Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரசிற்குக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்குமா?

Featured Replies

கிழக்குத் தேர்தல் முடிந்த பின்னர் ஏற்பட்ட இழுபறி நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து விடக் கூடாது என்பதற்காக அரசாங்கமும் அரசாங்கம் ஆட்சியமைத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எத்தகைய தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றன.

இதன் அறிகுறி தான் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசிற்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்ற இரு தரப்பினரதும் அறிவிப்பாகும்.

இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தயாராகி விட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டுத் தாவி எதிர்க்கட்சியில் அமர்நது கொள்ள இலகுவில் தயாராகாது என்பது பலருக்கும் தெரிந்த விடயம். காரணம் இலங்கைத் தொழிலார் காங்கிரசைப் போலவே மக்களின் வாக்குக்களை கவர்வதற்காக அரச எதிர்ப்பைப் பிரசாரமாக்குவதும் பின்னர் வெற்றி பெற்றதும் மந்திரிப் பதவிகளுக்காக ஒட்டிக் கெர்வதும்முஸ்லிம் காங்கிரசிற்குக் கை வந்த கலை. அந்த மந்திரி சுகம் இல்லாமல் ஹக்கீம் உள்ளிட்ட தலைவர்களால் வாழ்வது கொஞ்சம் கஸ்டமான விடயமே.

இந்த நிலையில் தான் தாம் இரு தரப்போடும் பேசி இறுதி முடிவுக்கு வரப் போவதான நாடகத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆடிக் கொண்டிருக்கிறது.

தாம் கடைசியில் சங்கமிக்கப் போகும் இடம் எது என்பதை நன்றாக அறிந்திருந்தும் இந்த இருதரப்போடும் பேசுதல் என்ற நாடகத்திற்கான காரணம் அதிகமான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதைத் தவிர வேறோன்றும் இல்லை.

இதன் ஒரு கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து விட்டு அரசாங்கத்துடன் அமர்ந்திருந்து பேரம் பேசல்களைக் செய்து கொண்டிருந்திருக்கிறார் கக்கீம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து விடுவோம் என்று பூச்சாண்டி காட்டி அரசாங்கத்திடமிருந்து தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ளப்பார்க்கும் இவர்களின் நயவஞ்சகத் தனத்தினை முறியடிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காய் நகர்த்தல்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

இதன் முதற்கட்டமாக கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியாகச் செயற்படப் போவதான ஒரு பகிரங்க அறிக்கையை விடுவதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசுதலுக்கு சாவு மணியடிக்கலாம்.

வேறு வழியின்றி முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராகி வரும் மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் இந்தச் செய்தி தேனாமிர்தமாக இருக்கும். இது முதலமைச்சர் கனவுடன் இருக்கும் முஸ்லிம் காங்கிரசிற்கு ஆப்பாகவும் அமையலாம்.

ஏற்கனவே முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவிவழங்கப்படுவதற்கு சொந்தக் கட்சிக்குள்ளும் பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் பலமான எதிர்ப்புத் தோன்றியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தமது கட்சியைச் சார்ந்த அல்லது அதாவுல்லாவின் கட்சியைச் சார்ந்த அமீர் அலியை முதலமைச்சராக அறிவிக்க்க கூடிய ஏது நிலையை உருவாக்கலாம்.

இதனால் தமிழர் தரப்பிற்கு எந்த விதமான நன்மையும் இல்லை என்ற போதிலும் காத்திக்க வைத்து அநாகரிகமான முறைல்;ல தொலைபேசிகளைத் துண்டித்து நாடகமாடிய முஸ்லிம் காங்கிரசிற்கு தக்க பதிலடியாக இது அமையும்.

[size=5]இது எப்பவோ எதிர்பார்த்தது தானே[/size]

[size=5]அப்புறம் என்ன? கூத்தமைப்பு இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றதா? ..என்ன?[/size] :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மு.கா கை கழுவியது எப்படி? - சுரேஷ் விளக்கம்!

நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பதாக கூறி, இறுதி நேரத்தில் அநாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்... 'நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு கட்சியினருக்கும் ஏற்கனவே அறிவித்து அனுமதியும் பெற்றிருந்தோம். இந்நிலையில் நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தரவில்லை. எமது கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் - ரவூப் ஹக்கீமுக்கு பலமுறை தொடர்பை ஏற்படுத்தியபோதும் பதிலில்லை. ஒருகட்டத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தொடர்புக்கு பதிலளித்தார். எமது விடயம் தொடர்பாக அவருக்கு கூறியதும், தொலைபேசியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஹஸன் அலியிடம் கொடுத்தார்.

முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்புக்காக காத்திருப்பதாக சுமந்திரன் கூறினார். தாங்களும் ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும், அலரி மாளிகையில் ஹக்கீம் சந்திப்பொன்றில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை, தலைவர் வந்ததும் சொல்வதாக கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தொடர்பினை ஏற்படுத்த முயன்றபோது அனைவரது தொலைபேசிகளும் ஓஃப் செய்யப்பட்டிருந்தது.

எங்களுடனான சந்திப்பை அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் தவிர்த்திருக்கிறது. நாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்திருக்கலாம், ஆனால் எங்களை காத்திருக்க வைத்து அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் நடந்துகொண்டமை வருத்தமளிக்கிறது' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார்.

http://tamilleader.com/tamilleadernews/6153-2012-09-15-11-50-03.html

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து விடுவோம் என்று பூச்சாண்டி காட்டி அரசாங்கத்திடமிருந்து தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ளப்பார்க்கும் இவர்களின் நயவஞ்சகத் தனத்தினை முறியடிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காய் நகர்த்தல்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

கூட்டமைப்பு இதில் முயற்சிக்க கன தந்திரவழிகள் இல்லை.

கிழக்கு மாகாணத்தை கூட்டமைப்பு கையேற்க முயல்வது வெளிநாட்டு அப்பிபிராயங்களை பண்படுத்தி வளர்க்கவே. இந்த கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவியால் சம்பந்தரால் சிறு துரும்பு கூட எடுத்து தமிழ் மக்களுக்கு போடமுடியாது. எனவே அரசா எதிராளிகளா கிழக்கில் ஆட்சி அமைப்பார்கள் என்பதுதான் கேள்வி. ஆட்சி அமைத்தபின் மு.காவோ கூட்டமைப்போ கிழக்கில் எதுவும் செய்ய முடியாது. எனவே மு.காவுடன் கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை என்ற பெயர் வாங்கினால் மத்தியில் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நேரம் மிக்க நெருக்குவாரம் சந்திக்க வேண்டிவரும்.

தேசிய அரசாங்கம் சம்பந்தரரின் கண்டுபிடிப்பல்ல. இதை அரசு கட்சிகளுக்கு சொல்லவில்லை. இதை அவர்கள் கக்கீமை நாசம் செய்ய அளவாக வெளிவிடுகிரார்கள். சம்பந்தர் தான் கவனமில்லாமல் இதில் எதிர்வினைகள் ஏற்படுத்தினால் கக்கீமுடன் சேர்த்து தன்னையும் நாசம் செய்வார். இது அரசுக்கு போனஸ். தேசிய அரசு கக்கீம் மீது எய்த அம்பு. இதை சம்பந்தர் ஊடக கேள்வி பதில் நேரத்தில் தன மீது வாங்கி கொள்ளக்க்கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மணிவாசகன் கட்டுரைக்கு...

  • தொடங்கியவர்

கருத்துக்கள் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேட்டா அரசுக்கு ஆதரவழிச்சு Muslim காங்க்றேச்ச்க்கு ஆப்படிக்கலாம்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களின் உண்மையான தலைமை முஸ்லிம் காங்கிரஸ் இல்லை என்றும் முஸ்லிம்களுக்கான சரியான தலைமையை கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்கு காட்ட வேண்டும்.பதவி மோகம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கை சேர்ந்தவர் இல்லை என்றும் அவருக்கு கிழக்கை பிரநிதிப்படுத்த அருக்கதை இல்லை என்றும் கூட்டணி பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்.முஸ்லிம் காங்கிரசின் இரட்டை வேடங்களை சிங்கள மக்கள் அறியாமல் இல்லை.என்றாலும் கூட்டமைப்பு இவர்களின் முகமூடிகளை கிழிக்க தவறக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.