Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியிலிருந்து ஒரு மடல்

Featured Replies

அன்பிற்குரியவர்களுக்கு,

சிறிலங்கா அரசு வலிந்து முன்னெடுத்துள்ள போரிற்கு முகம்கொடுப்பதற்காக இங்கே மண்ணும் மக்களும் தயாராகிவருகின்றனர்.

இந்த வேளையிலே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எமது உறவுகள் சிரமேற்கொண்டு செய்யவேண்டிய தலையாய பணி ஒன்று மட்டுமே.

அதாவது எமது போராட்டத்தினது தார்மீக நிலை குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் புலத்திலே மிகவும் முனைப்போடு முன்னெடுக்கப் படவேண்டும்.

குறிப்பாக தற்போதைய நிலவரங்களின் உண்மைத்தன்மை அவற்றிற்கான மூலகாரணியான சிங்களத்தின் உண்மை முகம் என்பன சர்வதேசத்திலே அம்பலப்படுத்தப்படவேண்டும்.

உதாரணமாக இன்று (11-05-2006) எமது கடற்பரப்பிலே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின் பக்கச்சார்பான - உண்மையற்ற - தன்மையினை இங்கே குறிப்பிடலாம்.

மேற்படி அறிக்கையானது 25-04-2003 இலே இதே போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடுத்த அறிக்கைக்கு நேர்விரோதமான விடயத்தை உள்ளடக்கியிருப்பதனை நீங்கள் உலகிற்குச் சொல்லவேண்டும்.

2003 லே விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை அங்கீகரித்து 'அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான உரிமையை உடையவர்கள் ' என்று தெரிவித்த கண்காணிப்புக்குழுவானது இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலே 'விடுதலைப்புலிகளுக்கு கடலிலே இறங்குவதற்கு உரிமையில்லை. அது யுத்த நிறுத்த மீறல்' என்று சொல்லியிருக்கிறது.

மேலும் தமது கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பிற்குப் புலிகள் பெரும் அபாயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் சொல்லியிருக்கிறார்.

இது மிகவும் அபாயகரமான உள்நோக்கமுடைய கூற்று என்று எம்மால் கருதமுடியும்.

காரணம் எனக்குத் தெரிந்தவரையில் விடுதலைப்புலிகள் கடந்த மாதம் 18 ம் திகதியும் இம்மாதம் 10, 11 ஆகிய திகதிகளிலும் கண்காணிப்புக் குழுவினர் சிறிலங்கா கடற்படையினருடன் சேர்ந்து பயணிப்பதைத் தவிர்க்குமாறு தெளிவான வேண்டுகோள்களை எழுத்து மூலம் விடுத்திருந்தனர்.

அதற்கான தகுந்த காரணங்களையும் புலிகள் தெரியப்படுத்தியிருந்ததாக அறியமுடிகிறது.

அதாவது தொடர்ந்தும் கடற்புலிகள் மீதும் தமிழ் மீனவர்கள் மற்றும் கரையோரப்பகுதியில் உள்ள குடிமனைகள் மீதும் கடற்படை தாக்குதலை நடத்துகிறது. இதனை அனுமதிக்க முடியாது. இனிமேல் இவ்வாறு இவர்கள் தாக்கினால் கடற்புலிகளும் பதிலடி கொடுப்பார்கள். அவ்வேளை கடற்படைப் படகிலே கண்காணிப்புக் குழுவினர் இருப்பது பாதுகாப்பற்றது. இதனால் கடற்படைப் படகுகளிலே செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு உங்கள் கடற்கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் என்ற சாரப்படப் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

இதனை எல்லாம் உதாசீனப்படுத்தி கடற்படைக்கலத்திலே ஏறிச்சென்ற கண்காணிப்புக் குழுவினர் தமது பாதுகாப்பைப் புலிகள் கேள்விக்குறியாக்குவதாக இப்போது அறிக்கை விடுவது ஏன்?

இந்த விவகாரம் குறித்து விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் கடுமையான பதிற்குறியினைக் காட்டவிருப்பதாக அறியமுடிகிறது.

எனவே நண்பர்களே, இனிவரும் காலங்கள் மிகவும் சிக்கலானவையாக இருக்கப்போகின்றன.

சர்வதேச அரசுகள் எம்மைப் பொறியில் மாட்ட முயற்சிக்கின்றன. இதிலிருந்து நாம் மீளவேண்டுமானால் சர்வதேச நாடுகளிலுள்ள மக்களது ஆதரவினை நாம் வெல்லவேண்டும்.

நீங்கள் வாழும் நாடுகளில் நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மக்களிடம் உண்மை நிலையினைத் தெளிவுபடுத்துங்கள்.

இது ஒரு சர்வதேச மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படவேண்டும்.

நீங்கள் வாழும் தேசத்து மக்கள் அவர்களது அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து உண்மையின் வழியில் அந்த அரசுகளைச் செலுத்தவேண்டும்.

இதற்கு உங்கள் பரப்புரை உதவவேண்டும்.

அன்புடன் திருமகள் (கிளிநொச்சி)

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. ஒவ்வொரு தமிழனுக்கும் தேசத்தின் பால் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவோமாயின் நிச்சயம் எத்தடைகளையும் தகர்த்து எறியஙமுடியும்!

மேற்கோள்:

நீங்கள் வாழும் தேசத்து மக்கள் அவர்களது அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து உண்மையின் வழியில் அந்த அரசுகளைச் செலுத்தவேண்டும்.

உணரவேண்டும் - முன்வரவேண்டும்-

நடக்கணுமே........

நன்றி இணைப்புக்கு - திரு! 8)

  • கருத்துக்கள உறவுகள்

திருமகள் எழுதியது,

2003 லே விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை அங்கீகரித்து 'அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான உரிமையை உடையவர்கள் ' என்று தெரிவித்த கண்காணிப்புக்குழுவானது இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலே 'விடுதலைப்புலிகளுக்கு கடலிலே இறங்குவதற்கு உரிமையில்லை. அது யுத்த நிறுத்த மீறல்' என்று சொல்லியிருக்கிறது.

மேலும் தமது கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பிற்குப் புலிகள் பெரும் அபாயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் சொல்லியிருக்கிறார்.

இது மிகவும் அபாயகரமான உள்நோக்கமுடைய கூற்று என்று எம்மால் கருதமுடியும்.

காரணம் எனக்குத் தெரிந்தவரையில் விடுதலைப்புலிகள் கடந்த மாதம் 18 ம் திகதியும் இம்மாதம் 10இ 11 ஆகிய திகதிகளிலும் கண்காணிப்புக் குழுவினர் சிறிலங்கா கடற்படையினருடன் சேர்ந்து பயணிப்பதைத் தவிர்க்குமாறு தெளிவான வேண்டுகோள்களை எழுத்து மூலம் விடுத்திருந்தனர்.

..............................................

எனவே நண்பர்களே இனிவரும் காலங்கள் மிகவும் சிக்கலானவையாக இருக்கப்போகின்றன.

சர்வதேச அரசுகள் எம்மைப் பொறியில் மாட்ட முயற்சிக்கின்றன. இதிலிருந்து நாம் மீளவேண்டுமானால் சர்வதேச நாடுகளிலுள்ள மக்களது ஆதரவினை நாம் வெல்லவேண்டும்.

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் எந்த ஒருகட்டத்திலும்

சர்வதேசம் தத்தம் காய் நகர்த்தல்களை எமக்குச் சாதகமாக

அமைக்காது ஏனெனில் ஒவ்வொரு நாடுகளுக்கும் சில கொள்கைரீதியாக விடுதலைபோரை ஆதரிக்கும் தன்மைகள்

மிகக்குறைவானதாகவே இருக்கிறது, இருந்திருக்கிறது இனிமேலும் இருக்கப்போகிறது. 'தன் கையே தனக்குதவி" ஆன்றோர் வாக்கு பொய்யில்லை. ஒடுக்கப்படும் இனம் மூச்சுப்பெறுவதை எந்தவொரு வல்லாதிக்கமும் விரும்புவது கிடையாது. திருமகள் உங்கள் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது. இத்தோடு இன்னுமொரு கருத்தை இங்கு வைத்து விடைபெறுகிறேன்.

முதலாளித்துவ நாடுகளிடம் எப்போதுமே

'நம்ப நட நம்பி நடவாதே" என்ற நிலைப்பாட்டுடனே நாம் இருக்கவேண்டியது கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில கண்காணிப்புக் குழு இருக்குதா எண்டிறதக் கண்காணிச்சுத்தான் தாக்குதல ஆரம்பிக்க வேண்டி இருக்கும் போல. தாக்குதல் நடக்கப் போகுதெண்டத அவையள் கண்காணிக்க மாட்டினம் போல. சமாதானப் பணி ஆரம்பிச்சவங்களெல்லாம் பணியாரம் விக்கிறாங்கள். உவங்களின்ர கதையக் கேட்டால் நாளைக்கு ஆனையிறவப் பிடிக்க 700 பேரோட வெத்திலைக் கேணிக் கரையில வந்து இறங்கிருவாங்கள். ஆனையிறவும் அரைவாசி தரவைக்கடல். பிறகு அதிலயும் தாக்குதல் நடத்த உரிமையில்ல எண்டு சொல்லுவாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.