் தலைவரைப் பற்றி......

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஜயாவை விடுதலை செய்து விட்டார்களா? ஆர்பாட்டத்துக்கு கூட ஒரு ஜனநாயக நாட்டில் இடமில்லையா?? :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசைக் கண்டித்து சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள முப்படைகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னையில் உள்ள சிங்கள தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 10.30 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் ஒன்றுதிரண்டனர். அங்கிருந்து சிங்களத் தூதரகம் நோக்கி ஊர்வலமாகப் புறப்படத் தயாராகினர்.

ஆனால் ஊர்வலத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த உயர் காவல்துறை அதிகாரிகளுடன் விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வாதிட்டார்.

எங்களது ஜனநாயக உரிமைகளை மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். கைது செய்ய நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

"கைது செய்யப்படக் கூடும் என்று தயாராகவே வந்துள்ளோம். கைது செய்து கொள்ளுங்கள்" என்று நெடுமாறன் கூற அங்கிருந்து தமிழின உணர்வாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக பழ. நெடுமாறன் பேசியதாவது:

இலங்கை அமைதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நோர்வேத் தரப்பினர் சிறிலங்காவுக்குச் சென்று சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் இந்திய அரசிடம் விளக்கம் சொல்லுகிறது.

சிங்கள அரசாங்கமும் அங்குள்ள நிலைமைகளை இந்திய அரசாங்கத்திடம் சொல்ல இங்கே வருகிறார்கள்.

ஆனால் தமிழர் தரப்பு நியாயத்தை இந்திய அரசு கேட்க மறுத்து வருகிறது. விடுதலைப் புலிகளை அழைப்பதில் இந்திய அரசுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களே..அவர்களை அழைத்துப் பேச வேண்டாமா? இரண்டாண்டு காலமாக இந்திய அரசு அனுமதி மறுப்பது ஏன்?

இலங்கையிலே தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் எதுவித எதிர்ப்பும் வராது என்று எண்ணி சிங்கள முப்படைகளும் திடீரென்று தமிழர்கள் மீது குண்டு வீசி கொன்றுள்ளது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிங்கள அரசு நினைப்பது போல் இங்கு நடக்காது. இங்கே உணர்வுள்ள தமிழர்கள் இருக்கிறோம். சிங்கள அரசு தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சிங்கள தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எமது ஜனநாயக உரிமைகள இந்த அரசாங்கம் பறித்துள்ளது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒவ்வொரு தமிழனும் கொதித்தெழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் முதல் கட்டம்தான் இந்த ஆர்ப்பாட்டம். இனிவரும் நாட்களில் இத்தகைய போராட்டங்கள் தொடரும் என்றார் பழ. நெடுமாறன்.

இதையடுத்து வள்ளுவர் கோட்டம் முன்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

கொல்லாதே! ஈழத் தமிழரை கொல்லாதே!

கொல்லாதே! ஈழத் தமிழரை கொல்லாதே!

முப்படைகள் தாக்குதே!

குண்டுமாரி பொழியுதே!

தமிழினமே அழியுதே!

மக்களெல்லாம் சாகுதே!

உறக்கமா உறக்கமா?

தமிழகமே உறக்கமா?

ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

சிங்களப் போர்வெறியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

வெல்லட்டும் வெல்லட்டும்!

தமிழீழம் வெல்லட்டும்!!

ஆதரிப்போம்! ஆதரிப்போம்!

தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்போம்!

ஆதரிப்போம்! ஆதரிப்போம்!

விடுதலைப் போரை ஆதரிப்போம்!

கிளர்ந்தெழுவோம்!

கிளர்ந்தெழுதுவோம்!

தமிழீழ மக்களைக் காப்பதற்கு

கிளர்ந்தெழுவோம்!

மலரட்டும் மலரட்டும்!

தமிழீழம் மலரட்டும்!

இந்திய அரசே! இந்திய அரசே!

துணை போகாதே!துணை போகாதே!

சிங்கள வெறிக்குத் துணை போகாதே!

ஒழியட்டும் ஒழியட்டும்

சிங்கள இனவெறி ஒழியட்டும்

தாக்காதே! தாக்காதே!

எங்கள்

ஈழத் தமிழனைத் தாக்காதே!

வென்றதில்லை வென்றதில்லை!

அடக்குமுறைகள் வென்றதில்லை!

தோற்றதில்லை தோற்றதில்லை!

விடுதலைப் போராட்டங்கள் தோற்றதில்லை!

சிங்கள இனவெறி அரசே!

சிங்கள இனவெறி அரசே!

வெளியேறு!வெளியேறு!

தமிழீழத்தை விட்டு வெளியேறு!!

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் செயலாளர் பொழிலன், புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், ராஜீவ் வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளவனின் தாயார் அற்புதம் குயில்தாசன் அம்மையார், தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சுந்தரராசன், ஓவியர் வீரசந்தனம், பி.வி. பக்தவத்சலம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருச்சி சௌந்திரராஜன், உலகத் தமிழர் பேரமைப்பின் பத்மநாபன், தமிழ்த் தேச மார்க்சிய கட்சியின் ராசேந்திர சோழன், பொடா சாகுல் அமீது, புலவர் இறைக்குருவனார், மா.செ.தமிழ்மணி, உலகத் தமிழர் மைய நிர்வாகி மதிவாணன், முனைவர் தமிழப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர்.

-புதினம்

http://www.eelampage.com/?cn=25961

நெடுமாறன் ஜயாவை விடுதலை செய்து விட்டார்களா? ஆர்பாட்டத்துக்கு கூட ஒரு ஜனநாயக நாட்டில் இடமில்லையா?? :roll: :roll:

தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறது... எந்த நேரத்தில் வன்முறை வெடிக்குமோ என்ற நிலையில் எந்தவித ஆர்ப்பாட்டத்துக்கும் அனுமதி கிடைக்காது தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தகவலுக்கு

ஏன் தமிழ் நாட்டில் பயங்கிரவாத்ம் இருக்கிரதோ?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.