Jump to content

நீலக்கால் நண்டுக்கறி – யாழ்ப்பாணம் முறை


Recommended Posts

ஓ...தண்ணி அடிக்கிற ஆக்களுக்கு நல்லாய்த்தான் இருக்கும் உறைப்பாய் இருந்தால்...அப்படியே அடுத்தமுறை நண்டுப்பிரட்டல் வைத்தால் வீட்டில் ஆண்கள் போத்தல் உடைக்குமுன் நிழலி அண்ணாவையும் கூப்பிடுங்கள்...

முதலே தெரிந்தால்தானே நான் மற்றவர்களைக் கூப்பிட முடியும்? இதெல்லாம் instant ஆக நடக்கும் விடயங்கள். அவர்களின் பார்ட்டியெல்லாம் இரவு பத்து, பதினொரு மணிக்கு மேலேதான் தொடங்கும். சாமான்களை வாங்கிக் கொண்டு வருவதுகூட அவர்கள்தான். ஒரு காலத்தில் எங்கள் வீடு அவரது நண்பர்களுக்கு எப்போதும் திறந்ததொரு வீடாக இருந்தது. சில நேரங்களில் எனது தம்பி வருவதற்கு முன்னரேயே வந்து சமைத்து விடுவார்கள். வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நான் அவர்களிடம் இருந்துதான் பழகிக் கொண்டேன். அவர்கள் கதைக்கும்போது, ஒருவரை ஒருவர் மட்டம் தட்டித்தான் கதைப்பார்கள். ஆனால், எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நண்பர்களுக்கு உதவுவது மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும் உதவுவார்கள். அவர்களின் பெற்றோரை, மனைவி, பிள்ளைகளைக் கூட பல சமயங்களில் ஏற்றி இறக்குவார்கள். நானும் இப்படிச் செய்திருக்கிறேன்தான். ஆனால், இவர்களின் நட்பு வட்டம் எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

பைக்கற் சிலோன் நண்டு தமிழ் கடையில் மொன்றியலில் இருக்கு குட்டி. ரொறன்ரோவிலும் இருக்கும் என நினைக்கிறேன். நிழலியைக் கேளுங்கள்!

குட்டிக்கும் நண்டுக் கறியில அனுப்பி விடுங்கோ தமிழச்சி!

லக்கி தமிழச்சி!

கொடுத்து வைத்ததா? அவர்கள் போடும் சண்டையில் (சத்தத்தில்) நித்திரையின்றித் தவிக்கும்போதுதான் தெரியும். :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நிழலிக்கும் மனைவிக்கும் சமைக்கத் தெரியாத நண்டா??? அர்ஜுன் அண்ணா நிழலி வீட்டு நண்டுக் கறி பற்றி எழுதினவர்.

நானும் நிழலி வீட்டு நண்டுக் கறியை சுவைத்திருக்கிறேன். நிழலி மிகவும் கொடுத்து வைத்தவர். நிழலியும் மனைவியும் ஒருவருக்கொருவர் நல்ல சோடி. :) :)

Link to comment
Share on other sites

குடுத்து வச்சனியள்...அனுபவிக்கிறியள்...நாங்கள் லாச்சப்பல்லை சாப்பிட்டிட்டு விட்டத்தை பாத்து தூங்கிறம்...போனகிழமை நண்டு சமைப்பம் எண்டு வீட்டை வாங்கி வைத்து சமைத்து முடிய நண்டுக்கறியில் நண்டு சேரவே இல்லை...நண்டு வேறு குழம்பு வேறாக....என்ன கறியெண்டு கேட்ட ஆக்களிட்ட சும்மா சிரிச்சு சமாளிச்சிட்டன்.. :(

சுபேஸ், நண்டுக் கறிக்கு அதிகம் தண்ணீர் விடக்கூடாது. நீங்கள் நிறையத் தண்ணீர் விட்டுச் சமைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் நண்டுக் கறி இறக்குவதற்குக் கொஞ்சம் முன்னர் பச்சை மிளகாயும் வெட்டிப் போடுவார்கள். பச்சை மிளகாய் அதிகம் வேகாததால் கறி மிகவும் உறைப்பாக இருக்கும். இந்த முறையில் ஒருமுறை செய்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

படத்தில நண்டு சிவப்பாகா இருக்கு நீலம் கரைஞ்சு போச்சா?

நண்டு காலை கடிச்சு அதற்குள் இருக்கும் கிறேவியைஉறிஞ்சுவதுதான் கிளைமாக்ஸ் .

Link to comment
Share on other sites

ஏனக்கு மிகவும்பிடித்த ஒரு கறி நண்டுக்கறி.

கொஞ்சம் காரம்அதிகமாகவும் அதிகம் தண்ணியாக இல்லாமலும் இருக்கணும்.

புட்டு

சோறு

எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

(மனைவி பக்கத்தில் இருந்து உடைத்துத்தந்தால் இன்னும் விசேசம்)

நன்றி பதிவுக்கு.

நீங்களே உடைத்துச் சாப்பிட்டால் தான் சுவை கூட. கருத்துக்கு நன்றி விசுகு!

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.