Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி, அமெரிக்கா பாராட்டு!

Featured Replies

[size=4]சில்லறை [/size]வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இதன் மூலம் மன்மோனுக்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு இருந்தாலும் சரிந்து கிடந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திட உதவும் என்றும் கூறியுள்ளது.

[size=3][size=4]சமீபகாலமாக அமெரிக்காவில் இருந்து வெளி வரும் பத்திரிகைகள் பிரதமர் மன்மோகன்சிங்கை வாய்மூடி மவுனி என்றும், லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த முடியாத கைப்பொம்மை என்று வர்ணித்து எழுதி வந்தது. ஆனால் நேற்றைய மத்திய அரசின் அந்நிய முதலீட்டு அனுமதி அறிவிப்புக்கு அமெரிக்க முன்னணி பத்திரிகைகள் மனதார பாராட்டியுள்ளன.

20 ஆண்டு காலத்தில் சாதனை: பிரபல நியூயார்க்டைம்ஸ் பத்திரிகையில்: இந்தியாவில் மந்தமாக இருந்த பொருளாதாரம் மெல்ல, மெல்ல வளர்ச்சி அடைய நல்லவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் இந்த எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. [/size][/size]

[size=3][size=4]உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கிட இது உதவும். பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியிருப்பது கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் இது பெரும் பொருளாதார சாதனை ஆகும். இதில் மத்திய அரசு மாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவியும். இவ்வாறு தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இதற்கிடையில் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்,[/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-111600520.html[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]நேற்றுவரை ஒரு கையாலாகாத அதிபர் என கண்டித்த அமெரிக்கா இன்று வாழ்த்தியுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]சிங்கும் சோனியாவும் மேற்கொண்டு வால்மாட்டில் கொள்வனவு செய்யலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சில்லரை வர்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி, அமெரிக்கா பாராட்டு!

இப்படி ஒரு தலைப்பை அகூதாவின் செய்தி இணைப்பில் கண்டு ஆச்சரியமடைந்தேன்..! :rolleyes:

சில்லறை.. வர்த்தகம்.. முழு தமிழ் கொலையா இருக்கே.. தலைப்பு..???! :unsure:

  • தொடங்கியவர்

இப்படி ஒரு தலைப்பை அகூதாவின் செய்தி இணைப்பில் கண்டு ஆச்சரியமடைந்தேன்..! :rolleyes:

சில்லறை.. வர்த்தகம்.. முழு தமிழ் கொலையா இருக்கே.. தலைப்பு..???! :unsure:

[size=4] :Dகொலைக்கு என்ன பிராயச்சித்தமோ சொல்லுங்கள் (திருத்திவிட்டேன், நன்றிகள்)[/size] :D

[size=4] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா. ஆனால் இன்னும் வர்தகம்.. வர்த்தகம் என்று திருத்துப்படல்லையே..??! :):rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]திருத்திவிட்டேன் நன்றிகள் :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிகள் வாறதால அது வாடிக்கையாளர்களுக்கு அனுகூலம் தானே

  • தொடங்கியவர்

போட்டிகள் வாறதால அது வாடிக்கையாளர்களுக்கு அனுகூலம் தானே

[size=4]உள்ளூர் சில்லறை வர்த்தம், அதில் வரும் இல்லாபத்தில் ஒரு பகுதி மேலை நாடுகளுக்கு சென்றுவிடும். [/size][size=1]

[size=4]வேலை வாய்ப்பும் குறையும், வரியும் குறையலாம். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால், விலைகள் ஆரம்பத்தில் குறைந்தாலும் பின்னர் கூடும் சந்தர்ப்பம் உண்டு, ஏனெனில் போட்டி போட ஒருவரும் இருக்க மாட்டார்கள். [/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]ஆதரவு வாபசாகும்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி மிரட்டல்[/size]

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை, எந்த சூழ்நிலையிலும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. டீசல் விலை உயர்வை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஆண்டுக்கு, 24 சமையல் காஸ் சிலிண்டர்களை, மானிய விலையில், பொதுமக்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும், என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இதைச் செய்யாவிட்டால், கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்றும், மிரட்டல் விடுத்துள்ளார்.

[size=3][size=4]டீசல் விலையை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி, கடந்த வியாழனன்று மத்திய அரசு உத்தரவிட்டது. அத்துடன், ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என, அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, சில்லரை வர்த்தகத்தில், 51 சதவீத அளவுக்கு, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் முடிவெடுத்தது. மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. டில்லி உட்பட, பல மாநிலங்களில், நேற்று எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில், இடதுசாரி கட்சிகள் சார்பில், பந்த் நடந்தது. [/size][/size]

[size=3][size=4]இந்நிலையில், பேஸ்புக் சமூக வலைதளத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது: சீர்திருத்தம், நாட்டுக்குத் தேவை தான். அதற்காக, எல்லாவற்றையும் விற்று விடக்கூடாது. அனைத்தையும் விற்க நான், ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். [size=5]மத்திய அரசில் இடம் பெற்றுள்ள, ஒரு பிரிவுக்கு வேண்டுமானால், இந்த கருத்தில் உடன்பாடு இருக்கலாம். ஒரு தலைப்பட்சமாக, மக்களுக்கு விரோதமாக எடுக்கப்படும் முடிவுகளால், பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ் அதிகரிக்கலாம். அது தற்காலிகமானதே. அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள், சாதாரண மக்களின் முதுகெலும்பை உடைப்பதாக இருக்கக் கூடாது[/size]. ஏழை மக்களின் நன்மைக்காகப் போராடுவதில், உறுதியாக இருக்கிறோம். அதற்காக உயிரை விடவும் தயார். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற, மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், பேரணி நடைபெற்றது. அதில், மம்தா பானர்ஜி பேசியதாவது: சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. டீசல் விலை உயர்வை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; அத்துடன் ஆண்டுக்கு, 24 சமையல் காஸ் சிலிண்டர்களை, பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். இதைச் செய்யவில்லை எனில், மத்திய அரசுக்கு எதிராக கடினமான முடிவுகளை எடுக்க, திரிணமுல் காங்கிரஸ் கட்சி தயங்காது. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.[/size][/size]

[size=3][size=4][size=5]சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.[/size] குஜராத் மாநிலம், பாவ் நகரில் நடந்த கூட்டத்தில், இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளிநாட்டவர்களுக்கான, சிங்கம் போல, பிரதமர் மன்மோகன் சிங் செயல்படுகிறார். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவால், எத்தனை இத்தாலிய வர்த்தகர்கள் பலன் அடையப் போகின்றனர் என்பதை, அறிந்து கொள்ள நாடு விரும்புகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இதற்கிடையில், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மூன்று நாளில், மத்திய அரசு, பல மக்கள் விரோத முடிவுகளை எடுத்துள்ளது. டீசல் விலை ஏற்றம், குடும்பங்களுக்கு வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைப்பு போன்ற நடவடிக்கையால், ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். பகுஜன் கட்சி நிறுவனர் கன்ஷிராமின் ஆறாவது ஆண்டு நினைவு தினம், அக்டோபர் 9ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதே நாளிலோ அல்லது மறுநாளிலோ, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மாயாவதி கூறினார்.[/size][/size]

[size=3][size=4]உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தால், மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை, சமாஜ்வாதி கட்சி வாபஸ் பெறுமா என்பது குறித்து, கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். நாட்டில் மதவாதக் கட்சிகள், ஆட்சிக்கு வராமல் தடுக்க, சமாஜ்வாதி கட்சி எப்போதும் ஆதரவு கொடுக்கும். அன்னிய முதலீட்டை கொண்டு வர வேண்டுமென்றால், மின் துறை, சாலைப் பணிகள் போன்ற துறைகளில் அனுமதிக்கலாம். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், சிறு வியாபாரிகளின் நிலை கேள்விக் குறியாகி விடும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.[/size][/size]

[size=3][size=4]வரும் 20ம் தேதி நாடு தழுவிய பந்த்: டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும், வரும் 20ல், நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூ., மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மதச் சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, பார்வர்ட் பிளாக் தலைவர் தேவபிரதா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.பி., தலைவர் சந்திரசூடன் ஆகிய தலைவர்கள், கையெழுத்திட்டுள்ள, கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான, மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, அனைத்து தரப்பினரும் இணைந்து, ஓரணியில் நின்று போராட வேண்டும். வரும் 20ல், அனைத்து கட்சிகள் சார்பில், நாடு தழுவிய பந்த் நடத்தப்படும். இதில், அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-025100046.html[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.