Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொல்லுறத கேட்டு நான் எழுதிறத நிறுத்த மாட்டன் அடம் பிடிக்கும் மு மு க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகளில் 'இரட்டை நிலை'யை நான் கடைப்பிடித்து வருவதாகவும், ஏமாற்று வித்தையில் நான் கை தேர்ந்தவன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இரட்டை நிலையை எப்போதும் கடைப் பிடிப்பவர் யார் என்பது, தமிழ்நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும்.சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் பிரச்சினையிலே போராட்டக்காரர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திற்கே ஜெயலலிதா அழைத்துப் பேசினாரா? இல்லையா? அவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க தமிழக நிதியமைச்சர் துணையோடு அனுப்பி வைத்தாரா இல்லையா? போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவசர அவசரமாக தமிழக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, கூடங்குளம் ஆலைப் பணிகளைத் தொடரக் கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைத்தாரா இல்லையா? ஆனால் தற்போது என்ன நிலை?

கூடங்குளம் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க, படாத பாடுபடுகிறாரா இல்லையா? இதற்குப் பெயர் இரட்டை நிலையா இல்லையா?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும், காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறார். இந்தக் காவிரி நதி நீர் ஆணையம் அமையக் காரணமாக இருந்ததே நான்தான்!

2-4-2002 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறும்போது, 'செயல்படாத ஆணையம் காவேரி ஆணையம்', 'பல் இல்லாத ஆணையம்'; அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம், என்று சொன்னார்.

21-6-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி ஆணையம் உள்ளது. எனவே இந்த ஆணையத்தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்துகொள்ளாது என்று விளைவுகளைப் பற்றி முழுதும் ஆராயாமல் முடிவெடுத்து அறிவித்தார்.

அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ல் டெல்லியில் நடைபெற்ற காவேரி ஆணையக் கூட்டத்திலே கலந்து கொண்ட ஜெயலலிதா, இடையிலே வெளி நடப்பு செய்வதாகக் கூறி விட்டு வெளியே வந்து விட்டார். அப்போது அவர் வெளி நடப்பு செய்தது, தற்போது கர்நாடக முதல்வர் வெளி நடப்பு செய்ய முன்மாதிரியாக அமைந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ தமிழ்நாட்டு விவசாயிகள்தான்.

அப்படியெல்லாம் இரட்டை வேடம் போட்ட ஜெயலலிதாதான், ஏமாற்று வித்தையில் நான் கை தேர்ந்தவன் என்றும், காவேரி பிரச்சினையில் நான் துரோகம் செய்துவிட்டேன் என்றும் அறிக்கை விடுகிறார்.

தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ஜெயலலிதா.

தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான் நாளும் நாளும் எழுதுகிறேன். ஜெயலலிதாவின் அறிவுரையைக் கேட்டு எழுதுவதை நிறுத்துகின்ற எண்ணம் எனக்கில்லை.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Malaimalar

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ஜெயலலிதா.[/size]

[size=4]தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான் நாளும் நாளும் எழுதுகிறேன். ஜெயலலிதாவின் அறிவுரையைக் கேட்டு எழுதுவதை நிறுத்துகின்ற எண்ணம் எனக்கில்லை.[/size]

நீங்க ரெண்டுபேரும் பொத்தீட்டுப்போனாலே தமிழங்க நல்லாருப்பாங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னா சித்தப்பு இப்பிடி சொல்லிட்டே வடிவேலு இல்லாத வெற்றிடத்த இவங்க ரெண்டு பேரும் தான் நிரப்பிட்டு இருக்காங்க....நாளும் ஒரு அறிக்கை விட்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுதின்னு இந்த ரெண்டு ஓநாய்ங்களும் அழுகிது...

நாயும் நடுக்கடலும்... மாறி மாறி நக்கிரத தவிர வேற வேலையில்லை... இன்னும் ஒரு 5 வருஷம் கனக்க..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாயும் நடுக்கடலும்... மாறி மாறி நக்கிரத தவிர வேற வேலையில்லை... இன்னும் ஒரு 5 வருஷம் கனக்க..

:D

கருணாநிதி, வசதியான விடையமாக இருந்த ஈழத்தமிழர் போராட்டத்தை 4 மணித்தியால உண்ணாவிரதமிருந்து கோட்டை விட்டுவிட்டார். மற்றயவை எதை பிடிச்சாலும் கெளிறு மீன் மாதிரி சறுக்கிப் போடுது. அம்மா அடுத்ததேர்தலில் கருணாநிதியை அமத்தி மூடிவிட்டால் அதுதான் தி.முகா.வின் கடைசி என்றதை தெரிந்து வைத்துக்கொண்டு முழு மூச்சாக செயல் படுகிறா.

நடக்கட்டும்.... நடக்கட்டும்

இதுதான் வை கோவும் மேலே வர ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை நிலையை கடைப்பிடிச்சியா எண்டு கேட்டால் நீயும்தானே அப்பிடி எண்டு பதில் வருது.. :lol: நான் அப்பிடி இல்லை எண்டு சொல்ல முடியேல்லை.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.