Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவிரியில் உடனே தண்ணீர் திறக்க உத்தரவு

Featured Replies

[size=4]காவிரியில், தமிழகத்துக்கு தினமும், 9,000 கன அடி தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், பிரதமர் தலைமையில் செயல்படும், காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும், கர்நாடக அரசின் நடவடிக்கையை, கடுமையாகக் கண்டித்தது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநிலங்கள் இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், 19ம் தேதி, டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடந்தது.இதில், தமிழகத்துக்கு அடுத்த மாதம் 15ம் தேதி வரை, தினமும், வினாடிக்கு 9,000 கன அடி வீதம், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். ஆனால், பிரதமரின் உத்தரவை ஏற்க, கர்நாடக அரசு மறுத்து விட்டது. காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், தினமும் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், 25ம் தேதி, மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டதாவது:@@பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏற்று, காவிரியில், தமிழகத்துக்கு உரிய பங்கைத் திறந்து விட, கர்நாடக அரசு மறுக்கிறது. வட கிழக்கு பருவ மழை துவங்கும் வரை, தொடர்ந்து, 24 நாட்களுக்கு, தினமும், இரண்டு டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.அப்படி திறந்து விடாத பட்சத்தில், தமிழகத்தில், இந்த மாதம் துவங்கியுள்ள சம்பா சாகுபடி பாதிக்கப்படும். ஏற்கனவே, தண்ணீர் பற்றாக்குறையால், ஜூனில் துவங்க வேண்டிய குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள, கபினி, ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ள நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைத் திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு, நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகூர் ஆகியோரைக் கொண்ட, சுப்ரீம் கோர்ட், பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன், தன் வாதத்தில் கூறியதாவது:காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுத்து, கர்நாடக அரசு, பிடிவாதம் பிடிக்கிறது. கர்நாடக அரசின் நடவடிக்கையால், தமிழகத்தில், விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில், பிரதமர் பிறப்பித்த உத்தரவையும், கர்நாடக அரசு ஏற்கவில்லை.அரசியலமைப்புச் சட்டத்தின், 355வது பிரிவின்படி, மாநிலங்களின் நலனைபாதுகாக்கும் பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றும்படி, கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். ஆணையத்தின் உத்தரவுக்கு, கர்நாடக அரசை இணங்க வைக்க, அங்கு ராணுவத்தை பாதுகாப்புக்காக நிறுத்தும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, வைத்தியநாதன் வாதாடினார்.[/size]

[size=4]இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:@@காவிரியில் இருந்து,தமிழகத்துக்குதண்ணீர் திறந்துவிடும்படி, காவிரி நதி நீர் ஆணையம்உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம், பிரதமர் தலைமையில் செயல்படுகிறது. இது, மிக உயர்ந்த அமைப்பு. இந்த அமைப்பின் உத்தரவுக்கு, நீங்கள் (கர்நாடகா) கட்டுப்பட மறுப்பது சரியல்ல. மிக உயரிய அதிகாரம் உடைய அமைப்புக்கு, நீங்கள் மரியாதை அளிக்காதது, எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இது, கண்டனத்துக்குரிய செயல்.எனவே, காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்துக்கு, அடுத்த மாதம் 15ம் தேதி வரை, தினமும், வினாடிக்கு 9,000 கன அடி நீரை, உடனடியாகத் திறந்து விட வேண்டும். இந்த உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தால், அதற்கு ஏற்ற, உத்தரவுகளை வழங்க நேரிடும். இது தொடர்பாக, உங்களின் (கர்நாடகா) நிலையை விளக்கி, ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.[/size]

http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A-190200469.html

தமிழக அணு உலைகளில் இருந்து கன்னடத்துக்கு மின்சாரம் செல்கிறதாம்! ஆனால் அவர்கள் தண்ணீர் விட மாட்டார்களாம்.

தமிழக அணு உலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாடிநூடாகவே (மத்திய அரசில்லை) அடுத்த மாநிலங்களுக்கு வழக்கும் வகையில் ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அப்போது பதிலுக்கு மின்சாரத்தை கட்டுப்படுத்தி கன்னடத்தை, கேரளாவை அடிபணிய வைக்கலாம்.

இறுதியாக ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை காரணமாக கன்னடக அரசு பயந்து நேற்று தண்ணீர் திறந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

30-cauvery300.jpg

இரவிலும் முற்றுகையிட்ட கன்னட கட்சிகள் - எதிர்ப்பை மீறி தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடக அரசு.

ஸ்ரீரங்கபட்டணா: தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கூட்டபட்ட கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதாக அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்திருந்தார். ஆனால் கன்னட அமைப்புகள் இதை நம்பாமல் நள்ளிரவில் கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட்டிருக்கிறது கர்நாடக அரசு.

தமிழகத்துக்கு கர்நாடக அரசு எந்த நேரத்திலும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படக் கூடும் என்பதால் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் நேற்று அணையை முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ புட்டராஜூ, எம்.எல்.சி. ஸ்ரீகண்டே கவுடா ஆகியோர் நேற்று மாலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர் இரவு 11.20 மணியளவில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர் போலீசார். ரிசர்வ் போலீசாரும் அணையின் முகப்பு பகுதியில் குவிக்கபப்ட்டார். அதற்கு முன்னதாக கன்னட ரக்ஷிக வேதிகே அமைப்பின் நாராயண கவுடா டார்ச்லைட் பேரணியை நடத்த முயன்றதால் தடுக்கப்பட்டார்.

இந்த எதிர்ப்பாளர்களை அப்புறப்படுத்திய பின்னர் நள்ளிரவில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்

தமிழக அணு உலைகளில் இருந்து கன்னடத்துக்கு மின்சாரம் செல்கிறதாம்! ஆனால் அவர்கள் தண்ணீர் விட மாட்டார்களாம்.

தமிழக அணு உலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாடிநூடாகவே (மத்திய அரசில்லை) அடுத்த மாநிலங்களுக்கு வழக்கும் வகையில் ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அப்போது பதிலுக்கு மின்சாரத்தை கட்டுப்படுத்தி கன்னடத்தை, கேரளாவை அடிபணிய வைக்கலாம்.

இறுதியாக ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை காரணமாக கன்னடக அரசு பயந்து நேற்று தண்ணீர் திறந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

[size=4]இருபது வருட கோரிக்கையில் ஒரு வெற்றி :D , ஆனால், இது நிரந்தரமானது என எண்ணவில்லை :( [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கன்னடனின் ஒற்றுமை பாராட்டுதலுக்குரியது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.