Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி சேர் நடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக்கழகம் உட்பட பல அமைப்புகளோடு இணைந்து செயற்படுகிறது. சிகிச்சை அளித்தல், ஆராய்ச்சி, கற்பித்தல், கொள்கை உருவாக்கல் மற்றும் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற உதவுதல் போன்ற பணிகள் காம்எச் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதிசேர் நடை தொடக்க நிகழ்வில் பல குமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இசுகாபரோ ஏயின் கோட் எம் பி பி திருமதி சூ வொங், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மதிப்புக்குரிய பிராட் டூகிட் மற்றும் காம்எச் அமைப்பின் உள்ளூர் நலம்பேணற் திட்ட இயக்குனர் திரு அக்வாற்று கென்றி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுக் கனடியத் தமிழர் பேரவையின் இவ் அரிய முன்னெடுப்பையும் கனடியத் தமிழரின் உயரிய பங்களிப்பையும் பாராட்டி வாழ்த்தினர்.

இவ்வாண்டின் நிதிசேர் நடையானது செப்டெம்பர் மாதம் 16ஆம் நாள் ஞாயிறு காலை 9:00 மணிக்கு இசுகாபரோவில் அமைந்துள்ள தொம்சன் பூங்காவில் இடம்பெறும். ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வாக இது அமைகிறது. இதுபோன்ற தமிழர் குமுக நிகழ்வுகளில் இந்நிகழ்வே மிகப்பெரிய நிகழ்வாகும். இந் நிகழ்வின் பக்க நிகழ்வுகளாக மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் தொடர்பாக காம்எச் உடன் இணைந்து கனடியத் தமிழர் பேரவை பல கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ்க் குமுகத்துக்காய் நடத்தவுள்ளது.

கனடியத் தமிழ்க் குமுகத்தின் பலத்த ஆதரவுடன் மற்றுமொரு வெற்றிகரமான நிதி சேர் நடை நிகழ்வை நடாத்தி முடிக்கக் கனடியத் தமிழர் பேரவை தயாராகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம் தூயவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக்கழகம் உட்பட பல அமைப்புகளோடு இணைந்து செயற்படுகிறது. சிகிச்சை அளித்தல், ஆராய்ச்சி, கற்பித்தல், கொள்கை உருவாக்கல் மற்றும் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற உதவுதல் போன்ற பணிகள் காம்எச் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதிசேர் நடை தொடக்க நிகழ்வில் பல குமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இசுகாபரோ ஏயின் கோட் எம் பி பி திருமதி சூ வொங், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மதிப்புக்குரிய பிராட் டூகிட் மற்றும் காம்எச் அமைப்பின் உள்ளூர் நலம்பேணற் திட்ட இயக்குனர் திரு அக்வாற்று கென்றி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுக் கனடியத் தமிழர் பேரவையின் இவ் அரிய முன்னெடுப்பையும் கனடியத் தமிழரின் உயரிய பங்களிப்பையும் பாராட்டி வாழ்த்தினர்.

இவ்வாண்டின் நிதிசேர் நடையானது செப்டெம்பர் மாதம் 16ஆம் நாள் ஞாயிறு காலை 9:00 மணிக்கு இசுகாபரோவில் அமைந்துள்ள தொம்சன் பூங்காவில் இடம்பெறும். ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வாக இது அமைகிறது. இதுபோன்ற தமிழர் குமுக நிகழ்வுகளில் இந்நிகழ்வே மிகப்பெரிய நிகழ்வாகும். இந் நிகழ்வின் பக்க நிகழ்வுகளாக மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் தொடர்பாக காம்எச் உடன் இணைந்து கனடியத் தமிழர் பேரவை பல கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ்க் குமுகத்துக்காய் நடத்தவுள்ளது.

கனடியத் தமிழ்க் குமுகத்தின் பலத்த ஆதரவுடன் மற்றுமொரு வெற்றிகரமான நிதி சேர் நடை நிகழ்வை நடாத்தி முடிக்கக் கனடியத் தமிழர் பேரவை தயாராகியுள்ளது.

மிக உடனடி தேவைகளுடன் ஈழத்தில் துடித்துக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு இந்த நிதி போய்ச்சேர்ந்தால் எவ்வளவு நல்லது.. :(

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிதியைப் பெற்றுக் கொண்டு தான் சர்வதேச மன்னிப்புச் சபை சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக சிறிலங்கா அரசு வானுக்கும், மண்ணுக்கும் குதித்துக் கொண்டிருந்தது. ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்த நிதி தொடர்பாக சிறிலங்கா அரசு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. உண்மையில் இந்த நிதியால் தான் அது நடைபெறவில்லை என்ற விடயம் அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் மனிதஉரிமை அமைப்புக்களோடு ஒரு சகஜமான தொடர்பினையும், நெருக்கத்தையும் பேண இப்படியான நடவடிக்கைகள் உதவும்.

இந்த நிதியானது, களியாட்டத்துக்குப் பயன்படவில்லை. அல்லது சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பிரயாணத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை. அல்லது சொந்த விருப்பு, வெறுப்புக்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை.

கனேடியத் தமிழர்கள் தங்களின் இருப்பினையும், அவர்களின் நல்ல எண்ணத்தையும் வெளிப்படுத்தும் விதமான சிந்தனையோடும் தான் இது நடைபெறுவதாக நம்புகின்றேன். யாருமே இப்படியான விடயங்களில் ஈடுபடமாட்டீர்கள். ஆனால் ஏதாவது செய்தால், அதற்கு, இதற்கு எனக் கண்ணீர் வசனத்தோடு வந்து விடுவீர்கள்.... எப்படி முடிகின்றது...

----------------

நான் அறிந்தவரை கனேடியத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களாகட்டும், கனேடியத் தேசிய அவை உறுப்பினர்களும் சரி தங்களால் முடிந்தளவு குழந்தைகளைப் பொறுப்பெடுத்து பணவுதவி மற்றும் இதர சேவைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

---------------------------

நான் எந்த அமைப்பிலும் உறுப்பினர் கிடையாது என்பதால் மேலதிக விபரங்களைப் பெற்று பங்கெடுத்துக் கொள்வதற்குக் குறித்த அமைப்பினரிடம் தான் தொடர்பு கொண்டு பங்களிப்பினை வழங்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாடுகளில் வேறு இடங்களில் வசிப்பவர்கள், இதனுாடாகப் பங்களிக்க முடியும்...

http://camh.kintera.org/faf/home/default.asp?ievent=1025483

சென்ற வருடம் இசைக்கலைஞன் பங்களிப்புச் செய்திருந்தர். உண்மையில் அவருக்கு நன்றிகள்....

பகிர்விற்கு நன்றி தூயவன்!

Edited by குட்டி

----------------

நான் அறிந்தவரை கனேடியத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களாகட்டும், கனேடியத் தேசிய அவை உறுப்பினர்களும் சரி தங்களால் முடிந்தளவு குழந்தைகளைப் பொறுப்பெடுத்து பணவுதவி மற்றும் இதர சேவைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

---------------------------

நான் எந்த அமைப்பிலும் உறுப்பினர் கிடையாது என்பதால் மேலதிக விபரங்களைப் பெற்று பங்கெடுத்துக் கொள்வதற்குக் குறித்த அமைப்பினரிடம் தான் தொடர்பு கொண்டு பங்களிப்பினை வழங்க வேண்டும்.

[size=4]நான் இந்த அமைப்பில் நீண்டகாலம் மாதம் பணம் செலுத்தும் ஒரு அங்கத்தவர். [/size]

[size=1]

[size=4]இந்த முயற்சியை ஆதரிப்பவன், சில முயற்சிகள் பிடிப்பதில்லை. இருந்தாலும் அதன் உள்ளே இருந்து அதன் ஒட்டு மொத்த நடவடிக்கைகளை அதன் குறை நிறைகளை முன்வைப்பவன்.[/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நான் இந்த அமைப்பில் நீண்டகாலம் மாதம் பணம் செலுத்தும் ஒரு அங்கத்தவர். [/size]

[size=1]

[size=4]இந்த முயற்சியை ஆதரிப்பவன், சில முயற்சிகள் பிடிப்பதில்லை. இருந்தாலும் அதன் உள்ளே இருந்து அதன் ஒட்டு மொத்த நடவடிக்கைகளை அதன் குறை நிறைகளை முன்வைப்பவன்.[/size][/size]

2009ம் ஆண்டு வரை ஒற்றுமையாக இருந்து விட்டு, எல்லோரும் தனித்தனி வழிகளைத் தேட முற்பட்டதால் தான் எந்த அமைப்பிலும் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை.

நான் நினைக்கின்றேன், அக்காலத்தில் சில நிகழ்வுகளைக் காங்கிரஸ் அலுவலகத்தை பலரும் பாவித்துக் கொண்டிருந்தார்கள். வேறுபாடுகளைச் செயற்பாடுகளில் மட்டுமே அவதானிக்க முடிந்ததே தவிர, தனிப்பட்டரீதியில் இருக்கவில்லை.

ஆனால் இன்று ....

காங்கிரஸ்சின் தமிழ் உணர்வுக்கு கனேடியத்தன்மை இடையிடையே தடையாக நிற்பது தான் எனக்குப் பிடிக்காத செயல். தவிர, அனைத்து அமைப்புக்களுக்குள்ள குணமான போட்டியுணர்வு இவர்களுக்கும் இருப்பதாகவே நினைக்கின்றேன்....

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.