Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

இன்றைய உணமை நிலையை காட்டும் ஒ'ரு நல்ல தெளிவான கேலிச்சித்திரம்.

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டிýயல் எம்.பி.க்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டிýயல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை கட்சி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டிýருக்கு

  • தொடங்கியவர்

LTTE demands talks on self-rule plan

COLOMBO, APR 8 (PTI)

Tamil Tiger rebels today demanded that the new Sri Lankan government open peace talks with them based on their blueprint for self rule which was previously rejected by President Chandrika Kumaratunga.

The demand was made through LTTE's proxy Tamil National Alliance (TNA) which won 22 seats in the April 2 elections and has emerged as a powerful force in a hung parliament.

"The TNA urges that steps be taken forthwith to commence negotiations with the LTTE... for the setting up of an Interim Self-Governing Authority, on the basis of the proposals submitted by the LTTE," the TNA said in a statement.

It said government must recognise the LTTE as the sole representatives of minority Tamil community which accounts for about 12.5 per cent of the island's 19 million population.

"We strongly submit that the agony and anguish of the Tamil people cannot continue and there is an imperative need to bring the same to an end without further delay." The statement came as President Kumaratunga said her new government was preparing to open peace talks with Tamil Tiger rebels, but did not give details.

"We shall undertake all necessary actions to re-commence negotiations with the LTTE," Kumaratunga said in an address to the nation last night.

Kumaratunga said she wanted to establish peace but did not say when the talks would begin or whether LTTE's blueprint unveiled on October 31 last year would be the basis.

Kumaratunga's Freedom Alliance, which won 105 seats in the 225-member assembly and is set to nominate a cabinet tomorrow to lead a minority government, had opposed the LTTE's self-rule plan.

நன்றி - Outlook India

பி.பி.சி கேட்டது

சில ஆண்டுகளுக்கு முன் யாரிந்த லக்ஷ்மன் கதிர்காமர் என்று கேட்டோம்..அதைப்போதலவேதான் இவரும் ஜே.வி.பியின் கையாள்..என்ன கனவுகளோடு களமிறங்கியிருக்கிறாரோ தெரியவில்லை..வெற்றோன் தொலைக்காட்சியில்இவரது நேர்காணல் பார்த்தேன்..கதிர்காமருக்கு எதிர்காலத்தில் அல்வா கொடுப்பார்போலுள்ளது..கழுவியத

முன்பு ஒரு செய்திதளத்தில் வாசித்தது

கதிர்காமரின் வாரிசு என்று ஒருவரைப்பற்றி எழுதியிருந்தார்கள்.

அப்போதுதான் தெரிந்தது வம்சம் வம்சமாகவே தமிழை அழிக்கவென்று கங்கணம்கட்டிக்கொண்டு இறங்கியிருக்கும் ஓரு கூட்டம் இந்த கதிர்காமர் என்று

இப்போது ராமலிங்கம் சந்திரசேகரன்

இவரும் அவ்வாறே இருப்பார் போல தோன்றுகின்றது

ஒரு தமிழன் இப்படி சுதந்திர முண்ணனியின் தேசியப்பட்டியலில் அங்கம் வகிக்கின்றார் எனும்போதே தெட்டத்தெளிவாக விளங்கும் இவரும் முழங்காலிற்கும் மொட்டந்தலைக்குமு; முடிச்சுப்போடும் கதிர்காமர் வம்சதான் என்று

இன்றைய அரசியல் ம் இ;ல்லை இலங்கை இந்தியாவின் கைப்பொம்மை என்பதை கடந்த இருதினங்களினுள்ளேயே வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதது.பாராள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம் இந்த முறையும் "வராத"ராஜப்பெருமாளை அனுப்பி அவருக்கும் ஒரு கதிரை கொடுக்கவேண்டும் என்று கேட்காமல் விட்டார்கள்

இலங்கை அரசுகள் ஒரு புறத்தில் கோடரிக்காம்புகளை உருவாக்குகின்றன என்றால் இந்திய அரசுகள் பட்ட மரங்களை நீரூற்றித் தளிர்க்கச்செய்கின்றன

பிரதமர் தேர்வுக்கு முதல்நாள் BBCசிங்கள சேவையில் இடம்பெற்ற பேட்டியின் போது அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு சில அரசியல்வாதிகள் கொடுத்த சுவாரசியமான பதில்களை இங்கு தருகிறேன்.

அறிவிப்பாளர்: கதிகாமர் மகிந்த இவர்களில் யார் பிரதமராக வந்தால் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன்: மகிந்த ராஜபக்ஸவே சிறந்தவர். இவருக்காவது அரசியல்தெரியும். கதிர்காமருக்கு என்ன தெரியும்?

(JVP)சோமவன்ச: இவர் ( கதிர்காமர்) நேர்மையான மனிதர். மகிந்த ராஜபக்ஸ ஒரு தெருக் குடிகாரன்.

அறிவிப்பாளர்: (சந்திரிகாவின் செயலாளரிடம்) ஒரு பிரதமரைத் தெரிவு செய்யும் ஆரம்பமே பிரச்சனையாக இருக்கிறதே நீங்கள் எப்படி சமாதான நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்?

சந்திரிகாவின் செயலாளர் : இந்த பிரச்சனை உடனடியாகத் தீர்ந்துவிடும்.

அறிவிப்பாளர்: சரி இனி சபாநாயகர் யார்? அதுவும் முக்கிய பிரச்சனையாச்சே ? எல்லாக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர் ஒருவரே சபாநாயகராக வேண்டும். பிரதமர் தேர்விலே இவ்வளவு இழுபறியென்றால் அது இதைவிட இழுபறியாக இருக்குமே?

சந்திரிகாவின் செயலாளர் : அதுபற்றி அதிபர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்) யுத்தமொன்றுக்கு போக வேண்டிய நிலை வந்தால் தர்மம் போதிக்க வேண்டிய நீஙகள் என்ன செய்வீர்கள்?

ஹெல உறுமய தேரர்: பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் யுத்தத்துக்கு போவதில்லையே.

அறிவிப்பாளர்:அதைக் கேட்கவில்லை யுத்தத்துக்கான தேவைகள் அதாவது நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால்.............?

ஹெல உறுமய தேரர்: செய்யும் காரியம் நல்லதாக இருந்தால் ஆதரவளிப்போம்.

அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்)தமிழர் ஒருவர் பிரமராக வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஹெல உறுமய தேரர்: அவரும் இந்த நாட்டு குடிமகன்தானே? அது பெரும்பாலானவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

அறிவிப்பாளர்: ஜேவீபியினருடனான வெறுப்பு காரணமாகத்தான் சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுக்க மறுப்பதாக பேச்சடிபடுகிறதே?

ஹெல உறுமய தேரர்:ஜேவீபியிலுள்ள குழந்தைகள் தேர்தல் காலத்தில் எவ்வளவோ இழிவு படுத்தினார்கள். சாணி அடித்தார்கள் , எம்மை தாக்கினார்கள் , கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். இருந்தாலும் குழந்தைகள் செய்யும் தவறை நாங்கள் மறந்துதான் ஆகவேண்டும்.

எப்படி ஓடும் இந்த வண்டி?????????????????

  • தொடங்கியவர்

அனுரத்த ரத்வத்தை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் வருகை?

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 2:18 ஈழம் ஸ

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 13 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் விபரங்களை, அக்கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஐயந்த் தேர்தல் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.

லக்ஷ்மன் கதிர்காமர், விஸ்வா வர்ணபாலா, டி.ஈ.டபிள்யூ.குணசேகர, ரிஷ விதாரண, கீதாஞ்சனா குணவர்த்தன, செகு இசாடின், அன்வர் இஸ்மாய்ல், ராமலிங்கம் சந்திரசேகரன், ஐனதாச பீரிஸ், இ.டி.சி.வீரசேகர, குமாரசிங்க லியனகே, எச்.எம்.வசந்த சமரசிங்க, Nஐ.ஏ.மேரி லுசிடா ஆகியோரே இவ்வாறு தேசிய ஆசனங்களுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள

அஜீவன் செய்திகஇகு நன்றி .இப்படி இடைக்கிடை சிங்கள ஊடகங்கள் பார்வையையும் போட முடிந்தால் நன்று(நேரம் கிடைக்கும்போது)

  • தொடங்கியவர்

சங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய பட்டியலில் இடமளிக்க வலியுறுத்து

விடுதலைப்புலிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு தலை வணங்காது போராடி வரும் வீரத்தமிழரான ஆனந்தசங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசியப்பட்டியலில் இடமளிக்குமாறு அதிஉயர் பீட உறுப்பினர்கள் வலியுறுத்திவருவதால் இது தொடர்பாக கட்சிதீவிரமாக ஆராய்ந்து வருவதாக கட்சியின் அதி உயர் பீட உறுப்பினரான ஓமல்பே சோபித்த தேரர் கேசரிக்குத் தெரிவித்தார்.

புலிகளின் அச்சுறுத்தலை சந்தித்து கொண்டிருக்கும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். சுயேச்சைகுழுவில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினாலும் ஆனந்தசங்கரிபாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவது அவசியமாகும்.

இத்தேசியப்பட்டியல் உறுப்புரிமையை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரது விருப்பத்தை பொறுத்ததாகும் என்று ஓமல்பே சோபித்த தேரர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அதுரத்லிய ரதன தேரரிடம் இதுதொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது தமிழர்களின் ஜனநாயகத்திற்கான ஏகோபித்த குரலாக ஆனந்த சங்கரியை நாம் கருதுகிறோம். எனவே அவருக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றார்

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

எம்மையாரும் கடத்தவில்லை சபை கூடியதும் கொழும்பு செல்வோம் அம்பாறை புதிய உறுப்பினர் கூறுகிறார்

கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்று கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிக்கு திரும்பியிருக்கிறோம். நாம் திரும்பி வந்தது குறித்து கொழும்பு ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் தெரிவித்துள்ளார். எம்மையாரும் கடத்திவரவில்லை. பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் சில தினங்கள் இருப்பதால் எமது தொகுதிகளுக்கு திரும்பியிருக்கிறோம். பாராளுமன்றம் கூடும்போது மீண்டும் கொழும்பு செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

கிழக்கு தமிழ் எம்.பி.க்கள் நால்வர் பாதுகாப்பாக மட்டக்களப்பைச் சென்றடைந்தனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இராணுவ பாதுகாப்புடன் வியாழன்காலை மட்டக்களப்பு வந்து சேர்ந்தனர். கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான த.கனகசபை, செல்வி தங்கேஸ்வரி, கதிர்காமன், கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் ஆகியோரே மட்டக்களப்பு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கொழும்பு நகரிலேயே தங்கியுள்ளார். அவர் சுயாதீனமாக கட்சித் தலைமையுடன் இணைந்து செயற்பட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்க

  • தொடங்கியவர்

உரிமைகளை மறுத்தால் தமிழீழமே தீர்வு ஐ.நா.சபையும் அங்கீகரிக்க வேண்டும்ஜெனிவாவில் கரிகாலன்

சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க மறுத்தால் பிரிந்து சென்று தமிழீழத்தை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ஜெனிவாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கரிகாலன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியின் கட்சியிலேயே இருக்கிறார்.பொதுத் தேர்தலில் பேரினவாதக் கட்சியான ஹெல உறுமய வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது தென்னிலங்கை சக்தியாக உள்ளது. இச் சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா ? என்பது சந்தேகமே . உலக நாடுகள் சிங்கள அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்.இல்லையேல் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.தந்தை செல்வாவின் கனவை நனவாக்கி தமிழீழத்தை அமைக்கவும் புலிகள் தயங்கமாட்டார்கள்.

தமிழ்த் துரோகிகளையும்,தமிழின விரோதிகளையும் வெற்றி கொண்டதன் மூலமே புலிகள் இயக்கம் பலம் வாய்ந்த இயக்கமாக உருவாகியுள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு குரல் கொடுத்த 20 இற்கு மேற்பட்ட அமைப்புகள் அழிந்தொழிந்த பிற்பாடும் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றும் மாபெரும் இராணுவக் கட்டமைப்புடன் தேசியத் தலைவரின் பின்னால் அணி திரண்டு நிற்கிறது.

தமிழின துரோகி அல்பிரட் துரையப்பாவை சுட்டு போராட்ட வரலாற்றை ஆரம்பித்து வைத்த தலைவர் கிழக்கிலங்கை நெருக்கடியை வெற்றி கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்கள் அனைவரும் தேசியத்தலைவரின் கருத்தை தொடர்ந்தும் பலப்படுத்தவேண்டும்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

பொடா வழக்கிலிருந்து வைகோவை விடுதலை செய்யுமாறு பொடா ஆய்வுக்குழு உத்தரவு

ஜ தமிழ்நாட்டிலிருந்து மணியரசன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 8:39 ஈழம் ஸ

பொடா வழக்கிலிருந்து வை.கோபாலாசாமி மற்றும் அவருடன் கைது செய்யப்ட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசிற்கு மத்திய பொடா ஆய்வுக்குழு உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ உட்பட 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் பிணையில் வெளிவந்தனர். மத்திய அரசால் அமைக்கப்பட்ட பொடா ஆய்வுக்குழு, வைகோ மற்றும் அவருடன் கைதான 8 பேர் மீதான பொடா வழக்கு சரிதானா என்று ஆய்வு செய்து, நேற்று பிற்பகல் தீர்ப்பு வழங்கியது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியததைத் தவிர, இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எந்தவித தீவிரவாதத்திலும் ஈடுபட்டதாகவோ வன்முறையைக் கையாண்டதாகவோ எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

எனவே, தடை செய்யப்ட்ட இயக்கத்திற்கு வாய்மொழி மூலம் மட்டும் ஆதரவு தெரிவிப்பது குற்றமல்ல என பொடா ஆய்வுக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

புனர்வாழ்வு அமைச்சருக்கான பொறுப்பை தனக்கு வழங்குமாறு டக்ளஸ் கோரிக்கை

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 7:50 ஈழம் ஸ

புனர்வாழ்வு அமைச்சரிற்கான பொறுப்பு தனக்கு வழங்கப்;;;பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா சிறிலங்கா ஐனாதிபதியைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் புனர்வாழ்;வு அமைச்சு மீண்டும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்;படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்;கப்படு;ம் போது, அவர்கள் டக்ளஸ் தேவானந்தாவை புனர்வாழவு அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு நிபந்தனை விதிக்கலாம் என்ற காரணத்தினாலேயே, டக்ளஸ் தேவானந்தாவை புனர்வாழ்வு அமைச்சராக நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், இப்பதவிக்கான பொறுப்;பை யாரிடமும் வழங்காது தனது கட்டுப்பாட்டின் கீழேயே சிறிலங்கா ஐனாதிபதி வைத்திருக்க விரும்புவதாக மேலும் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

தமது அணியை தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறு புதிய அரசிடம் கருணா கோரிக்கை

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 7:48 ஈழம் ஸ

புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சமாதான நடவடிக்கைகளில் தமது அணியை தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டுமென கருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்;;டியிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்குத் தளபதி கருணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் எடுக்கப்படும் சமாதானத் தீர்வு தொடர்பான முடிவுகளை, கிழக்கு மாகாண மக்களிடம் திணிக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ள கருணா,வரப்போகின்ற பேச்சுவார்த்;தைகளில் கிழக்கு மாகாண தமிழர்களிற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் தமது அணி; தனித்தரப்பாக பங்குபற்றவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆட்சிப்பீடம் ஏறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்பாக கருத்துக் தெரிவித்துள்ள கருணா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு என்ற வகையில், மக்களின் அபிலாஷைகளை புதிய அரசாங்கம் நிறைவேற்றும் எனத் தான் நம்;புவதாகவும், இன்றைய நிலையில் போரைத் தாம் விரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளதோடு, கிழக்கில் ஒரு ஐனநாயக செயல் திட்டத்;;தைக் கட்டியெழுப்பவே தாம் விரும்புவதாகவும், இதனைப் புரிந்து கொண்;;டு புதிய அரசாங்கம் தம்;மை ஒரு தனித்தரப்பாக அணுகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை புதிய பிரதமர் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கருணா, மஹிந்த ராஐபக்ஷ நல்ல அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதோடு அவர் ஒரு நல்ல மனிதர் எனக் குறிப்பிட்டிருப்பதுடன், புதிய பிரதமராக மகிந்த ராஐபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

கருணாவைத் தனிமைப்படுத்தும் முயற்சி ஆரம்பம்

ஜ தீபன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 9:17 ஈழம் ஸ

இன்று கிடைக்கப்பெறும் செய்திகளின் படி, வெருகல் ஆற்றைக் கடந்து சென்ற புலிகள் அங்கே எதிர்த்தாக்குதல் புரிய முயன்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஆயுதங்களற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுவிக்கும் நோக்கிலான முதற்கட்ட நடவடிக்கையே தற்போது ஆரம்பமாகியிருக்கலாம் என மட்டக்களப்பைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கதைத்த போது தெரிவித்தார்.

குறிப்பாக அன்னைபூபதியின் நினைவு நாளை மட்டு-அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் புலிகள் கொண்டாடியுள்ளதானது அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக தற்போது வைத்திருக்கக்கூடிய நிலையில் பல பிரதேசங்கள் இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது எனவும் இந்தச் சண்டையில் வாகரைப் பிரதேசமும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருணாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் போராளிகளை ஆபத்தின்றி விடுப்பதற்காகவே சில தளபதிகள் அவருடன் இன்னமும் தொடர்ந்து இருப்பதாகவே மட்டக்களப்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாகத் தெரிவித்த மேற்படி பத்திரிகையாளர், கருணா பிளவுபட்டத்திலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேலான காலத்தை விடுதலைப்புலிகள் அமைதியாகக் கழித்ததானது பெரும்பான்மையான கிழக்கு மாகாண மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள வழிவகுத்தது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சில இடங்களில் புலிகள் ஊடுருவியுள்ளனர் என்பது உண்மையே என கருணாவின் நெருங்கிய சகாவாகச் செயற்படும் வரதன் என்பவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பல இடங்களில் கேட்டதாகவும், ஆனாலும் காயமடைந்தவர்கள் யாரும் இன்னமும் வைத்தியசாலைகளிற்கு வரவில்லையெனவும் அருகிலுள்ள வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

Eight killed as heavy fighting erupts between two Tamil Tiger rebel factions; Sri Lankan forces on red alert

Associated Press, Fri April 9, 2004 02:06 EDT . SHIMALI SENANAYAKE - Associated Press Writer- COLOMBO, Sri Lanka - (AP) Heavy mortar shelling and gunfire erupted Friday between two Tamil Tiger rebel factions, killing at least eight guerrillas and wounding five, in Sri Lanka - 's first battle since a 2002 cease-fire halted its civil war, the rebels and the military said. The split between the factions has complicated efforts to settle Sri Lanka - 's two-decade civil war, which has killed 65,000 people. Last Friday, a political alliance led by President Chandrika Kumaratunga, who has taken a tough line toward the rebels, won the most seats in parliamentary elections, defeating the party led by former Prime Minister Ranil Wickremesinghe, who initiated the most recent round of peace efforts two years ago. Kumaratunga accused him of being too soft on the Tigers. On Monday, the Tigers warned they'd go back to war with the government if their demands for sweeping autonomy in Tamil-majority northeast Sri Lanka - were not met. They say the minority Tamils face widespread discrimination from the ethnic Sinhalese majority.Kumaratunga who was left blind in one eye by a Tiger assassination attempt has refused in the past to give the rebels the degree of autonomy they want. The main rebel faction has warned it might target Muralitharan and his supporters for assassination

  • தொடங்கியவர்

Tigers Clash in Batticaloa Heavy fighting as Prabhakarans cadres infiltrate Karuna's territory

Bandula Jayasekara in Colombo, SLT 12.20 P.M Friday 9 April. Heavy fighting erupted between LTTE leader Vellupillai Prabhakarans and Eastern leader Karuna's faction from early morning on Friday. Both groups fought using heavy mortar fire and claymore mines as over 200 of Prabhakarans men infiltrated the areas under Karunas control. Military sources say that Prabhakarans cadres tried to move forward from Vakarai north and there have been casualties on both sides including civilians. Casualty figures were not known at the time of writing. Prabhakarans faction has reportedly given instructions to launch a propaganda war against his arch rival Karuna with a view to demoralizing Karuna and to boost the moral of fundraisers.

On Wednesday, Karuna told this correspondent that he would try everything possible to avoid shedding blood in the country again. "But, despite all our attempts , if they go on the offensive, we will be forced to defend ourselves" added Karuna.

  • தொடங்கியவர்

LTTE infantry formations advance on Vakarai

[TamilNet, April 09, 2004 04:29 GMT]

Infantry formations of the Liberation Tigers crossed the Verugal River, about 86 kilometres north of Batticaloa, in the early hours of the morning Friday and advanced towards Vakarai, residents from the area who arrived in Valaichenai said. The infantry formations of the LTTE were spearheaded by crack commando units of the LTTE and were backed by heavy artillery fire. Karuna Group commander for the Vakarai region, Jeyam was wounded. LTTE infantry and mortar units are consolidating their position in Paalchenai, about 6 kilometres north of Vakarai, according to residents of the area.

(Click for a larger version of Vakarai map)

More than three hundred young fighters of the Karuna Group who were defending the southern side of the river and the interior surrendered without fight, sources said.

They would be handed over to their parents soon, a resident said, quoting an LTTE commander who led one of the advance teams that crossed the Verugal River.

Several heavy mortars too were surrendered by the Karuna Group units north of Vakarai.

A large sea side base of the Karuna Group in Kathiraveli, about 12 kilometres north of Vakarai, fell to the advancing LTTE infantry formations without much resistance, sources said.

The Kathiraveli base of the Karuna Group was under the command of 'Maarkkan'. His fate was not known.

Meanwhile, sources said that Reggie, (Mr. Vinayagamoorthy Sivanesathurai) the elder brother of renegade LTTE commander Karuna and who was in overall command of the region north of Valaichenai from Mankerni to Verugal escaped the daybreak assault.

Residents said he arrived in Vakarai village later in the morning.

About eight fighters were reported killed on both sides.

8 Karuna Group cadres, 5 females and 3 males, wounded in the fighting in the Vakarai area have been admitted to the Batticaloa Hospital, medical sources in the eastern town said.

Medical sources in Valaichenai, 32 kilometres north of Batticaloa, said that seven wounded cadres of the Karuna Group were brought to the hospital there for treatment. Two died on arrival at the Valaichenai Hospital.

The five wounded were then rushed to the Batticaloa hospital, medical sources in Valaichenai said.

நன்றி - தமிழ் நெட்

  • தொடங்கியவர்

LTTE begin factional fighting

PTI [ FRIDAY, APRIL 09, 2004 10:10:00 AM ]

COLOMBO : Rival factions of LTTE on Friday exchanged heavy gunfire in north-eastern Sri Lanka in the first major clash since the split in the rebel movement, forcing the government to declare a red-alert, officials said.

Cadres of the main Liberation Tigers of Tamil Eelam and men controlled by a renegade commander fired mortars and small arms fire for nearly two hours across the Verugal river, military officials said.

"There are no signs of casualties brought to government- controlled hospitals on either side at the moment," a military official said. "But it looks like both suffered casualties."

Tiger commander for the eastern districts of Batticaloa and Ampara, V Muralitharan, broke away from the leadership of LTTE on March 3 sparking fears of a factional war.

Both sides had up to 1,000 fighters each deployed along the banks of the Verugal which marks the border between north-eastern port districts of Trincomalee and Batticaloa.

Karuna had accused the main LTTE leadership of sending intelligence operatives to the region to start a clash.

There was no immediate comment from either of the rebel factions today, but government sources said they went on a red alert fearing consequences.

"The military and the police have sounded a red alert after the heavy overnight exchange of fire by the Tigers," an official said.

  • தொடங்கியவர்

கருணா படையினர் மீது பயங்கர தாக்குதல்: மட்டக்களப்பை நோக்கி முன்னேறும் புலிகள்

விடுதலைப் புலிகளுக்கும் கருணா தலைமையிலான படைக்கும் இடையே நேற்று நள்ளிரவில் பெரும் மோதல் வெடித்தது. புலிகள் படைகள் மட்டக்களப்பில் உள்ள வகரை நோக்கி முன்னேறி வருகின்றன. இதையடுத்து கருணாவின் படையைச் சேர்ந்த சுமார் 300 பேர் புலிகளிடம் சரணடைந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவில் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான வெருகல் ஆற்றின் அருகே போர் வெடித்தது.

வெருகல் ஆற்றின் திருகோணமலை கரைப் பகுதியில் ஆயிரம் புலிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதே போல இன்னொரு கரை அமைந்துள்ள மட்டக்களப்புப் பகுதியில் கருணாவின் படையினர் சுமார் 1,000 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த இரு பிரிவினரும் மார்ட்டர்கள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து புலிகளின் கமாண்டோ படைகள் கருணாவின் கட்டுப்பாட்டுள் உள்ள பகுதிகளை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளன. கதிராவெலி என்ற இடத்தைக் கைப்பற்றிய புலிகளின் படைகள் இப்போது பாட்சேனை என்ற இடத்தில் நிலை கொண்டுள்ளன. இந்தப் படைகள் வகரை நோக்கி முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்கத்தில் கருணா தலைமையில் பிளவு ஏற்பட்டதையடுத்து நடக்கும் முதல் மோதல் இதுவே. இதையடுத்து இலங்கை ராணுவம் உஷார் நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இரு தரப்பிலும் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. கருணாவின் வகரைப் பகுதியின் கமாண்டர் ஜெயம் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 300 இளைஞர்கள் புலிகளிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் புலிகள் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கருணாவின் மார்ட்டர் தாக்குதல் பிரிவுப் படைகளில் சிலவும் புலிகளிடம் சரணடைந்துள்ளன.

இப் பகுதியில்ன் கமாண்டரும் கருணாவின் அண்ணனுமான சிவனேசதுரை என்ற ரெக்கி தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்து கடும் மோதல் நடந்து கொண்டுள்ளது.

நன்றி - தட்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்

கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்!

வெள்ளி, 9 ஏப்ரல் 2004

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதன் கிழக்குப் பகுதி தளபதி முரளிதரன் என்கின்ற கருணாவின் குழுவினர் மீது விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையினர் தாக்குதல் தொடர்ந்ததை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது!

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகரத்தில் இருந்து 86 கி.மீ. தூரத்தில் உள்ள வெருகல் எனும் ஆற்றை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையினர் கடந்து வக்கரை எனுமிடத்தை நெருங்கிவிட்டதாக வாலைச்சேனையில் இருந்து வெளியேறி வந்த மக்கள் கூறியதாக புலிகள் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் கூறியுள்ளது.

வெருகல் ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்த கருணா குழுவைச் சேர்ந்த 300 இளம் வீரர்கள் சண்டையிடாமலேயே சரணடைந்துவிட்டதாகவும் தமிழ்நெட் கூறியுள்ளது.

வக்கரையின் வடபகுதியில் முகாமிட்டிருந்த கருணாவின் படையினரும் தங்களுடைய ஆயுதங்களுடன் சரணடைந்துவிட்டதாகவும், கதிரவேலி என்ற இடத்தில் உள்ள கடலோர முகாம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இருதரப்பினருக்கும் இடையே நேற்று இரவு முதல் நடந்துவரும் இத்தாக்குதலில் இருதரப்பிலும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.

வக்கரையின் மையப் பகுதியில் உள்ள கருணாவின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் பீரங்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த போரின் காரணமாக கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்துள்ளதாக யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.

நன்றி - வெப் உலகம்

கருணா போன்றவர்களை காப்பாற்ற என்றே சில சக்திகள் அலையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.