Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரிகளின் சொத்து வழமை Enemy Property Act (EPA)

Featured Replies

தமிழீழ சுதந்திர பிரகடனம் செய்யும் நிலைக்கு செல்லும் பொழுது சிறீலங்கா நிர்வாக கட்டமைப்புக்குள் (வங்கிகள் மற்றும் ஏனைய சேமிப்பு முதலீட்டு நிறுவனங்களில்) உள்ள தமிழ் மக்களின் சேமிப்புகள் நிதிகள், தமிழீழத்திற்கு வெளியே சிறீலங்காவில் (உதாரணத்திற்கு கொழும்பு கண்டி போன்ற பிரதேசங்களில்) அசையாச் சொத்துகளில் (வீடுகள்) போன்ற முதலீடுகள் வைத்துள்ளவர்களின் நிலமை என்னவாக இருக்கும்?

ஹிந்துஸ்தானிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது பாக்கிஸ்தான் பக்கம் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துக்கள் முதலீடுகளின் பொறுமதி பூச்சியம் ஆனது. அதே நிலமை பங்களாதேஸ் பிரிந்த போதும் இருந்தது.

இந்த சொத்துக்களை நிதிகளை அரசாங்கம் Enemy Property Act இன் பெயரால் கையகப்படுத்தி மீள்கட்டுமான போன்றவற்றிற்கு பயன் படுத்தலாம், பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் படைத்தரப்பிற்கான நட்டஈடு புனர்வாழ்வு போன்றவற்றிற்கு செலவிடலாம்.

அண்மையில் யுகோசொலவாக்கியா விலிருந்து பிரிந்து சென்ற சேர்பியர்கள் குரோசியர்கள் அல்பேனியர்கள் மத்தியில் இதே பரிதாபம்.

எம்மவர்கள் பலர் கடினமாக உழைத்து கடன்பட்டு தேவைகருதியோ அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியாதவர்கள் முதலீட்டிற்காகவோ தென்னிலங்கையில் அசையாச் சொத்துக்களில் பலமாக முதலீடு செய்துள்ளார்கள். அது தவிர தமிழர்கள் அதீத சேமிப்பாளர்கள். சிறீலங்காவின் கட்டமைப்பிற்குள் உள்ள வங்கிகளில் பாரிய அளவில் (100 மில்லியன் ரூபாய்களிற்கும் மேலாக) சேமிப்பு செய்துள்ளார்கள். சிறீலங்கா அரசாங்கத்தின் ஆழுகைக்குட்பட்ட இந்த நிறுவனங்களில் உள்ள தமிழர்களது சேமிப்புகளிற்கான உத்தரவாதம் முன்னரை விட என்றுமில்லாதவாறு கேள்விக்குறியாகியுள்ளது என்பதை உணர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ சுதந்திர பிரகடனம் செய்யும் நிலைக்கு செல்லும் பொழுது சிறீலங்கா நிர்வாக கட்டமைப்புக்குள் (வங்கிகள் மற்றும் ஏனைய சேமிப்பு முதலீட்டு நிறுவனங்களில்) உள்ள தமிழ் மக்களின் சேமிப்புகள் நிதிகள், தமிழீழத்திற்கு வெளியே சிறீலங்காவில் (உதாரணத்திற்கு கொழும்பு கண்டி போன்ற பிரதேசங்களில்) அசையாச் சொத்துகளில் (வீடுகள்) போன்ற முதலீடுகள் வைத்துள்ளவர்களின் நிலமை என்னவாக இருக்கும்?

தமிழீழத்தை சிறிலங்கா அங்கிகரிக்காத வரை, சிறிலங்கா தனது பிரதேசம் என்று கருதும் எந்த பிரதேசத்திலும் வாழும் மக்கள், தங்கள் சொத்துக்களுக்கு உரிமை கோர முடியும்.

மேற்படி சொத்துக்களின் உரிமையாளர்கள் தமது சிறிலங்கா அடையாள அட்டையுடன் சிறிலங்காவில் நுளைந்து அங்கிருக்கும் போது தமது சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழீழத்தை சிறிலங்கா அங்கிகரித்த பிறகு, வெளிநாட்டவருக்கான சொத்தாக மேற்படி சொத்துக்கள் கருதப்பட வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய யுூனியன், கனடா, அமெரிக்காவில் குடிமக்களாக இருக்கும் தமிழர்கள் சிறிலங்காவில் வெளிநாட்டு முதலீட்;டை செய்திருந்தால், அது பற்றி தமது நாட்டில் அரசுக்கு சட்டப்படி அறிவித்து வருமான வரி செலுத்தி வந்திருந்தால், தமது சொத்துக்களை சிறிலங்கா கையகப்படுத்த முனைவது பற்றி தத்தமது நாடுகளுக்கு அறிவிக்கலாம். அந்த நாட்டு அரசுகளும் தமது வருமானத்தில் சிறிலங்கா கைவைப்பது கண்டு கடும் நடவடிக்கை எடுப்பர்.

மறு வளமாக, தமிழீழ பிரதேசத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் முதலீடு செய்த அமைப்புகளும் தனியாரும், தமிழீழ அரசு அமையும் போது தமது முதலீடுகளை இழக்க கூடும். காரணம் அந்த முதலீடுகள் தமிழீழ அரசில் செய்யப்படவில்லை. சிறிலங்காவிலேயே செய்யப்பட்டன. சிறிலங்கா, தமிழீழ அரசிடம் தன்னால் ஆட்சிசெய்யப்பட்ட நிலத்தை பறிகொடுத்த நிலையில், மேற்படி நிலத்தில் உள்ள சொத்துக்கள் யாவும் எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களாகவே தமிழீழ அரசு கருதும்.

இவ்வாறான ஒரு நிலையில் தமது நாட்டு நிறுவனங்கள் சிறீலங்காவில் செய்த முதலீடுகளை பாதுகாக்க பல நாடுகளும் வழிகளை தேடும். உதாரணமாக ஜப்பானிய அரசு தமிழீழ பிரதேசங்களில் உள்ள இல்மனைட் வளங்களை பெற்றுக்கொள்வதற்கு பெருமளவு பணத்தை சிறிலங்காவிற்கு விலையாக கொடுத்துள்ளது. இல்மனைட்டை அது கப்பலேற்றிக் கொண்டிருக்கையில் ஒரு கப்பல் தாக்கியழிக்கபட்டதால் இல்மனைட் ஏற்றுமதி தடைப்பட்டது. இதனால் ஜப்பானின் முதலீட்டுப்பணம் இழக்கபடும் ஆபத்து ஏற்பட்டள்ளது. இங்கே தான் சமாதான து}துவர் அக்காசி வருகிறார். நாளை தமிழீழ அரசு நிறுவப்பட்ட பின் அதற்கு ஜப்பான் எவ்வாறெல்லாம் உழைத்தது என்று காட்டி இல்மனைட்டுக்கு நட்டஈடு கேட்பார் அல்லது இல்மனைட் கேட்பார்.

சீநோர் நிறுவனத்தில் காரைநகரிலும் யாழ்ப்பாணத்திலும் நோர்வே மக்களின் பணம் பெருமளவு முதலிடப்பட்டு முடங்கியுள்ளது. தமிழீழ அரசு உருவான பிறகு இந்த முதலீடு எதிரியிடம் இருந்து கைப்பற்றிய முதலீடாக கருதப்பட கூடாதென்பதற்காக சொல்ஹைம் வருகிறார்.

சீமேந்து தொழிற்சாலையில், லங்கா சீமென்ற் நிறுவனத்தில் ஜப்பானிய கம்பனிகள் முதலீடு செய்த பணத்திற்கு வழி அக்காசி காட்டுவது தான்.

இவர்கள் இணைத்தலைமை ஆனதன் காரணம், தமது முதலீடுகள் எதிரியிடம் இருந்து கைப்பற்றிய சொத்தாகாமால் நட்பு நாடுகளின் சொத்தாக கருதப்பட வேண்டும் என்பதற்காகவே.

  • தொடங்கியவர்

பாரிய வெளிநாட்டு தனியார் நிறுவனங்களினது (அவர்கள் தத்தமது நாட்டு அரசாங்கங்களினால் பாதுகாக்கப்படுவர்) சொத்துக்கள் முதலீடுகள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுவது மிக அரிது. ஏனென்றால் அரசமட்டத்தில் பேசித்தீர்க்கப்படுபவை.

தனிமனிதர்களின் முதலீடுகள் சொத்துக்கள் தான் சர்ச்சைக்குரியவை இழுபறிப்படுபவை. புலம்பெயர்ந்துள்ள பல தனிமனிதர்கள் தென்பகுதிகளில் செய்துள்ள அசையாச் சொத்து முதலீடுகள் தமது நாடுகளில் தமது வருமானம் சேமிப்பை சரிவர காட்ட முடியாதவர்கள். அதற்கும் மேலாக இவர்களிடம் இரட்டை குடியுரிமை இருக்கா, யாருடைய பெயரில் முதலீட்டை செய்துள்ளார்கள் என்பன முக்கியம்.

தென்னிலங்கையில் உள்ள தமிழர்களது முதலீடுகளிலிருந்து தமிழர்கள் என்றரீதியில் பயனை பெறமுடியாத நிலைக்கு கள நிலமைகள் செல்லும் பொழுது அவற்றை விற்க முயன்றால் அதன் பெறுமதி குறைந்து அவற்றை நட்டத்தில் விற்க வேண்டி நிலமை தான் வரும். தென்னிலங்கையில் உள்ள தமிழரது தனியார் முதலீடுகளோடு ஒப்பிடும் பொழுது தமிழீழப் பிரதேசங்களில் உள்ள சிங்களவர்களின் தனியார் முதலீடுகள் மிக சிறிது. தமிழீழத்தை அங்கீகரிக்காது ஆனால் தென்னிலங்கையிலுள்ள தமிழரது சொத்துக்களின் பெறுமதியை பூச்சியமாக்கு நடைமுறையை கொண்டுவருவது ஒன்றும் கடினமில்லை. ஏன் என்றெல் தமிழர் தமது சேமிப்பையும் முதலீடுகளையும் தென்னிலங்கையிலிருந்து எடுத்து தமிழீழத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பது சிறீலங்காவால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.

உயர்பாதுகாப்பு வலையங்களில் மீள்குடியமர்த்த அனுமதிக்கும் படி சிறீலங்கா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஆனால் நடைமுறையில் அதற்கு இராணுவ தீர்வுதான் வழிவகுக்கும் சிறீலங்காவின் நீதிமன்ற தீர்ப்பு அல்ல. தென்னிலங்கையிலுள்ள தமிழரது முதலீடுகளை பாதுகாக்க மீட்க இராணுவத் தீர்வு இல்லை. ஏனைய பிரிந்து போன நாடுகள் நடத்துவது போல 20...30 வருடங்கள் பேச்சுவார்த்தையில் இழுபறிப்படலாம் ஆனால் அதில் பாதகமான நிலையில் இருக்கப் போவது தமிழர் தரப்பு ஏன் என்றெல் சிங்களவர்களின் முதலீடுகள் தமிழீழப் பிரதேசங்களில் அந்தளவிற்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே யூட் சொல்வதுதான் சரியென்று நினைக்கிறேன். தமிழீழ தனியரசு மலர்ந்தால், சிறீ லங்கா அதை ஏற்றுக்கொள்ள முன்வராது (கௌரவம் விட்டுக்கொடுக்காது) அப்பிடிப்பார்த்தால் தமிழர்களின் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முனைந்தால் அது தமிழீழதின் இறைமையை ஏற்றுக்கொள்வதாகும். அதற்கும் மேலே வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கு (அந்தநாட்டு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை இருந்தால்) பாதிப்பில்லை ஏனெனில் அவர்கள் தமிழீழக்குடிமக்களாகவன்றி அந்தந்த நாடுகளின் குடிமக்களாகவே கணிக்கப்படுவர்.

சொத்துக்களை நட்டத்தில் விற்கவேண்டிவரும் என்று குறுக்ஸ் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் இன்றைய நிலமையில் கொழும்பில் முதலிடப்படும் காணிகள் வீடுகளின் பெறுமதிகள் சுமார் 2,3 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது. குறைந்தபட்சம் வாங்கிய விலைக்கேனும் அவற்றை விற்கக்கூடியதாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மகன்

நீங்கள் சொல்வது போல காணிகளின் பெறுதி இரட்டிப்பாகுவதற்கு மூல காரணமே புலம்பெயர்ந்தவர்கள் கொள்வனவு செய்வது தான். அவ்வாறான நிலையில் தான் காணியின் பெறுமதி அதிகரிக்கின்றது. சொல்லப் போனால் யுத்தகாலத்தில் யாரும் வாங்காமை காரணமாக மிகமிக இழிவான பெறுமானத்தைத் தான் காணிகள் கொண்டிருந்தன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.